Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்by heezulia Yesterday at 11:39 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
prajai |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
prajai |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அழிக்கப்பட்ட சீமைக்கருவேலம்... வீசப்பட்ட விதைப்பந்துகள்..! திருச்சி மாணவர் படை
4 posters
Page 1 of 1
அழிக்கப்பட்ட சீமைக்கருவேலம்... வீசப்பட்ட விதைப்பந்துகள்..! திருச்சி மாணவர் படை
சீமைக்கருவேல மரங்களின் தீமைகள் குறித்து மாநிலம்
முழுவதுமே ஏற்பட்டுள்ள விழிப்புஉணர்வைத் தொடர்ந்து
பல்வேறு தன்னார்வலர்களும், இளைஞர்களும்
சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டு
வருகின்றனர்.
இந்தப் பணியில் ஆச்சர்யப்படுத்தும் வகையில் தங்கள்
பங்களிப்பை அளித்து வருகின்றனர் திருச்சி மாவட்டத்தை
சேர்ந்த அரசுப்பள்ளி மாணவர்கள்.
எல்லாக்குழந்தைகளும், பள்ளிக்கு புத்தகப்பைகளை தூக்கிச்
செல்வது வழக்கம்; ஆனால் திருச்சி வையம்பட்டியை அடுத்த
ஓந்தம்பட்டி அரசுப்பள்ளி மாணவர்களோ, கடந்த ஒரு மாதமாக
புத்தகப்பை மற்றும் வேருடன் பிடுங்கிய சீமைக்கருவேல
மரச்செடிகளை எடுத்துச்செல்கிறார்கள்.
இந்தப் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் முயற்சியால்
மட்டும், கடந்த ஒருமாதத்தில் 1.40 லட்சத்துக்கும் மேற்பட்ட
சீமைக்கருவேல மரங்கள்
சிறிய அளவில் இருக்கும் போதே அழிக்கப்பட்டுள்ளன.
-
----------
Re: அழிக்கப்பட்ட சீமைக்கருவேலம்... வீசப்பட்ட விதைப்பந்துகள்..! திருச்சி மாணவர் படை
---
திருச்சி மணப்பாறை, வையப்பட்டி அருகில் உள்ளது
ஓந்தப்பட்டி கிராமம். இங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளி
தலைமை ஆசிரியர் துரைராஜுக்கு, கடந்த 20-ம் தேதி,
கலெக்டரிடமிருந்து சீமைக்கருவேல மரங்கள் அழிப்பு
குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திட மின்னஞ்சல் ஒன்று
வந்தது.
அந்த மெயிலைப்பார்த்த தலைமை ஆசிரியர், பள்ளியில்
பணியாற்றும் ஆசிரியர் ராஜசேகரன், தமிழாசிரியர்
சிவக்குமார் உள்ளிட்டோரை அழைத்து பேசினார்.
அதன்பிறகு நடந்ததை ஆசிரியர் ராஜசேகரனே கூறுகிறார்,
ஆசிரியர் ராஜசேகரன்“கலெக்டரிடம் இருந்து வந்த மின்னஞ்சல்
குறித்து தலைமை ஆசிரியர், எங்களிடம் ஆலோசித்தார்.
இதுகுறித்து, மாணவர்களிடம் கொண்டு சென்று 'மாற்றம்'
உண்டாக்க வேண்டும் என நினைத்தோம்..
அடுத்த நாள் காலை, பள்ளி இறைவணக்க நிகழ்ச்சியில் பேசிய
ஆசிரியர் சிவக்குமார்,
சீமைக்கருவேல மரங்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்துப்
பேசினார்.
“இப்படி நாங்கள் அறிவித்த அடுத்த நாள், மாணவ-மாணவிகள்
ஆர்வமாக கருவேலமரங்களின் செடிகளை வேரோடு பிடுங்கிக்
கொண்டுவந்தார்கள்.
யார் அதிகமாகக் கொண்டுவருகின்றார்கள் என பதிவு செய்து
வருகிறோம். அடுத்து ஆர்வத்தோடு, சீமைக்கருவேலமரங்களை
அழித்துக் கொண்டுவரும் மாணவர்களுக்கு, சொந்த செலவில்,
பென்சில், பேனா, டிசர்ட், பவுச் என வாங்கிக்கொடுக்க
ஆரமித்தோம்.
இந்த முயற்சிக்கு சக ஆசிரியர்களான, ராஜசேகரன், சிவக்குமார்,
சார்லஸ் மைக்கேல்ராஜ், பவானி, சாந்தி, முனியசுவாமி,
அழகு சுப்பிரமணியன் என அனைவரும் ஆர்வத்தோடு
பங்கெடுத்துக்கொண்டார்கள்.
ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் என அனைவரும் ஒன்றாக
இணைந்து இந்தப் பணியை முன்னெடுத்து சென்றோம்.
அப்போதுதான் சீமைக்கருவேல செடிகளை
அழிப்பதோடு மட்டுமில்லாமல் அடுத்து என்ன பண்ணுவது
என திட்டமிட்டோம்.
-
Re: அழிக்கப்பட்ட சீமைக்கருவேலம்... வீசப்பட்ட விதைப்பந்துகள்..! திருச்சி மாணவர் படை
அப்போதுதான் விதைப்பந்துகள் குறித்த சிந்தனை வந்தது. எங்கள் பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர் சார்லஸ் மைக்கேல்ராஜ், கடந்த இரண்டுவருடங்களாக 'விதைக்கு உயிர் கொடுப்போம் திட்டம்' எனும் பெயரில் விதைகளை, சாணத்துக்குள் வைத்து விதைப்பந்துகளை உருவாக்கி 5 லட்சத்துக்கும் மேற்பட்ட விதைகளை தமிழகம் முழுவதும் விதைத்து வருகின்றார். அவரின் உதவியோடு, மாணவர்களுக்கு விதைப்பந்துகளைக் கொடுத்து, சீமைக்கருவேலம் மரங்களை அழிப்பதோடு மட்டுமில்லாமல் விதைப்பந்துகளையும் வீசிவிட்டு வரச்சொன்னோம்.
தலைமை ஆசிரியர் துரைராஜ்இப்போது மாணவர்கள், சீமைக்கருவேல மரக்கன்றுகளை அழிக்கும் கையோடு, விதைப்பந்துகளையும் தூவிவிட்டு வருகிறார்கள். இதுவரை சுமார் 1.46 லட்சம் மரங்களை அழித்திருக்கும் மாணவர்கள், ஒரு லட்சத்துக்கும் அதிகமான விதை பந்துகளை வீசியிருக்கிறார்கள். அதில் பாதி வளர்ந்தாலே போதும். விதைப்பந்துகளை, மரக்கன்றுகளைப்போல நடத்தேவையில்லை; குழி வெட்ட வேண்டியதில்லை; விதைகள் பருவ மழைக்கு முன்பாக நடப்படுவதால் 3 மாதங்களில் முளைத்து விடும். மீதக் காலங்களில் அவ்வப்போது பொழியும் மழையால் வளர ஆரம்பிக்கும்" எனப் பெருமையுடன் கூறுகிறார் தலைமை ஆசிரியர் துரைராஜ்.
இவர்களின் பணிகளைக் கேள்விப்பட்ட மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமசாமி நேரில் அழைத்து வாழ்த்தியிருக்கிறார். அதோடு பள்ளிக்கல்வி செயலாளர், உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ் ஆகியோரும் தனித்தனியே தொலைபேசியில் அழைத்து வாழ்த்தியுள்ளனர்.
"நல்ல விஷயங்களுக்கு நிறையபேர் துணையாக இருக்கிறார்கள். அந்த நம்பிக்கையோடு பணியாற்றுகிறோம்" என்கிறார் தலைமை ஆசிரியர்.
சீமைக்கருவேலமரம் அகற்றும் பணியில் அரசுப்பள்ளி மாணவர்கள்
தலைமை ஆசிரியர் துரைராஜ்இப்போது மாணவர்கள், சீமைக்கருவேல மரக்கன்றுகளை அழிக்கும் கையோடு, விதைப்பந்துகளையும் தூவிவிட்டு வருகிறார்கள். இதுவரை சுமார் 1.46 லட்சம் மரங்களை அழித்திருக்கும் மாணவர்கள், ஒரு லட்சத்துக்கும் அதிகமான விதை பந்துகளை வீசியிருக்கிறார்கள். அதில் பாதி வளர்ந்தாலே போதும். விதைப்பந்துகளை, மரக்கன்றுகளைப்போல நடத்தேவையில்லை; குழி வெட்ட வேண்டியதில்லை; விதைகள் பருவ மழைக்கு முன்பாக நடப்படுவதால் 3 மாதங்களில் முளைத்து விடும். மீதக் காலங்களில் அவ்வப்போது பொழியும் மழையால் வளர ஆரம்பிக்கும்" எனப் பெருமையுடன் கூறுகிறார் தலைமை ஆசிரியர் துரைராஜ்.
இவர்களின் பணிகளைக் கேள்விப்பட்ட மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமசாமி நேரில் அழைத்து வாழ்த்தியிருக்கிறார். அதோடு பள்ளிக்கல்வி செயலாளர், உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ் ஆகியோரும் தனித்தனியே தொலைபேசியில் அழைத்து வாழ்த்தியுள்ளனர்.
"நல்ல விஷயங்களுக்கு நிறையபேர் துணையாக இருக்கிறார்கள். அந்த நம்பிக்கையோடு பணியாற்றுகிறோம்" என்கிறார் தலைமை ஆசிரியர்.
சீமைக்கருவேலமரம் அகற்றும் பணியில் அரசுப்பள்ளி மாணவர்கள்
Re: அழிக்கப்பட்ட சீமைக்கருவேலம்... வீசப்பட்ட விதைப்பந்துகள்..! திருச்சி மாணவர் படை
-
இதுபற்றி பேசிய 6ம் வகுப்பு மாணவன் கிஷோர் ராஜ்,
“எங்க சார், சீமைக்கருவேலம் மரத்தோட தீமையை பத்தி
எங்ககிட்ட சொன்னதோடு, 'இப்பவே நாம குடிக்கத்
தண்ணியில்லாமல் கஷ்டப்படுறோம். இந்த மரங்களை
அழிக்கலைன்னா இதைவிட மோசமாக கஷ்டப்படுவோம்'னு
சொன்னாரு.
அன்னைக்குப் பள்ளிக்கூடத்தில் இருந்து வந்ததும், அப்படியே
இதை அப்பாக்கிட்ட சொன்னேன். நல்ல விஷயம் செய்யுடான்னு
சொல்லிட்டாரு.
அடுத்தநாள், சுமார் 2,000 செடியோட பள்ளிக்கூடத்துக்கு போனேன்.
சாருங்க, எல்லாத்துக்கும் மத்தியில் எனக்கு பேனா கொடுத்தாங்க.
ரொம்பப் பெருமையாக இருந்துச்சு.
அடுத்து 9-ம் வகுப்பு படிக்கும் கஜப்பிரியா, தனலட்சுமி, சவுமியா,
தீபிகா, ராகவி, யுவஸ்ரீ என நிறையபேர் செடிகள் பறிச்சாங்க.
அவங்களை விட அதிகமாகச் செடிகளை பறிக்கணும்னு நினைத்து,
பறிச்சேன். இதுவரை 10,000-க்கும் அதிகமான சீமைக் கருவேலமரச்
செடிகளை பறித்து இருக்கிறேன் சார்.
ஸ்கூல்லயே அதிகமான செடிகளைப் பறித்து டீசர்ட், பவுச் பரிசு
வாங்கியிருக்கேன். நாளைக்கு நமக்கு குடிக்க தண்ணி கிடைக்கணும்னா
இந்த மரங்களை அழிக்கணும் சார்”
அதனாலதான், படிக்கிற நேரங்கள் போக மற்ற நேரங்களில்
சீமைக்கருவேல மரங்களை அழிக்கிறேன்" என்கிறான் மழலை
மொழியில்.
-
------------------
Last edited by ayyasamy ram on Tue Mar 28, 2017 7:29 am; edited 1 time in total
Re: அழிக்கப்பட்ட சீமைக்கருவேலம்... வீசப்பட்ட விதைப்பந்துகள்..! திருச்சி மாணவர் படை
நாளைய சமூகத்திற்கு கேடு செய்யும் சீமைக்கருவேலச்
செடிகள், இங்கே பிடுங்கப்படுகின்றன;
நாளைய தலைமுறையான குழந்தைகளிடம்
நல்லெண்ணங்கள் விதைக்கப்படுகின்றன.
இந்த அரசுப்பள்ளி நம் சமூகத்திற்கு கற்றுத்தரும் பாடம்
வியப்பானது!
-
-----------------------------
சி.ய.ஆனந்தகுமார்
படங்கள்: என்.ஜி.மணிகண்டன்.
நன்றி- விகடன்
Re: அழிக்கப்பட்ட சீமைக்கருவேலம்... வீசப்பட்ட விதைப்பந்துகள்..! திருச்சி மாணவர் படை
இந்த செய்தியை படிக்கும் போது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது,அரசுப்பள்ளி மாணவர்களின் செயலும்,அவர்களை ஆர்வத்தோடு ஊக்குவிக்கும் ஆசிரியர்களையும் மனதார பாராட்டுவோம் வாழ்த்துக்கள்,தொடரட்டும் அவர்தம் பணி............
வெல்க தமிழ் !
இரா.மூர்த்தி- பண்பாளர்
- பதிவுகள் : 63
இணைந்தது : 08/07/2014
Re: அழிக்கப்பட்ட சீமைக்கருவேலம்... வீசப்பட்ட விதைப்பந்துகள்..! திருச்சி மாணவர் படை
நல்ல பணி தொடர வாழ்த்துகள் மாணவர்களே....
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: அழிக்கப்பட்ட சீமைக்கருவேலம்... வீசப்பட்ட விதைப்பந்துகள்..! திருச்சி மாணவர் படை
நல்ல பணி தொடர வாழ்த்துகள் மாணவர்களே !
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Similar topics
» ‘பேராண்மை’க்காக அழிக்கப்பட்ட சிட்டுக்குருவிகள்... திருச்சி ‘திகீர்’ சம்பவம்!
» பகலில் மாணவர்; இரவில் காவலர் : குடும்பத்தை காக்கும் ஏழை மாணவர்
» காஞ்சிபுரத்தில் அரசு விடுதியில் ஐ.டி.ஐ., மாணவர் கொலை : சக மாணவர் கைது
» தலிபான்களால் அழிக்கப்பட்ட புத்தர்
» சர்வதேசத்தால் அழிக்கப்பட்ட தமிழர் சேனை! எம்மை அழித்தவனிடமே நீதி கேக்கும் அறியாமையின் அவல நிலையில் ஈழத் தமிழினம்.?
» பகலில் மாணவர்; இரவில் காவலர் : குடும்பத்தை காக்கும் ஏழை மாணவர்
» காஞ்சிபுரத்தில் அரசு விடுதியில் ஐ.டி.ஐ., மாணவர் கொலை : சக மாணவர் கைது
» தலிபான்களால் அழிக்கப்பட்ட புத்தர்
» சர்வதேசத்தால் அழிக்கப்பட்ட தமிழர் சேனை! எம்மை அழித்தவனிடமே நீதி கேக்கும் அறியாமையின் அவல நிலையில் ஈழத் தமிழினம்.?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|