ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழகத்துக்கு தண்ணீர் திறந்ததற்கு எதிர்ப்பு: சித்தராமையா ராஜினாமா செய்யக்கோரி கர்நாடகாவில் போராட்டம்

Go down

தமிழகத்துக்கு தண்ணீர் திறந்ததற்கு எதிர்ப்பு: சித்தராமையா ராஜினாமா செய்யக்கோரி கர்நாடகாவில் போராட்டம் Empty தமிழகத்துக்கு தண்ணீர் திறந்ததற்கு எதிர்ப்பு: சித்தராமையா ராஜினாமா செய்யக்கோரி கர்நாடகாவில் போராட்டம்

Post by ayyasamy ram Thu Sep 08, 2016 8:17 am

தமிழகத்துக்கு தண்ணீர் திறந்ததற்கு எதிர்ப்பு: சித்தராமையா ராஜினாமா செய்யக்கோரி கர்நாடகாவில் போராட்டம் Ub7EGZmzT8ej1AqVsEoC+chida_3002061f
-
மண்டியாவில், நேற்று பல்வேறு உருவ பொம்மைகள், டயர்களை கொளுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட கன்னட அமைப்பினர்.
காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட்ட கர்நாடக முதல்வர் உடனடியாக தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் எனக் கோரி மைசூரு, மண்டியாவில் கன்னட அமைப்பினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின்படி தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிடக் கோரி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தது. இதை விசாரித்த நீதிமன்றம், காவிரியில் தமிழகத்துக்கு 15 ஆயிரம் கன அடி நீரை திறந்துவிடுமாறு உத்தரவிட்டது. இதையடுத்து, நேற்று நள்ளிரவு 12 மணிக்கு கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு காவிரி நீர் திறக்கப்பட்டது.

இதுகுறித்து பாஜக மூத்த தலைவரும், சட்ட மேலவை எதிர்க்கட்சி தலைவருமான ஈஸ்வரப்பா கூறும்போது, “கர்நாடக விவசாயிகளின் எதிர்ப்பை மீறி தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்துவிட்ட சித்தராமையாவை வன்மையாக கண்டிக்கிறேன். உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு தரப்பில் சரியாக வாதிடவில்லை. தற்போது ஆஜராகும் வழக்கறிஞர் ஃபாலி எஸ்.நாரிமனை மாற்ற வேண்டும். கர்நாடகாவில் குடிக்கவே நீரில்லை என நீதிமன்றத்தில் தெரிவித்திருக்க வேண்டும்” என்றார்.

மதச்சார்பற்ற ஜனதா தள (மஜத) ஆதரவு தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான மாதே கவுடா கூறும் போது, “காவிரி வழக்கில் சித்த ராமையா தலைமையிலான காங் கிரஸ் அரசு சிறப்பாக செயல்பட வில்லை. சரியாக வாதிடாத வழக்கறிஞர் ஃபாலி எஸ்.நாரிமனை உடனடியாக மாற்றி, கர்நாடகாவை சேர்ந்த வழக்கறிஞரை நியமிக்க வேண்டும். மேல்முறையீட்டில் கர்நாடகாவுக்கு நீதி கிடைக்கவில்லை என்றால், சித்தராமையா தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்” என்றார்.

இதேபோல பாஜக, மஜத ஆதரவு விவசாய சங்கங்களும், கன்னட அமைப்புகளும் சித்தராமை யாவுக்கு எதிராக பல்வேறு போராட் டங்களை முன்னெடுத்துள்ளன.

இதனால் ஆத்திரம் அடைந்த கர்நாடக விவசாய சங்கங்களும், ஜெய் கர்நாடகா அமைப்பினரும் கர்நாடக முதல்வர் சித்தராமையா, நீர்வளத்துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல், சட்டத்துறை அமைச்சர் டி.பி.ஜெயச்சந்திரா, முன்னாள் அமைச்சர் அம்பரீஷ் ஆகியோருக்கு எதிராக போராட்டத்தில் குதித்துள்ளனர். மேலும் பெங்களூரு, மைசூரு, மண்டியா ஆகிய இடங்களில் உள்ள சித்தராமையா மற்றும் அமைச்சர்களின் வீடுகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

மண்டியாவில் போராட்டத்தில் ஈடுபட்ட கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் சித்தராமையாவின் உருவ பொம்மைக்கு தீயிட்டு கொளுத்தினர். எம்.பி.பாட்டீல், அம்பரீஷ் ஆகியோரின் உருவப்படங்களுக்கு செருப்பு மாலை அணிவித்து ஊர்வலமாக தூக்கிச் சென்றனர். அங்கு திரையிடப்பட்ட அம்பரீஷின் புதிய திரைப்பட பேனர்களை கிழித்த கன்னட அமைப்பினர் அவருக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.

இதேபோல ஒக்கலிகா சாதி சங்கத்தினரும் சித்தராமையாவை கண்டித்து ஸ்ரீரங்கப்பட்டினத்தில் போராட்டம் நடத்தினர்.

சித்தராமையாவின் சொந்த ஊரான மைசூருவில் கன்னட ரக் ஷன வேதிகே அமைப்பினர் அவரது உருவ பொம்மையை பாடையில் வைத்து இறுதி ஊர்வலமாக தூக்கி செல்வது போல நூதன போராட்டம் நடத்தினர். அப்போது சித்தராமையாவுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். மேலும் அவரையும், அமைச்சர்களையும் கடுமையான வார்த்தைகளில் திட்டி தீர்த்தனர். இதனால் கன்னட அமைப்பினருக்கும், காங்கிரஸாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது குறுக்கிட்ட போலீஸார் நூற்றுக்கும் மேற்பட்ட கன்னட அமைப்பினரை கைது செய்தனர்.

இதனிடையே மைசூரு கன்னட ரக் ஷன வேதிகே அமைப்பின் செயலர் பிரவீர் ஷெட்டி கூறும் போது, “காவிரி விவகாரத்தில் க‌ர்நாடகாவுக்கு அநீதியை இழைத்த சித்தராமையாவும், எம்.பி.பாட்டீலும் உடனடியாக தங்களது பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும். தமிழகத்துக்கு காவிரி நீரை விட மாட்டேன் என கூறிவிட்டு, இப்போது நள்ளிரவில் நீரை திறந்துவிட்டுள்ளார். இதை வன்மையாக கண்டிக்கிறோம். சித்தராமையாவுக்கு தைரியம் இருந்தால் மைசூருவுக்கு வரட்டும். அவருக்கு தக்க பாடம் கற்பிக்கிறோம்” என பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக சித்தராமையா வுக்கு நெருக்கமானவர்களிடம் விசாரித்தபோது, “காவிரி விவ காரத்தை எதிர்க்கட்சிகளான பாஜகவும், மஜதவும் அரசியல் ஆக்கி வருகின்றன. சில கன்னட அமைப்புகளும், விவசாய சங்கங் களும் சுயநல நோக்கத்தோடும், சாதி உணர்வுடனும் சித்தராமையாவுக்கு எதிராக போராடி வருகின்றன. தேர்தலை மனதில் வைத்து செயல்படுவதை இந்த அமைப்புகள் நிறுத்திக்கொள்ள வேண்டும்” என்றனர்.

சுப்பிரமணியன் சுவாமி

இதனிடையே பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, “காவிரி நீருக்காக தமிழ்நாடு கதறுவதை நிறுத்திவிட்டு, கடல் நீரை குடிநீருக்கும், பாசனத்துக்கும் பயன்படுத்துங்கள்” என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இதற்கு கர்நாடக விவசாயிகள், கன்னட அமைப்புகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தமிழகத்தை சேர்ந்த சுப்பிரமணியன் சுவாமியே கர்நாடகாவுக்கு ஆதரவாக பேசுகிறார். ஆனால் தமிழக முதல்வர் ஜெயலலிதாவும், உச்ச நீதிமன்றமும் காவிரி நீரை கேட்கிறார்கள் என ஆதங்கப்படுகின்றனர்.
-
தி இந்து
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83730
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» காங்., சட்டமன்ற குழு தலைவர் பதவியை சித்தராமையா ராஜினாமா செய்தார்.
» எங்களுக்கே தண்ணீர் இல்லை..எப்படி காவிரி நீரை தமிழகத்திற்கு கொடுப்பது : சித்தராமையா
» குடியுரிமை மசோதாவிற்கு எதிர்ப்பு: ஐ.பி.எஸ். அதிகாரி ராஜினாமா
» காவிரியில் இருந்து தமிழகத்துக்கு 177.25 டி.எம்.சி. தண்ணீர் திறக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு
» கோதாவரியில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர்: இப்படி ஒரு மெகா திட்டம் நடைமுறையில் சாத்தியமாகுமா?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum