ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழக சட்டசபையில் ஜெயலலிதாவின் படத்திறப்பு: பிரமாண்டமான முறையில் நடத்த அரசு திட்டம்

Go down

தமிழக சட்டசபையில் ஜெயலலிதாவின் படத்திறப்பு: பிரமாண்டமான முறையில் நடத்த அரசு திட்டம் Empty தமிழக சட்டசபையில் ஜெயலலிதாவின் படத்திறப்பு: பிரமாண்டமான முறையில் நடத்த அரசு திட்டம்

Post by ayyasamy ram Sat May 27, 2017 6:01 am

சென்னை,

உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 2016-ம் ஆண்டு
செப்டம்பர் 22-ந்தேதி இரவில் அப்பல்லோ ஆஸ்பத்திரியில்
சிகிச்சைக்காக ஜெயலலிதா சேர்க்கப்பட்டார். கடந்த டிசம்பர்
5-ந்தேதி அவர் மரணமடைந்தார்.

அவரது உருவப்படத்தை தமிழக சட்டசபையில் வைப்பது குறித்து
தமிழக அரசு ஆலோசித்து வந்தது. இந்தநிலையில் 24-ந்தேதி
டெல்லிக்குச்சென்ற முதல்-அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி,
இதுபற்றி பிரதமர் நரேந்திர மோடியிடம் எடுத்துரைத்தார்.

பிரமாண்ட விழா


மேலும், இதற்காக தனி விழாவை தமிழக அரசு பிரமாண்டமான
அளவில் நடத்த இருப்பதாகவும், அதில் கலந்து கொள்ள வேண்டும்
என்றும் பிரதமருக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி
அழைப்பு விடுத்தார்.

இந்த விழா சட்டசபையில் நடைபெற உள்ளது. விழா நடக்கும்
நாள் பற்றி தற்போது அரசு ஆலோசித்து வருகிறது.
அதுபோல சட்டசபையில் எந்த இடத்தில் ஜெயலலிதாவின்
படத்தை மாட்டுவது என்பது பற்றியும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.


வரை படங்கள்


தமிழக சட்டசபையில் ஏற்கனவே மகாத்மா காந்தி உள்பட
பல பிரமுகர்களின் படங்கள் மாட்டப்பட்டுள்ளன.
அவை அனைத்தும் வரைபடங்களாகும். அதுபோல
ஜெயலலிதாவின் படமும் வரையப்படும் என்றும்,
கவின் கலைக் கல்லூரி மூலம் அவரது படத்தை வரைய
நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.


யார் படத்தை யார் திறந்தார்?


தமிழக சட்டசபையில் உள்ள மகாத்மா காந்தியின் படத்தை
24.7.1948 அன்று கவர்னர் ஜெனரல்
சி.ராஜகோபாலாச்சாரியார் திறந்துவைத்தார்.

சி.ராஜகோபாலாச்சாரியாரின் படத்தை 23.8.1948 அன்று
பிரதமர் நேரு திறந்துவைத்தார்.

திருவள்ளுவரின் படத்தை துணை ஜனாதிபதி ஜாகீர் உசேன்
22.3.1964 அன்று திறந்துவைத்தார். அண்ணாவின் படத்தை
10.2.1969 அன்று பிரதமர் இந்திரா காந்தி திறந்துவைத்தார்.
காமராஜரின் உருவப்படத்தை 18.8.1977 அன்று ஜனாதிபதி
நீலம் சஞ்சீவ ரெட்டி திறந்துவைத்தார்.

எம்.ஜி.ஆர். படம்

தந்தை பெரியார், அம்பேத்கர், முத்துராமலிங்கத் தேவர்,
காயிதே மில்லத் ஆகியோரின் உருவப் படங்களை 9.8.1980
அன்று கேரளா கவர்னர் ஜோதி வெங்கடாச்சலம் திறந்து
வைத்தார்.

எம்.ஜி. ஆரின் படத்தை 31.1.1992 அன்று முதல்- அமைச்சர்
ஜெயலலிதா திறந்துவைத்தார். சபாநாயகர் இருக்கையில்
அமர்ந்தபடி எம்.ஜி.ஆரின் படத்தை ஜெயலலிதா திறந்து
வைத்தது குறிப்பிடத்தக்கது.

அவர்களைத் தொடர்ந்து ஜெயலலிதாவின் படமும்
தமிழக சட்டசபையில் ஜூன் மாதம் திறந்து வைக்கப்படவுள்ளது.

இவர்களில் அண்ணாவின் உருவப்படம் மட்டும் ராஜாஜி
மண்டபத்தில் நடந்த விழாவில் திறந்து வைக்கப்பட்டது.
மற்ற தலைவர்களின் படங்கள் அனைத்தும் சட்டசபையில்
நடந்த விழாவில் திறந்து வைக்கப்பட்டன.
-
தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லம் அரசுடைமையானது- தமிழக அரசு தகவல்
» உள்ளாட்சித் தேர்தலை உடனடியாக நடத்த இயலாது: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்
» பாடப் புத்தகமில்லை, பாடங்களும் நடக்கவில்லை... ஆனால் தேர்வு நடத்த தமிழக அரசு உத்தரவு!!
» பேருந்து கட்டணத்தை உயர்த்த தமிழக அரசு திட்டம்?
» மரங்கள் வளர்ப்பு திட்டம் தமிழக அரசு கைவிட்டது?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum