Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
Top posting users this week
No user |
Top posting users this month
No user |
நிகழ்நிலை நிர்வாகிகள்
" நாம் பேருந்தில் தூங்கியிருக்கக் கூடாது "
3 posters
Page 1 of 1
" நாம் பேருந்தில் தூங்கியிருக்கக் கூடாது "
அந்தப் பெண்கள் இருவரும் பேருந்துக்காக நின்றிருந்தார்கள் . ஒருத்தியின் பெயர் கமலா , மறறொருத்தியின் பெயர் விமலா . பேருந்து வந்தவுடன் இருவரும் ஏறிக்கொண்டார்கள் . பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்தது . உட்கார இடம் கிடைக்கவில்லை . பெண்கள் இருவரும் நின்றுகொண்டே பயணம் செய்தார்கள் .
அரைமணிநேரம் கழித்துப் பேருந்து ஒரு நிறுத்தத்தில் நின்றது . சில பயணிகள் அங்கு இறங்கினார்கள் . பெண்கள் இருவருக்கும் உட்கார இடம் கிடைத்தது . பேருந்து புறப்பட்டது .காற்று சில்லென்று வீசியது . பெண்கள் இருவரும் அசதியால் அப்படியே தூங்கிவிட்டார்கள் .
மீண்டும் ஒரு அரைமணிநேரம் சென்றிருக்கும் . அடுத்த நிறுத்தத்தில் பேருந்து நின்றது . அப்போதும் அந்தப் பெண்கள் தூங்கிக்கொண்டே இருந்தார்கள் . அவர்கள் இருவரும் இறங்கவேண்டிய நிறுத்தம் அது . கண்டக்டர் அவர்கள் இருவரையும் எழுப்பி இறங்கவைத்தார் . இறங்கவேண்டிய இடம் வந்ததுகூடத் தெரியாமல் , தூங்கியதை எண்ணி பெண்கள் இருவரும் சங்கோஜமடைந்தனர் .
அப்போது பகல் 12 மணி . உச்சிவெயில் மண்டையைப் பிளந்தது . பெண்கள் இருவருக்கும் தாகம் எடுத்தது . தாக சாந்தி செய்துகொள்ள விரும்பினார்கள் . அங்கே ஒரு மரத்தடியில் ஒரு பெரியவர் இளநீர் விற்றுக்கொண்டிருந்தார் .
" ஐயா ! இரண்டு இளநீர் வெட்டுங்கள் ! "
" ஆகட்டும் அம்மா ! "
பெரியவர் இருவருக்கும் இளநீர் வெட்டிக்கொடுத்தார் . அந்த வெயிலுக்கு இளநீர் அமிர்தமாக இருந்தது . பெண்கள் இருவரும் ஆசைதீரக் குடித்தார்கள் .
" எவ்வளவு ஐயா ? '
" அறுபது ரூபாய் கொடுங்கள் ! "
பர்ஸை எடுப்பதற்காகப் பையினுள் கையை விட்ட விமலா , தேள் கொட்டியதுபோல துள்ளினாள் ." ஐயோ ! என் பர்ஸைக் காணோமே ! என் சம்பளப்பணம் முழுவதையும் அதில்தானே வைத்திருந்தேன் ; இப்போது என்ன செய்வேன் ? என்று புலம்பினாள் ! "
" விமலா ! நன்றாகத் தேடிப்பார் ; அவசரப்படாதே ! உனக்கும் சேர்த்து நான் பணத்தைக் கொடுத்துவிடுகிறேன் ! " என்று சொல்லி தன் பையினுள் கையைவிட்டாள் கமலா .பையினுள் கையைவிட்ட கமலா பாம்பு கடித்ததுபோல அதிர்ச்ச்சி அடைந்தாள் !
" ஐயோ ! என்ன இது ? என்னுடைய பர்ஸையும் காணோமே ! இன்று சம்பளப்பணம் கொடுக்கவில்லையென்றால் என் மாமியார் என்னைத் தொலைத்துவிடுவாளே !ஆண்டவா ! இது என்ன சோதனை ! நம் இருவருடைய பர்ஸையும் எவனோ பிக்பாக்கெட் அடித்துவிட்டான் ! " என்று சொல்லிப் புலம்பினாள் .
இருவருடைய புலம்பல்களையும் கேட்ட இளநீர் பெரியவர் கப கபவென்று சிரித்தார் .
" ஐயா ! பெரியவரே ! ஏன் சிரிக்கிறீர்கள் ? நாங்கள் பணத்தைத் தொலைத்த துன்பத்தில் இருக்கிறோம் ; நீங்கள் சிரிக்கிறீர்களே ! "
" அம்மா ! சூரியனிடம் களங்கம் இருக்கக்கூடாது ; ஆசிரியரிடம் அறியாமை இருக்கக்கூடாது ; டாக்டரிடம் நோய் இருக்கக்கூடாது ; கசாப்புக் கடைக்காரனிடம் கருணை இருக்கக்கூடாது ;
அதுபோல போலீஸ்காரனிடம் திருட்டு நடக்கக்கூடாது . நீங்கள் இருவரும் போலீஸ் உடையணிந்து டிப்டாப்பாக இருக்கிறீர்கள் . என்ன பிரயோஜனம் ? பெண் போலீஸான உங்களிடமே ஒருவன் கைவரிசை காட்டியிருக்கிறான் என்றால் அவன் எப்படிப்பட்ட கில்லாடியாக இருக்கவேண்டும் ?
பரவாயில்லையம்மா ! அடுத்தமுறை இந்தப்பக்கம் வரும்போது காசு கொடுங்கள் ; இனிமேலாவது எச்சரிக்கையாக இருங்கள் ! " என்று பெரியவர் அறிவுரை கூற பெண்கள் இருவரும் அவமானத்தால் தலைகுனிந்தனர் .
இருவரும் ஒரேகுரலில் , " நாம் பேருந்தில் தூங்கியிருக்கக் கூடாது " என்று சொல்லி வருத்தப்பட்டனர் .
அரைமணிநேரம் கழித்துப் பேருந்து ஒரு நிறுத்தத்தில் நின்றது . சில பயணிகள் அங்கு இறங்கினார்கள் . பெண்கள் இருவருக்கும் உட்கார இடம் கிடைத்தது . பேருந்து புறப்பட்டது .காற்று சில்லென்று வீசியது . பெண்கள் இருவரும் அசதியால் அப்படியே தூங்கிவிட்டார்கள் .
மீண்டும் ஒரு அரைமணிநேரம் சென்றிருக்கும் . அடுத்த நிறுத்தத்தில் பேருந்து நின்றது . அப்போதும் அந்தப் பெண்கள் தூங்கிக்கொண்டே இருந்தார்கள் . அவர்கள் இருவரும் இறங்கவேண்டிய நிறுத்தம் அது . கண்டக்டர் அவர்கள் இருவரையும் எழுப்பி இறங்கவைத்தார் . இறங்கவேண்டிய இடம் வந்ததுகூடத் தெரியாமல் , தூங்கியதை எண்ணி பெண்கள் இருவரும் சங்கோஜமடைந்தனர் .
அப்போது பகல் 12 மணி . உச்சிவெயில் மண்டையைப் பிளந்தது . பெண்கள் இருவருக்கும் தாகம் எடுத்தது . தாக சாந்தி செய்துகொள்ள விரும்பினார்கள் . அங்கே ஒரு மரத்தடியில் ஒரு பெரியவர் இளநீர் விற்றுக்கொண்டிருந்தார் .
" ஐயா ! இரண்டு இளநீர் வெட்டுங்கள் ! "
" ஆகட்டும் அம்மா ! "
பெரியவர் இருவருக்கும் இளநீர் வெட்டிக்கொடுத்தார் . அந்த வெயிலுக்கு இளநீர் அமிர்தமாக இருந்தது . பெண்கள் இருவரும் ஆசைதீரக் குடித்தார்கள் .
" எவ்வளவு ஐயா ? '
" அறுபது ரூபாய் கொடுங்கள் ! "
பர்ஸை எடுப்பதற்காகப் பையினுள் கையை விட்ட விமலா , தேள் கொட்டியதுபோல துள்ளினாள் ." ஐயோ ! என் பர்ஸைக் காணோமே ! என் சம்பளப்பணம் முழுவதையும் அதில்தானே வைத்திருந்தேன் ; இப்போது என்ன செய்வேன் ? என்று புலம்பினாள் ! "
" விமலா ! நன்றாகத் தேடிப்பார் ; அவசரப்படாதே ! உனக்கும் சேர்த்து நான் பணத்தைக் கொடுத்துவிடுகிறேன் ! " என்று சொல்லி தன் பையினுள் கையைவிட்டாள் கமலா .பையினுள் கையைவிட்ட கமலா பாம்பு கடித்ததுபோல அதிர்ச்ச்சி அடைந்தாள் !
" ஐயோ ! என்ன இது ? என்னுடைய பர்ஸையும் காணோமே ! இன்று சம்பளப்பணம் கொடுக்கவில்லையென்றால் என் மாமியார் என்னைத் தொலைத்துவிடுவாளே !ஆண்டவா ! இது என்ன சோதனை ! நம் இருவருடைய பர்ஸையும் எவனோ பிக்பாக்கெட் அடித்துவிட்டான் ! " என்று சொல்லிப் புலம்பினாள் .
இருவருடைய புலம்பல்களையும் கேட்ட இளநீர் பெரியவர் கப கபவென்று சிரித்தார் .
" ஐயா ! பெரியவரே ! ஏன் சிரிக்கிறீர்கள் ? நாங்கள் பணத்தைத் தொலைத்த துன்பத்தில் இருக்கிறோம் ; நீங்கள் சிரிக்கிறீர்களே ! "
" அம்மா ! சூரியனிடம் களங்கம் இருக்கக்கூடாது ; ஆசிரியரிடம் அறியாமை இருக்கக்கூடாது ; டாக்டரிடம் நோய் இருக்கக்கூடாது ; கசாப்புக் கடைக்காரனிடம் கருணை இருக்கக்கூடாது ;
அதுபோல போலீஸ்காரனிடம் திருட்டு நடக்கக்கூடாது . நீங்கள் இருவரும் போலீஸ் உடையணிந்து டிப்டாப்பாக இருக்கிறீர்கள் . என்ன பிரயோஜனம் ? பெண் போலீஸான உங்களிடமே ஒருவன் கைவரிசை காட்டியிருக்கிறான் என்றால் அவன் எப்படிப்பட்ட கில்லாடியாக இருக்கவேண்டும் ?
பரவாயில்லையம்மா ! அடுத்தமுறை இந்தப்பக்கம் வரும்போது காசு கொடுங்கள் ; இனிமேலாவது எச்சரிக்கையாக இருங்கள் ! " என்று பெரியவர் அறிவுரை கூற பெண்கள் இருவரும் அவமானத்தால் தலைகுனிந்தனர் .
இருவரும் ஒரேகுரலில் , " நாம் பேருந்தில் தூங்கியிருக்கக் கூடாது " என்று சொல்லி வருத்தப்பட்டனர் .
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: " நாம் பேருந்தில் தூங்கியிருக்கக் கூடாது "
பேருந்து சீரிஸ் .....எப்போதும் போல் ஜெகதீசன் பன்ச்......அருமை.
ரமணியன்
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010
Re: " நாம் பேருந்தில் தூங்கியிருக்கக் கூடாது "
அருமை அருமை அருமை ஐயா !
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|