ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரச குலப் பெண்கள் போர் செய்யும் நடுகல் தமிழகத்தில் முதன்முறையாகக் கண்டு பிடிப்பு

2 posters

Go down

அரச குலப் பெண்கள் போர் செய்யும் நடுகல் தமிழகத்தில் முதன்முறையாகக் கண்டு பிடிப்பு Empty அரச குலப் பெண்கள் போர் செய்யும் நடுகல் தமிழகத்தில் முதன்முறையாகக் கண்டு பிடிப்பு

Post by ayyasamy ram Thu May 25, 2017 1:03 pm


தேன்கனிக்கோட்டை அருகே சந்தனப் பள்ளியில்,
அரச குலப் பெண்கள் போர் செய்யும் வகையில்,
சித்தரிக்கப்பட்டுள்ள நடுகல், கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த தேன்கனிக்கோட்டை
அருகே உள்ள சந்தனப் பள்ளி கிராமத்தில், அறம் வரலாற்று
ஆய்வு மையத்தைச் சேர்ந்த குழுவினர், களஆய்வில்
ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அரச குலப் பெண்கள், மூன்று பேர், போர் செய்யும்
வகையில் சித்தரிக்கப்பட்டுள்ள நடுகல் கண்டுபிடிக்கப்பட்டது.

தமிழகத்தில் இதுவரை, மூன்று பெண்கள் போர் செய்வது
போன்ற நடுகல் கண்டுபிடிக்கப்படவில்லை. சந்தனப்பள்ளி,
கிராமத்தில்தான், முதன்முதலில் இந்த நடுகல் பதிவு
செய்யப்பட்டுள்ளதாக, அறம் கிருஷ்ணன் கூறினார்.

13ம் நூற்றாண்டு

அவர் மேலும் கூறியதாவது: சந்தனப்பள்ளி கிராமத்தில்
கண்டுபிடிக்கப்பட்டுள்ள நடுகல்லில் மூன்று அரச குலப்
பெண்கள், குதிரை மீது அமர்ந்து போர் செய்யும் வகையில்
சித்தரிக்கப்பட்டுள்ளது.

இது, 13 அல்லது 14ம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகல்லாக
இருக்கலாம். மூன்று பெண்களின் வலது கையில் சிறிய
ஆயுதமும், இடது கரம் மேல் நோக்கி மடிந்த நிலையிலும்
உள்ளது.

வெண்கொற்றக்குடை

முதல் மற்றும் மூன்றாவது பெண் சிற்பங்களுக்கு மேல் குடை
பிடிக்கப்பட்டுள்ளது. இந்த இரு பெண்களும் அரசிக்கு அடுத்த
நிலையில் இருந்து போர் செய்வார்களாக இருந்திருக்க வேண்டும்.

நடுவில் உள்ள பெண் சிற்பம், அரசியாக இருக்க வேண்டும்.
ஏனெனில் அவரின் தலைக்கு மேல் மட்டும் வெண் கொற்றக் குடை
உள்ளது.

போரில், அரசி உட்பட மூன்று பெண்களும் இறந்திருக்க வேண்டும்.
அவர்களின் நினைவாக வைக்கப்பட்ட நடுகல்லாக இது இருக்கலாம்.

அதே நடுகல்லில், ஒரு போர் வீரர், வாள் மற்றும் கேடயத்துடன்
முன்வரிசையில் நிற்கிறார். அரசியின் பாதுகாப்புப் படை வீரராக
அவர் இருந்திருக்க வேண்டும். இச்சிற்பங்களின் மேற்புறத்தில்,
சிறு சிறு கோடுகள் நிறைய செதுக்கப்பட்டுள்ளதை பார்க்கும் போது,
போர் நடந்த இடம் போல் காட்சிப்படுத்தப் பட்டுள்ளதை உணர
முடிகிறது.

இரண்டாம் கம்பண்ணன்

மற்றொரு நடுகல்லில் இரு பெண்கள் குதிரை மேல்
அமர்ந்திருப்பது
போல் சித்தரிக்கப்பட்டு உள்ளது. இதைப் பார்க்கும் போது,
விஜய நகர பேரரசின், இரண்டாம் கம்பண்ணனின் மனைவி,
மதுரை விஜயத்தின் போது அரசனுடன் சென்று போரில்
ஈடுபட்டதாகவும், அதை விளக்கும் வகையில் இந்த நடுகல்
அமைந்திருக்கலாம் என்றும் தெரிகிறது.

——————————-

– டி. கோவிந்தராஜன்
கலைமகள்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82741
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அரச குலப் பெண்கள் போர் செய்யும் நடுகல் தமிழகத்தில் முதன்முறையாகக் கண்டு பிடிப்பு Empty Re: அரச குலப் பெண்கள் போர் செய்யும் நடுகல் தமிழகத்தில் முதன்முறையாகக் கண்டு பிடிப்பு

Post by sugumaran Thu May 25, 2017 9:12 pm

மிக அரிய கண்டுபிடிப்பு !
சுவையான பல வரலாற்று தகவல்களை வெளிக்கொணரும் கண்டுபிடிப்பு .
விஜயநகர இளவரசன் குமார கம்பணன் கி.பி. 1370இல் மதுரைமீது படையெடுத்து மதுரை சுல்தான்களின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்தார்.
இந்நிகழ்வு மதுரா விஜயம் என அழைக்கப்படுகிறது. குமார கம்பணனின் இந்த வெற்றி குறித்து அவருடைய மனைவி கங்காதேவி ‘மதுரா விஜயம்’ என்னும் நூலை எழுதியுள்ளார்.
இதன் மூலம் அரசி கங்கா தேவி போருக்கு பின்னும் இருந்திருக்கிறார் என்பது தெளிவாகிறது .
இருந்தாலும் மூன்று பெண்கள் போரிடுவது மிக அரிய செய்தி
அன்புடன்
அண்ணாமலை சுகுமாரன்
sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010

Back to top Go down

அரச குலப் பெண்கள் போர் செய்யும் நடுகல் தமிழகத்தில் முதன்முறையாகக் கண்டு பிடிப்பு Empty Re: அரச குலப் பெண்கள் போர் செய்யும் நடுகல் தமிழகத்தில் முதன்முறையாகக் கண்டு பிடிப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum