Latest topics
» உமா ரமணன் பாடல்கள்by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
பந்தம், தீப்பந்தம் ஆவது ஏன்?
3 posters
Page 1 of 1
பந்தம், தீப்பந்தம் ஆவது ஏன்?
பந்த பாசங்களை, வேஷங்கள், மோசங்கள் என்போர் கவனிக்க!
பந்தம் என்றால், உறவு; ஆனால், அது, ஒற்றைச் சொல் அல்ல. சொல்லும் போதே பாசம் என்பதையும் சேர்த்து, பந்த பாசம் என்று சொல்வதே மரபு!
உறவு என்பதே பாசத்துடன் இணைந்த ஒன்று தான். என் உடன்பிறந்தோரில் அக்கா, தம்பி, தங்கை உண்டு; அண்ணன் இல்லை. இதனால், 'அண்ணன் இல்லையே...' என்ற ஏக்கமும், 'நமக்கு அண்ணன் என்கிற கொடுப்பினை இல்லையே...' என்றும் எண்ணியது உண்டு.
ஆனால், 'தாய்வழி பெரியம்மாக்கள் மூலம், உனக்கு ஐந்து அண்ணன்கள் இருக்கின்றனரே... இவர்களை ஏன் நீ, அண்ணன்களாக கருதவில்லை...' என்று என் மனமே, என்னை வினவிய போது, 'அதானே...' என, மனம் தெளிந்தேன்.
பின், இவர்களுடன் நெருக்கம் ஏற்படுத்தி, 'அண்ணே... அண்ணே...' என்று வாய் நிறைய சொல்லி, பூரித்து மகிழ்ந்தேன். அவர்களது பாசமும், பரிவும் கண்ணாடியின் பிரதிபலிப்புகளாய் எனக்கு திருப்பி கிடைத்த போது, பூரித்துப் போனேன்.
ஆனால், ஒரே கருப்பையில் தோன்றி வளர்ந்தவர்கள் கருத்து வேறுபட்டு நிற்கிற போது, இயற்கை ஏற்படுத்தி தந்த இந்த அருமையான இணைப்பையும், இப்படி மழுங்கடித்து கொள்ள தான் வேண்டுமா என்கிற முதல் உணர்வே, தலைதூக்கி நிற்க வேண்டும்.
உறவினர்களை பற்றி பொதுவாக சொல்லப் படுகிற குறைகள் இரண்டு...
'என் வளர்ச்சி கண்டு வயிறு எரிகின்றனர்; பொறாமைப்பட்டு சாகின்றனர்...' என்பது, முதல் குற்றச்சாட்டு.
இக்குற்றச்சாட்டில், கால்வாசி கற்பனை; கால்வாசி பொய். ஊகங்கள் எல்லாம் உண்மையாகி விடாது.
எச்சில் கையால் காக்காய் ஓட்டினால், கையில் உள்ள பருக்கைகள் காக்காய்க்கு உணவாகி விடும் என்று, இடது கையால் காக்காய் ஓட்டும் கஞ்சப் பிசினாறிகள் உண்டு. இவர்கள் உறவினர்களுக்கு என்று எதுவுமே செய்யாதபோது தான், அவர்களிடையே பொறாமை வளர்கிறது.
'நம் புது காரில் ஏறி, ரயில் நிலையத்தில் இறங்கிக் கொள்ளுங்கள்; என் மலைவாச இல்லத்தில் குடும்பத்தோடு ஒரு வாரம் தங்கி வாருங்கள்; என் வங்கிக் கணக்கில் உறங்குகிற பணம், உங்கள் பிள்ளையின் படிப்பிற்கு பயன்படட்டும்; பின், சவுகரியப்படும் போது தாருங்கள்...' என்றெல்லாம் நம் வளர்ச்சியின் வாச மலர்களை, உறவினரும் நுகரும்படி கொடுக்காத உறவினர்களால் என்ன பயன்! வளத்தால் உயர்ந்து நிற்பவர்கள், மனதால் உயர்ந்து நிற்க வேண்டாமா... இவர்களை பார்த்து உறவினர் பலரும் வயிறு எரியாமல், வேறு என்ன செய்வராம்!
'அவர் நன்றாக இருந்தால், அது நமக்கும் உதவி; நல்லது...' என்று நம் உறவினர் வட்டத்தை நினைக்கும்படி செய்யாதது, வளர்ந்தவர்களின் தவறல்லவா!
உடல் உழைப்பால், செல்வாக்கால், புகழால், உறவினர் எவருக்கும் பயன்படாத ஒருவரது வாழ்க்கையை, முழுமையற்ற வாழ்க்கை என்பேன். உறவினர் மீதான இரண்டாவது குற்றச்சாட்டு, உறவிற்குள் இருக்கிற சம்பிரதாயங்களை சரிவர பின்பற்றவில்லை என்பது!
'எனக்கு முறைப்படி சொல்லவில்லை; எவனோ சொல்லியல்லவா எனக்கு தெரிய வந்தது. முதலில் எனக்கல்லவா சொல்லியிருக்க வேண்டும்... முறைப்படி அழைக்கவில்லை; அலட்சியப்படுத்துகிறார்; கேவலப்படுத்தி விட்டார்.
நன்கு வரவேற்கவில்லை; முகம் கொடுத்து பேசவில்லை; வாங்க என்று கூப்பிடவில்லை; சரி வர உபசரிக்கவில்லை; சாப்பிடச் சொல்லவில்லை; தாம்பூலப் பையும், பரிசும் தரவில்லை...' என்று ஆரம்பித்து, 'துக்கம் விசாரிக்க வரவில்லை; என் வீட்டு விசேஷத்திற்கு வரவில்லை; என்னை மதிப்பதே இல்லை...' என்கிற பெரிய புகார் பட்டியல் இதனுள் அடக்கம்.
ஒன்று சொல்லட்டுமா... இவற்றையெல்லாம் தாண்டிய பெருந்தன்மை நமக்கு வேண்டும். 'போகட்டும் விடு; அவர்கள் குறைபட நடந்து கொண்டாலும், நாம் பெருந்தன்மை காட்டுவோம்...' என்று சம்பிரதாயங்களையும், சடங்குகளையும் மீறிய போக்கை கடைப்பிடிக்க வேண்டும்.
மறுக்காமல் ஒரு உண்மையை ஒப்புக் கொள்வோம். நண்பர்களை மன்னிக்க முன் வருகிற அளவிற்கு, நமக்கு உறவினர்களை மன்னிக்கிற பெருந்தன்மை ஏனோ இல்லை.
உறவினர்களை, உறவினர்களாக மட்டும் பார்க்காமல், அவர்கள் மீது ஒருவித நட்பு பூச்சையும் பூசிக் கொண்டால், பெருந்தன்மையும், மன்னிக்கும் மனோபாவமும் நம்முள் வளர்ந்து விடும்.
நட்பு நாம் தேடிக் கொண்டது; உறவு, இயற்கை தந்த அற்புத அன்பளிப்பு. நல்லதோர் வீணை இது; இதை, நலங்கெடப் புழுதியில் எறியலாமா?
லேனா தமிழ்வாணன்
பந்தம் என்றால், உறவு; ஆனால், அது, ஒற்றைச் சொல் அல்ல. சொல்லும் போதே பாசம் என்பதையும் சேர்த்து, பந்த பாசம் என்று சொல்வதே மரபு!
உறவு என்பதே பாசத்துடன் இணைந்த ஒன்று தான். என் உடன்பிறந்தோரில் அக்கா, தம்பி, தங்கை உண்டு; அண்ணன் இல்லை. இதனால், 'அண்ணன் இல்லையே...' என்ற ஏக்கமும், 'நமக்கு அண்ணன் என்கிற கொடுப்பினை இல்லையே...' என்றும் எண்ணியது உண்டு.
ஆனால், 'தாய்வழி பெரியம்மாக்கள் மூலம், உனக்கு ஐந்து அண்ணன்கள் இருக்கின்றனரே... இவர்களை ஏன் நீ, அண்ணன்களாக கருதவில்லை...' என்று என் மனமே, என்னை வினவிய போது, 'அதானே...' என, மனம் தெளிந்தேன்.
பின், இவர்களுடன் நெருக்கம் ஏற்படுத்தி, 'அண்ணே... அண்ணே...' என்று வாய் நிறைய சொல்லி, பூரித்து மகிழ்ந்தேன். அவர்களது பாசமும், பரிவும் கண்ணாடியின் பிரதிபலிப்புகளாய் எனக்கு திருப்பி கிடைத்த போது, பூரித்துப் போனேன்.
ஆனால், ஒரே கருப்பையில் தோன்றி வளர்ந்தவர்கள் கருத்து வேறுபட்டு நிற்கிற போது, இயற்கை ஏற்படுத்தி தந்த இந்த அருமையான இணைப்பையும், இப்படி மழுங்கடித்து கொள்ள தான் வேண்டுமா என்கிற முதல் உணர்வே, தலைதூக்கி நிற்க வேண்டும்.
உறவினர்களை பற்றி பொதுவாக சொல்லப் படுகிற குறைகள் இரண்டு...
'என் வளர்ச்சி கண்டு வயிறு எரிகின்றனர்; பொறாமைப்பட்டு சாகின்றனர்...' என்பது, முதல் குற்றச்சாட்டு.
இக்குற்றச்சாட்டில், கால்வாசி கற்பனை; கால்வாசி பொய். ஊகங்கள் எல்லாம் உண்மையாகி விடாது.
எச்சில் கையால் காக்காய் ஓட்டினால், கையில் உள்ள பருக்கைகள் காக்காய்க்கு உணவாகி விடும் என்று, இடது கையால் காக்காய் ஓட்டும் கஞ்சப் பிசினாறிகள் உண்டு. இவர்கள் உறவினர்களுக்கு என்று எதுவுமே செய்யாதபோது தான், அவர்களிடையே பொறாமை வளர்கிறது.
'நம் புது காரில் ஏறி, ரயில் நிலையத்தில் இறங்கிக் கொள்ளுங்கள்; என் மலைவாச இல்லத்தில் குடும்பத்தோடு ஒரு வாரம் தங்கி வாருங்கள்; என் வங்கிக் கணக்கில் உறங்குகிற பணம், உங்கள் பிள்ளையின் படிப்பிற்கு பயன்படட்டும்; பின், சவுகரியப்படும் போது தாருங்கள்...' என்றெல்லாம் நம் வளர்ச்சியின் வாச மலர்களை, உறவினரும் நுகரும்படி கொடுக்காத உறவினர்களால் என்ன பயன்! வளத்தால் உயர்ந்து நிற்பவர்கள், மனதால் உயர்ந்து நிற்க வேண்டாமா... இவர்களை பார்த்து உறவினர் பலரும் வயிறு எரியாமல், வேறு என்ன செய்வராம்!
'அவர் நன்றாக இருந்தால், அது நமக்கும் உதவி; நல்லது...' என்று நம் உறவினர் வட்டத்தை நினைக்கும்படி செய்யாதது, வளர்ந்தவர்களின் தவறல்லவா!
உடல் உழைப்பால், செல்வாக்கால், புகழால், உறவினர் எவருக்கும் பயன்படாத ஒருவரது வாழ்க்கையை, முழுமையற்ற வாழ்க்கை என்பேன். உறவினர் மீதான இரண்டாவது குற்றச்சாட்டு, உறவிற்குள் இருக்கிற சம்பிரதாயங்களை சரிவர பின்பற்றவில்லை என்பது!
'எனக்கு முறைப்படி சொல்லவில்லை; எவனோ சொல்லியல்லவா எனக்கு தெரிய வந்தது. முதலில் எனக்கல்லவா சொல்லியிருக்க வேண்டும்... முறைப்படி அழைக்கவில்லை; அலட்சியப்படுத்துகிறார்; கேவலப்படுத்தி விட்டார்.
நன்கு வரவேற்கவில்லை; முகம் கொடுத்து பேசவில்லை; வாங்க என்று கூப்பிடவில்லை; சரி வர உபசரிக்கவில்லை; சாப்பிடச் சொல்லவில்லை; தாம்பூலப் பையும், பரிசும் தரவில்லை...' என்று ஆரம்பித்து, 'துக்கம் விசாரிக்க வரவில்லை; என் வீட்டு விசேஷத்திற்கு வரவில்லை; என்னை மதிப்பதே இல்லை...' என்கிற பெரிய புகார் பட்டியல் இதனுள் அடக்கம்.
ஒன்று சொல்லட்டுமா... இவற்றையெல்லாம் தாண்டிய பெருந்தன்மை நமக்கு வேண்டும். 'போகட்டும் விடு; அவர்கள் குறைபட நடந்து கொண்டாலும், நாம் பெருந்தன்மை காட்டுவோம்...' என்று சம்பிரதாயங்களையும், சடங்குகளையும் மீறிய போக்கை கடைப்பிடிக்க வேண்டும்.
மறுக்காமல் ஒரு உண்மையை ஒப்புக் கொள்வோம். நண்பர்களை மன்னிக்க முன் வருகிற அளவிற்கு, நமக்கு உறவினர்களை மன்னிக்கிற பெருந்தன்மை ஏனோ இல்லை.
உறவினர்களை, உறவினர்களாக மட்டும் பார்க்காமல், அவர்கள் மீது ஒருவித நட்பு பூச்சையும் பூசிக் கொண்டால், பெருந்தன்மையும், மன்னிக்கும் மனோபாவமும் நம்முள் வளர்ந்து விடும்.
நட்பு நாம் தேடிக் கொண்டது; உறவு, இயற்கை தந்த அற்புத அன்பளிப்பு. நல்லதோர் வீணை இது; இதை, நலங்கெடப் புழுதியில் எறியலாமா?
லேனா தமிழ்வாணன்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: பந்தம், தீப்பந்தம் ஆவது ஏன்?
![பந்தம், தீப்பந்தம் ஆவது ஏன்? 103459460](/users/1813/71/41/02/smiles/103459460.gif)
-
உறவுகளிடம் எதிர்பார்ப்பு அதிகம்....
அதனை அந்த உறவுகள் மதித்து நடக்க வேண்டும்
-
உதாரணமாக கும்பகோணத்திலிருந்து யாராவது
விருந்தினராக நம் வீட்டுக்கு வந்தால், வாங்க
என்று வரவேற்பதோடு, வெற்றிலை சீவல் சுண்ணாம்பு
தட்டை (:தாம்பூலம் )கொண்டு வந்து வைக்க வேண்டும்,,,!
-
அவ்வாறு நடந்து கொள்ளா விட்டால், அவர்கள்
பார்வையில் நாகரிகம் தெரியாத ஜன்மமாகத்தான்
நாம் தெரிவோம்...
-
அதே போல் கிராமப்புறங்களுக்கு சென்று திருமணத்திற்கு
பத்திரிகை வைத்தால் , பொத்தாம் பொதுவாக எல்லோரும்
திருமணத்திற்கு வந்து விடுங்கள் - என்று கூறினால்
போதாது...
-
அவர்களது குழந்தைகளின் பெயர்களை சொல்லி
அவர்களையும் தவறாமல் அழைத்துக் கொண்டு வரணும்னு
சொல்லணும்...
-
இல்லையென்றால் பெரிசுகள் மட்டும் திருமணத்திற்கு
வருவார்கள்
குழந்தைகளை ஏன் அழைத்து வரவில்லை என்று கேட்டால்
அவங்களை அழைத்து வரணும்னு நீங்க சொல்லலையே
என்று நம்மீதே குற்றம் சாட்டுவார்கள்...
-
இப்படி சில நடைமுறை இருக்கு...
வீடு கிரகப் பிரவேசம் செய்வதற்கு திடீரென நிச்சயித்து
விட்டதால், பத்திரிகை அடிக்கவில்லை, போனிலேயே
சொல்றேன், அவசியம் வரணும்னு ஆண்கள் மட்டும்
அன்பொழுக கூப்பிடுவார்கள்...அவரது துணைவியாரும்
போனில் கூப்பிட வேண்டும் என்பதை மறந்து விடுவார்கள்
-
போனில் அழைப்பு வந்தாலும் பரவாயில்லை போகலாம் என்று
தீர்மானிக்க முடியாது....மனைவி ஒப்புக் கொள்ள மாட்டார்...!!
-
ஆகவே உறவுகளும் சரியாக சில நடைமுறைகளை கடைப்பிடிக்க
வேண்டும்...
-
அப்போதுதான் உறவுகள் உயிரோட்டமுள்ளதாக இருக்கும்
-
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» துரத்தும் தோல்வி… துவண்ட தோனி…குஜராத்துக்கு 6-ஆவது வெற்றி; புணேவுக்கு 5-ஆவது வீழ்ச்சி
» மும்பைக்கு 3-ஆவது வெற்றி: பஞ்சாபுக்கு 5-ஆவது தோல்வி
» பந்தம்
» பந்தம், கஜா
» பந்தம்
» மும்பைக்கு 3-ஆவது வெற்றி: பஞ்சாபுக்கு 5-ஆவது தோல்வி
» பந்தம்
» பந்தம், கஜா
» பந்தம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|