ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மொழியைக் கடந்த இலக்கிய நாயகன் - அசோகமித்திரன் !

3 posters

Go down

மொழியைக் கடந்த இலக்கிய நாயகன் - அசோகமித்திரன் ! Empty மொழியைக் கடந்த இலக்கிய நாயகன் - அசோகமித்திரன் !

Post by ayyasamy ram Thu Apr 13, 2017 7:04 pm

கடந்த ஐம்பதாண்டு கால தமிழ் இலக்கிய தளத்தில்
தனக்கென்று தனியிடம் பெற்றவர் எழுத்தாளர் அசோகமித்திரன்.

அண்மையில் தனது 85 ஆம் வயதில் காலமானார். அவருக்கு
அஞ்சலி செலுத்தும் வகையில் தங்கள் நினைவுகளை இங்கே
பகிர்ந்து கொள்கிறார்கள் சில பிரபலங்கள்.

இலக்கியத்தில் புதிய பாதை வகித்தவர்
சா. கந்தசாமி (அசோகமித்திரன் குறித்த ஆவணப் படம் எடுத்தவர்)
அசோகமித்திரன் தமிழின் பாபுலர் பத்திரிகைகளில் கதைகள் எ
ழுதினாலும், அந்தக் கதைகள் பத்திரிகைகளில் வெளியாகிற
மற்ற கதைகளில் சேராமல் தனித்து இருக்கும்.

காரணம், கதைகளில் இடம் பெற்றிருக்கும் நுணுக்கமான
விவரங்கள்தான். கதாபாத்திரங்களின் குணாதிசயங்கள்கூட
வழக்கத்திலிருந்து மாறுபட்டே இருக்கும். அவர் ஒரு தமிழ்
எழுத்தாளர் என்பதைவிட தமிழில் எழுதிய சர்வதேச எழுத்தாளர்
என்பது பொருத்தமாக இருக்கும்.

அவர் ஒர் தூய இலக்கியவாதி மட்டுமில்லை;
தனி வாழ்க்கையிலும் ஒழுக்கவாதி; அவரிடமும் சரி, அவர்
எழுத்துக்களிலும் சரி ஆடம்பரம் என்பது மருந்துக்கும் இருக்காது.
மக்கள் ரசனைக்கு ஏற்ப எழுதாமல், மக்களின் ரசனையை
மேம்படுத்தும் அளவுக்கு எழுத்துக்கள் மொழியைக் கடந்த
இலக்கியம்.

அவருடைய படைப்புகள் காலத்தால் பழசாகாது. வாசகன்
அவருடைய எழுத்துக்களை வாசிப்பதன் மூலமாகக் தன்னையே
அறிந்து கொள்வான். உள்நோக்கிப் பயணப்படுவான்.

அவர் ஒரு சிறந்த படைப்பாளியாக தன்னை அடையாளப்படுத்திக்
கொண்ட போதிலும் கணையாழியின் ஆசிரியர் பொறுப்பில்
இருந்த கால கட்டத்தில் ஏராளமான புதிய படைப்பாளிகளை
அடையாளம் கண்டு அறிமுகப்படுத்தியவர்;

அவர்களைப் பாராட்டி, ஊக்குவித்தவர், இதன் மூலமாகத் தமிழ்
இலக்கியத்தில் புதிய பாதை போட்டவர். தன்னை முன்னிறுத்திக்
கொள்ளாதவர்.
-
--------------------------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82771
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மொழியைக் கடந்த இலக்கிய நாயகன் - அசோகமித்திரன் ! Empty Re: மொழியைக் கடந்த இலக்கிய நாயகன் - அசோகமித்திரன் !

Post by ayyasamy ram Thu Apr 13, 2017 7:14 pm


எளிமையானர்-
பால் ஜகாரியா ( மலையாள எழுத்தாளர்)
இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னால், நான்
அசோகமித்திரனின் எழுத்துக்களைப் படித்திருந்தால்,
என் எழுத்தின் ஆழம் அதிகமாக இருந்திருக்கும்

அவரைப் பற்றிய ஆவணப்படம் ஒன்று எடுக்கும் வாய்ப்பு
எனக்குக் கிடைத்தது. அப்போது, அசோக மித்திரன் என்ற
மனிதர் எத்தனை எளிமையானவர் என்பதை அனுபவ
பூர்வமாகக் கண்டேன்.

அவர் எழுதிய புத்தகங்கள் ஒவ்வொன்றையும் கையெழுத்திட்டு
எனக்குக் கொடுப்பார். அவர் எனக்க என்றென்றும் ஒரு
பொக்கிஷம்.
-
-----------------------------------------------

பிறமொழி இலக்கியவாதிகள் மத்தியிலும் மிளிர்ந்தவர்
பத்ரி சேஷாத்ரி (கிழக்கு பதிப்பகம்)
எழுத்தாளர் பிரபஞ்சன் அசோகமித்திரனின் அரை நூற்றாண்டு
இலக்கியப் பணியைக் கௌரவிக்கும் வகையில் ஒரு விழா
நடத்த விரும்பியபோது, அந்த விழாவைச் சிறப்பாக நடத்த
ஏற்பாடு செய்தோம். அசோகமித்திரனின் சிறுகதைகள், நாவல்கள்
எல்லாம் புத்தகங்களாக வெளியாகி இருந்தபோதிலும்,
அவர் கட்டுரைகளைத் தொகுத்து பதிப்பிக்கப்படவில்லைஎன்ற
சூழ்நிலையில், அதைச் செய்யும் நோக்கத்தோடு அவரை
அணுகினோம்.

தாம் எழுதிய அனைத்தையும், அவர் எத்தனை கச்சிதமாக
ஃபைலில் சேகரித்து வைத்திருக்கிறார் என்பதை கண்டு அசந்து
போனேன். சுமார் இரண்டாயிரம் பக்கங்களில் அவரது அனைத்த
கட்டுரைகளும் இரண்டு தொகுதிகளாக வெளியானது.

பொதுவாக, அசோகமித்திரன் போன்ற கனமான
எழுத்தாளர்களின் புத்தக விற்பனை கடினமாக இருக்கும்
என்றாலும், நாங்கள் வெளியிட்ட கட்டுரைத் தொகுப்புகள் 
வாசகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றன.

அசோகமித்திரனின் சில படைப்புகளை ஆங்கிலத்தில்
மொழிபெயர்த்து வெளியிட்டபோதிலும், பெரிய ஆங்கில
பதிப்பாளர்கள் போல எங்களால் பெரிய அளவில் விற்பனை
செய்ய முடியவில்லை என்கிற வருத்தம் எனக்கு உண்டு.

ஆனாலும், ஆங்கிலம் தெரிந்த பிற மொழி இலக்கியவாதிகள்
மத்தியில் அசோகமித்திரன் பற்றித் தெரிந்து கொள்ள அது
உதவியது.
-
-------------------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82771
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மொழியைக் கடந்த இலக்கிய நாயகன் - அசோகமித்திரன் ! Empty Re: மொழியைக் கடந்த இலக்கிய நாயகன் - அசோகமித்திரன் !

Post by ayyasamy ram Thu Apr 13, 2017 7:15 pm


ருசியும் ரசனையும் கலந்தவர்
அழகிய சிங்கர்
விருட்சம் பத்திரிகையை ஆரம்பித்த போது அதில் அவர்
தொடர்ந்து கட்டுரை எழுதனார். என்னையும் மற்ற பிரபல
பத்திரிகைகளுக்கும் எழுதும்படி ஊக்குவிப்பார்.

நான் வங்கிப் பணியிலிருந்து ஓய்வு பெற்றபின் வாரம்
ஒருமுறையாவது அவரை போய் பார்த்துவிட்டு வருவேன்.
அவருக்குத் தேவையான உதவிகளைச் செய்து கொடுப்பதில்
எனக்கு அலாதியான திருப்தி.
நான் ஒவ்வொருமுறை அவர் வீட்டிற்குச் செல்லும்போது
மேற்கு மாம்பலம், ஆர்யகௌடா ரோடில் உள்ள
வெங்கடேஷ்வரா போளி ஸ்டாலில் இருந்து ஒரே ஒரு
மிளகாய் பஜ்ஜி வாங்கிச் செல்வேன்.

காரணம், அசோகமித்திரன் ஒரு பஜ்ஜிக்கு மேல் சாப்பிட
மாட்டார். 'இந்த பஜ்ஜி என் விலை?' என்று கேட்பார்.
ஐந்து ரூபாய் என்பேன். ஐந்து ரூபாய்க்கு இவ்வளவு
சுவையான பஜ்ஜியா? என்பார் ரசனையோடு ருசித்தபடி.
அவர் புகழ் என்றெனறும் வாழும்.

- எஸ். சந்திரமௌலி
கல்கி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82771
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மொழியைக் கடந்த இலக்கிய நாயகன் - அசோகமித்திரன் ! Empty Re: மொழியைக் கடந்த இலக்கிய நாயகன் - அசோகமித்திரன் !

Post by krishnaamma Thu Apr 13, 2017 7:32 pm

மொழியைக் கடந்த இலக்கிய நாயகன் - அசோகமித்திரன் ! ZcXN8P9tQ9ubJnYSHCsy+10THASHOK_350068f__3018841f

மிக அற்புதமாக எழுதுவார் ! புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மொழியைக் கடந்த இலக்கிய நாயகன் - அசோகமித்திரன் ! Empty Re: மொழியைக் கடந்த இலக்கிய நாயகன் - அசோகமித்திரன் !

Post by krishnaamma Thu Apr 13, 2017 7:35 pm

ராம் அண்ணா, தலைப்பில் 'அசோகமித்திரன்' என்று அவரின் பெயரையும் இணைத்து விட்டேன்புன்னகை \

அன்புடன்,
கிருஷ்ணாம்மா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மொழியைக் கடந்த இலக்கிய நாயகன் - அசோகமித்திரன் ! Empty Re: மொழியைக் கடந்த இலக்கிய நாயகன் - அசோகமித்திரன் !

Post by M.Jagadeesan Thu Apr 13, 2017 8:27 pm

இவருடைய எழுத்துக்களை நான் இதுவரையில் படித்ததில்லை ! படிக்க ஆவலாக உள்ளது .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

மொழியைக் கடந்த இலக்கிய நாயகன் - அசோகமித்திரன் ! Empty Re: மொழியைக் கடந்த இலக்கிய நாயகன் - அசோகமித்திரன் !

Post by krishnaamma Thu Apr 13, 2017 8:37 pm

M.Jagadeesan wrote:இவருடைய எழுத்துக்களை நான் இதுவரையில் படித்ததில்லை ! படிக்க ஆவலாக உள்ளது .

மேற்கோள் செய்த பதிவு: 1238714

இந்த லிங்க் இல் அசோகமித்திரன் அவர்கள் எழுதிய சிறுகதைகள் இருக்கிறது ஐயா, படித்து மகிழவும் புன்னகை

( இங்கு வெளி தள லிங்குகள் பதிவிட அனுமதி கிடையாது, எனவே உங்களுக்கு தனி மடலில் அனுப்புகிறேன் ஐயா புன்னகை

மேலும் , google il போட்டால் நிறைய லிங்க் கள் கிடைக்கும் ஐயா புன்னகை

அன்புடன்,
கிருஷ்ணாம்மா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மொழியைக் கடந்த இலக்கிய நாயகன் - அசோகமித்திரன் ! Empty Re: மொழியைக் கடந்த இலக்கிய நாயகன் - அசோகமித்திரன் !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum