ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:18 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

Top posting users this week
ayyasamy ram
நெய்... தெரிந்ததும்... தெரியாததும்... Poll_c10நெய்... தெரிந்ததும்... தெரியாததும்... Poll_m10நெய்... தெரிந்ததும்... தெரியாததும்... Poll_c10 
heezulia
நெய்... தெரிந்ததும்... தெரியாததும்... Poll_c10நெய்... தெரிந்ததும்... தெரியாததும்... Poll_m10நெய்... தெரிந்ததும்... தெரியாததும்... Poll_c10 
mohamed nizamudeen
நெய்... தெரிந்ததும்... தெரியாததும்... Poll_c10நெய்... தெரிந்ததும்... தெரியாததும்... Poll_m10நெய்... தெரிந்ததும்... தெரியாததும்... Poll_c10 
VENKUSADAS
நெய்... தெரிந்ததும்... தெரியாததும்... Poll_c10நெய்... தெரிந்ததும்... தெரியாததும்... Poll_m10நெய்... தெரிந்ததும்... தெரியாததும்... Poll_c10 

Top posting users this month
ayyasamy ram
நெய்... தெரிந்ததும்... தெரியாததும்... Poll_c10நெய்... தெரிந்ததும்... தெரியாததும்... Poll_m10நெய்... தெரிந்ததும்... தெரியாததும்... Poll_c10 
heezulia
நெய்... தெரிந்ததும்... தெரியாததும்... Poll_c10நெய்... தெரிந்ததும்... தெரியாததும்... Poll_m10நெய்... தெரிந்ததும்... தெரியாததும்... Poll_c10 
mohamed nizamudeen
நெய்... தெரிந்ததும்... தெரியாததும்... Poll_c10நெய்... தெரிந்ததும்... தெரியாததும்... Poll_m10நெய்... தெரிந்ததும்... தெரியாததும்... Poll_c10 
VENKUSADAS
நெய்... தெரிந்ததும்... தெரியாததும்... Poll_c10நெய்... தெரிந்ததும்... தெரியாததும்... Poll_m10நெய்... தெரிந்ததும்... தெரியாததும்... Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

நெய்... தெரிந்ததும்... தெரியாததும்...

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

நெய்... தெரிந்ததும்... தெரியாததும்... Empty நெய்... தெரிந்ததும்... தெரியாததும்...

Post by krishnaamma Sun Jan 29, 2017 12:25 pm

நெய்... தெரிந்ததும்... தெரியாததும்...

நெய் சாப்பிடாதீர்கள் என யாராவது சொன்னால் அவர்களை ஏளனமாக பாருங்கள்.

நெய்யில்லா உண்டி பாழ் என்பது சித்தர்கள் கூற்று. இதை இன்றைய அறிவியல் பூர்வமாக ஆராய்ந்தால் அதன் மருத்துவ குணங்கள் நமக்கு வியப்பளிக்கும். எண்ணற்ற மருத்துவப் பயன் கொண்ட நெய் எவ்வாறு காய்ச்சப்படுகின்றது என்பதைப் பற்றி முதலில் அறிவோம்.

பாலை நன்றாக காய்ச்சி ஆறிய பின் அதில் சிறிதளவு தயிரை கலந்து மூடிவைத்து 6 அல்லது 8 மணி நேரத்திற்குப் பின் எடுத்துப் பார்த்தால் அது முழுவதும் தயிராக மாறியிருக்கும்.

இந்த தயிரில் சிறிது நீர்விட்டு மத்தால் கடைந்தால் வெண்ணெய் தனியாக பிரிந்துவிடும். இதனை சட்டியில் இட்டு காய்ச்சும் போது அது உருகும். அதில் வெற்றிலை அல்லது முருங்கை இலையை போட்டால் நன்றாக பொரியும். நல்ல வாசனை உண்டாகும். பின் அதனை இறக்கி வடிகட்டி பத்திரப்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு எடுக்கப்படும் நெய்யானது வெகுநாட்கள் வரை கெடாமல் இருக்கும். இத்தகைய நெய்யில்தான் மருத்துவ குணங்கள் அதிகம் உள்ளது.

2000 ஆண்டுகளுக்கு முன்பே சித்த ஆயுர்வேத மருத்துவத்தில் நெய்யின் பயன்பாடு அதிகம் இருந்து வந்துள்ளது. மருத்துவக் குணம் வாய்ந்த மூலிகைகளில் உள்ள அணுக்களின் சுவர்களை ஊடுருவக்கூடிய தன்மை நெய்க்கு இருப்பதால் இத்தகைய மருந்து தயாரிப்பில் நெய்யை அதிகம் பயன்படுத்துகின்றனர்.

மருந்துக்கள் கெடாமல் பாதுகாக்க நெய்யே சிறந்த பொருளாகும். நெய்யை ரசாயனம் என்று ஆயுர்வேத மருந்தாளர்களால் அழைக்கப்படுகிறது. ஏன் என்றால் முழு உடல் நலம் கொடுத்து நீண்ட ஆரோக்கியத்தைக் கொடுக்கும் குணம் நெய்க்கு உண்டு.

இதுபோல் சித்த மருத்துவத்திலும் மருந்துகளுக்கு துணைமருந்தாகவும், மருந்துகள் கெடாமல் பாதுகாப்பதற்கும் நெய்யையே பயன்படுத்தி வந்துள்ளனர்.

ஒரு ஸ்பூன் நெய்யில் 14 கிராம் கொழுப்பு சத்துக்கள் நிறைந்துள்ளது.

ஜீரண சக்தியைத் தூண்ட !

நெய் வயிற்றில் உள்ள அமிலத்தன்மையை சமன் செய்து வயிறு மற்றும் குடல் பகுதியில் உள்ள மியூகஸ் லையனிங் பகுதியை வலுவாக்குகிறது.

நெய்யில் உப்பு, லேக்டோஸ் போன்ற சத்துக்கள் கிடையாது. இதனால் பால் மற்றும் பால் பொருட்கள் ஒத்துக்கொள்ளாதவர்கள் நெய்யை உபயோகித்துக்கொள்ளலாம்.

நெய் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. கேன்சர், வைரல் நோய்களை தடுக்கிறது.

நெய்யில் CLA - Conjulated Linoleic Acid உள்ளது. இது உடல் பருமனாவதைத் தடுக்கிறது.

அதுபோல் ஒமேகா 3 என்ற கொழுப்பு அமிலம் நெய்யில் உள்ளதாக அண்மையில் கண்டறிந்துள்ளனர்.

இது மூளைக்கு சிறந்த டானிக்.

நெய்யில் Saturated fat - 65%

Mono - unsaturated fat - 32%

Linoleic - unsaturated fat -3%

இத்தகைய மருத்துவக் குணம் வாய்ந்த நெய்யை உணவில் எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை அறிந்துகொள்வோம்.

நெய் உருக்கி மோர் பெருக்கி....

அதாவது நெய்யை நன்கு உருக்கி சுடு சாதத்தில் சேர்த்து கலந்து சாப்பிட வேண்டும். நெய்யை உருக்கி சாப்பிடுவதால் உடலுக்கு குளிர்ச்சியைக் கொடுத்து உஷ்ணத்தைத் தணிக்கும்.

தோசை வார்க்கும் போது எண்ணைய்க்கு பதிலாக நெய் சேர்த்துக் கொள்ளலாம். நெய் சேர்த்த பட்சணங்களை உண்ணலாம்.

மலச்சிக்கலைப் போக்கும். வாத, பித்த, கபத்தின் சீற்றங்களைக் குறைத்து அதனதன் நிலையில் நிறுத்தி நோய்களின் தாக்கத்தைத் தடுக்கும்.

* ஞாபக சக்தியை தூண்டும்

* சரும பளபளப்பைக் கொடுக்கும்

* கண் நரம்புகளைப் பலப்படுத்தி கண் பார்வை தெளிவடையச் செய்யும்.

உடல் வலுவடைய !

சிலர் எப்போதும் சோர்வுடன் உடல் வலுவில்லாமல் காணப்படுவார்கள். சிறிது தூரம் நடந்தால்கூட அவர்களுக்கு மேல் மூச்சு வாங்கும். உடனே அமர்ந்து விடுவார்கள். கால்கள் அதிகமாக வலிப்பதாகக் கூறுவார்கள். இதற்கு காரணம் உடலில் சத்தின்மையே...

இவர்கள் தினமும் மதிய உணவில் நெய்யை சேர்த்து வந்தால் உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்கும்.

குடற்புண் குணமாக !

குடற்புண் (அல்சர்) கொண்டவர்கள் பசியின்மையால் அவதியுறுவார்கள். சரியான நேரத்திற்கு உணவு சாப்பிடாமலும், அதிக பட்டினியாகவும் இருப்பவர்களின் வயிற்றில் ஜீரண அமிலங்கள் சுரந்து குடலின் உட்புறச் சுவர்களை புண்ணாக்கி விடுகின்றன.

மேலும் வாயுக் கோளாறு உள்ளவர்களுக்கும், உணவில் அதிக காரம் சேர்த்துக் கொள்பவர்களுக்கும், மது போன்ற போதை வஸ்துக்கள் உபயோகிப்பவர்களுக்கும், மன அழுத்தம் கொண்டவர்களுக்கும் குடல் புண்ணாகிவிடும். இதனால் வாயிலும் புண்கள் உருவாகி, ஒருவித நாற்றம் வீசும்.

இவர்கள் உணவில் நெய் சேர்த்து சாப்பிட்டு வந்தால் குடலின் உட்புறச் சுவர்களில் உள்ள புண்கள் ஆறுவதுடன், சுரப்பிகள் பலப்படும். மலச்சிக்கல் நீங்கும். நன்கு ஜீரண சக்தியைத் தூண்டும்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நெய்... தெரிந்ததும்... தெரியாததும்... Empty Re: நெய்... தெரிந்ததும்... தெரியாததும்...

Post by M.Jagadeesan Tue Jan 31, 2017 8:48 am

நெய் காய்ச்சும்போது முருங்கை இலையைப் போட்டுக் காய்ச்சவேண்டும் . கடைசியில் நெய்யை வடித்தபின்பு , மீதியிருக்கும் மண்டியில் சோற்றைப் பிசைந்து சாப்பிட அபார சுவை !

இப்போது நல்ல நெய் கிடைப்பது அரிதாக உள்ளது . GRB கூட சரியில்லை .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

நெய்... தெரிந்ததும்... தெரியாததும்... Empty Re: நெய்... தெரிந்ததும்... தெரியாததும்...

Post by T.N.Balasubramanian Tue Jan 31, 2017 12:09 pm

M.Jagadeesan wrote:நெய்  காய்ச்சும்போது  முருங்கை இலையைப் போட்டுக்  காய்ச்சவேண்டும் . கடைசியில் நெய்யை வடித்தபின்பு , மீதியிருக்கும் மண்டியில் சோற்றைப் பிசைந்து சாப்பிட அபார சுவை !

இப்போது நல்ல நெய் கிடைப்பது அரிதாக உள்ளது . GRB கூட சரியில்லை .
மேற்கோள் செய்த பதிவு: 1232917

செய்முறை சரி, ஆனால் மீதி இருக்கும் மண்டி (கசண்டு)சாப்பிடுவதால் புற்றுநோய்  வருகிறதாமே.
ஆவின் வெண்ணெய் சரி இல்லையா ? நாங்கள் அதைத்தான் வாங்குகிறோம் 

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

நெய்... தெரிந்ததும்... தெரியாததும்... Empty Re: நெய்... தெரிந்ததும்... தெரியாததும்...

Post by T.N.Balasubramanian Tue Jan 31, 2017 12:16 pm

நல்ல தகவல். நன்றி. 
மேலும் நெய்யை சேர்த்துக்கொள்வதால், அன்னக்குழாயை சுததிகரிக்கிறதாம்.( லுபிரிக்கன்ட் மாதிரி)
நெய்யை அன்னசுத்தி  என்றும் கூறுவார்கள்.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

நெய்... தெரிந்ததும்... தெரியாததும்... Empty Re: நெய்... தெரிந்ததும்... தெரியாததும்...

Post by M.Jagadeesan Tue Jan 31, 2017 12:24 pm

கிராமத்தில் பசுமாடு வைத்திருப்பவர்கள் வெண்ணெய் எடுத்து நெய் காய்சசி விற்பார்கள் .
அதன் சுவையும் , மணமும் கடைகளில் விற்கும் நெய்யில் கிடைப்பதில்லை .

ஆவின் நெய் சரியில்லை என்றுதான் உதய கிருஷ்ணாவுக்கு மாறினோம் ;அதுவும் சரியில்லை என்றுதான் NILGRIS நெய்யுக்கு மாறினோம்;அதுவும் பிடிக்கவில்லை என்றுதான் தற்போது GRB பயன்படுத்துகிறோம் .

என்றோ ஒருநாள் கசண்டுவில் சோற்றைப் பிசைந்து சாப்பிடும்போது புற்றுநோய் வராது . புற்று நோய்க்கு மூல காரணமே புகையிலையைப் பயன்படுத்துவதுதான் .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

நெய்... தெரிந்ததும்... தெரியாததும்... Empty Re: நெய்... தெரிந்ததும்... தெரியாததும்...

Post by ஜாஹீதாபானு Tue Jan 31, 2017 3:17 pm

பகிர்வுக்கு நன்றிமா புன்னகை


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

நெய்... தெரிந்ததும்... தெரியாததும்... Empty Re: நெய்... தெரிந்ததும்... தெரியாததும்...

Post by krishnaamma Tue Jan 31, 2017 10:28 pm

M.Jagadeesan wrote:நெய்  காய்ச்சும்போது  முருங்கை இலையைப் போட்டுக்  காய்ச்சவேண்டும் . கடைசியில் நெய்யை வடித்தபின்பு , மீதியிருக்கும் மண்டியில் சோற்றைப் பிசைந்து சாப்பிட அபார சுவை !

இப்போது நல்ல நெய் கிடைப்பது அரிதாக உள்ளது . GRB கூட சரியில்லை .

GRB சூப்பர் ஆக இருக்குமே ஐயா............ஆனால் எதுவானாலும் பாக்கெட் திறக்கும்போது உள்ள மணம் கடைசிவரை இருக்காது தான் புன்னகை அதனால் தான் நாங்கள் வெண்ணை வாங்கி ( எதுவானாலும் ) தேவையான போது மட்டுமே கொஞ்சம் 'கட்' செய்து நெய் காய்ச்சிக் கொள்வோம், எனவே எப்பவும் மணமான நெய் கிடைக்கும். ஜாலி ஜாலி ஜாலி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நெய்... தெரிந்ததும்... தெரியாததும்... Empty Re: நெய்... தெரிந்ததும்... தெரியாததும்...

Post by krishnaamma Tue Jan 31, 2017 10:33 pm

T.N.Balasubramanian wrote:
M.Jagadeesan wrote:நெய்  காய்ச்சும்போது  முருங்கை இலையைப் போட்டுக்  காய்ச்சவேண்டும் . கடைசியில் நெய்யை வடித்தபின்பு , மீதியிருக்கும் மண்டியில் சோற்றைப் பிசைந்து சாப்பிட அபார சுவை !

இப்போது நல்ல நெய் கிடைப்பது அரிதாக உள்ளது . GRB கூட சரியில்லை .
மேற்கோள் செய்த பதிவு: 1232917

செய்முறை சரி, ஆனால் மீதி இருக்கும் மண்டி (கசண்டு)சாப்பிடுவதால் புற்றுநோய்  வருகிறதாமே.
ஆவின் வெண்ணெய் சரி இல்லையா ? நாங்கள் அதைத்தான் வாங்குகிறோம் 

ரமணியன்

ஆவின் வெண்ணை சூப்பர் ஐயா, மேலே நான் சொன்னது போல அப்பஅப்போ கொஞ்சம் கொஞ்சமாய் எடுத்து காய்ச்சினால் எப்பவும் மணமான நெய் கிடைக்கும் ஐயா புன்னகை..............இப்படி செய்வதால், கசண்டு என்பதே நிறைய வராது ..ஆனாலும் என்றாவது ஒருநாள் சாப்பிடுவதால் புற்றுநோய் வராது ஐயா புன்னகை

எங்க அம்மா அரிசி மாவு கூட போட்டு வறுத்து தருவார்கள்....கோதுமை மாவு வறுக்கும்போது, அதை வறுத்து தனியே எடுத்து வைத்து விட்டு, வாணலி இல் கொஞ்சம் தண்ணீர் விட்டு, வெல்லம் போட்டு, அது கரைந்ததும் வறுத்த கோதுமை மாவு, துருவிய தேங்காய் மட்டும் ஏலப் பொடி போட்டு , கிளறி உருட்டித் தருவார்கள்......சுவை அபாரமாக இருக்கும் ஜாலி ஜாலி ஜாலி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நெய்... தெரிந்ததும்... தெரியாததும்... Empty Re: நெய்... தெரிந்ததும்... தெரியாததும்...

Post by krishnaamma Tue Jan 31, 2017 10:35 pm

M.Jagadeesan wrote:கிராமத்தில் பசுமாடு வைத்திருப்பவர்கள் வெண்ணெய் எடுத்து நெய் காய்சசி விற்பார்கள் .
அதன் சுவையும் , மணமும்  கடைகளில் விற்கும் நெய்யில் கிடைப்பதில்லை .

ஆவின் நெய் சரியில்லை என்றுதான் உதய கிருஷ்ணாவுக்கு மாறினோம் ;அதுவும் சரியில்லை என்றுதான் NILGRIS நெய்யுக்கு மாறினோம்;அதுவும் பிடிக்கவில்லை என்றுதான் தற்போது GRB பயன்படுத்துகிறோம் .

என்றோ ஒருநாள் கசண்டுவில் சோற்றைப் பிசைந்து சாப்பிடும்போது புற்றுநோய் வராது . புற்று நோய்க்கு மூல காரணமே புகையிலையைப் பயன்படுத்துவதுதான் .
மேற்கோள் செய்த பதிவு: 1232922

ஆமாம் ஐயா, என்றோ ஒருநாள் கசண்டு சாப்பிட்டால் ஒன்றும் ஆகாது..........ராஜஸ்தானில் மலாய் எடுத்து வைத்து நெய் காய்ச்சுவார்கள்..............அதில் நிறைய கசண்டு ( பாக்கு போல வரும் ) அதை சப்பாத்திக்கு தொட்டுக்கொண்டு சாப்பிடுவார்கள்.......அவர்களுக்கு ஒன்றும் நோய் வந்தது போல தெரியவில்லை புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நெய்... தெரிந்ததும்... தெரியாததும்... Empty Re: நெய்... தெரிந்ததும்... தெரியாததும்...

Post by krishnaamma Tue Jan 31, 2017 10:38 pm

ஜாஹீதாபானு wrote:பகிர்வுக்கு நன்றிமா புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1232926

நன்றி பானு புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நெய்... தெரிந்ததும்... தெரியாததும்... Empty Re: நெய்... தெரிந்ததும்... தெரியாததும்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum