ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழில் சந்தேகம்.

3 posters

Go down

தமிழில் சந்தேகம்.  Empty தமிழில் சந்தேகம்.

Post by Guest Sat Oct 22, 2016 12:44 am

கவிஞன், கஞ்சன், உழவன், புலவன், அமைச்சன், ஒற்றன், தச்சன், வணிகன், மெய்காப்பாளன், வீரன், கொல்லன் இவற்றுக்கு பெண்பால் என்ன?

இல்லாள் என்பதற்கு ஆண்பால் என்ன? அல்லது இன்று வழக்கத்தில் உள்ளது போல் இல்லத்தரசி,இல்லத்தரசன் என்பதா?

avatar
Guest
Guest


Back to top Go down

தமிழில் சந்தேகம்.  Empty Re: தமிழில் சந்தேகம்.

Post by Ramalingam K Sat Oct 22, 2016 8:08 am

மூர்த்தி wrote:கவிஞன், கஞ்சன், உழவன், புலவன், அமைச்சன், ஒற்றன், தச்சன், வணிகன், மெய்காப்பாளன், வீரன், கொல்லன்  இவற்றுக்கு பெண்பால் என்ன?

இல்லாள்  என்பதற்கு ஆண்பால் என்ன? அல்லது இன்று வழக்கத்தில் உள்ளது போல் இல்லத்தரசி,இல்லத்தரசன் என்பதா?

மேற்கோள் செய்த பதிவு: 1225139


கவிஞனுக்குக் கவிதாயினி என்பது புதுச்சொல்லாகிறது.

ஒருவன் என்பதற்கு ஒருத்திபோய் இப்போதெல்லாம் ஒருவள் என்பது பரவலாக ஏற்கப்படுகிறது.
புதுக் கவிதையைப் போல் -  உடைக்கப்பட்ட உரைநடைதானே புதுக் கவிதை.

அதுபோலவே   இச்சொற்களுக்கும்  பெண்பால்  சொற்களைக்  கொள்ளலாம்.  அல்லது வழக்கம்போல் சொல்லின் இறுதியில் அர்  என்னும் பலர்பால் விகுதி சேர்த்து  கூடவே பெண்பால் என்ற முன்பதத்தையும் வைத்து அழைக்கலாம்.

கவிஞன் -கவிஞள் ; பெண்பால்கவிஞர்..
கஞ்சன் -கஞ்சள் ; பெண்பால் கஞ்சர்..
உழவன் - உழவள்;  உழவர் ( உழத்தியை இப்போதெல்லாம் யாரும் ஏற்பதில்லை); பெண்பால் உழவர்
புலவன் -புலவள் ;  பெண்பால்புலவர்
அமைச்சன் - அமைச்சள்  ; பெண்பால்அமைச்சர்
ஒற்றன் - ஒற்றள்;  பெண்பால்ஒற்றர்
தச்சன் - தச்சள் ;  பெண்பால்தச்சர்
வணிகன் - வணிகள்;  பெண்பால் வணிகர்
மெய்காப்பாளன் - மெய்காப்பாளள் ; பெண்பால்மெய்காப்பாளர்
வீரன் -  வீராங்கனை ; பெண்பால்வீரர்
கொல்லன் - கொல்லள்; பெண்பால்கொல்லர்

இல்லத்தரசி என்பது புதுச்சொல் .  வாழ்க்கைத் துணைவி ஏற்கத்தக்கது.
இல்லத்தரசி என்றால் இல்லத்தரசன்  என்பதில் பிழை இருக்க  வாய்ப்பில்லை !

தந்தை பெரியாரின் எழுத்துச் சீர் திருத்தம்போல் - சொல் சீர்திருத்தமும் கொண்டுவருதல் முறையே.

மாற்றம் ஒன்றே மாறாதது- மாற்றத்தை ஏற்று மகிழ்வுடன் வாழ்வோம்.

சும்மா . . . . . . ஒரு  கருத்துதான்.


+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016

http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

தமிழில் சந்தேகம்.  Empty Re: தமிழில் சந்தேகம்.

Post by M.Jagadeesan Sat Oct 22, 2016 9:04 am

இல்லாள் என்றால் இல்லத்தை ஆள்பவள் என்று பொருள்படும் . அதற்கு ஆண்பால் இல்லை ." இல்லான் " என்றால் ஒன்றும் இல்லாதவன் என்று பொருள்படும் .

" இல்லத்தரசி " என்னும் சொல் ஏற்புடைத்து.  ஆனால் " இல்லத்தரசன் "சொல்  என்னும் வழக்கில் இல்லை . இல்லத்தை ஆளும் உரிமை பெண்களுக்கு மட்டுமே உண்டு .
வேலைக்குச் செல்லாமல் வீட்டைக் கவனித்துக்கொள்ளும் பெண்ணை  " House wife " என்று ஆங்கிலத்தில் சொல்கிறோம் . " இல்லாள் " என்னும் சொல்லுக்கு நேரான ஆங்கிலச்சொல் இது.
"இல்லாள் " ,  "வாழ்க்கைத்துணை "  ஆகிய சொற்கள் , ஐயன் வள்ளுவரின் புதிய சொல்லாக்கங்கள்

கலைஞரை முன்னாள் முதலமைச்சர் என்றும் , ஜெயலலிதா அம்மையாரை இந்நாள் முதலமைச்சர் என்று அழைக்கிறோம் . பெண்பால் என்பதற்காக " முதலமைச்சள் " என்று நாம் அழைப்பதில்லை ; அதற்கு தமிழ் இலக்கணம் இடம் கொடுப்பதில்லை . " Madam Chief Minister " என்று அழைக்கும் ஆங்கில மரபு , தமிழில் இல்லை .

தமிழில் இருபால் பொதுச் சொற்கள் என்று சில உண்டு .
கவிஞர் , புலவர் , அமைச்சர் , வணிகர் , ஆசிரியர் , மருத்துவர் போன்ற சொற்கள் இருபாலரையும் குறிக்கும் .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

தமிழில் சந்தேகம்.  Empty Re: தமிழில் சந்தேகம்.

Post by T.N.Balasubramanian Sat Oct 22, 2016 2:58 pm

தமிழில் இருபால் பொதுச் சொற்கள் என்று சில உண்டு .
கவிஞர் , புலவர் , அமைச்சர் , வணிகர் , ஆசிரியர் , மருத்துவர் போன்ற சொற்கள் இருபாலரையும் குறிக்கும் .

ஆம் ,பொது சொற்கள் பல இருக்கின்றன .

ஆங்கிலத்தில் கூட இருக்கிறதே . cousin ,actor , proprietor . ஆனால் சமீப காலமாக actress , proprietrix என்றெல்லாம் கூட கேள்வி படுகிறோம் .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

தமிழில் சந்தேகம்.  Empty Re: தமிழில் சந்தேகம்.

Post by Ramalingam K Sat Oct 22, 2016 8:18 pm

மாற்றத்தை ஏற்று மகிழ்வோடு வாழலாம்.

அதுபோலவே ஜ, ஸ, ஷ, ஹ போன்ற எழுத்துக்களையும் நம் மொழியின் கூடுதல் எழுத்துக்களாக ஏற்பதில் தவறு கிடையாது என்பது அடியனின் கருத்து. இந்த எழுத்துருக்கள் எந்த மொழியிலும் இல்லாத அநாதைகளாகக் காட்சி அளிக்கின்றன.

நம் தமிழில் இந்த எழுத்துக்களின் ஒலி வடிவங்களுக்கு நாம் படாதபாடு படுகிறோம். தமிழறிஞர்கள் கவனிப்பார்களா. வாழ்வது கொஞ்ச நாள். அவைகளையும் நம்மோடு அரவணைத்து வாழ்ந்து இன்புறுவோமே.

இது ஒரு ஆவல்தான்- ஏக்கமும் கூட.
அடியன் சுத்தத்தமிழன் என்பதில் எள்ளளவும் சந்தேகம் வேண்டாம்.


+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016

http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

தமிழில் சந்தேகம்.  Empty Re: தமிழில் சந்தேகம்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum