ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
heezulia
வான் மழைப் போற்றுதும் ! Poll_c10வான் மழைப் போற்றுதும் ! Poll_m10வான் மழைப் போற்றுதும் ! Poll_c10 
ayyasamy ram
வான் மழைப் போற்றுதும் ! Poll_c10வான் மழைப் போற்றுதும் ! Poll_m10வான் மழைப் போற்றுதும் ! Poll_c10 
mohamed nizamudeen
வான் மழைப் போற்றுதும் ! Poll_c10வான் மழைப் போற்றுதும் ! Poll_m10வான் மழைப் போற்றுதும் ! Poll_c10 
VENKUSADAS
வான் மழைப் போற்றுதும் ! Poll_c10வான் மழைப் போற்றுதும் ! Poll_m10வான் மழைப் போற்றுதும் ! Poll_c10 

Top posting users this month
heezulia
வான் மழைப் போற்றுதும் ! Poll_c10வான் மழைப் போற்றுதும் ! Poll_m10வான் மழைப் போற்றுதும் ! Poll_c10 
ayyasamy ram
வான் மழைப் போற்றுதும் ! Poll_c10வான் மழைப் போற்றுதும் ! Poll_m10வான் மழைப் போற்றுதும் ! Poll_c10 
mohamed nizamudeen
வான் மழைப் போற்றுதும் ! Poll_c10வான் மழைப் போற்றுதும் ! Poll_m10வான் மழைப் போற்றுதும் ! Poll_c10 
VENKUSADAS
வான் மழைப் போற்றுதும் ! Poll_c10வான் மழைப் போற்றுதும் ! Poll_m10வான் மழைப் போற்றுதும் ! Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

வான் மழைப் போற்றுதும் !

Go down

வான் மழைப் போற்றுதும் ! Empty வான் மழைப் போற்றுதும் !

Post by sugumaran Wed Oct 04, 2017 6:20 pm


வான் மழைப் போற்றுதும் ! HrVU8CWvRNixIwPhfVo5+rain1
வான் மழைப் போற்றுதும் !

நேற்று நான் சென்னைமருத்துவ மணைக்குசென்னை வந்திருந்தேன் .கிளம்பும் போது இரவு மணி 8 ஆகிவிட்டது .எங்களைத் துரத்திக்கொண்டே பலத்த மழையும் கூடவே வந்தது .சென்னை நகரின் பல பகுதிகளில் மழை பெய்தது.என அறிந்தோம் இன்று இரவு சென்னையில் மழை பெய்யும் என வானிலை துறை முன்னெச்சரிக்கை செய்திருந்த நிலையில், அதை மெய்ப்பிப்பதை போலவே இன்று இரவு 9 மணியளவில் நகரின் பல பகுதிகளிலும் மழை பெய்ய ஆரம்பித்தது.என அறிந்தோம் தாம்பரம், வண்டலூர், பெருங்களத்தூர், பல்லாவரம், அம்பத்தூர், ஆவடி, மதுரவயல், பூவிருந்தவல்லி, துரைப்பாக்கம் மற்றும் பல பகுதிகளில் மழை கொட்டியது. மனதும் மகிழ்ச்சி அடைந்தது .
மக்களும் வறட்சி நீங்கியதற்காக திருப்தி அடைந்ததாக செய்தியில் பார்த்தேன் .
திருப்பதியில் வேண்டிக்கொண்டதால் தமிழகத்தில் மழை பெய்துள்ளது..என தமிழ் நாடு முதல்வரும் எடப்பாடியார் மகிழ்ச்சிஎன செய்திபார்த்தேன் .
எல்லாம் சரி !
வான்மழையே,
நீ மாதம் மும்மாரிப் பொழிந்தாயம்;
எங்கள் தமிழய்யா சொல்லித்தான்
கேள்விப்பட்டிருக்கிறேன்.
நேரிலே காண ஆசை,
மாதம் என்ன வாடகை? என பரணி செல்வகுமார் என்பவர் ஒரு கவிதை எழுதியிருந்தார் .இப்போது மழையும் பெய்துவிட்டாது .
மேட்டூரில் இருந்து நீரும் திறந்தாகிவிட்டது .
ஆனால் நீர் பஞ்சம் நிரந்தரமாக நீங்க இன்னம் மழை தொடர்ந்து வேண்டும் .
முன்பெல்லாம் நெறிமுறையின்றித் தாராளமாகச் செலவு செய்பவர்களை "தண்ணீர் மாதிரி செலவு செய்கிறார்கள்" என்று சொல்வதுண்டு. இப்போது பாட்டிலில் குடிநீரைக் குடித்துக் கொண்டு அப்படி கூற இயலுமா ?
சராசரியாக நிலத்தில் பெய்யும் மழையில், 40% நிலத்தின் மேல் ஓடி கடலில் கலப்பதாகவும், 35% வெயிலில் ஆவியாகுவதாகவும், 14% பூமியால் உறிஞ்சப்படுவதாகவும், 10% மண்ணின் ஈரப்பதத்திற்கு உதவுவதாகவும் கணக்கிடப்பட்டுள்ளது
ஆனால் தற்போது பெருநகரங்களில் வீடுகள், கட்டிடங்கள் அருகருகே கட்டப்படுவதும், தவிர திறந்தவெளிகளையும் சிமெண்ட் தளங்கள் அமைத்தும், தார் சாலைகள் அமைத்தும் மூடி விடுவதால், இங்கு பெய்யும் மழை நீரில் 5% அளவிற்கு கூட நிலத்தில் உறிஞ்சப்படுவதில்லை. சென்னையில் பெய்த மழையின் கதியும் அதுதான் .

விண்ணின்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உண்ணின்று உடற்றும் பசி.
(அதிகாரம்:வான் சிறப்பு குறள் எண்:13) கடவுள் வாழ்த்துக்கு அடுத்த அதிகாரம் வான் சிறப்பு தான் .
மழை பெய்யாமல் பொய்படுமானால், கடல் சூழ்ந்த அகன்ற உலகமாக இருந்தும் பசி உள்ளே நிலைத்து நின்று உயிர்களை வருத்தும் என்பதுவே இதன் பொருள் .'விரிநீர் வியனுலகம்' என்றது தண்ணீர்ப் பரப்பளவில் மிகுந்திருந்தும் பயன்படாத நிலை உணர்த்தப்பட்டது
நமது தமிழகம் 2500 ஆண்டுகளாக ஏரி, குளம், குட்டை போன்ற நீர்நிலைக் கட்டுமானங்களைக் கட்டிப் பயன்படுத்தி வருகிறது. பழந்தமிழ் இலக்கியத்தில் இந்த அமைப்புகளைக் குறித்துப் பல பெயர்கள் உண்டு. உரிச்சொல் நிகண்டு இவைகளுக்கு, இலஞ்சி, கயம், கேணி, கோட்டகம், ஏரி, மலங்கன், மடு, ஓடை, வாவி, சலந்தரம், வட்டம், தடாகம், நளினி, பொய்கை, குட்டம், கிடங்கு, குளம், கண்மாய் எனப் பல பெயர்களைக் குறிப்பிடுகிறது. வேறு பல பெயர்களும் இன்னம் உண்டு.
இவ்வாறு தமிழில் நீர்நிலைகளுக்குப் பல பெயர்கள் இருப்பது என்பதே, பழந்தமிழர்கள் நீர்நிலைகளை உருவாக்குவதில் நிபுணத்துவம் கொண்டினிருந்தனர் என்பதை உறுதி செய்யமுடிகிறது அத்தகைய நீர்நிலைகளை அவர்கள் 2000 வருடங்களுக்கும் மேலாக பயன்படுத்தி, பராமரித்து, பாதுகாத்தும் வந்திருந்தனர் .
தமிழகத்தின் பல பகுதிகள் வடகிழக்குப் பருவக்காற்றால் வருடத்திற்கு இரண்டு மாதங்கள் மட்டுமே மழை பெறுகின்றன. அதனைக் கொண்டுதான் வருடம் முழுவதற்குமான நீர்த்தேவையைச் சமாளித்துக் கொள்ளவேண்டும் என்பதை நன்கு உணர்ந்து கொண்ட பழந்தமிழர்கள் ஆயிரக்கணக்கான ஏரி/குளங்களை உருவாக்கி, அந்த இரண்டு மாத மழை நீரையும் முழுமையாகச் சேகரித்துப் பயன்படுத்திக் கொண்டனர்.
ஏரிகளில் இருந்து பாசனத்துக்கு நீரை வெளியேற்ற அன்றே சிறந்த முறையில் மதகுகள் வடிவமைக்கப்பட்டிருந்தன. மதகுகளுக்கு பல பெயர்கள் இடப்பட்டிருந்தன. சுருங்கை, புதவு, மதகு, குமிழி, தூம்பு, புலிக்கண்மடை, மடை முதலியன அப்பெயர்கள். தற்காலத் திருகு அடைப்பான் போன்று நீர் வெளியேரும் அளவை சிறுகச் சிறுக குறைக்கவோ அதிகரிக்கவோ கூடிய குமிழிகளும் அன்றே இருந்தன.
தமிழகத்தில் 39000க்கும் மேற்பட்ட ஏரிகள் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இவை சங்ககாலம் முதல் ஆங்கிலேயர் வரும் வரை கட்டப்பட்டவை.

வருவிசை புனலைக் கற்சிறை போல
ஒருவன் தாங்கிய பெருமையானும்
என்கிறது தொல்காப்பியம்,
விசையோடு வரும் நீரை ஒரு கற்சிறை (அணைக்கட்டு) தடுத்து நிறுத்துவது போல, வேகமாக முன்னேறி வரும் ஒரு படையை, உறுதியோடு முதலாவதாக முன் சென்று அதனைத் தடுத்து நிறுத்தக் காரணமாவதன் மூலம், ஒரு வீரன் பெருமையடைகிறான் என்பது இதன் பொருள். கி.மு. 5ம் நூற்றாண்டைச் சேர்ந்த தொல்காப்பியர் பாடிய பாடல் வரிகள் இவை. இவர் குறிப்பிடும் கற்சிறை என்பது ஒரு அணைக்கட்டு ஆகும். அத்தனை நீருக்கும் காரணம் வான்மழை .
வான்மழைப் பெய்யினும் அதை நிர்வகிக்கும் நிபுணத்துவ ஆற்றலை பழந்தமிழர்எப்போதோ
தொலைத்துவிட்டனர் .
உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத்தோரே:
உண்டி முதற்றே உணவின் பிண்டம்
உணவு எனப்படுவது நிலத்தொடு நீரே:
நீரும் நிலனும் புணரியோர் ஈண்டு
உடம்பும் உயிரும் படைத்தினோரே: (புறம்-18)
நீரையும் நிலத்தையும் சேர்த்தவர்களே உடம்பையும் உயிரையும் படைத்தவர்கள்.”என்று அழுத்தம் கொடுத்துக்கூறுகிறது .
''நீரின்றி அமையாது உலகு'' என்று வள்ளுவனும், சிலப்பதிகாரத்தில் கதிரவன், திங்களோடு, வான்மழையை இணைத்துப் போற்றியிருக்கிற இளங்கோவடிகளுமே இதற்கு சான்று. அந்த அளவுக்கு நீரை முக்கியமான ஒன்றாகக் கருதியிருக்கிறார்கள் அன்றையத் தமிழர்கள்.

வான் மழைப் போற்றுதும் !
அண்ணாமலை சுகுமாரன்
4/10/17
sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» புத்தகம் போற்றுதும் விமர்சனம் நூல் : புத்தகம் போற்றுதும் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி, மதுரை. எழுத்தாக்கம் கவிஞர் ச. கோபிநாத்
» புத்தகம் போற்றுதும் விமர்சனம் நூல் : புத்தகம் போற்றுதும் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி, மதுரை. எழுத்தாக்கம் கவிஞர் ச. கோபிநாத்
» புத்தகம் போற்றுதும் விமர்சனம் ! நூல் : புத்தகம் போற்றுதும் ! ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் கொள்ளிடம் காமராஜ்!
» அமில மழைப் பொழிவிற்கான காரணங்கள்
» மழைப் பழம் சாப்பிடுவோம் வாருங்கள்...

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum