ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோலாகலமாகக் கொண்டாடப்படும் மைசூர் தசரா விழா

Go down

கோலாகலமாகக் கொண்டாடப்படும் மைசூர் தசரா விழா Empty கோலாகலமாகக் கொண்டாடப்படும் மைசூர் தசரா விழா

Post by ayyasamy ram Mon Oct 10, 2016 7:11 am

கோலாகலமாகக் கொண்டாடப்படும் மைசூர் தசரா விழா Tozd8VRQieV4Xn5yOfw0+mysore
-

நாடெங்கும் தசரா விழாவைக் கொண்டாடினாலும்,
மைசூர் தசராவுக்கு தனிச்சிறப்பு உண்டு.

10 நாள்கள் நடைபெறும் தசரா விழாவில் பல்வேறு
நிகழ்ச்சிகள் நடைபெறுவதால் உலகப்புகழ்பெற்ற
நிகழ்வாக மாறியுள்ளது.

ஆண்டுதோறும் செப்டம்பர் அல்லது அக்டோபர்
மாதங்களில் தசரா விழா கொண்டாடப்படுவது
வாடிக்கை. மைசூர் தசரா விழாவை கண்டுகளிக்க
இந்தியா மட்டுமன்றி, உலகின் பல திசைகளில்
இருந்தும் மக்கள் குவிவதைக் காணலாம்.

ஒன்பது நாள்கள் நவராத்திரி நோன்பிருந்து, பத்தாவது
நாளில் விஜயதசமி கொண்டாடுவதை தசரா என்று
அழைக்கிறார்கள். தீமையை வீழ்த்தி உண்மை வெற்றி
கொண்டதை விஜயதசமி குறிக்கும் என்றாலும், மைசூர்
நகரை ஆண்ட மகிஷாசுரன் என்ற அரக்கனை
சாமுண்டீஸ்வரி அம்மன் வதம் செய்து கொன்றதன்
வெற்றிவிழாவாகத்தான் தசரா கொண்டாடப்படுகிறது.

கர்நாடகத்தின் பெரும்பகுதியைத் தங்கள் வசம்
வைத்திருந்த விஜயநகர பேரரசர்கள் 15-ஆம் நூற்றாண்டின்
தொடக்கத்தில் தசராவிழா கொண்டாடும் பழக்கத்தை
சிறிய அளவில் தொடங்கியுள்ளனர். விஜயநகரப் பேரரசின்
வீழ்ச்சிக்குப் பிறகு, இது நின்றுபோனது.

1578 முதல் 1617-ஆம் ஆண்டு சுமார் 39 ஆண்டுகாலம்
மைசூரை ஆண்ட ராஜா உடையார், தலைநகரத்தை
ஸ்ரீரங்கப்பட்டணத்துக்கு மாற்றிய பிறகு 1610-ஆம் ஆண்டில்
முதல் முறையாக அரச விழாவாக தசராவிழா நடத்தப்பட்டது.
இதைத் தொடர்ந்து தசராவிழா கர்நாடகத்தில், குறிப்பாக
மைசூரில் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.

சாமுண்டிமலையில் வீற்றிருக்கும் சாமுண்டீஸ்வரி
அம்மனுக்கு அரச குடும்பத்தினர் சிறப்புப் பூஜை செய்வதன்
மூலம் தசரா தொடங்குவது மரபு.

1805-ஆம் ஆண்டு முதல் தசரா காலத்தில் அரசவைக்கூட்டம்
நடத்தும் பழக்கத்தை மூன்றாம் கிருஷ்ணராஜ உடையார்
தொடக்கி வைத்தார்.

இந்தக் கூட்டத்தில் அரச குடும்பத்தினர், சிறப்பு அழைப்பாளர்கள்,
அதிகாரிகள், பொதுமக்கள் பங்கேற்பது பழக்கம். இந்த மரபை
அரச குடும்ப வாரிசான ஸ்ரீகண்டதத்த நரசிம்மராஜ உடையாருக்குப்
பின் முதன்முறையாக அரச குடும்பத்தின் வாரிசு
யதுவீர் கிருஷ்ணதத்த சாம்ராஜ உடையார் தொடங்கியுள்ளார்.

மகாநவமி நாளில் யானைகள், ஒட்டகங்கள், குதிரைகள் புடைசூழ
அரசரின் வாளை ஊர்வலமாக எடுத்துச்சென்று வழிபடுவது வழக்கம்.

கர்நாடகத்தில் தசரா மாநில விழாவாகக் கொண்டாடப்படுவதால்,
மைசூரில் உள்ள அரண்மனை, அரசு அலுவலகங்கள், சாலைகள்
அலங்காரம் செய்து அழகுபடுத்தப்படும். விழாக்காலத்தில்
தினமும் மாலை 7 மணி முதல் இரவு 10 மணிவரை ஒரு லட்சம்
விளக்குகளில் அலங்கரிக்கப்பட்டிருக்கும் அரண்மனை
ஒளிவெள்ளத்தில் மின்னும்.

அந்தவளாகத்தில் கலாசார மற்றும் மதரீதியான நிகழ்ச்சிகள்
நடத்தப்படும். இசை, நடனம், கவியரங்கம், மல்யுத்தம்,
விளையாட்டுகள், சிறுவர் போட்டிகள், சாகசங்கள் போன்ற
பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும்.

விஜயதசமி நாளன்று பாரம்பரிய தசரா ஊர்வலம் நடைபெறும்.
ஜம்போ சவாரி, யானைகள் ஊர்வலம் போன்ற பெயர்களால்
அழைக்கப்படும் தசரா ஊர்வலத்தைக் காண தெருவெங்கும்
மக்கள் கூட்டம் நிரம்பி வழியும். அலங்காரம் செய்யப்பட்ட
யானையின் மீது வைக்கப்பட்டிருக்கும் தங்க அம்பாரியில்
சாமுண்டீஸ்வரி அம்மன் வீற்றிருக்க ஊர்வலம் தொடங்கும்.

முக்கிய வீதிகளில் உலா செல்லும் யானைகளைப் பின்
தொடர்ந்து அலங்கார ஊர்திகள், நடனக்குழுக்கள், இசைக்
குழுக்கள், யானை, ஒட்டகம் மற்றும் குதிரை பட்டாளம் அணி
வகுக்கும்.

அரண்மனையில் தொடங்கும் ஊர்வலம் பண்ணி மண்டபத்தை
அடையும். அஞ்ஞான வாசத்தின் போது பாண்டவர்கள் தங்கள்
ஆயுதங்களை பண்ணிமரத்தில் ஒளித்து வைத்ததாக காப்பியம்
கூறுவதால், போரில் வெற்றியைக் குவிக்க இங்கு பூஜை செய்து
விட்டுச் செல்வதை உடையார் அரசர்கள் பழக்கமாகக்
கொண்டிருந்தார்கள்.

அந்த மரபின்படி, பண்ணிமண்டபத்தில் சிறப்புப் பூஜை செய்து
வழிபடுவதோடு, தசராவிழாவை நிறைவு செய்வதைக் குறிக்கும்
வகையில் தீப்பந்த ஊர்வலம் நடத்தப்படும். தசரா விழாவை
முன்னிட்டு மைசூரில் அரண்மனை எதிரே அமைந்துள்ள
மைதானத்தில் ஒருமாத காலம் பொருள்காட்சி நடத்தப்படுவது
பழக்கம்.

1880-ஆம் ஆண்டில் தசராவின்போது பொருள்காட்சி திறக்கும்
வாடிக்கையை பத்தாம் சாமராஜ உடையார் தொடக்கிவைத்தார்.
அந்தப் பழக்கம் இன்றும் தொடர்கிறது.

10 நாள்களும் மக்கள் வெள்ளத்தில் மைசூர் விழாக்கோலம்
பூண்டிருக்கும்.
நிகழாண்டில் அக்.1-ஆம் தேதி தொடங்கிய தசரா விழா
அக்.11-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.
-
-------------------------
தினமணி


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum