Latest topics
» கூடை நிறைய லட்சியங்கள்by Anthony raj Today at 4:48 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:47 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Today at 4:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by Anthony raj Today at 4:36 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Today at 4:29 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Today at 4:27 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Today at 4:23 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 4:12 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm
» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 3:54 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:34 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:18 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 3:18 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:08 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:42 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 11:31 am
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 10:05 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:17 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:00 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 8:53 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 8:41 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:55 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:30 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 1:56 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 4:47 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 4:46 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 4:42 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 4:39 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 4:37 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 4:33 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 4:30 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:19 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:31 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:29 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 1:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 8:48 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:17 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:47 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:44 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:43 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:42 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:41 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:29 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 3:23 am
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
ஜாஹீதாபானு |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இஸ்ரேல்-பாலஸ்தீன பிரச்சினை ஏற்பட்டது எப்படி?
4 posters
Page 1 of 1
இஸ்ரேல்-பாலஸ்தீன பிரச்சினை ஏற்பட்டது எப்படி?
இன்று உலகப் பிரச்சினைகளில் முக்கிய பிரச்சினையாக கருதப்படுவது இஸ்ரேல், பாலஸ்தீன பிரச்சினையாகும். 50 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வரும் இப்பிரச்சினைக்கு, இன்னும் முடிவு ஏற்பட்டதாக தெரியவில்லை. இஸ்ரேல் - பாலஸ்தீன பிரச்சினை மூன்றாவது உலகப் போரை உருவாக்கி விடுமோ என்ற அச்சம் உலக மக்களிடையே எழுந்துள்ளது. இப்பிரச்சினை எவ்வாறு ஏற்பட்டது என்பதனை காண்போம்.
பாலஸ்தீனம்
மேற்கு ஆசியாவில் அமைந்துள்ள பாலஸ்தீனம் சிறப்புமிகு வரலாற்று பாரம்பரியங்களை கொண்டது. யூத சமயமும், கிறிஸ்தவ சமயமும் இங்குதான் தோன் றின. எனவே இச்சமயங்களின் புனித தலங்களான ஜெருசலேம் இங்குதான் அமைந்துள்ளது. கி.பி.7ம் நூற்றாண்டில் அரேபியர் இப்பகுதியை கைப்பற்றினர். இங்கு அல்அக்ஷா என்ற புகழ்மிக்க மசூதியை கட்டினர். இதனால் இப்பகுதி அரேபியர்களின் புனித தலமாகவும் ஆனது. பிறகு பாலஸ்தீன பகுதியை ரோமானிய பேரரசு, உதுமானிய பேரரசு போன்ற பேரரசுகள் ஆண்டு வந்தன. முதல் உலகப் போருக்குப் பின் பாலஸ்தீனம் பிரிட்டிஷ் அரசின் மாண்டேட் பகுதியாக மாறியது.
யூதர்கள் குடியேற்றம்
பழங்காலத்தில் பாலஸ்தீனத்தில் யூதர்கள் வாழ்ந்த பகுதிகளில், யூதர்களுக்கென்று தனி தாயகம் அமைக்க வேண்டுமென்று யூத செல்வந்தர்கள் விரும்பினர். இவர்கள் உலகமெங்கும் சிதறிக்கிடந்த யூதர்களை ஒருங்கிணைத்து பாலஸ்தீன பகுதியில் குடியேற வைக்க முடிவு செய்தனர். இச்செயலுக்கு பிரிட்டிஷ் அரசும் ஆதரவு தெரிவித்தது. பாலஸ்தீனத்தில் பெரும்பான்மையாக அரேபியர்கள் வாழ்ந்து வந்தனர்.
தொடக்கத்தில் யூதர்களின் பாலஸ்தீன குடியேற்றத்தை கண்டும் காணாதிருந்த அரேபியர்கள் யூதர்களின் எண்ணிக்கை பெருக்கம் கண்டு அதிர்ச்சியுற்றனர். யூதர் குடியேற்றம் தங்கள் நலனுக்கு பாதகம் விளைவிக்கும் என உணர்ந்தனர். எனவே யூதர்களின் பாலஸ்தீன குடியேற்றத்தை எதிர்த்தனர். இதனால் இரு இனத்தவர்களிடையே சச்சரவு மூண்டது.
அரேபியர்களுக்கு பாலஸ்தீனர்களுக்கு ஏற்பட்ட பிரச்சினையை தீர்க்க பிரிட்டிஷ் அரசால் முடியவில்லை. எனவே இப்பிரச்சினையை ஐ.நா சபைக்கு கொண்டு சென்றது. ஐ.நா இப்பிரச்சினையை தீர்க்க முயற்சி மேற்கொண்டது. அதன்படி பாலஸ்தீனத்தை மூன்று பகுதிகளாக பிரிக்க முடிவு செய்தது. ஒரு பகுதி பாலஸ்தீன அரேபியர்களுக்கென்றும், மற்றொரு பகுதி யூதர்களுக்கென்றும், புகழ்பெற்ற பகுதியான ஜெருசலேம் ஐ.நா.வின் கண்காணிப்பின் கீழ் விடுவதென முடிவு செய்யப்பட்டது. இதனை யூதர்கள் ஏற்றுக் கொண்டனர். அரேபியர்கள் ஏற்க மறுத்து விட்டனர்.
ஐ.நா.வின் முடிவுபடி தங்களுக்கென ஒதுக்கப்பட்ட பகுதிகளில் யூதர்கள் தங்கள் ஆதிக்கத்தை நிறுவி கொண்டனர். இதன்படி 1948ம் ஆண்டு மே 14ம் நாள் இரவு தங்கள் பகுதிகளை ஒருங்கிணைத்து இஸ்ரேல் என்ற புதிய யூத நாட்டை உருவாக்கினர். அமெரிக்கா இதனை ஆதரித்தது. ஐ.நா.வும் இதனை ஏற்றுக் கொண்டு இஸ்ரேலை உறுப்பினராக்கிக் கொண்டது.
அரபு - இஸ்ரேல் போர்கள்
இஸ்ரேல் உருவானதை அமெரிக்கா உட்பட மேற்கத்திய நாடுகள் ஏற்றுக் கொண்டன. ஆனால் அரபு நாடுகளான சிரியா, எகிப்து, லெபனான், ஜோர்டான் போன்ற நாடுகள் ஏற்க மறுத்து 1949-ம் ஆண்டு இஸ்ரேலுடன் போர் தொடுத்தன. இப்போரில் இஸ்ரேலுக்கு அமெரிக்கா உதவி செய்தது. அதனால் இப்போரில் அரபு நாடுகள் தோல்வியடைந்தன. அரேபியர்களுக்கென ஒதுக்கப்பட்ட பகுதிகள் சிலவற்றை இஸ்ரேல் கைப்பற்றிக் கொண்டது.
மீண்டும் 1956, 1957, 1975 ஆகிய ஆண்டுகளில் இஸ்ரேலுடன் அரபு நாடுகள் போர் தொடுத்து தோல்வியையே தழுவின.
இவ்வெற்றியின் மூலம் இஸ்ரேல் அரேபியர்களுக்கென ஒதுக்கப்பட்ட பகுதிகள் அனைத்தையும் கைப்பற்றிக் கொண்டது.
பாலஸ்தீன விடுதலை இயக்கம்
ஐ.நா தங்களுக்கென ஒதுக்கப்பட்ட பகுதிகளை பெற்றுக்கொண்டு அரேபியர்கள் தனி நாடு உருவாக்கி இருந்திருக்கலாம், ஆனால் இஸ்ரேலுடன் போர் தொடுத்ததன் மூலம் தங்கள் பகுதிகளை இழந்து அண்டை நாடுகளான ஜோர்டான், லெபனான் ஆகிய நாடுகளில் அகதிகளாக நாட்டுக்குள் நாடு அமைத்து வாழ்ந்து வருகின்றனர். அங்கு அரேபியர்கள் பாலஸ்தீன விடுதலை இயக்கம் என்ற இயக்கத்தினை தொடங்கி உள்ளனர். இவ்வியக்கத்திற்கு யாசர் அராபத் தலைவராக உள்ளார். இவர்கள் இஸ்ரேலுடன் நேரடியாகவும், மறைமுகமாகவும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். அரேபியர்களுக்கென்று தனி தாயகம் அமைப்பதே இவர்களின் குறிக்கோளாக உள்ளது.
உலக நாடுகள் ஆதரவு
இஸ்ரேல் பாலஸ்தீனியர்களிடமிருந்து கைப்பற்றிய பகுதிகளை விட்டுக் கொடுத்து அரேபியர்களுக்கென தனி தாயகம் உருவாக வழிவகை செய்திட வேண்டுமென்று இந்தியா உள்பட பல உலக நாடுகள் கோரி வருகின்றன. ஆனால் இஸ்ரேல் இதற்கு மறுத்து வருகிறது. இதனால் பிரச்சினை வலுத்துக் கொண்டே செல்கிறது. ஐம்பது ஆண்டுகளுக்கு, மேலாக நடந்து வரும் இப்பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவர முயற்சிக்காமல் அமெரிக்கா இஸ்ரேலுக்கு நிதி மற்றும் படை உதவிகளை செய்து வருகிறது. இதுவே அமெரிக்கா மீது அரபு நாடுகள் பகை கொண்டிருக்க காரணமாக அமைந்துள்ளது.
பாலஸ்தீனம்
மேற்கு ஆசியாவில் அமைந்துள்ள பாலஸ்தீனம் சிறப்புமிகு வரலாற்று பாரம்பரியங்களை கொண்டது. யூத சமயமும், கிறிஸ்தவ சமயமும் இங்குதான் தோன் றின. எனவே இச்சமயங்களின் புனித தலங்களான ஜெருசலேம் இங்குதான் அமைந்துள்ளது. கி.பி.7ம் நூற்றாண்டில் அரேபியர் இப்பகுதியை கைப்பற்றினர். இங்கு அல்அக்ஷா என்ற புகழ்மிக்க மசூதியை கட்டினர். இதனால் இப்பகுதி அரேபியர்களின் புனித தலமாகவும் ஆனது. பிறகு பாலஸ்தீன பகுதியை ரோமானிய பேரரசு, உதுமானிய பேரரசு போன்ற பேரரசுகள் ஆண்டு வந்தன. முதல் உலகப் போருக்குப் பின் பாலஸ்தீனம் பிரிட்டிஷ் அரசின் மாண்டேட் பகுதியாக மாறியது.
யூதர்கள் குடியேற்றம்
பழங்காலத்தில் பாலஸ்தீனத்தில் யூதர்கள் வாழ்ந்த பகுதிகளில், யூதர்களுக்கென்று தனி தாயகம் அமைக்க வேண்டுமென்று யூத செல்வந்தர்கள் விரும்பினர். இவர்கள் உலகமெங்கும் சிதறிக்கிடந்த யூதர்களை ஒருங்கிணைத்து பாலஸ்தீன பகுதியில் குடியேற வைக்க முடிவு செய்தனர். இச்செயலுக்கு பிரிட்டிஷ் அரசும் ஆதரவு தெரிவித்தது. பாலஸ்தீனத்தில் பெரும்பான்மையாக அரேபியர்கள் வாழ்ந்து வந்தனர்.
தொடக்கத்தில் யூதர்களின் பாலஸ்தீன குடியேற்றத்தை கண்டும் காணாதிருந்த அரேபியர்கள் யூதர்களின் எண்ணிக்கை பெருக்கம் கண்டு அதிர்ச்சியுற்றனர். யூதர் குடியேற்றம் தங்கள் நலனுக்கு பாதகம் விளைவிக்கும் என உணர்ந்தனர். எனவே யூதர்களின் பாலஸ்தீன குடியேற்றத்தை எதிர்த்தனர். இதனால் இரு இனத்தவர்களிடையே சச்சரவு மூண்டது.
அரேபியர்களுக்கு பாலஸ்தீனர்களுக்கு ஏற்பட்ட பிரச்சினையை தீர்க்க பிரிட்டிஷ் அரசால் முடியவில்லை. எனவே இப்பிரச்சினையை ஐ.நா சபைக்கு கொண்டு சென்றது. ஐ.நா இப்பிரச்சினையை தீர்க்க முயற்சி மேற்கொண்டது. அதன்படி பாலஸ்தீனத்தை மூன்று பகுதிகளாக பிரிக்க முடிவு செய்தது. ஒரு பகுதி பாலஸ்தீன அரேபியர்களுக்கென்றும், மற்றொரு பகுதி யூதர்களுக்கென்றும், புகழ்பெற்ற பகுதியான ஜெருசலேம் ஐ.நா.வின் கண்காணிப்பின் கீழ் விடுவதென முடிவு செய்யப்பட்டது. இதனை யூதர்கள் ஏற்றுக் கொண்டனர். அரேபியர்கள் ஏற்க மறுத்து விட்டனர்.
ஐ.நா.வின் முடிவுபடி தங்களுக்கென ஒதுக்கப்பட்ட பகுதிகளில் யூதர்கள் தங்கள் ஆதிக்கத்தை நிறுவி கொண்டனர். இதன்படி 1948ம் ஆண்டு மே 14ம் நாள் இரவு தங்கள் பகுதிகளை ஒருங்கிணைத்து இஸ்ரேல் என்ற புதிய யூத நாட்டை உருவாக்கினர். அமெரிக்கா இதனை ஆதரித்தது. ஐ.நா.வும் இதனை ஏற்றுக் கொண்டு இஸ்ரேலை உறுப்பினராக்கிக் கொண்டது.
அரபு - இஸ்ரேல் போர்கள்
இஸ்ரேல் உருவானதை அமெரிக்கா உட்பட மேற்கத்திய நாடுகள் ஏற்றுக் கொண்டன. ஆனால் அரபு நாடுகளான சிரியா, எகிப்து, லெபனான், ஜோர்டான் போன்ற நாடுகள் ஏற்க மறுத்து 1949-ம் ஆண்டு இஸ்ரேலுடன் போர் தொடுத்தன. இப்போரில் இஸ்ரேலுக்கு அமெரிக்கா உதவி செய்தது. அதனால் இப்போரில் அரபு நாடுகள் தோல்வியடைந்தன. அரேபியர்களுக்கென ஒதுக்கப்பட்ட பகுதிகள் சிலவற்றை இஸ்ரேல் கைப்பற்றிக் கொண்டது.
மீண்டும் 1956, 1957, 1975 ஆகிய ஆண்டுகளில் இஸ்ரேலுடன் அரபு நாடுகள் போர் தொடுத்து தோல்வியையே தழுவின.
இவ்வெற்றியின் மூலம் இஸ்ரேல் அரேபியர்களுக்கென ஒதுக்கப்பட்ட பகுதிகள் அனைத்தையும் கைப்பற்றிக் கொண்டது.
பாலஸ்தீன விடுதலை இயக்கம்
ஐ.நா தங்களுக்கென ஒதுக்கப்பட்ட பகுதிகளை பெற்றுக்கொண்டு அரேபியர்கள் தனி நாடு உருவாக்கி இருந்திருக்கலாம், ஆனால் இஸ்ரேலுடன் போர் தொடுத்ததன் மூலம் தங்கள் பகுதிகளை இழந்து அண்டை நாடுகளான ஜோர்டான், லெபனான் ஆகிய நாடுகளில் அகதிகளாக நாட்டுக்குள் நாடு அமைத்து வாழ்ந்து வருகின்றனர். அங்கு அரேபியர்கள் பாலஸ்தீன விடுதலை இயக்கம் என்ற இயக்கத்தினை தொடங்கி உள்ளனர். இவ்வியக்கத்திற்கு யாசர் அராபத் தலைவராக உள்ளார். இவர்கள் இஸ்ரேலுடன் நேரடியாகவும், மறைமுகமாகவும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். அரேபியர்களுக்கென்று தனி தாயகம் அமைப்பதே இவர்களின் குறிக்கோளாக உள்ளது.
உலக நாடுகள் ஆதரவு
இஸ்ரேல் பாலஸ்தீனியர்களிடமிருந்து கைப்பற்றிய பகுதிகளை விட்டுக் கொடுத்து அரேபியர்களுக்கென தனி தாயகம் உருவாக வழிவகை செய்திட வேண்டுமென்று இந்தியா உள்பட பல உலக நாடுகள் கோரி வருகின்றன. ஆனால் இஸ்ரேல் இதற்கு மறுத்து வருகிறது. இதனால் பிரச்சினை வலுத்துக் கொண்டே செல்கிறது. ஐம்பது ஆண்டுகளுக்கு, மேலாக நடந்து வரும் இப்பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவர முயற்சிக்காமல் அமெரிக்கா இஸ்ரேலுக்கு நிதி மற்றும் படை உதவிகளை செய்து வருகிறது. இதுவே அமெரிக்கா மீது அரபு நாடுகள் பகை கொண்டிருக்க காரணமாக அமைந்துள்ளது.
Re: இஸ்ரேல்-பாலஸ்தீன பிரச்சினை ஏற்பட்டது எப்படி?
பாலஸ்தீனம் அழிந்து இஸ்ரேலுடன் இணைய வேண்டும், அல்லது இஸ்ரேல் அழிந்து பாலஸ்தீனத்துடன் சேர வேண்டும், அதுவரை யுத்தம் முடிவடையாது!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: இஸ்ரேல்-பாலஸ்தீன பிரச்சினை ஏற்பட்டது எப்படி?
இப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதென்பது குதிரைக்கொம்பு.......அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் விரும்பினால் நடக்கலாம். ஆனால் சாத்தியமற்றது.
jesifer- கல்வியாளர்
- பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014
Re: இஸ்ரேல்-பாலஸ்தீன பிரச்சினை ஏற்பட்டது எப்படி?
முன்பு வேண்டுமென்றால் அமேரிக்கா இஸ்ரேலுக்கு உதவி இருக்கலாம் - தற்பொழுது அமேரிக்கா இஸ்ரேலின் கைப்பாவை
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Similar topics
» பாலஸ்தீன சிறுவன் மீதான பாலியல் தாக்குதல் - விசாரணைக்கு இஸ்ரேல் தடை
» இஸ்ரேல் மீது சர்வதேச கோர்ட்டில் வழக்கு: பாலஸ்தீன விடுதலை இயக்கம் முடிவு
» சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள பாலஸ்தீன கைதிகளை நூதன முறையில் சித்திரவதை செய்யும் இஸ்ரேல்!
» மகாலட்சுமி அவதாரம் எப்படி ஏற்பட்டது?
» ஆங்கில ஆண்டுக்குரிய மாதங்களின் பெயர்கள், எப்படி ஏற்பட்டது தெரியுமா?
» இஸ்ரேல் மீது சர்வதேச கோர்ட்டில் வழக்கு: பாலஸ்தீன விடுதலை இயக்கம் முடிவு
» சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள பாலஸ்தீன கைதிகளை நூதன முறையில் சித்திரவதை செய்யும் இஸ்ரேல்!
» மகாலட்சுமி அவதாரம் எப்படி ஏற்பட்டது?
» ஆங்கில ஆண்டுக்குரிய மாதங்களின் பெயர்கள், எப்படி ஏற்பட்டது தெரியுமா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|