ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 18:19

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 18:00

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 15:03

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 15:00

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 14:58

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 14:54

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 14:52

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 14:50

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:55

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Today at 0:23

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 23:27

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 17:52

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 17:41

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:58

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:37

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 16:31

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:16

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:56

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:36

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:18

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 14:00

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:40

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 13:06

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 8:46

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 8:45

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 8:44

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 8:42

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 8:41

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 8:39

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:57

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed 2 Oct 2024 - 3:12

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:08

நிகழ்நிலை நிர்வாகிகள்

சீமைக்கருவேல மரங்கள் நல்லவையா? கெட்டவையா?

+5
விமந்தனி
ராஜா
krishnaamma
Dr.S.Soundarapandian
sugumaran
9 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

சீமைக்கருவேல மரங்கள் நல்லவையா? கெட்டவையா?  Empty சீமைக்கருவேல மரங்கள் நல்லவையா? கெட்டவையா?

Post by sugumaran Tue 2 May 2017 - 9:49

சீமைக்கருவேல மரங்கள் நல்லவையா? கெட்டவையா?


இப்போது அவைகளை வேகமாக அழித்தபின் புதிய விவாதம் தொடங்கியுள்ளது கண்கெட்டபின் சூரிய வணக்கம் செய்யமுடியுமா ?
யாரைத்தான்நம்புவதோ பேதை நெஞ்சம் என கலக்கம்
ஒண்ணுமே புரியலே என்னமோ நடக்குது என மயக்கம் !
தமிழகத்தில் சீமைக்கருவேல மரங்களை வெட்ட மே 11 வரை இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
இன்றைய தமிழ் ஹிந்துவில் ஒரு சுவையான கட்டுரை வந்துள்ளது
தகவலுக்காக நன்றியுடன் பகிர்கிறேன்



உவர் நிலத்தின் ஆலகால விஷத்தை உண்டது சீமைக்கருவேல மரங்கள்: ஆச்சர்யமூட்டும் ஓர் ஆய்வு

கா.சு.வேலாயுதன்
சூழலை பாதிக்கிறது என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட வில்லை!’ என்ற மனுவை முன்வைத்து தமிழகத்தில் சீமைக்கருவேல மரங்களை வெட்ட மே 11 வரை இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை ஐஐடி இயக்குநர் பதிலளிக்கவும், வழக்கை 3 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கும் மாற்றி உத்தரவிட்டுள்ளது நீதிமன்றம். இதன் பின்னணியில் சீமைக்கருவேல மரங்கள் நல்லவையா? கெட்டவையா? என்ற சர்ச்சை கச்சை கட்டி நிற்கின்றன. காரைக்கால், பண்டித ஜவஹர்லால் நேரு வேளாண்கல்லூரி முன்னாள் முதல்வரும், உழவியல் துறை பேராசிரியருமான முனைவர் வி. செல்லமுத்து இந்த சீமைக்கருவேல மரங்கள் குறித்து 1992- 1995ல் ஆய்வு செய்து பிஎச்டி பட்டம் பெற்றவர். தி இந்து சார்பாக அவரிடம் பேசிய போது பகிர்ந்து கொண்டவை:

நான் விருதுநகர் மாவட்டத்தின் கிழக்கு கடைகோடி நரிக்குடி கிராமத்தை சேர்ந்தவன். பழைய ராமநாதபுரம் மாவட்டம் கடும்வறட்சிக்கு இலக்கான போது அங்கிருந்து தஞ்சாவூருக்கு மக்கள் கூட்டம் கூட்டமாக பஞ்சம் பிழைக்க சென்றார்கள். ஒரு கட்டத்தில் அப்படி கிராமங்களை விட்டு சென்ற 5 மாவட்ட மக்களின் வாழ்வையே மாற்றியது சீமைக்கருவேல மரங்கள். அவர்கள் இருந்த பூமியில் இந்த சீமைக் கருவேலன்கள் நன்றாக வளர்ந்தது. அதை வெட்டி விறகாக்கி, கரியாக்கி உள்ளூரில் மட்டுமல்ல; வெளியூர், வெளி மாநிலங்களுக்கும் அனுப்பத் தொடங்கினார்கள். சுண்ணாம்பு சூளை, கொல்லம்பட்டறை என பயன்பட்டிருக்கிறது. அதனால் அவர்கள் வாழ்வு மேம்பட்டது. அங்கே இதை விற்பனை செய்தே கோடீஸ்வரர் ஆனவர்களும் உண்டு. எனவே என் ஆராய்ச்சிக்கு இதையே எடுத்துக் கொண்டேன். அதை ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொண்டபோது பலரும் சிரித்தார்கள். கேலி செய்தார்கள். எனக்கு தெரிந்து இதில் என்னைப்போல் ஆய்வு செய்து 4 பேர் முனைவர் பட்டம் பெற்றுள்ளார்கள்.

சீமைக்கருவேலம் 1870களில் மெக்ஸிகோ நாட்டிலிருந்து ஜோத்பூர் மகாராஜா ராஜஸ்தான் முழுக்க கொண்டு வந்து நட செய்திருக்கிறார். ராஜஸ்தான் பாலைவனங்களில் வீசும் காற்றின் வேகத்தால் மணல் மலைக் குன்றுகள். அது குடியிருப்புகளின் வீட்டையே மூடிவிடும். கதவுகளை திறக்க முடியாது. மணல்குன்றுகளை மண்வெட்டி, கடப்பாரை போன்ற ஆயுதங்களை வைத்து அகற்றுவது மனித சக்திக்கு பெரும்பாடாக இருந்தது. அந்த நிலத்திலும் விளையக்கூடிய தாவரமாக இது இருந்ததோடு, மணல் குன்றுகளை உருவாவதை தடுக்கும் அபூர்வ மரமாகவும் விளங்கியது. எனவே ROYAL TREE என்றே இதை வர்ணித்தார் அந்த மகராஜா. அது மட்டுமல்ல, இந்த மரங்களை வெட்டுபவர்கள் தலை துண்டிக்கப்படும் என்றும் சட்டம் போட்டு தடுத்திருக்கிறார். அதனால்தான் இன்றைக்கு ராஜஸ்தான் முழுப் பாலைவனமாகாமல் தடுக்கப்பட்டிருக்கிறது.

காமராஜர் ஆட்சி காலத்தில் இந்த சீமைக்கருவேல மரங்கள் தமிழகத்திற்குள் கொண்டு வரப்பட்டன. ஒரு மரத்திலிருந்து ஆயிரக்கணக்கான விதைகள் விழுவதால் ஆயிரக்கணக்கான நாற்றுக்களும் முளைத்தன. இந்த மரத்தின் விதைகளை சாப்பிட்ட கால்நடைகள் போடும் சாணம் மூலமாகவும் விதைகள் விழுந்து முளைத்து பெருக ஆரம்பித்தது. அப்படி மட்டும் இது வந்து பெருகாமல் இருந்திருந்தால் நம் மேற்குத்தொடர்ச்சி மலைக் காடுகளே எரிபொருளுக்காக அழிக்கப்பட்டிருக்கும். அந்த காலத்தில் களர் உவர் நிலங்களை சலவைத்தொழிலாளர்கள் தேடிச்சென்று துணி துவைக்கும் சோடா உப்பு எடுப்பார்கள் என்பதை கேள்விப்பட்டிருப்பீர்கள். அந்த நிலையை அடியோடு மாற்றியது இம்மரங்கள். கடலோர பிரதேசங்களில் இது வளர்ந்து கடல் உப்புமண் உள்நாட்டிற்குள் ஊடுருவாமல் தடுத்தது. உப்பள நிலத்தில் நிறைந்திருக்கும் சோடியம் குளோரைடு, சோடியம் சல்பேட் உப்புக்களை உறிஞ்சி சாப்பிட்டு தானாகவே வளர்ந்தது (இந்த நிலத்தில் மற்ற மரங்கள் வைத்தால் கருகிவிடும்) அமிர்தம் கடையும்போது வெளிப்பட்ட ஆலகால விஷத்தை உண்டு சிவன் அருள் புரிந்ததுபோல் சோடியம் என்ற நஞ்சை உண்டு நிலத்தை சொஸ்தப்படுத்திய இந்த தாவரத்தை WONDER CHILD OF NATURE என்று வர்ணித்திருக்கிறார் ஒரு விஞ்ஞானி.

ஆடு, மாடுகள் இந்த இம்மரங்களின் காய்களையே சாப்பிட்டு வளர்ந்தன. வீட்டிற்கும், தோட்டத்திற்கும், காடுகளுக்கும், சிறுதொழிற்சாலைகளுக்கும் தடுப்பு வேலியாக இந்த மரங்களே பயன்பட்டது. விறகாக, கரியாக, கரித்துகளாக மாற்றம் செய்யப்பட்ட இம்மரம் சிவகாசி பட்டாசுத் தொழிற்சாலைகளுக்கும், வெடிமருந்து தொழிற்சாலைகளுக்கும், நீராவியால் இயங்கும் ஆலைகளுக்கும், ஊதுபத்தி கம்பெனிகளுக்கும் சென்றது. தவிர கார்பன் எலக்ட்ரோடுகளாக ஆய்வகங்களிலும், இண்டஸ்ட்ரிகளிலும் பயன்பட்டது. இப்பவும் பரமக்குடி, மானா மதுரை போன்ற பகுதிகளில் இப்பவும் குஜராத் மாநில வியாபாரிகள் இம்மரத்தின் கரிகளை லாரி, லாரியாக வாங்கி சென்று கொண்டிருக்கிறார்கள். அவை மும்பை, கல்கத்தா பகுதிகளிலிருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது.

அது எங்கே போகிறது. எதற்கு கொண்டு செல்கிறார்கள் என்பதை நாம் அறிந்து கொள்ளவில்லை. 100 சதுர கிலோமீட்டர் இந்த சீமைக்கருவேல மரங்கள் இருந்தால் நெய்வேலி லிக்னைட் தொழிற்சாலை ஒன்றை போட முடியும். அதை கரியா எரிச்சு புகையா விட்டால்தான் சூழல் கேடு, அதையே ஸ்டீம் எனர்ஜியாகவும், எலக்ட்ரிசிட்டியாகவும், பயோ கேஸ், பயோ ப்யூல் என மாற்றிப் பயன்படுத்தினால் ஒரு கேடும் இல்லை என்கிறார் ஒரு விஞ்ஞானி. ஒரு காலத்தில் காகிதக்கம்பெனியில் இதன் பயன்பாடு அதிகம் இருந்தது. இந்த மரங்கள் வளைவாகவும், முள்ளோடும் இருப்பது இதை பயன்படுத்துவதற்கு சிரமங்களை ஏற்படுத்தியது. அதை சமவாக்கில் முள் இல்லாமல் புதிய வடிவில் விளைவிக்க விதை ஆய்வு முயற்சிகள் நடந்துள்ளது. அது தொடரவில்லை.

இதன் கீழே எந்த தாவரமும் வளராதுதான். கண்மாய், ஏரி என நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் இவை நின்றதால் அதன் நீர்பரப்பு குறைந்தது. அல்லினோபதி என்ற வேதியியற் பொருள் மிகையாக இருப்பதால் எளிதாக நிலத்தடி நீரை உறிஞ்சுகிறது என்கிறார்கள். ஆனால் இதனால்தான் நிலத்தடி நீர் குறைந்தது என்று நிரூபிக்கப்படவில்லை. மாறாக இம்மரங்கள் எங்கெல்லாம் அதிகமாக உள்ளதோ அங்கு தண்ணீர் நிறைய இருக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது. கலிபோர்னியாவில் 100 அடி, 200 அடி நிலத்தடி நீர் உள்ள பகுதிகளை இந்த தாவரம் வளர்ந்ததை வைத்தே அறிந்துள்ளார்கள். உலகில் 3ல் ஒரு பங்கு சீமைக்கருவேல மரங்கள் 40 இனங்களாக இருக்கிறது. இந்தியாவில் 2 இனங்கள் மட்டுமே உள்ளது.

அதில் ஓர் இனமே தமிழ்நாட்டில் உள்ள ‘ப்ரோசோபிச் சூலிஃப்லோரா! (PROSOPIS JULIFLORIA)’. இதில் முட்கள் உள்ளது. இலைகளை ஆடுமாடுகள் சாப்பிடாது. காய்களை மட்டுமே சாப்பிடுகிறது. மனிதர்களுக்கு உணவாக பயன்படுவதில்லை. இந்த இனம் ஆர்டிக், அண்டார்டிகா தவிர அனைத்து நாடுகளிலும் உள்ளது. ஆனால் ராஜஸ்தானில் உள்ள சீமைக்கருவேலம் ப்ரோசோபிச் சினரேரியாவிற்கு (PROSOPIS CINERARIA) முட்கள் கிடையாது. அதில் உள்ள இலைதலைகளை ஆடு, மாடுகள் சாப்பிடுகிறது. அதில் உள்ள விதைகளை மக்கள் பச்சைப்பயிறு போல உணவுக்கு பயன்படுத்துகிறார்கள். அந்த சீமைக்கருவேலம் மத்திய பிரதேசத்திற்கு கீழே மட்டுமே உள்ளது.

எந்த உயிரினமும் சிறிய அளவில், சிறுபான்மையாக இருக்கும்போது, அதன் தேவை அதிகமாக இருக்கும். அப்போது அதை அழைத்து விருந்து வைப்பது மனிதனின் வழக்கம். அதுவே மிகுதியானால், தேவை குறைந்தால் சமுதாயப்பேரழிவுக்கே இதுதான் காரணம் என விரட்டுவோம். உதாரணத்திற்கு கங்காரு ஆஸ்திரேலியாவின் தேசிய விலங்கு. அதுவே அதிகமாகி விவசாய நிலங்களுக்குள் நுழைந்து விளைச்சலை அழித்தால் பேரழிவு சுட்டுக் கொல்ல சொல்லுகிறார்கள். அதே நிலைதான் தற்போது சீமைக்கருவேலனுக்கும் ஏற்பட்டுள்ளது. விளைநிலத்தை வீடுகளாக்கக்கூடாது; வீடுகள் உள்ள நிலத்தை விளைநிலமாக்க முயற்சிக்கக்கூடாது என்பதுதான் இயற்கை நியதி. அதுபோல இது தேவையற்ற இடங்களில் விளைய விடாமல் தடுப்பதும், தேவையான இடங்களில் வளர்வதும் அவசியமானது. இது இல்லாமலே போய்விட்டால் வரும் காலங்களில் மற்ற காடுகள் அழிக்கப்படுவதை தடுக்க முடியாது.
sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010

Back to top Go down

சீமைக்கருவேல மரங்கள் நல்லவையா? கெட்டவையா?  Empty Re: சீமைக்கருவேல மரங்கள் நல்லவையா? கெட்டவையா?

Post by Dr.S.Soundarapandian Tue 2 May 2017 - 22:47

சீமைக்கருவேல மரங்கள் நல்லவையா? கெட்டவையா?  1571444738


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

சீமைக்கருவேல மரங்கள் நல்லவையா? கெட்டவையா?  Empty Re: சீமைக்கருவேல மரங்கள் நல்லவையா? கெட்டவையா?

Post by krishnaamma Wed 3 May 2017 - 2:15

//சீமைக்கருவேலம் 1870களில் மெக்ஸிகோ நாட்டிலிருந்து ஜோத்பூர் மகாராஜா ராஜஸ்தான் முழுக்க கொண்டு வந்து நட செய்திருக்கிறார். ராஜஸ்தான் பாலைவனங்களில் வீசும் காற்றின் வேகத்தால் மணல் மலைக் குன்றுகள். அது குடியிருப்புகளின் வீட்டையே மூடிவிடும். கதவுகளை திறக்க முடியாது. மணல்குன்றுகளை மண்வெட்டி, கடப்பாரை போன்ற ஆயுதங்களை வைத்து அகற்றுவது மனித சக்திக்கு பெரும்பாடாக இருந்தது. அந்த நிலத்திலும் விளையக்கூடிய தாவரமாக இது இருந்ததோடு, மணல் குன்றுகளை உருவாவதை தடுக்கும் அபூர்வ மரமாகவும் விளங்கியது. எனவே ROYAL TREE என்றே இதை வர்ணித்தார் அந்த மகராஜா. அது மட்டுமல்ல, இந்த மரங்களை வெட்டுபவர்கள் தலை துண்டிக்கப்படும் என்றும் சட்டம் போட்டு தடுத்திருக்கிறார். அதனால்தான் இன்றைக்கு ராஜஸ்தான் முழுப் பாலைவனமாகாமல் தடுக்கப்பட்டிருக்கிறது.//

ரொம்ப சரி, இன்றும் வயலுக்கு நடுவில் இருந்தால் கூட இந்த மரத்தை வெட்ட மாட்டார்கள் ராஜஸ்தான் மக்கள்.....பொக்கிஷம் போல பாது காப்பார்கள், அதை பார்த்துப் பழகிய எனக்கு, நம் தமிழ்நாட்டில் அவற்றை வெட்டக் கிளம்பியது அதிர்ச்சியையும் ஆச்சர்யத்தையும் அளித்தது புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சீமைக்கருவேல மரங்கள் நல்லவையா? கெட்டவையா?  Empty Re: சீமைக்கருவேல மரங்கள் நல்லவையா? கெட்டவையா?

Post by krishnaamma Wed 3 May 2017 - 2:21

ஆனால் ராஜஸ்தானில் உள்ள சீமைக்கருவேலம் ப்ரோசோபிச் சினரேரியாவிற்கு (PROSOPIS CINERARIA) முட்கள் கிடையாது. அதில் உள்ள இலைதலைகளை ஆடு, மாடுகள் சாப்பிடுகிறது. அதில் உள்ள விதைகளை மக்கள் பச்சைப்பயிறு போல உணவுக்கு பயன்படுத்துகிறார்கள்.

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்



அருமையான கட்டுரை ஐயா.........மிகவும் அருமை ! ...பகிர்வுக்கு மிக்க நன்றி ! நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சீமைக்கருவேல மரங்கள் நல்லவையா? கெட்டவையா?  Empty Re: சீமைக்கருவேல மரங்கள் நல்லவையா? கெட்டவையா?

Post by ராஜா Wed 3 May 2017 - 18:38

சீமை கருவேலமரம் குறித்த பல அறிஞர்களின் கட்டுரைகள் இப்பல்லாம் வந்துகிட்டு இருக்குது. புன்னகை

நமக்கு அந்த அளவுக்கு எல்லாம் ஞானம் கிடையாது. ஒரு சில சந்தேகங்கள் அவ்வளவு தான்

- ஏன் இந்த மரத்தின் இலைகளை தாவரஉண்ணிகள் உண்பது இல்லை.

- நிலத்தடி நீரை இவை உறிஞ்சாது சரி , ஆனால் தண்ணீரே இல்லாத அரபு பாலைவனங்களில் இவைகளால் எப்படி வளர  முடிகிறது?

- காய்களை கால்நடைகள் உண்கின்றன என்பது தவறான தகவல்.
(மஞ்சள் நிறமுடைய சீமைக்கருவேல காய்களை எந்த விலங்கினமும் சாப்பிடாது,
இளம் பச்சை அல்லது சாம்பல் நிறமுடைய நாட்டு கருவேல மர காய்களை தான் ஆடு மாடுகள் சாப்பிடும்) இந்த மரத்தின் நடுப்பகுதியை கொண்டு தான் விவசாயிகள் ஏர் கலப்பை , மண்வெட்டி பிடி போன்றவை செய்வார்கள். அவ்வை பாட்டி சொன்ன "ஆலும் ,வேலும்" இந்த வேல மரத்தை தான்.

இதன் கீழே எந்த தாவரமும் வளராதுதான். கண்மாய், ஏரி என நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் இவை நின்றதால் அதன் நீர்பரப்பு குறைந்தது.
ரொம்ப சாதாரணமா சொல்லிட்டீங்க ,  புன்னகை

ராஜஸ்தானில் உள்ள சீமைக்கருவேலம் ப்ரோசோபிச் சினரேரியாவிற்கு (PROSOPIS CINERARIA) முட்கள் கிடையாது. அதில் உள்ள இலைதலைகளை ஆடு, மாடுகள் சாப்பிடுகிறது. அதில் உள்ள விதைகளை மக்கள் பச்சைப்பயிறு போல உணவுக்கு பயன்படுத்துகிறார்கள்
அப்ப இந்த மரத்தையே தமிழ்நாட்டிலும் வளர்க்க சொல்ல வேண்டியது தானே. இங்க மட்டும் ஏன் இந்த சீமை கருவேலமரம்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

சீமைக்கருவேல மரங்கள் நல்லவையா? கெட்டவையா?  Empty Re: சீமைக்கருவேல மரங்கள் நல்லவையா? கெட்டவையா?

Post by ராஜா Wed 3 May 2017 - 18:39

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

சீமைக்கருவேல மரங்கள் நல்லவையா? கெட்டவையா?  Empty Re: சீமைக்கருவேல மரங்கள் நல்லவையா? கெட்டவையா?

Post by விமந்தனி Wed 3 May 2017 - 23:43

ராஜா wrote:சீமை கருவேலமரம் குறித்த பல அறிஞர்களின் கட்டுரைகள் இப்பல்லாம் வந்துகிட்டு இருக்குது.
சமீப காலமாக whats app லும் கூட இந்த சீமை கருவேல மரங்களுக்கு சாதகமாக சில பதிவுகள் உலவிக்கொண்டிருக்கிறது. யார் இதை இப்படி மன சாட்சி இல்லாமல் பரப்புகிறார்கள் என்று தான் தெரியவில்லை.


சீமைக்கருவேல மரங்கள் நல்லவையா? கெட்டவையா?  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசீமைக்கருவேல மரங்கள் நல்லவையா? கெட்டவையா?  L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சீமைக்கருவேல மரங்கள் நல்லவையா? கெட்டவையா?  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013

Back to top Go down

சீமைக்கருவேல மரங்கள் நல்லவையா? கெட்டவையா?  Empty Re: சீமைக்கருவேல மரங்கள் நல்லவையா? கெட்டவையா?

Post by T.N.Balasubramanian Thu 4 May 2017 - 4:31

அறியாத தகவல்கள்.
ஆலும் வேலும் பல்லுக்குறுதி. அந்த வேலம் குச்சி இதுதானோ?

ஆனால்,
"அதை கரியா எரிச்சு புகைய விட்டால்தான் சூழல் கேடு, அதையே ஸ்டீம் எனர்ஜியாகவும், எலக்ட்ரிசிட்டியாகவும், பயோ கேஸ், பயோ ப்யூல் என மாற்றிப் பயன்படுத்தினால் ஒரு கேடும் இல்லை என்கிறார் ஒரு விஞ்ஞானி"
சந்தேகம் இதுதான் , எரிக்காமல் எப்பிடி அதை ஸ்டீம்   எனெர்ஜியாக மாற்றமுடியும் ?

ரமணியன்


Last edited by T.N.Balasubramanian on Thu 4 May 2017 - 20:39; edited 1 time in total (Reason for editing : corrected once)


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

சீமைக்கருவேல மரங்கள் நல்லவையா? கெட்டவையா?  Empty Re: சீமைக்கருவேல மரங்கள் நல்லவையா? கெட்டவையா?

Post by ராஜா Thu 4 May 2017 - 15:14

விமந்தனி wrote:
ராஜா wrote:சீமை கருவேலமரம் குறித்த பல அறிஞர்களின் கட்டுரைகள் இப்பல்லாம் வந்துகிட்டு இருக்குது.
சமீப காலமாக whats app லும் கூட இந்த சீமை கருவேல மரங்களுக்கு சாதகமாக சில பதிவுகள் உலவிக்கொண்டிருக்கிறது. யார் இதை இப்படி மன சாட்சி இல்லாமல் பரப்புகிறார்கள் என்று தான் தெரியவில்லை.
எல்லாம் , பெருநகரங்களில் எந்தவித கஷ்டமும் இல்லாமல் மாதசம்பளமாக வந்த பணத்தில் "அரிசியும்+பருப்பும் , காய்கறியும்" வாங்கி பொங்கி தின்னுட்டு செரிக்காம கட்டுரை எழுதும் நபர்களாக தான் இருக்கும். புன்னகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

சீமைக்கருவேல மரங்கள் நல்லவையா? கெட்டவையா?  Empty Re: சீமைக்கருவேல மரங்கள் நல்லவையா? கெட்டவையா?

Post by விமந்தனி Thu 4 May 2017 - 15:39

ராஜா wrote:எல்லாம் , பெருநகரங்களில் எந்தவித கஷ்டமும் இல்லாமல் மாதசம்பளமாக வந்த பணத்தில் "அரிசியும்+பருப்பும் , காய்கறியும்" வாங்கி பொங்கி தின்னுட்டு செரிக்காம கட்டுரை எழுதும் நபர்களாக தான் இருக்கும். புன்னகை

இருக்கலாம். தன் எழுத்துக்கள் கவனிக்கப்படவேண்டும் என்ற காரணத்தினால் கூட வேண்டுமென்றே எழுதுகிறார்களோ என்னவோ....


சீமைக்கருவேல மரங்கள் நல்லவையா? கெட்டவையா?  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசீமைக்கருவேல மரங்கள் நல்லவையா? கெட்டவையா?  L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சீமைக்கருவேல மரங்கள் நல்லவையா? கெட்டவையா?  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013

Back to top Go down

சீமைக்கருவேல மரங்கள் நல்லவையா? கெட்டவையா?  Empty Re: சீமைக்கருவேல மரங்கள் நல்லவையா? கெட்டவையா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum