ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:55 pm

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Today at 12:23 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 11:27 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 5:52 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:41 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:58 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:37 am

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Today at 4:31 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:16 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 3:56 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:36 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:24 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:17 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:10 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:31 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 2:00 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:40 am

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 1:06 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 8:44 pm

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 8:41 pm

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 9:57 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 9:47 am

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 7:18 am

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 2:19 am

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 1:58 am

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 1:23 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 1:16 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Tue Oct 01, 2024 10:26 pm

» தமிழ் அன்னை
by dhilipdsp Tue Oct 01, 2024 3:12 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 12:18 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 12:16 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 12:14 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 12:12 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 12:10 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 12:09 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 12:08 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 12:07 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 12:07 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 12:04 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 12:03 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 11:59 am

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 11:57 am

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 11:56 am

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 11:55 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

வரலாற்றை எழுதினார்.. வரலாறாய் நின்றார் - சாண்டில்யன் பிறந்ததின பகிர்வு

Go down

 வரலாற்றை எழுதினார்.. வரலாறாய் நின்றார் - சாண்டில்யன் பிறந்ததின பகிர்வு Empty வரலாற்றை எழுதினார்.. வரலாறாய் நின்றார் - சாண்டில்யன் பிறந்ததின பகிர்வு

Post by ayyasamy ram Thu Nov 10, 2016 11:06 pm

வரலாற்று நாவல்களின் தன்மையை வடிவமைத்த எழுத்தாளர்
சாண்டில்யன் அவர்களின் பிறந்த நாள் இன்று.
-
 வரலாற்றை எழுதினார்.. வரலாறாய் நின்றார் - சாண்டில்யன் பிறந்ததின பகிர்வு WJWsvJwrR9OAHcxL2crx+download
-
நாகப்பட்டினம் மாவட்டம்,  திருஇந்தளூரில் 1910 -ஆம் ஆண்டு
நவம்பர் 10 -ஆம் தேதி பிறந்தார் சாண்டில்யன்.
அவரது இயற்பெயர் பாஷ்யம்.  பெற்றோர் பெயர் ,
சடகோபன் அய்யங்கார், பூங்கோதைவல்லி.

திருச்சி, செயின்ட் ஜோசப் கல்லூரியில் படித்த  
சாண்டில்யனுக்கு 1929 -ல் திருமணம் நடந்தது. மனைவி
பெயர்  ரங்கநாயகி.  சில வருடங்களில் குடும்பத்தோடு
சென்னைக்கு வந்து தி.நகரில் குடியேறினார்.

சென்னையில் கல்கி, வெ.சாமிநாத சர்மா போன்ற
ஆளுமைகளின் நட்பு கிடைத்தது. அந்த நட்பு சாண்டில்யனின்
வாழ்க்கையை மாற்றியது.  அவ்வப்போது சிறு சிறு கட்டுரைகள்
எழுதிக் கொண்டிருந்த சாண்டில்யனை 'திராவிடன்'
பத்திரிக்கையில் பணியாற்றிய  நண்பர் சுப்பிரமணியன்  
சிறுகதை எழுதத் தூண்டினார்.  

சாண்டில்யன் எழுதிய முதல் சிறுகதை 'சாந்தசீலன்'. அந்தச்
சிறுகதையைப் படித்த பலரும் பாராட்டினார்கள். கதையைப்
படித்த எழுத்தாளர் கல்கி  எழுத்து நடையும்., சிறுகதையின்
யுத்தியும் வித்தியாசமாக இருந்ததால்   ஆனந்த விகடனில்  
சிறுகதைகள் எழுதும் வாய்ப்பை அளித்தார்

. 'கண்ணம்மாவின் காதலி' , 'அதிர்ஷ்டம்' போன்ற சிறுகதைகள்
ஆனந்த விகடனில் வெளிவந்தன. எழுத்தார்வம் அதீதமாக,
அது சார்ந்த துறையிலேயே பயணிக்க விரும்பிய சாண்டில்யன்,
சுதேசமித்திரன் இதழில் சேர்ந்தார் .  

1935 முதல்  1945 வரை  நிருபராகவும், உதவி ஆசிரியராகவும் பணி
புரிந்தார். சென்னை உயர்நீதிமன்ற செய்திகளை எழுதும் பணி
சாண்டில்யனுக்கு கொடுக்கப்பட்டது. 1937 ஆம் ஆண்டில்
மகாத்மா காந்தியைப் பேட்டி எடுத்தப் பெருமையும்
சாண்டில்யனுக்கு உண்டு.
-
 வரலாற்றை எழுதினார்.. வரலாறாய் நின்றார் - சாண்டில்யன் பிறந்ததின பகிர்வு ILQfM0OVTjSrgJiReRA9+0001_1


Last edited by ayyasamy ram on Thu Nov 10, 2016 11:11 pm; edited 1 time in total
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84187
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 வரலாற்றை எழுதினார்.. வரலாறாய் நின்றார் - சாண்டில்யன் பிறந்ததின பகிர்வு Empty Re: வரலாற்றை எழுதினார்.. வரலாறாய் நின்றார் - சாண்டில்யன் பிறந்ததின பகிர்வு

Post by ayyasamy ram Thu Nov 10, 2016 11:08 pm

 வரலாற்றை எழுதினார்.. வரலாறாய் நின்றார் - சாண்டில்யன் பிறந்ததின பகிர்வு CisvL72vQOar0YmjjMF0+kadal-pura_14055
--

சாண்டில்யன்

எழுத்துத் துறையில் இமயம் தொட்ட சாண்டில்யன்,  
அதன் தொடர்ச்சியாக திரைப்படத் துறையிலும் கால்பதித்தார்.
'அம்மா' 'தியாகய்யா' 'என் வீடு' போன்ற திரைப்படங்களுக்கு
திரைக்கதைகள் எழுதினார்.

சினிமா சார்ந்த தனது அனுபவங்களை 'சினிமா வளர்ந்த கதை'
என்ற பெயரில் எழுதவும் செய்தார்.  தொடக்கத்தில் சமூகக்
கதைகளையும், தேசிய உணர்வு, விடுதலைப் போராட்டம் சார்ந்த
கதைகளையும் எழுதிய சாண்டில்யன் காலப்போக்கில் சரித்திர
நாவல்களின் பக்கம் நகர்ந்தார்.  அவரது சரித்திர கதைகள்
பல்வேறு இதழ்களில் வெளிவரத் துவங்கின.

48 வரலாற்று புதினங்களை எழுதியிருக்கிறார் சாண்டில்யன்.
இதுதவிர, 'புரட்சி பெண்' என்ற அரசியல் புதினத்தையும்,
நிறைய சிறுகதைகளும் கூட  எழுதியுள்ளார். 'கடல் புறா',
'யவன ராணி' 'கன்னி மாடம்','ராஜ திலகம்', 'ராஜ பேரிகை'
போன்ற நூல்கள் இப்பொழுதும் விற்பனையில் முன்னணியில்
உள்ளன.  

சாண்டில்யன்

சாண்டில்யன் எழுத்தின் சிறப்பே, காட்சி நிகழ்விடத்தைப் பற்றிய
விவரணை தான். வாசகனை அந்த சூழலுக்கு உள்ளேயே இழுத்துச்
செல்லும் சக்தி மிகுந்த எழுத்து அவருடையது.

கடல் புறாவின் முதல் பாகத்தின் இறுதி அத்தியாயத்தில் வரும்
சாண்டில்யனின் வரிகள் இவை..,

'அந்தத் தூரத்திலும் முரட்டுப் புரவிகளின் கனைப்புக் கேட்டது
அவள் காதுகளுக்கு. காவற் படகுகள் பல சங்கமப் பகுதியில்
எங்கும் விரைந்து கொண்டிருந்தன. கப்பல் செல்ல முற்பட்டு
விட்டதைக் கண்ட காவற்படகுகளின் எரியம்புகள் அந்தக்
கப்பலின் மீது சரமாரியாக வரத் தொடங்கின.

அவளைச் சுற்றிலும் பறந்தன. அவற்றைச் சிறிதும் அலட்சியம்
செய்யாமல் கடற்கரையைப் பார்த்துக் கொண்டே நின்றாள்
கடாரத்தின் இளவரசி'.

இந்த வரிகளைக் கடக்கும்போது, ஒரு போர் வீரனாக கடாரத்தின்
இளவரசியோடு களம் காணும் உணர்வு வாசகனுக்கு ஏற்படும்.
-
------------------------------------------
விகடன்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84187
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum