Latest topics
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம் by i6appar Today at 6:16 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm
» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm
» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
i6appar |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
i6appar |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
திரைப்பட விழாவில் பார்த்தது: இங்கே போல அங்கேயும்...!
Page 1 of 1
திரைப்பட விழாவில் பார்த்தது: இங்கே போல அங்கேயும்...!
![திரைப்பட விழாவில் பார்த்தது: இங்கே போல அங்கேயும்...! YUXp9v8rTaO1wo26F56x+kadhir2](https://www.filepicker.io/api/file/yUXp9v8rTaO1wo26F56x+kadhir2.jpg)
-
எப்போதுமே ஈரானியத் திரைப்படங்களுக்குப் பெருத்த
வரவேற்பு உண்டு; அந்த வகையில் வெளியான "லண்டௌரி'
என்ற இந்தப் படம் சென்னைத் திரைப்பட விழாவில் மிகப்
பெரும் அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது.
-
வளரும் நாடுகளில் இன்னும் பெண்களின் நிலை தாழ்ந்தே
உள்ளது. பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நாளுக்கு
நாள் அதிகரித்தே வருகின்றன. இத்தகைய சூழலே
இப்படத்தின் கரு.
-
பெண்களுக்கு எதிரான திராவக வீச்சை மையமாகக்
கொண்டதாகும்.
-
இக்கதையில் வரும் மரியம் என்ற நடுத்தர வயதுடைய பெண்,
சமூகச்சேவையில் நாட்டமுள்ள பத்திரிகையாளர். குறிப்பாக
ஈரானின் "கண்ணுக்குக் கண்' எனப்படும் சட்டத்தை எதிர்ப்பவர்.
-
அவரை எதிர்பாராவிதமாகச் சந்திப்பவன் பாஷா என்னும்
பேட்டை ரௌடி, வழித்திருடன். இவ்விருவருக்குமிடையேயான
கதையே "லண்டௌரி' எனப்படும் இத்திரைப்படம்.
-
இக்கதைச் சூழலில் பல திரைப்படங்கள் தமிழில் வந்திருந்தாலும்,
இப்படத்தில் அழுத்தமாகச் சொல்லப்பட்ட விதமும்,
அது ரசிகர்களின் மனங்களில் ஏற்படுத்தும் தாக்கத்தையும்
சொல்லில் அடக்கிவிட இயலாது.
-
மரியம் என்ற அந்தப் பெண்ணும், பாஷா என்ற திருடனும், தங்கள்
முன் ஏற்பட்ட அனுபவங்களால், தங்கள் இயல்பு நிலையிலிருந்து
முரண்படுவது இப்படத்தின் போக்கை வலுப்படுத்துகிறது எனலாம்.
மரியம் பார்த்தவரையெல்லாம் வசீகரிக்கக் கூடிய கண்களையும்
தோற்றத்தையும் கொண்டவள்.
-
எங்கெல்லாம் பழிவாங்கும் முனைப்பில் சட்டம் திருத்தப்படுகிறதோ,
அங்கெல்லாம் தன் குரலை எழுப்புபவள். பாஷாவோ வழிப்பறி
செய்யும் தொழிலைக் கொண்டவன். அவனும் அவன் கூட்டாளிகளாக
மேலும் இரு ஆண்களும் ஒரு பெண்ணும் சேர்ந்து வழிப்பறி செய்யும்
ஒரு குழு. அந்தக் குழு "லண்டௌரி' என்றழைக்கப்படுகிறது.
அச்சொல்லுக்கான பொருள் கொசு.
-
-------
Last edited by ayyasamy ram on Sat Feb 04, 2017 8:11 am; edited 1 time in total
Re: திரைப்பட விழாவில் பார்த்தது: இங்கே போல அங்கேயும்...!
மரியத்தை எதேச்சையாகப் பார்க்கும் பாஷா அவள்மேல் ஒருதலைக்
காதல் கொள்கிறான். ஆனால் மரியம் அவன் ஒரு கொள்ளைக்காரன்
என்பதை அறிந்துகொண்டு, அவனைத் தன்னுடைய பத்திரிகை
ஆய்வுகளுக்காகப் பயன்படுத்திக் கொள்ள ஆரம்பிக்கிறாள்.
-
அந்த நெருக்கத்தைத் தவறாகப் புரிந்து கொண்ட பாஷா, அவள்
தன்னை உண்மையிலேயே காதலிக்கிறாள் என்று நினைத்துக்
கொண்டு இருக்கும் வேளையில், மரியம், வேறொரு நபரிடம் பழகுவது
தெரிய வருகிறது. காதலில் மனம் மயங்கிக் கிடக்கும் பாஷா.
மரியத்திடம் மன்றாடுகிறான்; அவள் மறுக்கின்றாள்.
-
ஒரு நாள் அவள் எதிர்பார்க்காத தருணத்தில் அவள் முகத்தில்
திராவகத்தை ஊற்றிவிடுகிறான். தான்தோன்றியாகக் கிடந்த பாஷா
தன் வன்மையை எல்லாம் துறந்து தன் குணத்தையே மறந்து காதலில்
வயப்பட்டு தன்னிலை இழப்பதே முன்கதை.
-
கதையின் பிற்பாதி முழுக்க முழுக்க மரியத்தை மையமாகவே வைத்து
அமைகிறது. இதுவரை "கண்ணுக்குக் கண்' என்னும் சட்டத்தை எதிர்த்து
வந்த மரியம், திராவகத் தாக்குதலால், தன் பார்வை இழந்து, தன் முகம்
சிதைந்த நிலையில், பாஷாவைச் சட்டம் மூலம் பழிவாங்கத்
துடிக்கிறாள்.
-
அவள் விருப்பத்திற்கிணங்க நீதிமன்றம் பாஷாவின் கண்களைச்
சிதைக்கலாம் என்று நீதி வழங்குகிறது. பின்னர் அதன்படி நடக்கிறதா
என்பதே இப்படத்தின் உச்சக்கட்டம்.
-
பெரும்பாலான தவறுகள் கண நேர உந்துதலால்தான் நடைபெறுகின்றன
என்பதால் அவ்வகை வழக்குகளில் தவறு செய்தவர்களுக்கு அவர் திருந்தி
வாழ வழிசெய்தல் வேண்டும் என்பது ஒருபக்கக் கூற்றாக இருந்தாலும்,
அத்தகைய செயல்களுக்குக் கடுமையான தண்டனைகளை அளித்தால்
மட்டுமே அவை சமுதாயத்தில் திரும்பத் திரும்ப நடக்காது என்ற நிலை
வரும் என்று வாதாடும் மறுபக்கக் கூற்றும் நம்மைச் சிந்திக்க வைக்கின்றன.
படம் முழுவதும் கதையின் பாத்திரங்களும், அப்பாத்திரங்களின்
நண்பர்களும் மாறி மாறி விவரித்துச் செல்வதைப்போன்ற நடை பயன்
படுத்தப்படுகிறது.
-
படம் தொடங்கி பத்து நிமிடத்துக்குள் பார்க்கும் நம்மை அக்கதைக்குள்
இழுத்துக் கொள்ளும்விதமாக கதையின் போக்கு அமைந்துள்ளது
குறிப்பிடத்தக்கது. மிகவும் ஆழமான ஒரு கருத்தை, மிக அழுத்தமான
இயக்கத்தால், நம் மனக்கண்களுக்கு முன்னர் விரித்துச் செல்லும்
இயக்குநரின் முயற்சி பாராட்டத்தக்கது.
-
இந்தத் திரைப்பட விழாவில் திரையிடப் பெற்ற திரைப்
படங்களில் முதன் மூன்று தரமானவற்றுள் ஒன்றாய் இது அமையும்
என்பது திண்ணம்.
-
-------------------------------------
By - சந்தர் சுப்ரமணியன்
தினமணி கதிர்
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» தென்கொரிய திரைப்பட விழாவில் ராவணன்
» தலித் திரைப்பட விழாவில், ரஜினி படம்!
» கோவா திரைப்பட விழாவில் சூர்யா திரைப்படம் திரையிட தேர்வு
» அட்லாண்டா இந்திய திரைப்பட விழாவில் சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்
» கோவா சர்வதேச திரைப்பட விழாவில் 4 தமிழ் படங்கள்
» தலித் திரைப்பட விழாவில், ரஜினி படம்!
» கோவா திரைப்பட விழாவில் சூர்யா திரைப்படம் திரையிட தேர்வு
» அட்லாண்டா இந்திய திரைப்பட விழாவில் சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்
» கோவா சர்வதேச திரைப்பட விழாவில் 4 தமிழ் படங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|