Latest topics
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்by heezulia Today at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm
» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
prajai |
| |||
ஜாஹீதாபானு |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
prajai |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
காஷ்மீர் எல்லையில் கொல்லப்பட்ட இந்திய வீரரின் இறுதிச்சடங்கு
4 posters
Page 1 of 1
காஷ்மீர் எல்லையில் கொல்லப்பட்ட இந்திய வீரரின் இறுதிச்சடங்கு
![காஷ்மீர் எல்லையில் கொல்லப்பட்ட இந்திய வீரரின் இறுதிச்சடங்கு XXSEE0jdR5GNlyUNax6C+201610310258055567_The-funeral-of-slain-soldierTook-place-with-full-state_SECVPF](https://www.filepicker.io/api/file/xXSEE0jdR5GNlyUNax6C+201610310258055567_The-funeral-of-slain-soldierTook-place-with-full-state_SECVPF.gif)
---
குருஷேத்ரா,
காஷ்மீர் எல்லையில் கொல்லப்பட்ட இந்திய வீரரின் இறுதிச்சடங்கு, சொந்த ஊரில் முழு அரசு மரியாதையுடன் நடந்தது. இந்த சம்பவத்துக்கு, சரியான பதிலடி தரப்படும் என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்திய வீரரை கொன்றனர்
காஷ்மீரில் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பதுங்கி முகாம்கள் அமைத்து, இந்திய நகரங்களில் தாக்குதல் நடத்த சதிசெய்து கொண்டிருந்த பயங்கரவாதிகள் மீது கடந்த மாதம் 28-ந்தேதி நள்ளிரவு, இந்திய ராணுவம் துல்லியமான அதிரடி தாக்குதல் நடத்தியது. இதில் 40-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொன்று குவிக்கப்பட்டதால் பாகிஸ்தான் ஆத்திரம் அடைந்துள்ளது. இதன் காரணமாக எல்லையில் அத்துமீறிய தாக்குதல்களை நடத்தி வருகிறது.
இந்த நிலையில் தீபாவளிக்கு முந்தியநாள் (28-ந்தேதி) இரவு, காஷ்மீரில் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியை பாகிஸ்தான் படையினர் உதவியுடன் பயங்கரவாதிகள் தாண்டி வந்து, தாக்குதல் நடத்தி இந்திய வீரர் மன்தீப் சிங்கை (வயது 30) சுட்டுக்கொன்றனர். அத்துடன் அவரது உடலை துண்டு, துண்டாக வெட்டி சிதைத்து, குப்வாரா மாவட்டத்தின் மாசீல் செக்டாரில் வீசினர். இது நாடு முழுவதும் மிகுந்த துயரத்தை ஏற்படுத்தி உள்ளது.
மத்திய அரசு கண்டனம்
இந்த செயலுக்கு மத்திய அரசின் சார்பில் உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கடும் கண்டனம் தெரிவித்தார். அவர், “இத்தகைய கோழைத்தனமான செயல்களால் நாம் அடிபணிந்து விடமாட்டோம். நமது படையினர் சரியான பதிலடி தந்து வருகின்றனர். நமது தேசம் என்றைக்கும் தலைநிமிர்ந்து நிற்கும்” என கூறினார்.
தகவல், ஒலிபரப்புத்துறை மந்திரி வெங்கையா நாயுடு, பாகிஸ்தானுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். “பாகிஸ்தான் என்ன செயல்களில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறதோ, அதெல்லாம் அந்த நாட்டுக்கு எதிராக அப்படியே திரும்பும்” என எச்சரித்தார்.
உள்துறை ராஜாங்க மந்திரி ஜிதேந்திர சிங், “மன்தீப் சிங் உடலை சிதைத்து வீசியது கொடூரமான செயல்” என கூறி கண்டனம் தெரிவித்தார். முன்னாள் மத்திய மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மணிஷ் திவாரி, “இது வக்கிரமான செயல்” என வேதனை வெளியிட்டார்.
வீரர் மன்தீப் சிங்கின் பின்னணி
எல்லையில் நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்துள்ள வீரர் மன்தீப் சிங், அரியானா மாநிலம், குருஷேத்ரா பகுதியில் உள்ள அந்தேரி கிராமத்தை சேர்ந்தவர் ஆவார். அந்த கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் பலரும் ராணுவத்தில் சேர்ந்து, நாட்டைக் காக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மன்தீப் சிங், 2008-ம் ஆண்டு ராணுவத்தில் சேர்ந்து, 17-வது சீக்கிய படைப்பிரிவில் இணைந்து பணியாற்றி வந்தார். 2014-ம் ஆண்டு அவருக்கு திருமணம் ஆனது. அவரது மனைவி பிரேர்ணா, அங்குள்ள ஷாபாத் மார்கண்டா போலீஸ் நிலையத்தில் ஏட்டாக வேலை பார்த்து வருகிறார்.
பதிலடி தர தந்தை வேண்டுகோள்
மன்தீப் சிங் கொல்லப்பட்ட தகவல், நேற்று அதிகாலை ஒரு மணிக்கு ராணுவ வீரர் ஒருவர் மூலம் அவரது குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து காட்டுத்தீ போல அந்த தகவல், ஊர் முழுக்க பரவியது. உறவினர்களும், நண்பர்களும் மன்தீப் சிங்கின் வீட்டில் குவிந்தனர்.
மகனைப் பறிகொடுத்துள்ள தந்தை பூல்சிங், “என் மகன் தன் கடமையை செய்திருக்கிறார். அவர் தனது வாழ்வை தியாகம் செய்திருக்கிறார். நாம் பாகிஸ்தானுக்கு தகுந்த பதிலடியை தர வேண்டும்” என கூறினார்.
மனைவி கண்ணீர்
மன்தீப் சிங்கின் மனைவி பிரேர்ணா, “பயங்கரவாதிகளை ஊக்குவித்து வரும் பாகிஸ்தானுக்கு சரியான பாடம் கற்றுத்தர வேண்டும். அப்போதுதான் இத்தகைய துயரத்தை மற்றொரு வீரரின் குடும்பம் அனுபவிக்காத நிலை உருவாகும்” என கண்ணீருடன் தெரிவித்தார்.
மேலும் அவர்கூறும்போது, “என் கணவர் 6 மாதங்களுக்கு முன் விடுமுறையில் வந்தார். தீபாவளிக்கு விடுமுறையில் வருவதாக இருந்தார். ஆனால் எல்லையில் மாசீல் பகுதியில் பதற்றம் நிலவிவந்ததைத் தொடர்ந்து அவரது விடுமுறை ரத்து செய்யப்பட்டதால் வர முடியாமல் போய்விட்டது” என வேதனையுடன் கூறினார்.
மன்தீப் சிங்கின் சகோதரர் சந்தீப், “நமது வீரர்கள் கொல்லப்பட்டதற்கு பழிவாங்குவதற்காக நான் ராணுவத்தில் சேர விரும்புகிறேன்” என கூறினார்.
இறுதிச்சடங்கில் முதல்-மந்திரி பங்கேற்பு
நாட்டுக்காக உயிர்நீத்த வீரர் மன்தீப் சிங்கின் உடல், மூவர்ணக்கொடியில் சுற்றி அவரது வீட்டுக்கு, அலங்கரிக்கப்பட்ட ராணுவ வாகனத்தில் நேற்று எடுத்து வரப்பட்டது. உள்ளூர் மக்கள் மட்டுமல்லாது, சுற்று வட்டார மக்கள் ஏராளமான பேர் திரண்டு வந்து, மறைந்த வீரருக்கு தங்கள் கண்ணீர் அஞ்சலியை செலுத்தினர். பின்னர் அவரது உடல், சுடுகாட்டுக்கு எடுத்துச்செல்லப்பட்டது.
இறுதிச்சடங்கில் அரியானா முதல்-மந்திரி மனோகர் லால் கட்டார், மூத்த ராணுவ அதிகாரிகள், அரசு உயர் அதிகாரிகள் கலந்துகொண்டு, அஞ்சலி செலுத்தினர்.
முழு அரசு மரியாதை
பின்னர் அவரது உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. சிதைக்கு அவரது தந்தை பூல்சிங் தீ மூட்டினார். மறைந்த வீரருக்கு மரியாதை செலுத்தும் வகையில், அந்தேரி கிராம மக்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாடவில்லை.
அதே நேரத்தில் வீடுகள் தோறும் அகல் விளக்கேற்றி, மறைந்த வீரருக்கு தங்களது மரியாதையை செலுத்தினர்.
மறைந்த ராணுவ வீரர் மன்தீப் சிங்கின் குடும்பத்தாருக்கு முதல்-மந்திரி மனோகர் லால் கட்டார் ஆறுதல் கூறினார்.
அப்போது அவர், அவர்களிடம், “நாம் அவர்களுக்கு தகுந்த பாடம் கற்பிப்போம். பழிக்குப் பழி வாங்குவோம். நாட்டுக்காக இந்த வீரர் உயிர் நீத்திருக்கிறார். இந்த துயரமான தருணத்தில், உங்களுடன் இணைந்து நிற்கிறோம். உங்களுக்கு என்னென்ன உதவிகள் தேவையோ, அத்தனையும் செய்வோம்” என உறுதி அளித்தார்.
-
------------------------
தினத்தந்தி
Re: காஷ்மீர் எல்லையில் கொல்லப்பட்ட இந்திய வீரரின் இறுதிச்சடங்கு
பின்னர் அவரது உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. சிதைக்கு அவரது தந்தை பூல்சிங் தீ மூட்டினார்.மகனைப் பறிகொடுத்துள்ள தந்தை பூல்சிங், “என் மகன் தன் கடமையை செய்திருக்கிறார். அவர் தனது வாழ்வை தியாகம் செய்திருக்கிறார். நாம் பாகிஸ்தானுக்கு தகுந்த பதிலடியை தர வேண்டும்” என கூறினார்.
மன்தீப் சிங்கின் மனைவி பிரேர்ணா, “பயங்கரவாதிகளை ஊக்குவித்து வரும் பாகிஸ்தானுக்கு சரியான பாடம் கற்றுத்தர வேண்டும். அப்போதுதான் இத்தகைய துயரத்தை மற்றொரு வீரரின் குடும்பம் அனுபவிக்காத நிலை உருவாகும்” என கண்ணீருடன் தெரிவித்தார்.
மன்தீப் சிங்கின் சகோதரர் சந்தீப், “நமது வீரர்கள் கொல்லப்பட்டதற்கு பழிவாங்குவதற்காக நான் ராணுவத்தில் சேர விரும்புகிறேன்” என கூறினார்.
மறைந்த வீரருக்கு மரியாதை செலுத்தும் வகையில், அந்தேரி கிராம மக்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாடவில்லை,அதே நேரத்தில் வீடுகள் தோறும் அகல் விளக்கேற்றி, மறைந்த வீரருக்கு தங்களது மரியாதையை செலுத்தினர்.
எழுதுவதற்கு வார்த்தைகள் வரவில்லை , எப்படி இந்த குடும்பத்திற்கு ஆறுதல் சொல்வது .... RIP சகோதரா
Re: காஷ்மீர் எல்லையில் கொல்லப்பட்ட இந்திய வீரரின் இறுதிச்சடங்கு
மிக மோசமான நிகழ்வு .....
வீரவணக்கம்
வீரவணக்கம்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: காஷ்மீர் எல்லையில் கொல்லப்பட்ட இந்திய வீரரின் இறுதிச்சடங்கு
குணசேகரன் S அவர்களின் பதிவு #4
முழுதும் ஆங்கிலத்தில் இருப்பதால் நீக்கப்படுகிறது .
ஈகரை தமிழ்க்களஞ்சியத்தில் தமிழில் பதிவிடவும் .
செந்நிற பதிவுகளை தவிர்க்கவும் .
ரமணியன்
முழுதும் ஆங்கிலத்தில் இருப்பதால் நீக்கப்படுகிறது .
ஈகரை தமிழ்க்களஞ்சியத்தில் தமிழில் பதிவிடவும் .
செந்நிற பதிவுகளை தவிர்க்கவும் .
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010
Re: காஷ்மீர் எல்லையில் கொல்லப்பட்ட இந்திய வீரரின் இறுதிச்சடங்கு
T.N.Balasubramanian wrote:குணசேகரன் S அவர்களின் பதிவு #4
முழுதும் ஆங்கிலத்தில் இருப்பதால் நீக்கப்படுகிறது .
ஈகரை தமிழ்க்களஞ்சியத்தில் தமிழில் பதிவிடவும் .
செந்நிற பதிவுகளை தவிர்க்கவும் .
ரமணியன்
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்: இந்திய ராணுவம் பதிலடி
» காஷ்மீர் எல்லையில் பயங்கரவாதிகளின் முகாம்களை குண்டுவீசி அழித்தது இந்திய விமானப்படை
» காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் படைகள் அத்துமீறல் - இந்திய வீரர் மரணம்
» இந்தியாவுக்குள் ஊடுருவ காஷ்மீர் எல்லையில் 386 தீவிரவாதிகள் பதுங்கல்: ராணுவம் அதிர்ச்சி தகவல்
» சீன எல்லையில் இந்திய போர் விமானம் தரையிறக்கம்
» காஷ்மீர் எல்லையில் பயங்கரவாதிகளின் முகாம்களை குண்டுவீசி அழித்தது இந்திய விமானப்படை
» காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் படைகள் அத்துமீறல் - இந்திய வீரர் மரணம்
» இந்தியாவுக்குள் ஊடுருவ காஷ்மீர் எல்லையில் 386 தீவிரவாதிகள் பதுங்கல்: ராணுவம் அதிர்ச்சி தகவல்
» சீன எல்லையில் இந்திய போர் விமானம் தரையிறக்கம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|