ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

வியட்நாமில் சுபாசுக்கு உதவிய தமிழன் தியாகி. லியோன் புருசாந்தி

2 posters

Go down

வியட்நாமில் சுபாசுக்கு உதவிய தமிழன் தியாகி. லியோன் புருசாந்தி Empty வியட்நாமில் சுபாசுக்கு உதவிய தமிழன் தியாகி. லியோன் புருசாந்தி

Post by கார்த்திக் செயராம் Tue Jul 19, 2016 12:55 am



வியட்நாமில் சுபாசுக்கு உதவிய தமிழன் தியாகி. லியோன் புருசாந்தி QR6Q5vERGKqea4Sf7Knq+3

லெயோன் புருஷாந்தி(Leon Prouchandy)
லெயோன் புருஷாந்தி (Leon Prouchandy) அவர்கள் புதுச்சேரியில் 1901 மே மாதம் முதல் தேதியில் பிறந்தவர். பிரெஞ்சுக் கல்வியில் “பிரவே” வகுப்பு வரை பயின்றவர். பிரெஞ்சு மொழியைப் பேசுவதிலும் எழுதுவதிலும் வல்லவர். இவர் பிரெஞ்சுக்காரர்களின் ஆட்சிக்கு உட்பட்டிருந்த சைக்கோனில் வேளாண்மை வங்கியில் கணக்குப்பிரிவில் அதிகாரியாகப் பணிபுரிந்தவர். 1932 இல் காந்தியடிகளின் வேண்டுகோளுக்கு இணங்க தம் வேலையைத் துறந்து, ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்டு உழைத்தவர்.
பெரும் செல்வ வளம் பெற்றிருந்த லெயோன் புருஷாந்தி அவர்கள் சைக்கோனில்(வியட்நாம்) வாழ்ந்த தமிழர்களால் பெரிதும் மதிக்கப்பட்டவர். 1939 இல் சைக்கோனில் நடைபெற்ற தமிழர் மாநாடு வெற்றியாக நடைபெறுவதற்குப் பெரிதும் காரணமாக இருந்தவர். அந்த மாநாட்டில் தமிழருக்கு ஏற்றத் தாழ்வுகள் மாறி மாறிவரும் என்று இவர் பேசிய பேச்சு சைக்கோனில் தமிழ் இதழ்களில் வெளிவந்துள்ளது. தமிழர்கள் அனைவரும் உடையில் கவனம் செலுத்த வேண்டும் என்று குறிப்பிட்டுத், தமிழர்கள் வேட்டி, கைலி அணிவதை நிறுத்தி, பேண்டு, சட்டை அணிய வலியுறுத்தினார். அதுபோல் குடுமி நீக்கி, கிராப் வெட்ட வேண்டும் என்றார். 1930 ஆம் ஆண்டளவில் உடைச்சீர்திருத்தத்தை வலியுறுத்தி, மகாத்மா காந்தியடிகளுக்கும், தந்தை பெரியார் அவர்களுக்கும் மடல் விடுத்துள்ளார்.
1939 ஆம் ஆண்டளவில் இரண்டாம் உலகப்போர் மூண்டது. பிரான்சு நாட்டைச் செர்மானியப் படைகள் கைப்பற்றின. செர்மானியரின் சொற்படி பிரெஞ்சு தேசம் ஆளப்பட்டது. பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்த இந்தோ சீனத்தில் சப்பானியரின் ஆதிக்கம் அதிகமாக இருந்தது.
பிரெஞ்சு ஆதிக்கம் வீழ்ந்தாலும் சைக்கோனில் உள்ள புதுச்சேரித் தமிழர்கள் சப்பானியருக்கு ஒத்துழைப்புத் தரத் தயங்கினர். நேதாஜி அவர்கள் சப்பானியரின் துணையுடன் இந்திய விடுதலை பெற்றுத் தருவார் என்று நம்பிய லெயோன் புருஷாந்தி அவர்கள் நேதாஜியின் படைக்குப் பலவகையில் ஆதரவு திரட்டினார். நேதாஜி அவர்கள் சைக்கோன் தெருக்களில் காரில் ஊர்வலமாக வந்தபொழுது காசு மாலைகளை அணிவித்துப் பெருமை செய்தார்.
நேதாஜியின் இந்தியத் தேசிய இராணுவத்தின் அலுவலகத்திற்குச் சைக்கோனில் தாம் வாழ்ந்த வளமனையை வாடகையின்றி இலவசமாகக் கொடுத்து உதவினார். சைக்கோனில் Rue Paul Blanchy தெருவில் உள்ள 76 ஆம் எண்ணுள்ள வீட்டில்தான் இந்திய தேசிய இராணுவத்தின் அலுவலகம் செயல்பட்டுள்ளது. படைக்கு ஆள் சேர்ப்பது, இரகசியக் கூட்டங்கள் நடத்துவது இவர் வீட்டில்தான் நடந்துள்ளது. இங்கு இந்துத்தானி மொழியும் இந்தியர்களுக்கு தமிழர்களுக்கு) கற்பிக்கப்பட்டது. இதற்கான சான்றுகள் சைக்கோனிலிருந்து வெளியான ஆசாத் ஹிந்த்(Azad Hind)(சூலை 1945) இதழில் உள்ளன.
அமெரிக்காவின் அணுக்குண்டு தாக்குதலுக்குப் பிறகு சப்பான் தன் தோல்வியை ஒப்புக்கொண்டது. இதனால் பிரெஞ்சுப் படையினர் சைக்கோன் வந்திறங்கினர். பிரெஞ்சுநாட்டுக்கு எதிராக லெயோன் புருஷாந்தி செயல்பட்டார் என்று இராசதுரோகக் குற்றம் சுமத்தப்பட்ட நிலையில் மூன்றுமாத சிறைத்தண்டனைக்கு ஆளானார். மூன்றுமாதம் கடுமையான சித்திரவதைகளுக்குப் பிறகு மனநிலை பாதிக்கப்பட்டு லெயோன் புருஷாந்தி மனநோயாளியாக வெளிவந்தார். சிறைதண்டனைக்குப் பிறகு பழைய நினைவுகள் எதுவும் இல்லாமல் இருந்தார். தம் செல்வநிலை, நிலபுலங்கள் பற்றிய எந்த நினைவும் இல்லாதபடி இருந்தார். அந்த அளவு சிறையில் மின்சாரம் பாய்ச்சப்பெற்றுச் சித்திரவதைக்கு ஆளானார்.
சைக்கோனில் இருந்த Dr. Le Villain என்ற ஆங்கில மருத்துவரிடம் மருத்துவம் பார்த்துக்கொண்டார். ஆனால் மருத்துவம் பயனளிக்கவில்லை. இந்தோ சீனத்தில் இருந்த சொத்துகள் எதனையும் விற்பனை செய்யாமல் லெயோன் புருஷாந்தி குடும்பத்தினர் 1946 ஆம் ஆண்டில் புதுச்சேரி வந்துவிட்டனர். இவர்தம் வீடுகளும், சொத்துகளும் வியட்நாமியர் வாழும் இடமாக மாறிப்போனது. சென்னை மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட லெயோன் புருஷாந்தி அவர்கள் ஓரளவு நலம் பெற்றாலும் மனநிலை பாதிக்கப்பட்டிருந்தார். லெயோன் புருஷாந்தி அவர்கள் தம் 65 ஆம் அகவையில் புதுச்சேரியில் இயற்கை எய்தினார்.
குதிரையேற்ற வீரராகவும், இந்திய விடுதலைக்கு உழைத்தவராகவும், தம் பொருள் செல்வங்களை வழங்கியவராகவும் விளங்கிய லெயோன் புருஷாந்தி அவர்களின் வாழ்வு முழுமையாக ஆராய்ந்து எழுதப்பட வேண்டிய ஒன்றாகும். மேலும் 1940 முதல் 1945 வரை இந்தோ சீனத்தில் நடைபெற்ற நேதாஜி அவர்களின் செயல்பாடுகளும் எழுதிப் பாதுகாக்கப்பட வேண்டும்.

நன்றி முனைவர். மு.இளங்கோவன்.


எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Back to top Go down

வியட்நாமில் சுபாசுக்கு உதவிய தமிழன் தியாகி. லியோன் புருசாந்தி Empty Re: வியட்நாமில் சுபாசுக்கு உதவிய தமிழன் தியாகி. லியோன் புருசாந்தி

Post by Dr.S.Soundarapandian Sat Jul 23, 2016 1:05 pm

வியட்நாமில் சுபாசுக்கு உதவிய தமிழன் தியாகி. லியோன் புருசாந்தி 1571444738


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum