ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

'திருக்குறளை வள்ளுவர் எழுதவில்லை. ஆனால்...?' - வலுக்கும் வாதம் எதிர்வாதம்

+2
M.Jagadeesan
ayyasamy ram
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

'திருக்குறளை வள்ளுவர் எழுதவில்லை. ஆனால்...?' - வலுக்கும் வாதம் எதிர்வாதம் Empty 'திருக்குறளை வள்ளுவர் எழுதவில்லை. ஆனால்...?' - வலுக்கும் வாதம் எதிர்வாதம்

Post by ayyasamy ram Tue Nov 08, 2016 1:13 pm

'திருக்குறளை வள்ளுவர் எழுதவில்லை. ஆனால்...?' - வலுக்கும் வாதம் எதிர்வாதம் PYPySwT16p2147greQge+valluvar1_17034
-

திருக்குறள் தொடர்பாக முனைவர். துளசி ராமசாமி
வெளியிடும் கருத்துகள் ஆய்வு நோக்கில் மிக
முக்கியமானவை.

அதிலும், ' நமது பண்பாடு குறித்த தரவுகளைச்
சேகரிப்பதில் வெளிநாட்டவர்களிடையே ஏராளமான
கோளாறுகள் இருக்கின்றன.

நம்முடைய அணுகுமுறையிலும் சிக்கல்கள் இருக்கின்றன'
என்கிறார் அவர்.

' சமண முனிவர்கள் எழுதியதுதான் திருக்குறள்' என்ற
புத்தகத்தின் மூலம் கவனத்தை ஈர்த்தவர் முனைவர்.
துளசி ராமசாமி. உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில்
பல ஆண்டுகாலம் மூத்த ஆய்வாளராக பணியாற்றியவர்.

இதுவரையில், 25-க்கும் மேற்பட்ட புத்தகங்களை
எழுதியிருக்கிறார். தற்போது ‘களப்பிரர் காலம் இருண்ட
காலமா? இருட்டடிப்புச் செய்த காலமா?’ என்ற தலைப்பில்
புத்தகம் எழுதி வருகிறார்.

இந்நிலையில், பழந்தமிழர் குறித்த ஆய்வில் நிகழும்
சிக்கல்கள் குறித்து விரிவாகப் பேசியிருக்கிறார்.

" ஆய்வுப் பணிகளில் ஈடுபடும்போது தரவுகள் சரியாக
இருந்தால்தான், ஆய்வில் எந்த முறையைப் பயன்
படுத்தினாலும் மிகச் சரியானதாக இருக்கும். நம்மைப்
பற்றிய ஆய்வில் ஈடுபடும் வெளிநாட்டினருக்கும் நமக்கும்
உள்ள வேறுபாட்டைப் பார்த்தேன்.

அவர்கள் சேகரிக்கும் தரவுகளில் கோளாறு இருக்கிறது.
அதனால் அவர்கள் எந்த அளவில் நம்மைப் பற்றிய
ஆய்வில் ஈடுபட்டாலும், அது முழுமையாக வடிவத்துக்கு
வருவதில்லை.

ஆனால், இந்த நாட்டைச் சேர்ந்தவர்களாக நாம்
இருப்பதாலும் பண்பாட்டைப் பற்றி முழுமையாக அறிந்து
வைத்திருப்பதாலும் தரவுகளைச் சரியாகச் சொல்கிறோம்.

ஆனால், நம்முடைய அணுகுமுறையில் கோளாறு
இருக்கிறது" என்கிறார் துளசி ராமசாமி.
-
----------------------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

'திருக்குறளை வள்ளுவர் எழுதவில்லை. ஆனால்...?' - வலுக்கும் வாதம் எதிர்வாதம் Empty Re: 'திருக்குறளை வள்ளுவர் எழுதவில்லை. ஆனால்...?' - வலுக்கும் வாதம் எதிர்வாதம்

Post by ayyasamy ram Tue Nov 08, 2016 1:13 pm

'திருக்குறளை வள்ளுவர் எழுதவில்லை. ஆனால்...?' - வலுக்கும் வாதம் எதிர்வாதம் TCFYZchTsevd23LRR0tg+thulasi_17284
-
துளசி ராமசாமி
---------------------------


தொடர்ந்து, " நமக்குக் கிடைக்கும் தரவுகளைச் சரியாகச்
செப்பனிட்டுக் கொடுத்தால் ஆய்வு முடிவுகள் சரியாக வரும்.
படிக்கும் காலத்தில் திருக்குறளைப் படித்திருக்கிறோம்.
அப்போது தேர்வுக்காக குறள்களை மனப்பாடம் செய்தோம்.

பிற்காலத்தில், பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு,
அதே திருக்குறளை திரும்ப திரும்பப் படித்தேன். திரும்பத்
திரும்ப ஒரே கருத்து சொல்லப்படுகிறதே என்ற எண்ணம்
இதைப் படிப்பவர்களுக்கு ஏற்படும்.

ஆய்வில் ஈடுபடுபவர்கள் ஐந்தாறு பத்திகளைப் படித்தாலே,
ஒரு கருதுகோளுக்கு வருவார்கள். அதன்படியே தரவுகளைச்
சேகரிப்பார்கள். அவர்களது ஆய்வோடு தரவுகளும் பொருந்தி
வந்தால், கருதுகோள் நிலை கொள்ளும்.

இல்லாவிட்டால், 'நம்மை மாற்றிக் கொள்ள வேண்டும்' என்ற
எண்ணம் வரும்.  

அப்படித்தான், ' திருக்குறளை ஒரே நபர் எழுதவில்லை' என்ற
கருதுகோளுக்குள் என்னால் வர முடிந்தது.

1330 குறளை எழுதியவருக்கு 133 அடி உயரத்தில் பிரமாண்ட
சிலை வைத்துவிட்டோம். ' திருவள்ளுவர் இல்லை' என்று
நான் சொல்லவில்லை. அதை எழுதிய பலர் யார் என்பதுதான்
மிக முக்கியமான கேள்வி.
-
எனக்கு முன்னால் பல பேராசிரியர்கள், ஆசிரியர்கள் என
பலரும் வழிவழியாக சொல்லி வந்த ஒரு கருத்து, '
இது சமண மதத்தைச் சார்ந்தது. அதன் கொள்கைகள்
குறளில் இடம் பெறுகின்றன' என்பதுதான்.
-
என்னுடைய ஆய்வின் முடிவுகளை வெளியில் சொல்கிறேன்.
மற்றவர்கள் சொல்வதற்கு மறந்துவிட்டார்களா என்றும்
தெரியவில்லை. திரு.வி.கவும், ' சமண தத்துவம் உள்ளது'
என்கிறார். தரவுகளை வைத்துக் கொண்டுதான் இதைச்
சொல்கிறோம். என்னுடைய கூற்றை மறுக்க வேண்டும்
என்றால், உரிய தரவுகளோடு விவாதம் நடத்த வேண்டும்.
-
ஒரு பேராசிரியர் என்னிடம், 'நீங்கள் சொல்வதை என்னால்,
ஏற்றுக் கொள்ள முடியாது' என்று கோபப்பட்டார். '
தரவுகள்தான் ஆய்வுகளைப் பேச வேண்டும். இது பட்டிமன்றம்
கிடையாது. அதையெல்லாம் உள்வாங்கிக் கொண்டுதான்
எழுதினேன்' என அவருக்கு பதில் அளித்தேன்.
-
------------------------------------------
-


Last edited by ayyasamy ram on Tue Nov 08, 2016 1:18 pm; edited 2 times in total
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

'திருக்குறளை வள்ளுவர் எழுதவில்லை. ஆனால்...?' - வலுக்கும் வாதம் எதிர்வாதம் Empty Re: 'திருக்குறளை வள்ளுவர் எழுதவில்லை. ஆனால்...?' - வலுக்கும் வாதம் எதிர்வாதம்

Post by ayyasamy ram Tue Nov 08, 2016 1:15 pm


-
திருக்குறளை எழுதியது சமணர்கள் என்றால் எப்படி?
தமிழர்களும் சமண மதத்தைத் தழுவிருக்கிறார்கள்.
சமண மதத்தவர் கி.மு. 3-ம் நூற்றாண்டில் மதத்தைப்
பரப்புவதற்காக இங்கு வந்தவர்கள்.

அவர்கள் தமிழை வளர்க்க வந்தவர்கள் அல்ல. ஆனால்,
தமிழில் இலக்கண நூல்களை எழுதியிருக்கிறார்கள்.
இவை அனைத்தும் தரவுகள் மூலம் கிடைத்தன. சமண
முனிவர்கள் எழுதியதுதான் திருக்குறள்.

சென்னையில் நடந்த ஒரு கூட்டத்தில், ' சங்க இலக்கியத்தின்
ஆசிரியர்கள் பெயரைச் சொல்ல முடிகிறதே...அதேபோல்,
திருக்குறளை எழுதிய பலர் யார் என்று சொல்லுங்கள்' என
ஒருவர் கேட்டார்.

அந்த இடத்தில் மழுப்பலாகத்தான் பதில் சொன்னேன்.
எனக்குப் பதில் தெரியவில்லை. ' சமண முனிவர்கள் என்று
சொல்கிறீர்களே, அங்கே அறத்துப்பால் வருகிறது.
அவர்கள் எழுதியிருப்பார்களா?' எனவும் ஒருவர் கேட்டார்.

' அறத்துப் பால், பொருட்பால், இன்பத்துப் பால் என்று
பார்ப்பதைவிடவும், அனைத்து குறள்களிலும் புத்திமதி
சொல்வது போலவேதான் வருகிறது. வேறு எதுவும் இல்லை'
என்று சொன்னேன்.

இன்னும் முழுமையான ஆய்வுகளுக்குள் நாம் செல்ல
வேண்டியுள்ளது. 2008-ம் ஆண்டில் இருந்து முழுக்க சங்க
இலக்கியங்களைப் படித்தேன். பின்னர், அது குறித்து
முழுமையான ஆய்வில் ஈடுபட்டபோதுதான்,
' அவை முழுக்க நாட்டுப்புறப் பாடல்களே' என்ற
முடிவுக்கு வர முடிந்தது.
-
------------------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

'திருக்குறளை வள்ளுவர் எழுதவில்லை. ஆனால்...?' - வலுக்கும் வாதம் எதிர்வாதம் Empty Re: 'திருக்குறளை வள்ளுவர் எழுதவில்லை. ஆனால்...?' - வலுக்கும் வாதம் எதிர்வாதம்

Post by ayyasamy ram Tue Nov 08, 2016 1:16 pm

களப்பிரர் காலம் தமிழ்நாட்டின் ஒளிர்ந்த காலம் என்றும்
எழுதினேன். ' செழியன் என்பது பாண்டியன் வெளியிட்ட
நாணயம் அல்ல. வணிகர்கள் வெளியிட்ட நாணயம்தான்'
என்று எழுதினேன். என்னுடைய தரவுகளில் முழு
நம்பிக்கை வைத்திருக்கிறேன். நமது நாட்டில் ஆய்வுகள்
வளர வேண்டும். விமர்சனக் கலை வளர வேண்டும்.

முன்னத்தி ஏர் பிடித்து இழுக்க வேண்டும். இயக்கம்
சார்ந்தவர்களோ, பேராசிரியர்கள் சொன்னதற்காக சோரம்
போய்விடக் கூடாது" என்கிறார் முனைவர்.துளசி ராமசாமி.
-
---------------------
'திருக்குறளை வள்ளுவர் எழுதவில்லை. ஆனால்...?' - வலுக்கும் வாதம் எதிர்வாதம் J8SDz3s5SieuYIZpBchN+haja_17474
-
காயிதே மில்லத் கல்லூரியின் தமிழ்த்துறை தலைவர் முனைவர்.ஹாஜாகனி
-------------------------

திருக்குறள் சர்ச்சை குறித்து, காயிதே மில்லத் கல்லூரியின்
தமிழ்த்துறை தலைவர் முனைவர்.ஹாஜாகனியிடம்
பேசினோம். " திருக்குறள் குறித்தும் திருவள்ளுவர்
குறித்தும் காலம்காலமாக பல சர்ச்சைகள் எழுப்பப்பட்டு
வருகின்றன. ' அவர் மயிலாப்பூரில் பிறந்ததார்;
வாசுகி அவருடைய மனைவி' என்பதற்கெல்லாம் எவ்வித
ஆதாரமும் இல்லை.

திருக்குறள் மட்டுமே உண்மையானது. 'புலால் மறுத்தல்,
அறத்தைப் பேசுதல் போன்றவற்றால் அவை சமண
முனிவர்களால் எழுதப்பட்டது' என்கிறார்கள்.

முனைவர்.துளசி ராமசாமி எந்த ஆதாரத்தின் அடிப்படையில்
பேசுகிறார் என்று தெரியவில்லை. கண்ணதாசன்கூட
, ' இடைச்செருகலாக சிலவற்றை குறளில் சேர்த்துள்ளனர்'
என்கிறார்.

மனித குலத்திற்கு வழிகாட்டும் அறம், பொருள், இன்பம்,
வீடு ஆகியவை குறித்து வள்ளுவம் பேசுகிறது. நிலைத்த
புகழ்பெற்ற நூல்கள் மட்டுமே இந்த நான்கையும் பேசும்.

திருக்குறளை எழுதியது ஒருவரா? பலரா என சிலர் கேள்வி
எழுப்புகின்றனர். உதாரணமாக, ஐங்குறுநூறு நூலை
எடுத்துக் கொண்டால், பல புலவர்கள் சேர்ந்து பாடிய
பாடல்களைக் காணலாம். ஒவ்வொருவருக்கும் ஒருவிதமான
எழுத்து நடை இருக்கும்.

ஆனால், வள்ளுவத்தைப் பொறுத்தவரையில் எல்லா
இடங்களிலும் ஒரே மாதிரியான ஆழம் இருக்கிறது.
பலர் சேர்ந்து எழுதியிருந்தால், இப்படியொரு ஆழமான
தொனி அமைந்திருக்காது. அதேபோல், திருக்குறளுக்கு
உதாரணம் காட்டுவதற்கு, குறளைத் தவிர வேறு
ஒரு நூல் இல்லை. தமிழ், தமிழ்நாடு என்ற வார்த்தைகளும்
குறளில் இல்லை.

குறிப்பிட்ட மதம், இனத்திற்காக வள்ளுவம் எழுதப்படவில்லை.
பல பேர் சேர்ந்து எழுதியிருந்தால் குறுகிய வட்டத்திற்குள்
அடைபட்டிருக்கும். சிலப்பதிகாரத்தை எழுதிய
இளங்கோவடிகள் சமண சமயத்தைச் சேர்ந்தவர். ஆனால்,
சிலப்பதிகாரத்தில் சமணக் கருத்துக்கள் இல்லை.

அதனாலேயே, குடிமக்கள் காப்பியம் எனப் போற்றப்படுகிறது.
குண்டலகேசியில் புத்த மதக் கருத்துக்கள் தூக்கலாக
இருந்தாலும், சிலப்பதிகாரம் அளவுக்குப் பெயர் பெறவில்லை.

திருக்குறள் ஒரு நல்ல இலக்கியம். சமண முனிவர்களால்
எழுதப்பட்டிருந்தால், சமணர்களே திருக்குறளைப் போற்றி
பாதுகாத்திருப்பார்களே?" என்கிறார் விரிவாக.
-
--------------------------------------
-ஆ.விஜயானந்த்
நன்றி- விகடன்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

'திருக்குறளை வள்ளுவர் எழுதவில்லை. ஆனால்...?' - வலுக்கும் வாதம் எதிர்வாதம் Empty Re: 'திருக்குறளை வள்ளுவர் எழுதவில்லை. ஆனால்...?' - வலுக்கும் வாதம் எதிர்வாதம்

Post by M.Jagadeesan Tue Nov 08, 2016 1:37 pm

சுய விளம்பரத்திற்காக துளசி ராமசாமி இவ்வாறு செய்கிறார் ; நம்முடைய சுனா சாமி போல !


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

'திருக்குறளை வள்ளுவர் எழுதவில்லை. ஆனால்...?' - வலுக்கும் வாதம் எதிர்வாதம் Empty Re: 'திருக்குறளை வள்ளுவர் எழுதவில்லை. ஆனால்...?' - வலுக்கும் வாதம் எதிர்வாதம்

Post by T.N.Balasubramanian Tue Nov 08, 2016 2:09 pm

இதுவொரு புது சர்ச்சையா ?

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

'திருக்குறளை வள்ளுவர் எழுதவில்லை. ஆனால்...?' - வலுக்கும் வாதம் எதிர்வாதம் Empty Re: 'திருக்குறளை வள்ளுவர் எழுதவில்லை. ஆனால்...?' - வலுக்கும் வாதம் எதிர்வாதம்

Post by முனைவர் ம.ரமேஷ் Tue Nov 08, 2016 2:25 pm

எனக்குக்கூட சந்தேகம் இருக்கிறது. குறிப்பறிதல் என்று இரண்டு முறை அதிகாரத்தின் தலைப்பாக (71, 110) வருகிறது. 1000 மோ 1300 ஓ இருக்கலாம் அதென்ன சொச்சம் 30 என்றுதான் தெரியவில்லை.


http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

'திருக்குறளை வள்ளுவர் எழுதவில்லை. ஆனால்...?' - வலுக்கும் வாதம் எதிர்வாதம் Empty Re: 'திருக்குறளை வள்ளுவர் எழுதவில்லை. ஆனால்...?' - வலுக்கும் வாதம் எதிர்வாதம்

Post by ayyasamy ram Tue Nov 08, 2016 4:10 pm

துளசி ராமசாமி
---
விக்கிபீடியாவில் வாசித்தது
-----------------------------------------------

பெற்றோர் துளசிராமு–சீனியம்மாள்.
தூத்துக்குடி மாவட்டத்தில் மேலக்கல்லூரணி என்னும் சிற்றூரில்
1942இல் பிறந்தவர்.

பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் 1961-62இல்
புகுமுக வகுப்பும் மதுரை தியாகராசர் கல்லூரியில் 1963-66இல்
இளங் கலையும் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில்
1966-68இல் முதுகலையும் கற்றவர்.
-
மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில்
பேரா.கோ.விசய வேணுகோபால் அவர்களிடம் ‘தமிழ் யட்சகானம்’
என்ற தலைப்பில் ஆய்வுசெய்து 1984இல் முனைவர்ப் பட்டம் பெற்றவர்.
-

இடைப்பட்ட காலத்தில் திருநெல்வேலி ம.தி.தா இந்துக் கல்லூரியிலும்
பெங்களூர் நிஜலிங்கப்பா கல்லூரியிலும் தமிழ் விரிவுரையாளராகப்
பணியாற்றியவர்.

பின்னர் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் முதுநிலை ஆய்வாளராகப்
பணிபுரிந்து பல்வேறு ஆய்வுத் திட்டப்பணிகளை நிறைவு செய்தவர்.
=

25க்கும் மேற்பட்ட ஆய்வு நூற்களையும் 150க்கும் மேற்பட்ட
ஆய்வுக்கட்டுரைகளைகளையும் எழுதிவழங்கியவர்.

நாட்டுப்புறவியலில் ஈடுபாடு கொண்ட இவர் அண்மைக்காலத்தில்
பழந்தமிழ் இலக்கியங்களில் ஆய்வு செய்து வருகிறார்.

நெல்லைமாவட்ட நாட்டுப்புறத் தெய்வங்கள்,
மங்கலதேவி கண்ணகி கோட்டம் ஆகியன இவர் நிறைவு செய்த
ஆய்வுத்திட்டப் பணிகள்.

சமணமுனிவர்கள் எழுதியது திருக்குறள், பழந்தமிழ் இலக்கியங்கள்
நாட்டுப்புறப் பாடல்களே ஆகியன இவரது படைப்புகளில் முதன்மையானவை.


‘களப்பிரர்காலம் இருண்ட காலமா, இருட்டடிப்புச் செய்த காலமா’
என்ற நூலை எழுதி வருபவர்.

விழிகள் என்னும் பதிப்பகத்தை நிறுவி தன்னுடைய நூல்களைத் தானே
வெளியிட்டு வருகிறார்.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

'திருக்குறளை வள்ளுவர் எழுதவில்லை. ஆனால்...?' - வலுக்கும் வாதம் எதிர்வாதம் Empty Re: 'திருக்குறளை வள்ளுவர் எழுதவில்லை. ஆனால்...?' - வலுக்கும் வாதம் எதிர்வாதம்

Post by M.Jagadeesan Wed Nov 09, 2016 12:19 pm

திருவள்ளுவரையும் , திருக்குறளையும் குறை காணாமல் இருப்பதே , தமிழ்மொழிக்கு நாம் செய்யும் தொண்டு .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

'திருக்குறளை வள்ளுவர் எழுதவில்லை. ஆனால்...?' - வலுக்கும் வாதம் எதிர்வாதம் Empty Re: 'திருக்குறளை வள்ளுவர் எழுதவில்லை. ஆனால்...?' - வலுக்கும் வாதம் எதிர்வாதம்

Post by பாலாஜி Wed Nov 09, 2016 1:17 pm

M.Jagadeesan wrote:திருவள்ளுவரையும் , திருக்குறளையும் குறை காணாமல் இருப்பதே , தமிழ்மொழிக்கு நாம் செய்யும் தொண்டு .
மேற்கோள் செய்த பதிவு: 1226538

ஆமோதித்தல் ஆமோதித்தல்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

'திருக்குறளை வள்ளுவர் எழுதவில்லை. ஆனால்...?' - வலுக்கும் வாதம் எதிர்வாதம் Empty Re: 'திருக்குறளை வள்ளுவர் எழுதவில்லை. ஆனால்...?' - வலுக்கும் வாதம் எதிர்வாதம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum