ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேர்வை எதிர்கொள்வோம்!

Go down

தேர்வை எதிர்கொள்வோம்! Empty தேர்வை எதிர்கொள்வோம்!

Post by krishnaamma Sun Feb 26, 2017 6:22 pm

சில சமயங்களில், நாம் உட்கொள்ளும் உணவுப் பொருட்களால், ஒவ்வாமை, அஜீரணம் போன்ற உடல் உபாதைகள் ஏற்பட்டு, படிப்பு மற்றும் தேர்வில் கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்படும். அதனால், தேர்வுக்கு தயாராகும் போது, இட்லி, இடியாப்பம் மற்றும் பொங்கல் போன்ற மிதமான உணவுகளை உண்பது நல்லது. இதனால், உடலுக்கு தேவையான ஆற்றல் கிடைப்பதோடு, செரிமான பிரச்னையும் ஏற்படாது.

மேலும், நேரம் கெட்ட நேரத்தில் சாப்பிடும் போது, அஜீரண கோளாறுகள் ஏற்படும். அதைத் தவிர்க்க, சரியான நேரத்தில், சரியான அளவில், சரிவிகித உணவை உண்பது அவசியம்.

இருமல், வயிற்றுப் போக்கு மற்றும் காய்ச்சல் போன்ற உடல் உபாதைகளை ஏற்படுத்தக் கூடிய எண்ணெயில் பொரித்த பலகாரங்களை தவிர்த்து, பாப்கார்ன், கடலை, பொரி, முளை கட்டிய தானிய வகைகள், பழங்கள், வெள்ளரி, கேரட் போன்றவைகளை சாப்பிடலாம். பேரீச்சம் பழம், தேன் போன்றவை, உடலுக்கு தேவையான கூடுதல் ஆற்றல்களை தரும்.

அதிக நேரம் விழித்து படிப்பதால் ஏற்படும் உடல் சூட்டை குறைப்பதற்கு இளநீர், மோர் மற்றும் பழச்சாறு அருந்தலாம். மிதமான இடைவெளியில் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் பருகலாம்.
பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள், விட்டமின் மாத்திரைகள், தேவைக்கதிகமான குளுக்கோஸ் போன்றவைகளை தவிர்ப்பது நல்லது.

தேர்வு பற்றிய பயத்திற்கு காரணம், தேர்வு எளிதாக இருக்குமா, நமக்கு நன்கு தெரிந்த பகுதிகளிலிருந்து அதிக கேள்விகள் வருமா, தேர்வை சிறப்பாக எழுதி திட்டமிட்டபடி மதிப்பெண் பெற முடியுமா போன்ற சந்தேகம் மற்றும் எதிர்பார்ப்புகள் ஏற்படும் போது, தேவையற்ற பதற்றம் உருவாகிறது. இந்த பதற்றமே, தேர்வு நெருங்கும் போது பயமாக மாறி விடுகிறது.

இதைத் தவிர்க்க, எதிர்பார்ப்பற்ற அணுகுமுறை மற்றும் தொடர் பயிற்சி இவற்றோடு, 'என்னாலும் முடியும்...' என்ற நம்பிக்கையுடன், தேர்வுக்கு தயாராக வேண்டும். இது, நமக்குள் உலவும் எதிர்மறை எண்ணங்களை விலக்கி, தேர்வை எளிதாக எதிர்கொள்ள உதவும்.

தேர்வுக்கு தயாராகும் நேரத்தில், படிக்க வேண்டிய பாடங்கள், அவைகளை படித்து முடிக்க வேண்டிய நாட்கள் மற்றும் 'ரிவிஷன்' செய்து பார்க்க வேண்டிய நாட்கள் போன்றவை குறித்து, அட்டவணை தயாரிக்க வேண்டும்.

புதிய பாடங்களையும், விடுபட்டு போன பாடங்களையும் படித்து முடித்த பின், நினைவு குறிப்புகளை எழுதிக் கொள்வது, பாடங்களை நினைவில் வைக்க உதவும்.

படிக்கும் போது, கடிகார முள்ளை பார்க்கவோ, படிக்க வேண்டிய பக்கங்களின் எண்ணிக்கையில் கவனம் செலுத்தவோ கூடாது. அதனால் உண்டாகக்கூடிய பதற்றம் மற்றும் அவசரம் பாடத்தின் மீதான புரிதலை குறைத்து விடும்.

காலை மற்றும் பின்னிரவுக்கு முந்திய நேரத்தை படிப்பதற்கும், மற்ற நேரங்களை படித்தவைகளை நினைவுபடுத்தி பார்த்தல், மனப்பாடப்பகுதிகள், சமன்பாடுகள், சூத்திரங்களை எழுதி பார்த்தல் போன்ற வேலைகளுக்கு ஒதுக்கிக் கொள்வதன் மூலம், தொடர் படிப்பால் ஏற்படக்கூடிய மன இறுக்கங்களை தளர்த்திக் கொள்ளலாம்.

முந்தைய ஆண்டுகளின் கேள்வித் தாள்கள், துணை நூல்களிலிருந்து தயார் செய்த கேள்விகள் மற்றும் மற்ற பள்ளிகளிலிருந்து சேகரித்த கேள்விகள் என, தனித்தனியாக பிரித்து எழுதி, அவைகளுக்கு விடை காண முயல்வது, தேர்வை சிறப்பாக எதிர் கொள்ள உதவும்.

'ரிவிஷன்' செய்ய ஒதுக்கியுள்ள நாட்களில், அறிவியல் மற்றும் கணித பாடங்களுக்குரிய படங்கள், கிராப் மற்றும் மேப் ஆகியவைகளை தெளிவாக வரைந்து பழக, கூடுதல் நேரம் ஒதுக்கலாம். இதன் மூலம், இவைகள் சார்ந்த கேள்விகளுக்கு, நீங்கள் என்ன பதில் எழுதியுள்ளீர்கள் என்பதை, இப்படங்களே திருத்துபவருக்கு உணர்த்தி விடும்.

எனவே, இதற்கென கூடுதல் நேரங்களை ஒதுக்குவதில் தவறில்லை.
மேலும், தேர்வுக்கு சில வாரங்களுக்கு முன், சேகரித்து வைத்துள்ள கேள்வித்தாள்களை வைத்து, சொந்தமாக தேர்வை எழுதி பார்க்கலாம். அவ்வாறு எழுதி முடித்த பின், குறிப்பிட்ட நேரத்திற்குள், தேர்வை முழுமையாக எழுதி முடித்திருக்கிறீர்களா என்றும், முடித்திருக்கவில்லை என்றால், அதற்கான கரணங்களையும் கண்டறிய வேண்டும். இதன்மூலம், எந்த வகையான கேள்விகளுக்கு, எவ்வளவு நேரம் ஒதுக்கலாம் என்பதை, திட்டமிட முடியும்.

நம் மூளையானது, இடப்பக்க மூளை, வலப்பக்க மூளை என, இரு பகுதிகளை கொண்டது. இவ்விரண்டின் பணிகளும் வெவ்வேறானவை.

இடப்பக்க மூளை, மொழிகள் கற்க, மனப்பாடம் செய்ய, படிக்க, சிந்திக்க, விஷயங்களை அலசி ஆராய, காரணங்கள் மற்றும் விளைவுகள் பற்றி, அறிந்து கொள்ள உதவுகிறது.

வலப்பக்க மூளை கனவு காண, இசை, நடனம், கலைகள் பற்றிய தாக்கங்களை பெற, வண்ணம் மற்றும் வடிவம் பற்றி பதிவு செய்ய உதவுகிறது.

நீங்கள் படிக்கிற பாடங்களை, இவ்விரு மூளைகளின் தன்மைக்கேற்ப, அவைகளில் பதியும் போதும், முறையாக பாதுகாக்கும் போதும் மட்டுமே நினைவுபடுத்துதல் எளிதாகிறது. அதனால், மூளையை விழிப்பு நிலையில் செயல்படும்படி வைத்திருப்பது அவசியம். சீரான சுவாசப்பயிற்சியின் மூலமாக, மூளையை எளிதாக தூண்டலாம்.

சுவாசப் பயிற்சிக்கென, தனியே நேரம் ஒதுக்க வேண்டியதில்லை. படிப்பிற்கிடையேயான ஓய்வு நேரத்தில், இப்பயிற்சியை செய்வதன் மூலம், பாடங்களை மனதில் பதியச் செய்து, நினைவுபடுத்தி பார்ப்பதையும், சுலபமாக செய்ய முடியும்.

அடுத்து, தேர்வில் விடைகள் எழுதும் போது, தெளிவாகவும், அழகாவும், திருத்துபவருக்கு புரியும்படியும் எழுத வேண்டும். இதன் மூலம், சிறு தவறுகளுக்காக இழக்கும் மதிப்பெண்ணை, கையெழுத்திற்காக பெறும் மதிப்பெண்ணை கொண்டு ஈடுகட்டி விடலாம்.

வாரமலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தேர்வை எதிர்கொள்வோம்! Empty Re: தேர்வை எதிர்கொள்வோம்!

Post by krishnaamma Sun Feb 26, 2017 6:22 pm

இப்படி நிறைய சொல்லி, சொல்லி, மாணவர்களை பயமுறுத்துகிறார்களோ என்று எனக்கு தோன்றுகிறது புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum