ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 8:56 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எஸ்.ஜானகி எனும் அதிசயம்!

4 posters

Go down

எஸ்.ஜானகி எனும் அதிசயம்! Empty எஸ்.ஜானகி எனும் அதிசயம்!

Post by ayyasamy ram Sat Oct 08, 2016 8:13 pm

எஸ்.ஜானகி எனும் அதிசயம்! YICChY8QqeKoaNXm0Bfc+fda
-
60 வருடங்கள்,17 மொழிகள்.48,000 பாடல்கள், 4 தேசிய விருதுகள்…
எஸ்.ஜானகி எனும் அதிசயம்!


அறுபது வருடங்கள், பதினேழு மொழிகளில் நாற்பத்து
எட்டாயிரம் பாடல்கள், நான்கு தேசிய விருதுகள், முப்பத்து
இரண்டு மாநில விருதுகள், மைசூர் பல்கலை கழகத்திலிருந்து
கௌரவ முனைவர் பட்டம், தமிழ் நாடு அரசின் கலைமாமணி
பட்டம் என இசையில் தனக்கென ஒரு சகாப்தத்தை படைத்தவர்
பாடகர் ஜானகி.
-
அவர் அண்மையில் இசைத் துறையிலிருந்து ஓய்வு பெறுவதாக
கூறியது இசை ரசிகர்களை பெரிதும் வருத்தத்திற்கு
உள்ளாக்கியுள்ளது. தென் இந்தியாவின் நைட்டிங்கேல் என்று
அழைக்கப்படும் இவர் வாழ்வில் ஓய்வு எடுக்க விரும்புவதாகவும்,
இனி திரைப்படங்களிலும் சரி, மேடைகளிலும் சரி, பாடப்
போவதில்லை என சமீபத்தில் அறிவித்தார்
-
மழலையாக இருக்கும் போதே பாடத் தொடங்கினார் ஜானகி.
அவரின் முதல் மேடை நிகழ்ச்சியை மூன்று வயதில் பாடினார்.
தன் மாமாவின் அறிவுரைக்கு இணங்க இருபது வயதில்
சென்னைக்கு பாடுவதற்காக வந்த இவர், ஏ.வி.எம் ஸ்டூடியோவில்
பாடகராக சேர்ந்தார். 1957ம் ஆண்டு, “விதியின் விளையாட்டு”
என்ற திரைப்படம் மூலம் திரை உலகத்திற்கு அறிமுகமானவர்
ஜானகி.
-
அன்று முதல் இன்று வரை, தென்னிந்திய மனங்களில் நீங்காத
ஒரு இடத்தை பிடித்துள்ளார். “செந்தூரப் பூவே”, “இஞ்சி இடுப்பழகி”,
“ஊரு சனம் தூங்கிருச்சி”, “மச்சானப் பாத்தீங்களா” போன்ற கேட்க
கேட்க காதில் தேன் வந்து பாய்வது போல் இருக்கும், பசுமையான
பாடல்களுக்கு தன் மழலை குரலை கொடுத்து மேன்மை படுத்தியவர்
ஜானகி. எஸ்.பி. பால சுப்பிரமணியம் மற்றும் பி.பி. ஸ்ரீநிவாஸ்
ஆகியோருடன் இவர் பாடிய பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் தான்.
இந்தியாவின் முதல் பெண் இசையமைப்பாளர் என்ற பெருமையை
கொண்டவர் ஜானகி.
--
-
ஜானகியின் பாடல்களை திரையில் பார்க்கும் போது மட்டும்,
கதாநாயகியே பாட்டை பாடுவது போல தோன்றும். அவரின்
பாடல்கள் இயற்கையான உணர்வுகளின் வெளிப்பாடு என்றே
கூறலாம். குரலில் எந்த வித சிரமமும் தெரியாமல், பாடல்
அழைக்கின்ற இடத்திற்கெல்லாம் சென்று வருவார் ஜானகி
. “காதல் கடிதம் தீட்டவே” என்ற பாடலில், காதல் வழியும்
என்றால் “சின்னத் தாயவள்” பாடலில் தாய்மை தாலாட்டும்.
-
“சின்னச் சின்ன பூவே” பாடலில் மழலை குரல், “ஊரு சனம்
தூங்கிருச்சி”, “இஞ்சி இடுப்பழகி” போன்ற பாடல்களில்,
கிராமத்து பெண்ணின் குரல், “பொன் மேனி உருகுதே”, போன்ற
பாடல்களில் விரகத்தின்கா வெளிப்பாடு,
-
“எந்தன் கண்ணில் ஏழுலகங்கள்” பாடலில் குடி போதையில்
ஆடும் பெண்ணின் தொனி என்று இசையின் பல பரிமாணங்களை
குரல் வழியாகவே வெளிப்படுத்தியவர் ஜானகி
-
. “சிங்கார வேலனே தேவா” போன்ற நுணுக்கங்களை கொண்ட
பாடலை, தொழில்நுட்ப வளர்ச்சி பெரிதும் இல்லாத காலத்தில்
எவ்வாறு ஜானகி பாடி முடித்தார் என்று இசை உலகினர் இன்று
வரை வியக்கின்றனர்.
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82775
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

எஸ்.ஜானகி எனும் அதிசயம்! Empty Re: எஸ்.ஜானகி எனும் அதிசயம்!

Post by ayyasamy ram Sat Oct 08, 2016 8:16 pm

அனைத்து மொழிகளிலும் மிகச் சரியான உச்சரிப்பை
கொண்டவர் ஜானகி என்பது குறிப்பிடத்தக்கது.
தனது இசை வாழ்க்கையின் தொடக்கத்தில் பாடிய
“சிங்கார வேலனே தேவா” முதல், இப்போது பாடிய
“அம்மா அம்மா” வரை தன் குரலால் மக்களை வசீகரிக்க
முடிந்திருக்கிறது என்றால், அந்த பெருமை ஜானகியின்
உழைப்புக்கும் திறமைக்குமே போய் சேரும்.
-

திரைப் பாடல்களுடன் பாரம்பரிய இசையை சேர்த்து
அமைப்பது என்பது இளையராஜாவிற்கு கை வந்த கலை.
அவ்வாறு அவர் இசை அமைத்த பாடல்களை மிகச் சரியாக
பாடுவது ஜானகி தான் என்று அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.
-
“காற்றில் எந்தன் கீதம்”, “புத்தம் புது காலை”, “சுந்தரி நீயும்”
போன்ற பாடல்கள் இதற்கு சான்று. பாடலின் ஏதாவது ஒரு
நொடியில் தவறு செய்தால் கூட உணர்வு சரியாக கேட்பவருக்கு
போய் சேராது என்பது போல் மிகக் கடினமான பாடல்களை
குரலில் சின்ன சிரமம் கூட தெரியாதவாறு பாடியுள்ளார் ஜானகி.
-
“சங்கத்தில் பாடாத கவிதை”, “தென்றல் வந்து தீண்டும்போது”
போன்ற பாடல்கள் இதற்கு சான்று.
-
ஜானகி முற்றிலும் வித்தியாசமான குரல்களில் பாடக்
கூடியவர். “போடா போடா போக்க” பாடலில், கிழவியின்
குரல், “மாமா பேரு மாறி” பாடலில் ஒரு ஆணின் குரலில்
கூட பாடியுள்ளார். மேற்கத்திய இசையை தமிழ்
திரையுலகிற்கு மிக சிறப்பாக கொண்டு\ வந்து சேர்த்த
பாடகர்களில் ஜானகியும் ஒருவர்.
-
“பாடவா உன் பாடலை”, “ஒரு பூங்காவனம்”, “இது ஒரு
நிலாக்காலம்” “ஓ ஓ மேகம் வந்ததோ” போன்ற பல்லாயிரக்
கணக்கான மேற்கத்திய பாணி பாடல்களை பாடியுள்ளார்.
-
ஏ.ஆர். ரஹ்மான் இசை அமைத்து ஜானகி பாடிய,
“ஒட்டகத்த கட்டிக்கோ”, “கத்தாழங் காட்டுவழி”, “முதல்வனே”
போன்ற பாடல்கள் என்றும் இனிமையானவை.
-
“மார்கழி திங்களல்லவா” பாடல் ஜானகிக்கு தமிழ்நாடு
அரசின் மாநில விருதை பெற்றுத் தந்தது.
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82775
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

எஸ்.ஜானகி எனும் அதிசயம்! Empty Re: எஸ்.ஜானகி எனும் அதிசயம்!

Post by ayyasamy ram Sat Oct 08, 2016 8:18 pm

பாடத் தொடங்கிய பிறகு எந்த வித குரல் பயிற்சியும் செய்த
ன்று கூறியுள்ளார் ஜானகி. “நான் பாடகி” என்ற செருக்கும்
ஆடம்பரமும் எந்த விதத்திலும் தெரியாமல், மிகவும்
எளிமையான தோற்றத்துடன் மேடைகளுக்கும் நிகழ்ச்சிகளுக்கும்
வந்து செல்வார்.

அவர் பாடும்போது உதடை தவிர கை தலை என்று உடலில்
வேறு எந்த பாகமும் அசையாது. மைக்கை பிடித்து ஒரு இடத்தில்
நின்றால், நிகழ்ச்சி முடியும் வரை அங்கேயே நின்று பாடுவார்.

உச்சஸ்தாயியில் பாடினாலும் சரி கீழ்ஸ்தாயியில் பாடினாலும்
சரி, எந்த வித அசைவும் தெரியாது.

ஜானகியின் குரலை விட இனிமையான குரலை கற்பனை
செய்து பார்ப்பது கூட கடினம் தான். எம்.எஸ்.விஸ்வநாதன்,
இளையராஜா, ஏ.ஆர். ரஹ்மான், அனிருத் என நான்கு
தலைமுறை இசையமைப்பாளர்களுக்கு பாடியுள்ளார் ஜானகி.
பிலிம் பேர், 1997ம் ஆண்டு, ஜானகிக்கு வாழ்நாள் சாதனையாளர்
விருது கொடுத்து கௌரவப்படுத்தியது.

2013ம் ஆண்டு இந்திய அரசு கொடுத்த “பத்ம பூஷன்” விருதை
“மிக தாமதமாகக் கொடுப்பதாக கூறி நிராகித்தவர் ஜானகி
என்பது குறிப்பிடத்தக்கது. “10 கல்பநகள்” என்ற மலையாள
திரைப்படத்திற்காக அவர் பாடிய “அம்மபூவினு” என்ற பாடல்
தான் அவர் கடைசியாகப் பாடிய பாடல்.

“மலையாள மொழியில் தான் கடைசி பாடலை பாட வேண்டும்
என்பது திட்டமிடப்படவில்லை”, என்று கூறுகிறார் ஜானகி,
”நான் ஓய்வு எடுக்க வேண்டும் என்று முடிவெடுத்த நேரத்தில்
அது தானாக அமைந்தது. சீமா விருதுகளில் நான் பாடியது
தான் என் கடைசி மேடை நிகழ்ச்சி. நான் கடைசியாக பாடிய
நேரலை நிகழ்ச்சி அதற்கு முன்னால் கோழிகோடில் நடை
பெற்றது.

பல மொழிகளில், ஆயிரக் கணக்கான பாடல்களை
பாடியுள்ளேன். நான் பாடியதெல்லாம் போதும்” என்கிறார் ஜானகி.
-

இனி பாடுவதில்லை என முடிவெடுத்தால் வருந்தவேண்டியலெப்
ஒன்றுமில்லை. எத்தனையெத்தனை பாடல்களைப் பாடியுள்ளார்
அவர். ஒவ்வொன்றையும் ஊன்றி கவனித்து சிலாகிக்கவே நம்
வாழ்நாள் போதாதே!
-------------------

-ம. சக்கர ராஜன்,விகடன்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82775
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

எஸ்.ஜானகி எனும் அதிசயம்! Empty Re: எஸ்.ஜானகி எனும் அதிசயம்!

Post by T.N.Balasubramanian Sun Oct 09, 2016 9:14 am

60 வருடங்கள்,17 மொழிகள்.48,000 பாடல்கள், 4 தேசிய விருதுகள்…
எஸ்.ஜானகி எனும் அதிசயம்!

நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

எஸ்.ஜானகி எனும் அதிசயம்! Empty Re: எஸ்.ஜானகி எனும் அதிசயம்!

Post by Ramalingam K Sun Oct 09, 2016 9:42 am

ayyasamy ram wrote:எஸ்.ஜானகி எனும் அதிசயம்! YICChY8QqeKoaNXm0Bfc+fda
-
60 வருடங்கள்,17 மொழிகள்.48,000 பாடல்கள், 4 தேசிய விருதுகள்…
எஸ்.ஜானகி எனும் அதிசயம்!

-
மேற்கோள் செய்த பதிவு: 1223870

ஜானகி அம்மா ஒரு சகாப்தம் - பாரதத் திரு நாட்டிற்குப் பரம்பொருளின் கொடை


+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016

http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

எஸ்.ஜானகி எனும் அதிசயம்! Empty Re: எஸ்.ஜானகி எனும் அதிசயம்!

Post by prajai Sun Oct 09, 2016 4:13 pm

ayyasamy ram wrote:

இந்தியாவின் முதல் பெண் இசையமைப்பாளர் என்ற பெருமையை
கொண்டவர் ஜானகி.

-
மேற்கோள் செய்த பதிவு: 1223870

ஜானகி எந்த படத்திற்கு, எப்போது இசையமைத்தார் என்ற விபரம் கிடைக்கவில்லை. ஆனால், அவர் பிறக்குமுன்பே 1935 இல் ஜத்தன்பாய், சரஸ்வதிதேவி   என்ற  பெண்கள்  ஹிந்தி  படங்களுக்கு இசையமைத்துவிட்டனர் என்று விக்கிபீடியா கூறுகிறது.


ayyasamy ram wrote:

 “சிங்கார வேலனே தேவா” போன்ற நுணுக்கங்களை கொண்ட
பாடலை, தொழில்நுட்ப வளர்ச்சி பெரிதும் இல்லாத காலத்தில்
எவ்வாறு ஜானகி பாடி முடித்தார் என்று இசை உலகினர் இன்று
வரை வியக்கின்றனர்.

-
மேற்கோள் செய்த பதிவு: 1223870

இந்தப் பாடலை லீலா, சுசீலா, வசந்தகுமாரி, லதா மங்கேஷ்கர்  போன்ற பாடகிகள் பாட மறுத்துவிட்டாலும் ஜானகி எளிதாகப்பாடிவிட்டார்  என்று கூறப்படுகிறது. கஷ்டப்பட்டுப் பாடியதாக ஜானகி    கூறுவது  ஒரு கன்னட பாடல். கஷ்டமான பகுதி  கடைசியில் வருகிறது, ரசிக்க கன்னடம் புரியவேண்டிய  அவசியம் இல்லை.




ayyasamy ram wrote:.

அவர் பாடும்போது உதடை தவிர கை தலை என்று உடலில்
வேறு எந்த பாகமும் அசையாது. மைக்கை பிடித்து ஒரு இடத்தில்
நின்றால், நிகழ்ச்சி முடியும் வரை அங்கேயே நின்று பாடுவார்.

மேற்கோள் செய்த பதிவு: 1223872

விதிவிலக்கான ஒரு வீடியோ

prajai
prajai
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 611
இணைந்தது : 19/06/2016

Back to top Go down

எஸ்.ஜானகி எனும் அதிசயம்! Empty Re: எஸ்.ஜானகி எனும் அதிசயம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum