ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுயமரியாதை ! நூல்ஆசிரியர் : முதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ. இறையன்பு ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

Go down

சுயமரியாதை ! நூல்ஆசிரியர் : முதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ. இறையன்பு ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Empty சுயமரியாதை ! நூல்ஆசிரியர் : முதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ. இறையன்பு ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

Post by eraeravi Wed Apr 19, 2017 4:47 pm

சுயமரியாதை !
நூல்ஆசிரியர் : முதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ. இறையன்பு !
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
நேசம் பதிப்பகம் !
(மனிதவள மேம்பாட்டு மையத்தின் ஓர் அங்கம்)
எண்.9 ஜி.ஏ.ரோடு, சென்னை-600 021. nesambublication@gmail.com
25980044, 94443 61136, பக்கம் 64 விலை 30.
**********
‘சுயமரியாதை’ என்ற தலைப்பே எல்லோரும் விரும்பிடும் நல்ல தலைப்பு. நூல் ஆசிரியர் நேர்மையான முதன்மைச் செயலர் எழுத்தாளர், பேச்சாளர் என பன்முக ஆற்றல் கொண்ட முதுமுனைவர் வெ. இறையன்பு. நூலை வாங்கிப் படித்துப் பார்த்தேன். 1 மணி நேரத்தில் ஒரேயடியாக படித்து முடித்துவிட்டேன்.
தெளிந்த நீரோடை போன்ற நல்ல நடை. சமுதாயத்திற்கு, தனிமனிதனுக்கு அறநெறி கூறும் நல்ல நூல். சுயமரியாதை இயக்கங்கள் தோன்றிய பின்பு தான் நமது தமிழகத்தில் கல்வியும், பதவியும் எல்லோருக்கும் கிடைக்கும் நிலை வந்தது. சுயமரியாதை என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் அவசியம் தேவையான ஒன்று.
மனிதனுக்கு அழகு சுயமரியாதையோடு வாழ்வது தான். எந்த ஒரு மனிதன் சுயமரியாதையுடன் வாழ்வாங்கு வாழ்கிறானோ அந்த மனிதனுக்கு மற்றவர்கள் மரியாதை தந்து மதிப்பு நடப்பார்கள்.
காந்தியடிகளிடம் ஒரு பெண் வந்து என் குழந்தை இனிப்பு நிறைய உண்கிறது கண்டியுங்கள் கேட்டபோது, 1வாரம் கழித்து வரச்சொல்லி விட்டு, பின்பு குழந்தையிடம் அதிகம் இனிப்பு உண்ணுவது கூடாது என ஆலோசனை வழங்கினாராம். இதனை ஏன் அன்றே கூறவில்லை என்று கேட்டபோது. இனிப்பு உண்ணும் பழக்கம் எனக்கும் இருந்தது. அப்போது ஆலோசனை வழங்கிட எனக்குத் தகுதி இல்லை. இப்போது இனிப்பு உண்ணும் பழக்கத்தை விட்டுவிட்டேன். இனி எனக்கு தகுதி உண்டு என்றாராம் காந்தியடிகள்.
முதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப. அவர்களுக்கு சுயமரியாதை பற்றி நூல் எழுதிட முழுத்தகுதியும் உண்டு. காரணம் அவர் சுயமரியாதை மிக்க மனிதர். எதற்காகவும் நேர்மையை, ஒழுக்கத்தை, பண்பை விட்டுக் கொடுக்காமல் கௌரவமாக வாழ்ந்து வரும் உயர்ந்த மனிதர்.
இன்றைய இளைஞர்கள் பலரால் நேசிக்கப்படக் கூடியவர். நிலவொளி பள்ளியின் மூலம் ஒடுக்கப்பட்டவர்களின் வாழ்வில் ஒளி ஏற்றியவர். மாமனிதர் அப்துல்கலாம் அவர்களுக்கு அடுத்தபடியாக இளைஞர்களால் அதிகம் விரும்பப்படும் மாமனிதர்.பேசியபடியும் எழுதும்படியும் வாழ்ந்து வரும் நல்லவர் .பேச்சுக்கும், எழுத்துக்கும், செயலுக்கும் வேற்றுமை இல்லாத சிறந்த மனிதர் .
நூலிலிருந்து பதச்சோறாக சில கருத்துக்கள் இதோ!
“ஒருவரிடம் மட்டும் எவ்வளவு வேண்டுமானால் தனி அறையில் அவமானப்பட்டுக் கொள்ளலாம். மற்றவர்கள் முன்பு தலைநிமிர்ந்து நடக்கலாம் என்று சுயமரியாதையை, கழற்றிவிடும் செருப்பு போல கையாளுபவர்கள் இருக்கிறார்கள். உண்மையான சுயமரியாதை உள்ளவன் எந்த இடத்திலும் யார் முன்பும் எதற்காகவும் அசிங்கப்படத் தயாராக இருக்க மாட்டான். அவனே குனிய நினைத்தாலும் அது அவனால் முடியாது. அவனுடைய பண்புகள் அவனைத் தூக்கிப்பிடிக்கும்.”
இன்று பதவிக்காகவும் பணத்திற்காகவும் சுயமரியாதையை இழந்து கொத்தடிமைகளாக மாறி பின் கோடிகள் ஈட்டி கைதாக கம்பி எண்ணும் அவலங்கள் நாட்டில் நடந்து வருவதை தினமும் ஊடகத்தின் வழி அறிகின்றோம்.இப்படிப்பட்ட அரசியல்வாதிகளையும், அதிகாரிகளையும் பார்த்து நாடே சிறிது வருகின்றது .
“சுயத்தின் மரியாதை குறையாமல் நடப்பதே சுயமரியாதை சுயத்தையே உணராதவன் அப்படி இருக்க முடியாது. அதற்கு மனரீதியான பயிற்சி வேண்டும். சுயம் என்பது ஒட்டிக் கொண்ட பதவிகளாலோ, சேர்த்துக் கொண்ட பணத்தினாலோ, வைத்துக் கொண்ட பெயரினாலோ அறியப்படுவது அல்ல. அது நம் பண்புகளாலும், தூய நடத்தையாலும் ஏற்படுகிற தெளிந்த உள்ளுணர்வு. அதை ஆழ்ந்து அறிந்து கொண்டால் புற நிகழ்வுகளுக்கு அச்சப்பட வேண்டிய அவசியம் ஏற்படுவதில்லை”
சுயமரியாதை என்பது உள்ளுணர்வு. தன்னம்பிக்கை தருவது. சுயமரியாதைக்கும் ஆணவத்திற்கும் உள்ள வேற்றுமையை அறிந்து கொள்ள வேண்டும். நான் என்ற அகந்தை அழித்து விடும். இதுபோன்ற பல சிந்தனைகளை விதைக்கும் நூல். உயர்ந்த குலத்தில் பிறந்துவிட்டோம் என்ற ஆணவத்தில் திரியும் மனிதர்களை இன்றும் காண்கிறோம் நாட்டில்.
“உயர்வு என்பது பிறப்பால் வருவது என்று இன்னமும் எண்ணிக் கொண்டிருப்பவர்கள் இருக்கிறார்கள். எனவே உயிரியல் விபத்தால் சமூகம் உயர்ந்ததாகக் கருதும் வகுப்பில் பிறந்ததால் அது ஒன்றையே பதாகையாகத் தாங்கி எல்லா வகையிலும் தாங்கள் மேம்பட்டவர்கள் என்று எண்ணிக் கொள்ளுகிற சிலர் இருக்கிறார்கள். அவர்கள் மிகப்பெரிய பங்களிப்பு செய்தவர்களைக் கூட பிறப்பு என்கிற கட்டளைக் கல்லில் உரசிப்பார்த்து தரம் பிரித்து மகிழ்வார்கள். உண்மையான சுயமரியாதை உணர்வு உள்ளவர்கள் யாரும் தான் உயர்ந்தவன் என்று நினைப்பதில்லை”
எந்த ஒரு மனிதன் இந்த உலகில் பிறந்த மனிதர்கள் யாவரும் சமம் என்று எண்ணுகின்றானோ அவனே சிறந்த மனிதன். தன்னைப் போல பிறரை நேசிக்கும் உள்ளம் உள்ளவர்களே நல்லவர்கள். இப்படி பல சிந்தனைகளை விதைத்து நூல் படிக்கும் வாசகர்கள் உள்ளத்தில் நல்ல எண்ணத்தை நடவு செய்து உள்ளார் நூல் ஆசிரியர்.
“தமிழ்நாட்டில் சுயமரியாதை இயக்கத்தை தொடங்கியதோ சின்னக் குழந்தைகளைக் கூட எழுந்து நின்று வரவேற்கும் பெருந்தன்மை கொண்டவர். இளைஞர்களைக் கூட ‘அய்யா’ என்று அழைக்கின்ற பரந்த மனம் கொண்டவர் என்பதை இவர்கள் அறிவது இல்லை”
பெயர் குறிப்பிடாவிட்டாலும் தந்தை பெரியார்தான் அத்தகைய பண்பாளர் என்பதை அறிந்து கொள்ள முடியும். இறுதி மூச்சு உள்ளவரை சுயமரியாதைக்காக உழைத்தவர் தந்தை பெரியார். கடவுள் நம்பிக்கை இல்லாத போதும் ‘வைக்கம்’ போராட்டம் நடத்தியவர் இந்த மண்ணில் சுயமரியாதை இயக்கம் தோற்றிவித்து மண்ணின் மைந்தர்களுக்கு சுயமரியாதையை அறிமுகம் செய்து வைத்தவர் பெரியார். இட ஒதுக்கீட்டிற்காக இந்திய அரசியல் சட்டத்தை முதன்முதலில் திருத்த வைத்து வெற்றி கண்ட மாமனிதர் ‘சுயமரியாதை’ என்ற சொல்லிற்கு இலக்கணமாக வாழ்ந்தவர் பெரியார்.
நூல்ஆசிரியர் : முதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ. இறையன்பு அவர்கள் எட்டாவது படிக்கும் போது,சிறுவனாக இருந்தபோது அருகில் உள்ள அச்சகத்திற்கு சென்றபோது அங்கு இருந்த இசுலாமியர் வாங்க என்று மரியாதையாக அழைத்ததை நூலில் குறிப்பிட்டுள்ளார் .இத்தனை ஆண்டுகள் கழித்தும் நினைவில் நிற்கின்றது அவர் தந்த மரியாதை .அப்படியே அச்சுக் கோர்க்க பழகியதையும் மற்றொரு கட்டுரையில் குறிப்பிட்டு இருந்தார்கள் .
இந்த நூலில் பெயர் குறிப்பிடாமல் சிலர் பற்றி குறிப்பிட்டு இருந்தாலும் அவர்கள் யார் என்பதை எளிதில் அறிந்து கொள்ள முடியும். எழுத்தாளர் ஜெயகாந்தன் சுயமரியாதை பற்றியும் எழுதுவதை நிறுத்தி விட்ட போதும் விருது தேடி வந்தது அவருக்கு. அவர் பற்றியும் நூலில் உள்ளது.
“நாம் இன்றைய அறிவு உலகத்தில் யாரும் புறக்கணிக்க முடியாதபடி திகழ்வதற்கு அறிவையும், ஆற்றலையும் வளர்த்துக் கொள்வது அவசியம்”
உண்மை. பிரபல இதழ்கள் என்னை புறக்கணித்த போது எனக்கென இணையம் www.kavimalar.com தொடங்கி வளர்ந்துவிட்ட போது பிரபல இதழ்கள் எனது நேர்முகம் பிரசுரம் செய்தன. புறக்கணிப்பிற்காக வருந்தாமல் ,சோர்ந்துவிடாமல் திறமை வளர்த்துக் கொண்டால் நம்மைத்தேடி வருவார்கள் என்பது நான் கண்ட உண்மை.
“நாம் நிறைய அவமானப்பட்டால் தான் சுயமரியாதை உணர்வை முழுமையாக்கிக் கொள்ள முடியும். பழுக்கக் காய்ச்சிய இரும்பை சம்மட்டியால் அடுத்து சீர்படுத்துவது போல சமூகம் பலவேறு வகைகளில் நம்மை செதுக்கிப் பண்பட வைக்கிறது”
வாழ்வியல் நெறி கற்பிக்கும் நூல் இது. சுயமரியாதை என்றால் என்ன? எப்படி வளர்த்துக் கொள்ள வேண்டும். பிறர் மரியாதை தரும் அளவில் வாழ சுயமரியாதை வாழ்வு அவசியம். மரியாதை என்பதை கேட்டுப் பெறுவதாக இருத்தல் கூடாது. நமது செயலால் தானாகக் கிடைப்பதாக இருக்க வேண்டும் மரியாதை.
“நம்மை சரியாக அமர வைக்காமல் கூட சிலர் அலட்சியப்படுத்தும் போதுதான் அவர்கள் முன், கால் மீது கால்போட்டு உட்காரும் நிலையை அடைய வேண்டும் என்கிற உந்துதல் பிறக்கிறது.”
நூல் ஆசிரியர் முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப. அவர்கள், சொந்த வாழ்வில் கண்டு உணர்ந்த உணர்வுகளை நூலாக வடித்து உள்ளார். பாராட்டுக்கள்.
.
eraeravi
eraeravi
தளபதி

தளபதி

பதிவுகள் : 1817
இணைந்தது : 08/07/2010

http://www.kavimalar.com

Back to top Go down

Back to top

- Similar topics
» அச்சம் தவிர்! நூல் ஆசிரியர் : முதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப. நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
» அச்சம் தவிர் ! நூல் ஆசிரியர் : முதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப. நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
» இலக்கியத்தில் மேலாண்மை ! நூல் ஆசிரியர் : முதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப.! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» உலகை உலுக்கிய வாசகங்கள் நூல்ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப. iraianbu@hotmail.com நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி,
» தவம்! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப. நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum