ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Today at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by T.N.Balasubramanian Today at 6:46 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராஜா தேசிங்கு திரைப்பட பாடல் வரிகள்

Go down

ராஜா தேசிங்கு திரைப்பட பாடல் வரிகள் Empty ராஜா தேசிங்கு திரைப்பட பாடல் வரிகள்

Post by ayyasamy ram Thu Feb 23, 2017 12:01 pm

ஊருக்கு நீ உழைத்தால் உன்னருகே அவன் இருப்பான்

--
திரைப்படம்:ராஜா தேசிங்கு
இசை:ஜி.ராமநாதன்
இயற்றியவர்:உடுமலை நாராயணகவி
பாடகர்கள்:சீர்காழி கோவிந்தராஜன்

-
----------------------------

ஊருக்கு நீ உழைத்தால்
உன்னருகே அவன் இருப்பான்
உண்மையிலும் அன்பினிலும்
ஒன்றாய்க் கலந்திருப்பான்
பசித்தவர்க்கு சோறிடுவோர்
பக்கத்தில் அவன் இருப்பான்
கருணையுள்ள நெஞ்சினிலே
தினமும் குடியிருப்பான்
ஆஆஆஆ..ஆஆஆஆ...


ஆதி கடவுள் ஒன்றேதான்
அதைக் காண முடியாது
ஆண்பெண் ஜாதி இரண்டுதான்
இதில் பேதம் கிடையாது
உயர்வு தாழ்வு என்பதெல்லாம்
உள்ளத்தால் வரும் மாற்றம் தான்
ஆதிகடவுள் ஒன்றே தான்

உள்ளத்தில் உள்ளவனை
ஒளிவிளைக்காய் நிற்பவனை ஆஆஆஆஆ..
ஊரெங்கும் தேடினாலும்
ஒரு நாளும் காண்பதில்லை
கண்டவரும் சொன்னதில்லை
சொன்னவரும் கண்டதில்லை
காற்றைப் போல் பூமியிலே
கலந்திருப்பான் ஆண்டவனே

ஆதி கடவுள் ஒன்றேதான்
அதைக் காண முடியாது
ஆண்பெண் ஜாதி இரண்டுதான்
இதில் பேதம் கிடையாது
உயர்வு தாழ்வு என்பதெல்லாம்
உள்ளத்தால் வரும் மாற்றம் தான்
ஆதிகடவுள் ஒன்றே தான்

மதம் என்ற சொல்லுக்கு
வெறி என்றோர் பொருளும் உண்டு
மனிதராய் பிறந்தவர்கள்
மதத்தால் பிரிந்து விட்டார்
மதத்தால் பிரிந்தவர்கள்
அன்பினால் ஒன்றுபட்டு
ஒன்றே குலமாக ஒற்றுமையாய் வாழ்ந்திருப்போம்

ஆதி கடவுள் ஒன்றேதான்
அதைக் காண முடியாது
ஆண்பெண் ஜாதி இரண்டுதான்
இதில் பேதம் கிடையாது
உயர்வு தாழ்வு என்பதெல்லாம்
உள்ளத்தால் வரும் மாற்றம் தான்
ஆதிகடவுள் ஒன்றே தான் !

---
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82752
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ராஜா தேசிங்கு திரைப்பட பாடல் வரிகள் Empty Re: ராஜா தேசிங்கு திரைப்பட பாடல் வரிகள்

Post by ayyasamy ram Thu Feb 23, 2017 12:02 pm

வனமேவும் ராஜகுமாரா வளர் காதல் இன்பமே தாராய்,.....

திரைப்படம்:ராஜா தேசிங்கு
இசை:ஜி.ராமநாதன்
இயற்றியவர்:உடுமலை நாராயணகவி
பாடகர்கள்:பானுமதி, c s ஜெயராமன், ஜிக்கி, சீர்காழி கோவிந்தராஜன்


வனமேவும் ராஜகுமாரா
வளர் காதல் இன்பமே தாராய்
வனமேவும் ராஜகுமாரா
வளர் காதல் இன்பமே தாராய்
மனமோகனா சுகுமாரா
மனமோகனா சுகுமாரா
மறவேன் உனை எழில் தீரா
மறவேன் உனை எழில் தீரா


வனமேவும் ராஜகுமாரி
வளர் ஜோதியே சுகுமாரியே
வனமேவும் ராஜகுமாரி
வளர் ஜோதியே சுகுமாரி
மனம்போலே நாம் இனி பாரில்
மனம்போலே நாம் இனி பாரில்
மகிழ்ந்தே செல்வோம் அதன் தேரில்
மகிழ்ந்டெய் செல்வோம் அதன் தேரில்
நிழல் நீயே தேகம் நானே
நிஜம் இது கேள் பெண்மானே
நிழல் நீயே தேகம் நானே
நிஜம் இது கேள் பெண்மானே
மலர் மேவும் தென்றல் போலே
நிலை மாறுதே உன்னாலே
மலர் மேவும் தென்றல் போலே
நிலை மாறுதே உன்னாலே


வனமேவும் ராஜகுமாரா

மல்லாடும் வீரரெல்லாம் ....
மல்லாடும் வீரரெல்லாம்
வணங்க வரும் மன்னவரே அல்லாவின் அருளாலே
எனக்கெனவே பிறந்தவரே
உல்லாச வேளையிலே ஓவிய பூங்காவிணிலே
உள்ளன்பால் தேடி வந்தேன்
உறவாடும் பூங்குயிலே உறவாடும் பூங்குயிலே

கலை வீசும் கண்களாலே
கனிந்தேன் கண்ணே அன்பாலே
கவி பாடும் இன்பதாலே
கவர்ந்தாய் கண்ணா இன்னாளே


வளமாகும் காதலினாலே
மகிழ்வோம் மேன்மேலே
நிழலோடு தேகமும் போலே
நிஜ வாழ்வில் நாம் இனீமேலே
வளமாகும் காதலினாலே

இயலோடு இசை போலே
எழில் மேவும் சோலையிலே
இணை இல்லா ஜாடை சேர்ந்ததே


புயல் மேவும் அலை போலே
பொங்கிடும் காதலரால்
பொறாமை கொள்ள நேர்ந்ததே
வனமேவும் ராஜகுமாரி
வளர் ஜோதியே சுகுமாரி
வனமேவும் ராஜகுமாரி
வளர் ஜோதியே சுகுமாரி
மனமோகனா சுகுமாரா மனமோகனா சுகுமாரா
மறவேன் உனை எழில் தீரா
மறவேன் உனை எழில் தீரா


வளமாகும் காதலினாலே
மகிழ்வாகினோம் மேன்மேலே
நிழலோடு தேகமும் போலே
நிஜ வாழ்வில் நாம் இனிமேலே

--
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82752
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ராஜா தேசிங்கு திரைப்பட பாடல் வரிகள் Empty Re: ராஜா தேசிங்கு திரைப்பட பாடல் வரிகள்

Post by ayyasamy ram Thu Feb 23, 2017 12:03 pm

பாற்கடல் அலைமேலே...பாம்பணையின் மேலே


திரைப்படம்:ராஜா தேசிங்கு
இசை:ஜி.ராமநாதன்
இயற்றியவர்:உடுமலை நாராயண கவி
பாடகர்கள்:டாக்டர். எம்.எல். வசந்தகுமாரி.

---------------
-
பாற்கடல் அலைமேலே
பாம்பணையின் மேலே
பள்ளிகொண்டாய் ரங்கநாதா -
உந்தன் பதமலர் நிதம் தேடி
பரவசமோடு பாடி கதி பெறவே
ஞானம் நீ தா தேவா


காதகனான ஒரு சோமுகன்
கை கொண்டு கடலிடையே ஒளித்த மறைநாலும்
பின்னர் மேதினி தான் மீள
பாதகன் தான் மாள
மீனவதாரம் செய்த திருமாலே


வானவரும் தானவரும் ஆழி அமுதம் கடைந்த
மந்தரகிரி தன்னை தாங்கிடவே -
ஒரு கூனுடைய ஓடு கொண்ட கூர்மவதாரம் என
கோலமுற்றாய் புகழ் ஓங்கிடவே


ஹீனன் ஹிரன்யக்சன் என்னும் படுபாவி
பாயாய் ஏழு கடலுள் மறைத்த பூதேவி -
அவள் தினரக்சக சகல ஜீவரக்ஷக எனவே
நானிலத்தை தூக்கிய வராஹ வடிவானவனே


எங்கிருக்கிறான் ஹரி (அவன் ) எங்கிருக்கிறான் என்ற
ஹிரணியன் சொல்லைக் -கேட்டிடை மறித்தே அவன் பிள்ளை
எங்கும் இருப்பான் தூணில் இங்கும் இருப்பான் -
அந்த தூணில் இருப்பான் என்று
இயம்பியதால் நேர்ந்த தொல்லை
நீங்கவும் பொங்கு சினவம்பனர்கள்
பூத உடம்பும் தசை தின்ரெழுந்து
தோண்டியோடு மணிகுடலும் உதிரம் சிந்தவே
நகம் கொண்டு கீறும் நரசிங்கமான அவதாரனே

ஷங்கு சக்ர தாரனே
உபகாரனே ஆதாரனே


மூவடி மண் கேட்டு வந்து
மண்ணளந்து விண்ணளந்து மா பலி சிரம் அளந்த வாமனனே
க ப த ரி க ப த ச ரி க ப த ம க ரி ச நி த ம க ரி
தந்தை ஆவியை பிரித்ததனால்
சூரியகுல வைரியாக அமைந்த பரசுராமன் ஆனவனே


தேவர்களை சிறை மீட்டு
ராவணாதி உயிர் மாய்த்த
தஷரத ஸ்ரீ ராம அவதாரனே
பூமி தனிலே புகழையும்
உழவோர் கலப்பை தனை புயமதில் தாங்கி நின்ற பலராமனே


ஆவணி ரோஹிணியில் அஷ்டமியிலே
அஷ்ட ஜாம நேரத்திலே அவதரித்தோனே
ஆயர்பாடி ஏறிய யசோதை நந்தலாலா
பதினாயிரம் கோபியர் பரமானந்த லோலா
பூபாரம் தீர்க்க பாரத போர் முடித்த ஷீலா
கோபாலகிருஷ்ணனா ஆதிமூலா பரிபாலா


பஞ்ச பாதகம் வாதுடன் கொடிய
வஞ்சகம் மித்ரபேதகம் செய்த
அஞ்சிடாதவர் ஆடிடும் நாடக மேடை
ஆடிய கலியுகம் அழிக்கவே தர்மம் தழைக்கவே
அன்புருவாகிய கல்கி அவதாரன்
சிங்காரன் தசாவதாரன் நீயே

---
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82752
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ராஜா தேசிங்கு திரைப்பட பாடல் வரிகள் Empty Re: ராஜா தேசிங்கு திரைப்பட பாடல் வரிகள்

Post by Guest Thu Feb 23, 2017 9:26 pm

நினைவூட்டியதற்கு நன்றி ஐயா. அருமையான பாடல்கள். அனைத்தும் ஒரே காணொளியில்

avatar
Guest
Guest


Back to top Go down

ராஜா தேசிங்கு திரைப்பட பாடல் வரிகள் Empty Re: ராஜா தேசிங்கு திரைப்பட பாடல் வரிகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum