ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காவிரி மேலாண்மை வாரியம்... மோடி அரசின் சதி.. அம்பலப்படுத்தும் பொறியாளர்!

5 posters

Go down

காவிரி மேலாண்மை வாரியம்... மோடி அரசின் சதி.. அம்பலப்படுத்தும் பொறியாளர்! Empty காவிரி மேலாண்மை வாரியம்... மோடி அரசின் சதி.. அம்பலப்படுத்தும் பொறியாளர்!

Post by ayyasamy ram Mon Oct 17, 2016 11:12 am

தமிழ்நாடு-கர்நாடகா மாநிலங்களுக்கிடையில் இருந்து வரும்
நதிநீர்ப் பங்கீடு பிரச்னையை நிரந்தரமாகத் தீர்த்து வைக்க,
காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வேண்டும்
என்று சமீபத்தில் உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம்.
-
ஆரம்பத்தில் இதை தலையாட்டிக் கேட்டுக்கொண்ட மத்திய அரசு,
அடுத்த சில நாட்களிலேயே திடீர் பல்டி அடித்தது.
அதாவது, ‘நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றிய பிறகே
வாரியம் அமைப்போம்.
-
இந்த விஷயத்தில் தலையிடுவதற்கு உச்ச நீதிமன்றத்துக்கு அதிகாரம்
இல்லை' என்று உச்ச நீதிமன்றத்திடமே கறாராகக் கூறிவிட்டது.
-
இதையடுத்து, மத்திய அரசுக்கு எதிராக தமிழகத்தில் போராட்டங்கள்
தொடர்கின்றன. 'கர்நாடக மாநில ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும்
என்பதற்காகவே தமிழர்களின் நலனை பலி கொடுக்கிறது பி.ஜே.பி.'
என்று பலதரப்பிலிருந்தும் சூடான குற்றச்சாட்டுக்கள் கிளம்பிக்
கிடக்கின்றன.
-
இதற்கு நடுவே, "காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பதற்கு
நாடாளுமன்றத்தின் ஒப்புதல் தேவை என்று சொல்வது ஏமாற்று வேலை.
மத்திய அரசு நினைத்தால், ஏற்கெனவே காவிரி நடுவர்மன்றம்
கொடுத்திருக்கும் இறுதித் தீர்ப்பின் அடிப்படையில், ஒரே நாளில்
அமைத்துவிட முடியும்" என்று சட்டங்களையும், உதாரணங்களையும்
மேற்கோள்காட்டி அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறார் தமிழ்நாடு
பொதுப்பணித்துறையின் மூத்த பொறியாளர் சங்க மாநிலச் செயலாளர்
வீரப்பன்
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84197
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

காவிரி மேலாண்மை வாரியம்... மோடி அரசின் சதி.. அம்பலப்படுத்தும் பொறியாளர்! Empty Re: காவிரி மேலாண்மை வாரியம்... மோடி அரசின் சதி.. அம்பலப்படுத்தும் பொறியாளர்!

Post by ayyasamy ram Mon Oct 17, 2016 11:14 am

காவிரி மேலாண்மை வாரியம்... மோடி அரசின் சதி.. அம்பலப்படுத்தும் பொறியாளர்! I5RXJCSvSU2Bu8wJcooT+veerappanengineer_14423
-
ஏற்கெனவே இருக்கும் சட்டத்தின்படி மேலாண்மை வாரியம்
அமைக்க வழிவகை உண்டு!


அவர் நம்மிடம் பேசும்போது, "காவிரி நடுவர்மன்றம் என்பது
உச்சபட்ச அதிகாரங்களுடன்தான் அமைக்கப்பட்டது.
அதன் தீர்ப்பு, உச்ச நீதிமன்றத்துக்கு இணையானது. அதாவது,
பன்மாநில நதிநீர் வழக்குச் சட்டம் 1956, உட்பிரிவு 6-ன் படிதான்
1990-ம் ஆண்டு காவிரி நடுவர்மன்றம் அமைக்கப்பட்டது.

இச்சட்டத்தின் உட்பிரிவு 6 ஏ (1) காவிரி மேலாண்மை வாரியத்தை
அமைப்பதற்கு வழிவகை செய்கிறது. இச்சட்டத்தின் உட்பிரிவு
6 ஏ (7) நாடாளுமன்றம்தான் மேலாண்மை வாரியத்தை
அமைத்திட அதிகாரம் பெற்றது என்றும் சொல்கிறது.

அதேசமயம், 2002-ம் ஆண்டில் கொண்டுவந்த திருத்தவிதி 6(2)-ல்,
நடுவர் மன்றத் தீர்ப்பு இந்திய அரசிதழில் வெளியிடப்பட்டுவிட்டாலே
அது உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு இணையான அதிகாரம் பெற்றதாகி
விடுகிறது என்று சொல்கிறது.

அதை மாற்ற நாடாளுமன்றத்தின் இரு அவைகளுக்கும் எந்த வாய்ப்பும்
தரப்படவில்லை. இந்த ஷரத்துகளின்படி காவிரி மேலாண்மை
வாரியத்தை உடனே அமைத்திட வலியுறுத்துவதற்கு தமிழக அரசுக்கு
முழு உரிமை உண்டு.

தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மாநிலங்களின் தண்ணீர்
பங்கீடு சம்பந்தமான காவிரி நடுவர்மன்றத்தின் இறுதித் தீர்ப்பு
05-2-2007-ல் மத்திய அரசுக்கு அளிக்கப்பட்டது. ஆறு ஆண்டுகள் கழித்து
19-2-2013-ல்தான் அரசிதழில் அறிவிக்கையாக மத்திய அரசு வெளியிட்டது.

இடைப்பட்ட காலத்தில் நடுவர்மன்ற தீர்ப்புப் பற்றி ஒரு துரும்பைக் கூட
கிள்ளவில்லை மத்திய அரசு. அது சம்பந்தமான மறுப்போ,
குறிப்புகளையோ எதையும் தெரிவிக்கவில்லை. அரசிதழில்
வெளியிட்டதாலேயே, நடுவர்மன்ற அறிக்கையை இந்திய அரசு
முழுமையாக ஒப்புக்கொண்டதாகவே பொருள்.
-
---------------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84197
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

காவிரி மேலாண்மை வாரியம்... மோடி அரசின் சதி.. அம்பலப்படுத்தும் பொறியாளர்! Empty Re: காவிரி மேலாண்மை வாரியம்... மோடி அரசின் சதி.. அம்பலப்படுத்தும் பொறியாளர்!

Post by ayyasamy ram Mon Oct 17, 2016 11:16 am

நாடாளுமன்றத்துக்கு அனுப்பாமலேயே வாரியங்கள்
அமைக்கப்பட்டுள்ளன!

-

இதன்படி உட்பிரிவு 6 ஏ(1), 6 (2) மற்றும் அரசியல் சாசனச்
சட்டம் 144-ன்படி காவிரி மேலாண்மை வாரியத்தை
நாடாளுமன்றத்தின் ஆய்வுக்கு அனுப்பாமலேயே அமைக்க
வேண்டிய பொறுப்பும் கடமையும் இந்திய அரசுக்கு இருக்கிறது.

இதற்கு உதாரணமாக சொல்லவேண்டுமென்றால்,
நர்மதா நதி கட்டுப்பாட்டு ஆணையம், டிசம்பர் 1980-ல்
நாடாளுமன்றத்தின் ஒப்புதல் இல்லாமலேயே அமைக்கப்பட்டது.
அதற்கு ஓர் ஆண்டுக்கு முன்புதான் 1979-ல் அரசிதழில் இது
குறித்து வெளியிடப்பட்டது.

இதைவிட கிருஷ்ணா, கோதாவரி நதிகளின் மேலாண்மை வாரியம்
பற்றி கூறினால் மிகவும் பொருத்தமாக இருக்கும். அதாவது, இந்த
நதிகளுக்கான நடுவர்மன்றத்தின் தீர்ப்பு 28-5-2014 அன்று அரசிதழில்
வெளியிடப்பட்டது.

அடுத்த நாளே, அதாவது 29-5-2014-ல் வாரியம் அமைக்கப்பட்டது.
நாடாளுமன்ற ஆய்வுக்கு அனுப்பப்படவே இல்லை. உண்மை நிலை
இப்படியிருக்க, தமிழ்நாட்டுக்கு மட்டும் ஓரவஞ்சனை ஏன்?

மேலாண்மை வாரியத்தை அமைக்க மறுப்பு தெரிவிப்பதற்கு இந்திய
அரசுக்கு எந்தச் சிறப்பு அதிகாரமும் இல்லை. தற்போது உச்ச
நீதிமன்றத்தில் இயங்கும் 3 நீதிபதிகளின் அமர்வுகூட, காவிரி நடுவர்
மன்றம் வழங்கியுள்ள நதிநீர்ப் பங்கீடு தொடர்பான தீர்ப்பின்படியே
மூன்று மாநிலங்கள் சார்பாக தொடுக்கப்படும் வழக்குகளை
விசாரிக்கிறது.
-
------------------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84197
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

காவிரி மேலாண்மை வாரியம்... மோடி அரசின் சதி.. அம்பலப்படுத்தும் பொறியாளர்! Empty Re: காவிரி மேலாண்மை வாரியம்... மோடி அரசின் சதி.. அம்பலப்படுத்தும் பொறியாளர்!

Post by ayyasamy ram Mon Oct 17, 2016 11:17 am

வாரியம் அமைக்க உச்ச நீதிமன்றத்துக்கு நடவடிக்கை எடுக்கும்!

"இந்திய அரசியல் சாசனம் 144-ன் படி, மத்திய அரசும் மாநில அரசுகளும் (கர்நாடக சட்டமன்றம் உட்பட) உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை எந்தவித எதிர்ப்பும் மறுப்பும் இன்றிச் செயல்படுத்த வேண்டும். நடுவர் மன்றத் தீர்ப்பை எதிர்த்து மாநில சட்ட மன்றங்கள் தீர்மானம் இயற்ற எந்த அதிகாரமும் இல்லை என்பதை உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு திட்டவட்டமாக தெரிவிக்கிறது.

சாசன சட்டம் 144-ன் படி மத்திய அரசு மீதும், கர்நாடகா அரசு மீதும் உடனடியாக நடவடிக்கை (அவமதிப்பு) எடுத்து, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்திட உச்ச நீதிமன்றம் நடவடிக்கை எடுக்கும். இதை உச்ச நீதிமன்றம் விரைவில் செய்யும் என்று எதிர்பார்ப்போம்" என்று தெள்ளத் தெளிவாக எடுத்து வைத்தார்.

ஆகக்கூடி, மத்தியில் காங்கிரஸ் ஆண்டபோதும் சரி, பிஜேபி ஆண்ட போதும் சரி... தற்போது ஆளுகிற போதும் சரி, தொடர்ந்து தமிழகத்துக்கு துரோகம் ஒன்றையே இழைத்துக் கொண்டுள்ளனர், சுயநல அரசியலுக்காக!

சில புள்ளிவிவரங்கள்:

காவிரி நடுவர்மன்றம் இறுதித் தீர்ப்பு வெளியிடப்பட்டது: 05-2-2007
அரசிதழில் வெளியிடப்பட்டது: 19-2-2013

நர்மதா நதி கட்டுப்பாட்டு ஆணையம், அரசிதழில் வெளியிடப்பட்டது:
டிசம்பர் 1979
அமைக்கப்பட்டது: டிசம்பர் 1980
-
ருஷ்ணா, கோதாவரி நடுவர்மன்றம் அரசிதழில் வெளியிடப்பட்டது: 28-5-2014
மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டது: 29-5-2014

- த.ஜெயகுமார்
vikatan
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84197
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

காவிரி மேலாண்மை வாரியம்... மோடி அரசின் சதி.. அம்பலப்படுத்தும் பொறியாளர்! Empty Re: காவிரி மேலாண்மை வாரியம்... மோடி அரசின் சதி.. அம்பலப்படுத்தும் பொறியாளர்!

Post by Ramalingam K Mon Oct 17, 2016 12:07 pm

காரணம் இன்னுமா புரியவில்லை-

நம் தமிழகத்தில் நிலவும் நீயா நானா விளையாட்டால்தான்

நடுவன் (ண்) அரசு தள்ளி நின்று வேடிக்கை பார்க்கிறதோ - அங்கேயும் மனிதர்கள் தானே.


+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016

http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

காவிரி மேலாண்மை வாரியம்... மோடி அரசின் சதி.. அம்பலப்படுத்தும் பொறியாளர்! Empty Re: காவிரி மேலாண்மை வாரியம்... மோடி அரசின் சதி.. அம்பலப்படுத்தும் பொறியாளர்!

Post by T.N.Balasubramanian Mon Oct 17, 2016 9:22 pm

Ramalingam K wrote:காரணம் இன்னுமா புரியவில்லை-

நம் தமிழகத்தில் நிலவும் நீயா நானா விளையாட்டால்தான்

நடுவன் (ண்) அரசு தள்ளி நின்று வேடிக்கை பார்க்கிறதோ - அங்கேயும் மனிதர்கள் தானே.
மேற்கோள் செய்த பதிவு: 1224645


அதற்கும் இதற்கும் சம்பந்தமில்லை

தமிழகத்தில் எப்பிடியும் BJP வருவதற்கு சாத்தியக்கூறுகள் இல்லை .
கர்நாடகத்தில் அப்பிடி இல்லை . BJP அல்லது காங்கிரஸ் தான் வரும் .
அப்பிடி என்றால் ,அவர்களுக்கு சாதகமான சூழ்நிலையில்தான் மத்தய அரசு செயல்படும் .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

காவிரி மேலாண்மை வாரியம்... மோடி அரசின் சதி.. அம்பலப்படுத்தும் பொறியாளர்! Empty Re: காவிரி மேலாண்மை வாரியம்... மோடி அரசின் சதி.. அம்பலப்படுத்தும் பொறியாளர்!

Post by GunasekarenS Tue Oct 18, 2016 7:24 pm

பகிர்வுக்கு நன்றி.
வெளி நாட்டினர், நமது நாட்டில் தண்ணீர் குறைந்த விலைக்கு (1 லிட்டர் = 20 பைசா!?) என்றதும், அதி நவீன ராட்சத கருவி மூலம் தண்ணீர் உறிஞ்சி எடுத்து, கொள்ளை விலை வைத்து soorai ஆடுகின்றனர். நீர் mattam குறைந்து kooppadu seithalum, கமிஷன் வாங்கியவர்கள் நடவடிக்கை edukkaamal irukkirargal (Eg:- cool drinks, 1Lr. தண்ணீர் 20 பைசா என்று எடுத்து, கலர் மற்றும் ரசாயனம் கலந்து cool drinks 1Lr. Rs.50/- அதிகம் என்று விற்பனை செய்கிறார்கள்). குவைத் அரசு குடிநீர் இல்லாமல் தள்ளாடுகிறது. ithupole matra நாடுகளுக்கு தண்ணீர் விலை அதிகம் வைத்து கொள்ளை அடிக்கிறார்கள். (கார்ப்பொரேட் கம்பெனி = கடன் வட்டி இல்லை, அசல் தள்ளுபடி, கடன் தள்ளுபடி, நடவடிக்கை இல்லை)
குடி மக்களுக்கு கடன் தருவது இல்லை, கடன் வட்டி அதிகம், கடன் முறைகள் மிக அதிகம் (சிரமம்), கொலை மிரட்டல், அவமான படுத்துதல், பொருள் அபகரிப்பு செய்தல், இன்னும் பல சிரமங்கள்.
கர்நாடக மாநிலம் தனியாருக்கு தண்ணீர் எடுக்க அனுமதி அளித்து, தண்ணீர் உறிஞ்சப்பட்டு நீர் ஆதாரம் குறைந்து, விவசாயி நீர் இல்லை என்றால், தமிழ்நாடு தண்ணீர் கேட்கிறது என்று தமிழன் மீது பழி சுமத்தல். ஒரு சொட்டு நீர் கூட தர முடியாது என்று சொல்லும் அளவுக்கு கார்ப்பொரேட் கம்பெனி ஆட்டுகிறது.
GunasekarenS
GunasekarenS
பண்பாளர்


பதிவுகள் : 135
இணைந்தது : 22/06/2016

Back to top Go down

காவிரி மேலாண்மை வாரியம்... மோடி அரசின் சதி.. அம்பலப்படுத்தும் பொறியாளர்! Empty Re: காவிரி மேலாண்மை வாரியம்... மோடி அரசின் சதி.. அம்பலப்படுத்தும் பொறியாளர்!

Post by பாலாஜி Wed Oct 19, 2016 5:14 pm

என்னமோ தெரியல ... தமிழன் என்றாலே மிளகாய் அரைப்பது என்று ஆகிவிட்டது ... என்ன செய்ய காலத்தின் கோலம் ...


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

காவிரி மேலாண்மை வாரியம்... மோடி அரசின் சதி.. அம்பலப்படுத்தும் பொறியாளர்! Empty Re: காவிரி மேலாண்மை வாரியம்... மோடி அரசின் சதி.. அம்பலப்படுத்தும் பொறியாளர்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் கால தாமதம் செய்வது மத்திய அரசின் தவறான அணுகுமுறையாகும்-சுப்ரீம் கோர்ட்
» காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் இழுபறி
» காவிரி மேலாண்மை வாரியம்... சுப்ரீம் கோர்ட் சாட்டையடி.
» ஒட்டுமொத்த தமிழகத்தின் ஒரே கோரிக்கையான காவிரி மேலாண்மை வாரியம் ஏன் வேண்டும்?
» காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தடையில்லை: தேர்தல் ஆணையர் பச்சைக்கொடி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum