Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Today at 3:37 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:11 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am
» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Manimegala | ||||
Balaurushya | ||||
Karthikakulanthaivel | ||||
Saravananj |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
Ammu Swarnalatha | ||||
ayyamperumal |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நவீன தொழில்நுட்பம்தான் பிரச்னைகளுக்குத் தீர்வு!
Page 1 of 1
நவீன தொழில்நுட்பம்தான் பிரச்னைகளுக்குத் தீர்வு!
-
ரியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் இந்தியர்களை ஊக்குவிக்கும் வகையிலான "ரன் ஃபார் ரியோ' என்ற ஓட்டத்தை தில்லியில் மேஜர் தயான்சந்த் தேசிய விளையாட்டரங்கத்தில் ஞாயிற்றுக்கிழமை கொடியசைத்து தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி. உடன் மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் விஜய் கோயல் உள்ளிட்டோர்.
-------------------------------------------------------
-
புதுதில்லி, ஜூலை 31: மக்களின் அன்றாடப் பிரச்னைகளுக்கு நவீன தொழில்நுட்பம் மூலம் தீர்வு கண்டறியப்பட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.
அகில இந்திய வானொலியில் தனது மாதாந்திர உரையான "மனதின் குரல்' (மன் கீ பாத்) நிகழ்ச்சியில் ஞாயிற்றுக்கிழமை பல்வேறு விஷயங்கள் குறித்து அவர் பேசினார். ரியோ டி ஜெனீரோ நகரில் விரைவில் தொடங்கவுள்ள ஒலிம்பிக் போட்டியில் இந்தியர்கள் பங்கேற்பது, எதிர்வரும் சுதந்திர தினக் கொண்டாட்டங்கள், தாம் அண்மையில் தென் ஆப்பிரிக்காவில் மேற்கொண்ட சுற்றுப்பயணம் உள்ளிட்டவை அவற்றில் அடங்கும். சுமார் 35 நிமிடங்களுக்கு ஆற்றிய உரையில் பிரதமர் கூறியதாவது:
வெள்ள பாதிப்பு: நாட்டின் பல்வேறு பகுதிகளில் தற்போது வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சிறிது காலத்துக்கு முன்பு நாம் வறட்சி குறித்து கவலைப்பட்டோம். ஆனால், தற்போது பெய்து வரும் மழையால் நாம் மகிழ்ச்சி அடைந்துள்ளோம். சில மாநிலங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வருகின்றன. இதைச் சமாளிக்க மாநில அரசுகளும் மத்திய அரசும் நெருங்கிப் பணியாற்றி வருகின்றன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவுவதற்காக அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறோம்.
இந்தியா தற்போது பல்வேறு பிரச்னைகளை எதிர்கொண்டு வருகிறது. நாம் அன்றாட வாழ்வில் பிரச்னைகளைச் சந்தித்து வருகிறோம். தற்போது அந்தப் பிரச்னைகளுக்கான தீர்வுகளை நாம் ஆராய வேண்டும். இதுபோன்ற பிரச்னைகளுக்கு தொழில்நுட்ப ரீதியிலான தீர்வுகளைக் கண்டறிவதற்காக இளைஞர்கள் ஆராய்ச்சிகளில் ஈடுபட வேண்டும்.
அடல் புதுமை படைத்தல் திட்டத்தை (அடல் இன்னோவேஷன் மிஷன் - "எய்ம்') மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் புதுமை படைத்தல், பரிசோதனை, தொழில்முனைவு என்ற கட்டமைப்பை உருவாக்கவும், வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தவும் அரசு விரும்புகிறது.
Re: நவீன தொழில்நுட்பம்தான் பிரச்னைகளுக்குத் தீர்வு!
அடுத்த தலைமுறை புதுமை படைப்போரை நாம் உருவாக்க வேண்டுமானால், "எய்ம்' திட்டத்துடன் நமது குழந்தைகளை இணைக்க வேண்டும். அதனால்தான் அடல் ஆராய்ச்சிக் கூடங்களை அமைக்கும் முன்முயற்சியை மத்திய அரசு எடுத்துள்ளது. இந்த ஆய்வகங்களை அமைக்கும் பள்ளிகளுக்கு ரூ.10 லட்சம் நிதி வழங்கப்படும். மேலும் அவற்றை ஐந்து ஆண்டுகளுக்குப் பராமரிப்பதற்கு ரூ.10 லட்சம் வழங்கப்படும்.
அப்துல் கலாமுக்கு மரியாதை: இளைஞர்கள் தாங்கள் பார்க்கும் பிரச்னைகள் குறித்து ஆராய்ச்சி செய்து, அவற்றுக்குத் தீர்வு காண வேண்டும். அவ்வாறு பிரச்னைகளுக்குத் தீர்வு காண உருவாக்கப்படும் தொழில்நுட்பங்களுக்கு விருது வழங்க அரசு விரும்புகிறது. இதுவே மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாமுக்கு நாம் செலுத்தும் உண்மையான மரியாதையாக இருக்கும்.
ஒலிம்பிக் பிரசாரம்: ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய வீரர் மற்றும் வீராங்கனைகளை ஊக்குவிக்கும் வகையில் பிரசாரம் ஒன்றை மக்கள் தொடங்க வேண்டும். வெற்றி-தோல்வி எப்படி இருந்தாலும் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பது மிகவும் அவசியமாகும்.
இப்போட்டியில் பங்கேற்கும் வீரர்-வீராங்கனைகளுக்கு நாட்டு மக்கள் வாழ்த்து தெரிவிக்க வேண்டும். அவற்றைக் கொண்டு சேர்ப்பதற்கு நான் தபால்காரராக சேவை செய்யத் தயாராக இருக்கிறேன்.
வனப் பாதுகாப்பு: பருவநிலை மாற்றம் பெரிய சவாலாக இருக்கிறது. வளர்ச்சிப் பணிகளுக்காக வனப்பகுதிகளுக்கு ஏற்படுத்தப்பட்ட பாதிப்புக்கான இழப்பீடாக மாநிலங்களுக்கு ரூ.40,000 கோடி வரை வழங்கப்பட உள்ளது. இதற்கு வழிவகுப்பதற்காக, "கேம்பா' மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட உள்ளது.
இந்த விவகாரத்தைப் பொருத்தவரை, வனமயமாக்கல் என்பதை ஒரு மக்கள் இயக்கமாக மாற்ற குடிமக்கள் முயற்சியெடுக்க வேண்டும்.
மக்களின் கொண்டாட்டம்: விரைவில் நாட்டின் 70-ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் தொடங்க உள்ளன. மேலும் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் 75-ஆவது ஆண்டுவிழாவையும் வரும் ஆகஸ்ட் 9-இல் நாடு கொண்டாட வேண்டும்.
தேசியவாதச் சூழலை உருவாக்குவதன் மூலம் நாட்டு மக்கள் இந்த நிகழ்ச்சிகளை பண்டிகை போல் கொண்டாட வேண்டும். இது அரசு நிகழ்ச்சியாக இல்லாமல் நாட்டு மக்களின் கொண்டாட்டமாக இருக்க வேண்டும். தீபாவளியைப் போல் அது நமது சொந்தப் பண்டிகையாக இருக்க வேண்டும். அது தொடர்பான படங்களை மக்கள் எனது செல்லிடப்பேசி செயலிக்கு (ஆப்) அனுப்புவார்கள் என்று நம்புகிறேன்.
எதிர்வரும் சுதந்திர தினத்தன்று செங்கோட்டையில் நான் ஆற்றவுள்ள உரையில் சேர்க்க வேண்டிய விஷயங்கள் குறித்து நாட்டு மக்கள் தங்கள் ஆலோசனைகளை எனக்கு அனுப்பி வைக்கலாம் என்றார் மோடி.
-
தினமணி
Re: நவீன தொழில்நுட்பம்தான் பிரச்னைகளுக்குத் தீர்வு!
கர்ப்பிணிகளுக்கு இலவச மருத்துவப் பரிசோதனை
அரசு சுகாதார மையங்களில் கர்ப்பிணிகளுக்கு இலவசமாக மருத்துவப் பரிசோதனை செய்யப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி வாக்குறுதி அளித்துள்ளார்.
இது தொடர்பாக, வானொலி உரையில் அவர் கூறியதாவது:
குழந்தை பிறப்பின்போது இறப்புகள் ஏற்படுவதைத் தடுக்க வேண்டியது அவசியம். உலக வங்கி வெளியிட்ட தகவல்களின்படி, இந்தியாவில் பிரசவத்தின்போது தாய்மார்கள் இறக்கும் விகிதம் கடந்த 1990-ஆம் ஆண்டில் 556-ஆக இருந்தது. அது தற்போது 174-ஆகக் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கர்ப்பிணிகளின் நலனுக்காக "பிரதம மந்திரி சுரக்ஷித் மாத்ருத்வ அபியான்' திட்டத்தை நாம் தொடங்கியுள்ளோம். அத்திட்டத்தின்கீழ் அரசு மருத்துவமனைகள் ஒவ்வொரு மாதமும் 9-ஆம் தேதியன்று ஏழை கர்ப்பிணிகளுக்கு இலவசமாக மருத்துவப் பரிசோதனை செய்து கொள்ளும் வசதிகளை அளிக்கும்.
மருத்துவமனைகளில் பணிபுரியாத மகப்பேறியல் மருத்துவர்கள் மாதம்தோறும் தங்களின் ஒரு நாளை இதற்காக ஒதுக்க வேண்டும். இதுபோன்ற பணிகளுக்கு லட்சக்கணக்கான மருத்துவர்கள் இத்திட்டத்தில் இணைய வேண்டும். தனியார் மருத்துவமனைகளில் பணிபுரியும் மகப்பேறியல் மருத்துவர்கள் மாதம்தோறும் தங்களின் ஒரு நாளை இதற்காக ஒதுக்கிப் பணியாற்ற வேண்டும்.
டெங்கு போன்ற நோய்கள் பரவி வருகின்றன. எனினும், நோய் எதிர்ப்பு மருந்துகளை அளவுக்கு அதிகமாக பயன்படுத்துவதை மக்கள் தவிர்க்க வேண்டும். டாக்டர்கள் பரிந்துரைக்கும் மருந்து, மாத்திரைகளை மட்டுமே உட்கொள்ள வேண்டும் என்றார் அவர்.
-
அரசு சுகாதார மையங்களில் கர்ப்பிணிகளுக்கு இலவசமாக மருத்துவப் பரிசோதனை செய்யப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி வாக்குறுதி அளித்துள்ளார்.
இது தொடர்பாக, வானொலி உரையில் அவர் கூறியதாவது:
குழந்தை பிறப்பின்போது இறப்புகள் ஏற்படுவதைத் தடுக்க வேண்டியது அவசியம். உலக வங்கி வெளியிட்ட தகவல்களின்படி, இந்தியாவில் பிரசவத்தின்போது தாய்மார்கள் இறக்கும் விகிதம் கடந்த 1990-ஆம் ஆண்டில் 556-ஆக இருந்தது. அது தற்போது 174-ஆகக் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கர்ப்பிணிகளின் நலனுக்காக "பிரதம மந்திரி சுரக்ஷித் மாத்ருத்வ அபியான்' திட்டத்தை நாம் தொடங்கியுள்ளோம். அத்திட்டத்தின்கீழ் அரசு மருத்துவமனைகள் ஒவ்வொரு மாதமும் 9-ஆம் தேதியன்று ஏழை கர்ப்பிணிகளுக்கு இலவசமாக மருத்துவப் பரிசோதனை செய்து கொள்ளும் வசதிகளை அளிக்கும்.
மருத்துவமனைகளில் பணிபுரியாத மகப்பேறியல் மருத்துவர்கள் மாதம்தோறும் தங்களின் ஒரு நாளை இதற்காக ஒதுக்க வேண்டும். இதுபோன்ற பணிகளுக்கு லட்சக்கணக்கான மருத்துவர்கள் இத்திட்டத்தில் இணைய வேண்டும். தனியார் மருத்துவமனைகளில் பணிபுரியும் மகப்பேறியல் மருத்துவர்கள் மாதம்தோறும் தங்களின் ஒரு நாளை இதற்காக ஒதுக்கிப் பணியாற்ற வேண்டும்.
டெங்கு போன்ற நோய்கள் பரவி வருகின்றன. எனினும், நோய் எதிர்ப்பு மருந்துகளை அளவுக்கு அதிகமாக பயன்படுத்துவதை மக்கள் தவிர்க்க வேண்டும். டாக்டர்கள் பரிந்துரைக்கும் மருந்து, மாத்திரைகளை மட்டுமே உட்கொள்ள வேண்டும் என்றார் அவர்.
-
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|