ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பேருந்தில் நான் உட்கார்ந்திருக்கக் கூடாது !

4 posters

Go down

பேருந்தில் நான் உட்கார்ந்திருக்கக் கூடாது ! Empty பேருந்தில் நான் உட்கார்ந்திருக்கக் கூடாது !

Post by M.Jagadeesan Thu Apr 13, 2017 9:14 am

பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்தது . ஒரே நெரிசல்; தள்ளுமுள்ளு . எப்படியோ எனக்கு இடம் கிடைத்து உட்கார்ந்துவிட்டேன் . எனக்குப் பக்கத்தில் ஒல்லியான ஒருவர் நின்று கொண்டிருந்தார் . நிமிர்ந்து பார்த்தேன் . அட ! அவர் எனக்கு கல்லூரியில் BSC படிக்கும்போது அல்ஜீப்ரா கற்பித்த கணித ஆசிரியர் ! அவரைப் பார்த்தவுடன் எனக்கு இருப்புக் கொள்ளவில்லை . சட்டென்று எழுந்துநின்று

" ஐயா ! நீங்கள் உட்காருங்கள் ! " என்று சொன்னேன் . அவரும் உட்கார்ந்துவிட்டு

" Thank You ! My dear son ! " என்று சொன்னார் .

பத்துஆண்டுகளுக்கு முன்பு கேட்ட அதே ஆங்கில உச்சரிப்பு ! " ஐயா ! என்னைத் தெரிகிறதா ? "

" தெரியவில்லையே ! தம்பி ! "

" ஐயா ! நான் தங்களின் மாணவன் ! எனக்குக் கல்லூரியில் அல்ஜீப்ரா வகுப்பு நீங்கள்தான் எடுத்தீர்கள் ! நலமாக இருக்கிறீர்களா ? " என்று கேட்டேன் .

அதன்பிறகு அவர் மிகுந்த வாஞ்சையுடன் என்னைப்பற்றி  விசாரித்தார் . என் குடும்பத்தின் க்ஷேம லாபங்களை விசாரித்தார் . நீண்ட நாட்களுக்குப் பிறகு ஆசிரியரைச் சந்தித்ததில் எனக்குப் பெரு மகிழ்ச்சி .

பேருந்து அடுத்த நிறுத்தத்தில் நின்றது .

திப்பு திபுவென்று ஜனங்கள் ஏறினார்கள் . அவர்களில் சுமார் 80 வயது மதிக்கத்தக்க ஒரு பெரியவரும் இருந்தார் .

அவரைப் பார்த்ததும் என்னுடைய ஆசிரியர் சட்டென்று எழுந்து , " ஐயா ! உட்காருங்கள் ! " என்று இடம் கொடுத்தார் .

" ஐயா ! என்னைத் தெரிகிறதா ? " என்று சரவணன் ஆசிரியர் கேட்டார் .

" தெரியவில்லையே ஐயா ! '

" ஐயா ! நான் உயர்நிலைப்பள்ளியில் படித்தபோது எனக்குத் தமிழ்ப்படம் கற்பித்தீர்கள் ! நான் தங்களின் மாணவன் சரவணன் ஐயா ! "

" அப்படியா ! என்னிடம் படித்த எல்லா மாணவர்களையும் நினைவில் வைத்துக்கொள்ள முடிவதில்லை . இரண்டு வகையான மாணவர்கள்தான் ஆசிரியரின் நினைவில் நிற்பார்கள் . திறமையான மாணவர்களை ஆசிரியர் மறக்கமாட்டார்; அதேபோல அதிகமாகக் குறும்பு செய்யும் மாணவர்களையும் ஆசிரியர் மறப்பதில்லை . நீங்கள் இந்த இரண்டு வகையிலும் சேராத மாணவர் என்று நினைக்கிறேன் ; அதனால்தான் உங்களை நினைவில் வைத்துக்கொள்ள முடியவில்லை என்று நினைக்கிறேன் .

நல்லது ; என்ன செய்கிறீர்கள் ?

ஐயா ! கல்லூரியில் கணிதப் பேராசிரியராகப் பணிபுரிந்து , தற்போது ஓய்வு பெற்றுவிட்டேன் . வீட்டில் அனைவரும் நலமாக உள்ளோம் . தாங்கள் நலமா ஐயா !
'
நலம் என்று சொல்லமுடியாது ; நாட்களை எண்ணிக்கொண்டிருக்கிறேன் . வயதாகிவிட்டதல்லவா ! தங்களின் அருகில் நிற்கும் தம்பி யார் ?

ஐயா ! அவர் என்னுடைய மாணவர் . போன நிறுத்தத்தில் நான் ஏறியவுடன் , எனக்காகத்  தன் இருக்கையை விட்டுக் கொடுத்தார் .   தாங்கள் இருக்கையில் அமர்ந்தவுடனேயே , தங்களைப்பற்றி விசாரித்தார் . தங்களின் பெயர் என்னவென்று கேட்டார் . அதற்கு நான் ," ஆசிரியர் பெயரை ; அதுவும் அவரை அருகில் வைத்துக்கொண்டு எப்படிச் சொல்வது ? என்று கேட்டேன் .

அப்படியா  தம்பி ! என்னுடைய பெயர் பிச்சுமணி ஐயர் . என்னை பிச்சு வாத்தியார்  என்று எல்லோரும் கூப்பிடுவார்கள் .

அப்போது திடீரென்று பிச்சுமணி ஐயர் எழுந்து நின்று ,

" வாங்க ! இப்படி உட்காருங்க ! " என்று சொல்லி யாருக்கோ தன்  இருக்கையைக் காட்டினார் .

எனக்குத் தூக்கிவாரிப் போட்டது .   பிச்சுமணி ஐயரின் ஆசிரியராக இருக்குமோ என்று எண்ணினேன் . ஆனால் அப்படி எதுவும் இல்லை . சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணுக்கு இடம் கொடுத்தார் . அந்தப் பெண்ணின் கையில் ஒரு குழந்தை இருந்தது .

உடனே நான் ,

ஐயா ! இந்த வயதான காலத்தில் தாங்கள் நின்றுகொண்டு பயணம் செய்யலாமா ? என்று கேட்டேன் .

அதற்கு பிச்சுமணி ஐயர் ,

"மாதா பிதா குரு தெய்வம்  " என்று சொல்வார்கள் . இதில் மூன்றாவது தெய்வமான குருவுக்குக் கொடுக்கவேண்டிய மரியாதையை நீங்கள் இருவரும்  கொடுத்தீர்கள் . அதேபோல முதல் தெய்வமான ஒரு தாய்க்குக்  கொடுக்கவேண்டிய மரியாதையை நான் கொடுத்தேன் .அவ்வளவுதான் .நான் பேருந்தில் ஏறியபோதே அந்தப்பெண் , கைக்குழந்தையுடன் ஏறுவதைக் கவனித்தேன் . பாவம் ! அந்தப் பெண்ணுக்கு உட்கார இடம் கிடைக்கவில்லை . சரவணா ! நீ வற்புறுத்தியதால் நான் இந்த இருக்கையில் அமர்ந்துவிட்டேன் . உண்மையில் நான் பேருந்தில் அமராமல் அந்தப் பெண்ணுக்குத்தான் இடம் கொடுத்திருக்கவேண்டும் . வேறு யாராவது எழுந்து , இடம் கொடுப்பார்களா என்று பார்த்தேன் ; யாரும் இடம் கொடுக்கவில்லை ; ஒரு கையில் குழந்தையும் , மறுகையில் கம்பியையும் பிடித்துக்கொண்டு , அந்தப்பெண் கஷ்டப்படுவதைக்கண்டு என் மனம் பொறுக்கவில்லை . அதனால்தான் நான் எழுந்து , அந்தப் பெண்ணுக்கு இடம் கொடுத்தேன் ."

தள்ளாத வயதிலும் பிச்சுமணி  ஐயரின் பெருந்தன்மையும் , மனிதாபிமானமும் என்னை நெகிழவைத்தது .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

பேருந்தில் நான் உட்கார்ந்திருக்கக் கூடாது ! Empty Re: பேருந்தில் நான் உட்கார்ந்திருக்கக் கூடாது !

Post by ஜாஹீதாபானு Thu Apr 13, 2017 4:09 pm

நல்ல கதை பகிர்வுக்கு நன்றி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

பேருந்தில் நான் உட்கார்ந்திருக்கக் கூடாது ! Empty Re: பேருந்தில் நான் உட்கார்ந்திருக்கக் கூடாது !

Post by T.N.Balasubramanian Thu Apr 13, 2017 6:06 pm

அருமையான கதை ஜெகதீசன். அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35021
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

பேருந்தில் நான் உட்கார்ந்திருக்கக் கூடாது ! Empty Re: பேருந்தில் நான் உட்கார்ந்திருக்கக் கூடாது !

Post by krishnaamma Thu Apr 13, 2017 6:45 pm

மிக நல்ல கதை ஐயா.....சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
.
.
.

.
ஆனாலும் உங்களுக்கு பேருந்து மிகவும் பிடித்துவிட்டது என்றே நினைக்கிறேன்..நிறைய கதைக்கான களமாக அதுவே இருக்கிறது புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பேருந்தில் நான் உட்கார்ந்திருக்கக் கூடாது ! Empty Re: பேருந்தில் நான் உட்கார்ந்திருக்கக் கூடாது !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum