Latest topics
» எவ்வகை காதல்by ayyasamy ram Today at 12:11
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 12:09
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 12:08
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 12:06
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 12:04
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 9:20
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 9:17
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:24
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Today at 1:12
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:11
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:04
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 0:57
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 0:51
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 0:04
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 22:13
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:40
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 21:21
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 21:13
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 20:38
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:34
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:18
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 20:07
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:37
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 18:19
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 18:00
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 15:03
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 15:00
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 14:58
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 14:54
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 14:52
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:50
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:55
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 0:23
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 23:27
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 4 Oct 2024 - 17:52
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:46
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:45
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:44
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:42
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:41
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:39
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed 2 Oct 2024 - 3:12
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Abiraj_26 | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
லைஃப் இன்ஷூரன்ஸ்... சிக்கல் இல்லாமல் க்ளெய்ம் பெற சில வழிகள்
2 posters
Page 1 of 1
லைஃப் இன்ஷூரன்ஸ்... சிக்கல் இல்லாமல் க்ளெய்ம் பெற சில வழிகள்
லைஃப் இன்ஷூரன்ஸ்... சிக்கல் இல்லாமல் க்ளெய்ம் பெற சில வழிகள்!
லைஃப் இன்ஷூரன்ஸ் நிறுவனத்திலிருந்து பேசுகிறோம் என்றாலே இப்போதெல்லாம் மக்கள் எரிச்சலடைகிறார்கள். இன்ஷுரன்ஸ் பாலிசி அவர்களுக்கு அவசியமான ஒன்று; தவிர, அவர்களால் ஒரு பாலிசியை எடுக்க முடியும் என்றாலும்கூட அவர்கள் அப்படி எரிச்சல் அடைவதற்கு காரணங்கள் பலப்பல. அதில் முக்கியமான காரணம், க்ளெய்ம்.
லைஃப் இன்ஷுரன்ஸ் பாலிசி எடுத்த பலருக்கு தாங்கள் எதிர்பார்த்த க்ளெய்ம் கிடைக்கவில்லை என்பதுதான் புலம்பலாகவே இருக்கிறது. ஆனால், இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் தங்களின் செட்டில் மென்ட் விகிதம் 90% என்று விளம்பரப்படுத்திக் கொள்கின்றன. அப்படியெனில் க்ளெய்ம் சரியாக கிடைக்கவில்லை என்று பாலிசிதாரர்கள் ஏன் புகார் செய்கிறார்கள் என்ற கேள்வி எழுவது இயல்பே.
பாலிசிதாரர் கோரியுள்ள க்ளெய்மை சரியாக தர வேண்டும் என்பது ஒரு இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் தலையாய கடமை என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. ஆனால் இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் க்ளெய்ம் தொகையைக் குறைப்பதற்கும், முழுவதுமாக மறுப்பதற்கும் சொல்லும் காரணங்கள் என்னென்ன, எந்த இடத்தில் எல்லாம் இன்ஷூரன்ஸ் பாலிசிதாரர் கவனத்துடன் இருக்க வேண்டும் என்பவை ஒரு பாலிசிதாரர் தனக்கான க்ளெய்மை சரியாகப் பெற அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் ஆகும்.
சிக்கல்கள் இல்லாமல் க்ளெய்மை சரியாகப் பெறுவதற்கு கவனிக்க வேண்டிய விஷயங்களை இங்கே கொடுத்துள்ளோம்.
1. நீங்கள் எடுக்க விரும்பும் ஆயுள் காப்பீடு பாலிசியை பற்றி முதலில் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். அதில் உங்களுக்குள்ள சந்தேகங்களையும் கேள்வி களையும் ஏஜென்டிடமோ, இன்ஷூரன்ஸ் நிறுவனத்திடமோ கேட்டு தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டும்.
2. பாலிசி விண்ணப்பத்தை முழுவதுமாகப் படித்துப் புரிந்துகொள்ள வேண்டும். ஆங்கிலம் புரியவில்லை என்றால் தெரிந்த நண்பரையோ, உறவினரையோ படித்து காட்டச் சொல்லவும். முடிந்தவரை விண்ணப்பத்தை நீங்களே பூர்த்தி செய்யுங்கள். வேறொருவர் மூலமாகப் பூர்த்தி செய்தாலும், முழுவதுமாகப் படித்து, சரிபார்த்தபின் கையெழுத்திட வும். பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பத்தில் மறந்தும் கையெழுத்து போடாதீர்கள்.
3. மேலும், பாலிசியின் மூலம் கிடைக்கக்கூடிய அத்தனை பலன்களையும் கேட்டு, அவை உங்களுடைய தேவைகளைப் பூர்த்தி செய்தால் மட்டும் அந்த பாலிசியில் கையெழுத்திடுங்கள்.
4. வயது, படிப்பு, வேலை, வருமானம், பழக்கவழக்கம், குடும்ப வரலாறு, உடல்நலம் மற்றும் ஏற்கெனவே உள்ள பாலிசிகள் உள்ளிட்ட விவரங்களைப் பூர்த்தி செய்யும்போது உண்மையான விவரங்களை மட்டுமே குறிப்பிடுங்கள். நீங்கள் கொடுக்கும் விவரங்களைப் பொறுத்தே உங்களுக்கான க்ளெய்ம் இருக்கும். தவறான விவரங்களால் க்ளெய்ம் குறையும் வாய்ப்புகளே அதிகம். சில சமயங்களில் முற்றிலும் மறுக்கப்படலாம்.
5. உங்களுடைய வங்கிக் கணக்கு விவரங்களைச் சரியாக வழங்கவும். இதன் மூலம் உங்களுடைய முதிர்வுத் தொகை / இழப்பீட்டு தொகையை விரைவாகவும் நேரடியாகவும் வங்கிக் கணக்கு மூலம் பெற்றுக்கொள்ள முடியும்.
6. நாமினியாக மிக நெருங்கிய குடும்ப உறுப்பினரை (வாழ்க்கைத் துணை - கணவன் / மனைவி, குழந்தை அல்லது பெற்றோர்) மட்டுமே குறிப்பிடுங்கள். அப்போதுதான் இழப்பீட்டைச் சிக்கல் இல்லாமல் எளிதில் பெற முடியும். மேலும், நாமினியின் பெயர், பிறந்த தேதி உள்ளிட்ட விவரங்கள் சரியாகக் குறிப்பிட்டிருக்க வேண்டும்.
7. ஒன்றுக்கு மேற்பட்ட நாமினி கள் இருந்தால், அவர்களுக்கான பங்கீட்டை தெளிவாகக் குறிப்பிட வேண்டும். உதாரணத்துக்கு: வாழ்க்கைத் துணைக்கு 50%, பிள்ளைக்கு 50% 8. முக்கியமாக பாலிசி எடுத்திருப்பது குறித்து நாமினிக்கு தெரியப்படுத்துவது அவசியம்.
9. பாலிசி கான்ட்ராக்ட் வரும்போது, நீங்கள் ஆரம்பத்தில் குறிப்பிட்ட அனைத்தும் அந்த கான்ட்ராக்டில் இருக்கிறதா என்பதை முழுவதுமாக படித்து உறுதிபடுத்திக் கொள்ளுங்கள்.
10. ஐஆர்டிஏஐ விதிமுறைப்படி, நீங்கள் கையெழுத்திட்ட விண்ணப்பப் படிவத்துடன், அந்த பாலிசியில் கிடைக்கத்தக்க பலன்களின் விவரம் அடங்கிய பேப்பரும் உங்களுக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும். அப்படி வரும் விண்ணப்பப் படிவமோ, பலன்கள் குறிப்பு பேப்பரோ உங்களுடையதாக இல்லை யெனில் உடனடியாக இன்ஷூரன்ஸ் நிறுவனத்திடம் முறையிட வேண்டும்.
11. உங்களுடைய பாலிசி கான்ட்ராக்டை பாதுகாப்பான இடத்தில் பத்திரப்படுத்தவும். மேலும், நாமினியிடம் இது குறித்து தெரிவித்துவிட வேண்டும். அதில் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தைத் தொடர்பு கொள்வதற்கான எண் மற்றும் விலாசம் இருந்தால் நாமினியிடம் தெரியப்படுத்தவும். பாலிசி தாரர் இறக்கும்பட்சத்தில் அதற்கான க்ளெய்மை உடனடியாகப் பெற வேண்டும் என்பதை அவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.
12. பாலிசிக்கான பிரீமியத்தை சரியான நேரத்தில் செலுத்திவிட வேண்டும். இதன் மூலம் க்ளெய்ம் குறைக்கப் படுவதையோ, மறுக்கப் படுவதையோ தவிர்க்கலாம்.
13.உங்களுடைய முகவரியையோ, நாமினியையோ மாற்ற விரும்பினால், உடனடியாக இன்ஷூரன்ஸ் நிறுவனத்திடம் தெரிவித்துவிட வேண்டும். அப்போதுதான் உங்களைத் தொடர்புகொள்வதிலும் க்ளெய்ம் வழங்குவதிலும் சிக்கல் இருக்காது.
14. உங்களுடைய நாமினி என்பதை உறுதி செய்ய போது மான அடையாள அட்டை, முகவரி உறுதிச் சான்று கட்டாயம் அவசியம். உதாரணம்: ஆதார் அட்டை, பாஸ்போர்ட், ரேஷன் கார்டு, டிரைவிங் லைசன்ஸ், பான் கார்டு உள்ளிட்டவை.
15. நாமினிக்கு வங்கிக் கணக்கு இருப்பது அவசியம். அதன் மூலம் க்ளெய்ம் தாமதமாவதைத் தவிர்க்கலாம்.
16. பாலிசி கான்ட்ராக்டில் குறிப்பிட்டுள்ள, க்ளெய்முக்கு தேவையான ஆவணங்கள் அனைத்தும் சரியாக இருக்க வேண்டும். உதாரணம்: இறப்புச் சான்று, மருத்துவர் அறிக்கை, மருத்துவமனை ஆவணங்கள் மற்றும் நாமினியின் கேஒய்சி ஆவணங்கள் ஆகியவை.
17. நாமினியானவர் பாலிசிதாரர் இறந்ததும், கூடிய விரைவில் லைஃப் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தை அணுகி அனைத்து ஆவணங்களையும் சரியாக சமர்ப்பித்து க்ளெய்ம் குறித்த நடவடிக்கைகளை எடுத்துவிட வேண்டும்.
இவையனைத்தையும் சரியாக செய்தால் க்ளெய்ம் மறுக்கப் படுவதற்கான வாய்ப்பே இல்லை.
லைஃப் இன்ஷூரன்ஸ் நிறுவனத்திலிருந்து பேசுகிறோம் என்றாலே இப்போதெல்லாம் மக்கள் எரிச்சலடைகிறார்கள். இன்ஷுரன்ஸ் பாலிசி அவர்களுக்கு அவசியமான ஒன்று; தவிர, அவர்களால் ஒரு பாலிசியை எடுக்க முடியும் என்றாலும்கூட அவர்கள் அப்படி எரிச்சல் அடைவதற்கு காரணங்கள் பலப்பல. அதில் முக்கியமான காரணம், க்ளெய்ம்.
லைஃப் இன்ஷுரன்ஸ் பாலிசி எடுத்த பலருக்கு தாங்கள் எதிர்பார்த்த க்ளெய்ம் கிடைக்கவில்லை என்பதுதான் புலம்பலாகவே இருக்கிறது. ஆனால், இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் தங்களின் செட்டில் மென்ட் விகிதம் 90% என்று விளம்பரப்படுத்திக் கொள்கின்றன. அப்படியெனில் க்ளெய்ம் சரியாக கிடைக்கவில்லை என்று பாலிசிதாரர்கள் ஏன் புகார் செய்கிறார்கள் என்ற கேள்வி எழுவது இயல்பே.
பாலிசிதாரர் கோரியுள்ள க்ளெய்மை சரியாக தர வேண்டும் என்பது ஒரு இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் தலையாய கடமை என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. ஆனால் இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் க்ளெய்ம் தொகையைக் குறைப்பதற்கும், முழுவதுமாக மறுப்பதற்கும் சொல்லும் காரணங்கள் என்னென்ன, எந்த இடத்தில் எல்லாம் இன்ஷூரன்ஸ் பாலிசிதாரர் கவனத்துடன் இருக்க வேண்டும் என்பவை ஒரு பாலிசிதாரர் தனக்கான க்ளெய்மை சரியாகப் பெற அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் ஆகும்.
சிக்கல்கள் இல்லாமல் க்ளெய்மை சரியாகப் பெறுவதற்கு கவனிக்க வேண்டிய விஷயங்களை இங்கே கொடுத்துள்ளோம்.
1. நீங்கள் எடுக்க விரும்பும் ஆயுள் காப்பீடு பாலிசியை பற்றி முதலில் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். அதில் உங்களுக்குள்ள சந்தேகங்களையும் கேள்வி களையும் ஏஜென்டிடமோ, இன்ஷூரன்ஸ் நிறுவனத்திடமோ கேட்டு தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டும்.
2. பாலிசி விண்ணப்பத்தை முழுவதுமாகப் படித்துப் புரிந்துகொள்ள வேண்டும். ஆங்கிலம் புரியவில்லை என்றால் தெரிந்த நண்பரையோ, உறவினரையோ படித்து காட்டச் சொல்லவும். முடிந்தவரை விண்ணப்பத்தை நீங்களே பூர்த்தி செய்யுங்கள். வேறொருவர் மூலமாகப் பூர்த்தி செய்தாலும், முழுவதுமாகப் படித்து, சரிபார்த்தபின் கையெழுத்திட வும். பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பத்தில் மறந்தும் கையெழுத்து போடாதீர்கள்.
3. மேலும், பாலிசியின் மூலம் கிடைக்கக்கூடிய அத்தனை பலன்களையும் கேட்டு, அவை உங்களுடைய தேவைகளைப் பூர்த்தி செய்தால் மட்டும் அந்த பாலிசியில் கையெழுத்திடுங்கள்.
4. வயது, படிப்பு, வேலை, வருமானம், பழக்கவழக்கம், குடும்ப வரலாறு, உடல்நலம் மற்றும் ஏற்கெனவே உள்ள பாலிசிகள் உள்ளிட்ட விவரங்களைப் பூர்த்தி செய்யும்போது உண்மையான விவரங்களை மட்டுமே குறிப்பிடுங்கள். நீங்கள் கொடுக்கும் விவரங்களைப் பொறுத்தே உங்களுக்கான க்ளெய்ம் இருக்கும். தவறான விவரங்களால் க்ளெய்ம் குறையும் வாய்ப்புகளே அதிகம். சில சமயங்களில் முற்றிலும் மறுக்கப்படலாம்.
5. உங்களுடைய வங்கிக் கணக்கு விவரங்களைச் சரியாக வழங்கவும். இதன் மூலம் உங்களுடைய முதிர்வுத் தொகை / இழப்பீட்டு தொகையை விரைவாகவும் நேரடியாகவும் வங்கிக் கணக்கு மூலம் பெற்றுக்கொள்ள முடியும்.
6. நாமினியாக மிக நெருங்கிய குடும்ப உறுப்பினரை (வாழ்க்கைத் துணை - கணவன் / மனைவி, குழந்தை அல்லது பெற்றோர்) மட்டுமே குறிப்பிடுங்கள். அப்போதுதான் இழப்பீட்டைச் சிக்கல் இல்லாமல் எளிதில் பெற முடியும். மேலும், நாமினியின் பெயர், பிறந்த தேதி உள்ளிட்ட விவரங்கள் சரியாகக் குறிப்பிட்டிருக்க வேண்டும்.
7. ஒன்றுக்கு மேற்பட்ட நாமினி கள் இருந்தால், அவர்களுக்கான பங்கீட்டை தெளிவாகக் குறிப்பிட வேண்டும். உதாரணத்துக்கு: வாழ்க்கைத் துணைக்கு 50%, பிள்ளைக்கு 50% 8. முக்கியமாக பாலிசி எடுத்திருப்பது குறித்து நாமினிக்கு தெரியப்படுத்துவது அவசியம்.
9. பாலிசி கான்ட்ராக்ட் வரும்போது, நீங்கள் ஆரம்பத்தில் குறிப்பிட்ட அனைத்தும் அந்த கான்ட்ராக்டில் இருக்கிறதா என்பதை முழுவதுமாக படித்து உறுதிபடுத்திக் கொள்ளுங்கள்.
10. ஐஆர்டிஏஐ விதிமுறைப்படி, நீங்கள் கையெழுத்திட்ட விண்ணப்பப் படிவத்துடன், அந்த பாலிசியில் கிடைக்கத்தக்க பலன்களின் விவரம் அடங்கிய பேப்பரும் உங்களுக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும். அப்படி வரும் விண்ணப்பப் படிவமோ, பலன்கள் குறிப்பு பேப்பரோ உங்களுடையதாக இல்லை யெனில் உடனடியாக இன்ஷூரன்ஸ் நிறுவனத்திடம் முறையிட வேண்டும்.
11. உங்களுடைய பாலிசி கான்ட்ராக்டை பாதுகாப்பான இடத்தில் பத்திரப்படுத்தவும். மேலும், நாமினியிடம் இது குறித்து தெரிவித்துவிட வேண்டும். அதில் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தைத் தொடர்பு கொள்வதற்கான எண் மற்றும் விலாசம் இருந்தால் நாமினியிடம் தெரியப்படுத்தவும். பாலிசி தாரர் இறக்கும்பட்சத்தில் அதற்கான க்ளெய்மை உடனடியாகப் பெற வேண்டும் என்பதை அவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.
12. பாலிசிக்கான பிரீமியத்தை சரியான நேரத்தில் செலுத்திவிட வேண்டும். இதன் மூலம் க்ளெய்ம் குறைக்கப் படுவதையோ, மறுக்கப் படுவதையோ தவிர்க்கலாம்.
13.உங்களுடைய முகவரியையோ, நாமினியையோ மாற்ற விரும்பினால், உடனடியாக இன்ஷூரன்ஸ் நிறுவனத்திடம் தெரிவித்துவிட வேண்டும். அப்போதுதான் உங்களைத் தொடர்புகொள்வதிலும் க்ளெய்ம் வழங்குவதிலும் சிக்கல் இருக்காது.
14. உங்களுடைய நாமினி என்பதை உறுதி செய்ய போது மான அடையாள அட்டை, முகவரி உறுதிச் சான்று கட்டாயம் அவசியம். உதாரணம்: ஆதார் அட்டை, பாஸ்போர்ட், ரேஷன் கார்டு, டிரைவிங் லைசன்ஸ், பான் கார்டு உள்ளிட்டவை.
15. நாமினிக்கு வங்கிக் கணக்கு இருப்பது அவசியம். அதன் மூலம் க்ளெய்ம் தாமதமாவதைத் தவிர்க்கலாம்.
16. பாலிசி கான்ட்ராக்டில் குறிப்பிட்டுள்ள, க்ளெய்முக்கு தேவையான ஆவணங்கள் அனைத்தும் சரியாக இருக்க வேண்டும். உதாரணம்: இறப்புச் சான்று, மருத்துவர் அறிக்கை, மருத்துவமனை ஆவணங்கள் மற்றும் நாமினியின் கேஒய்சி ஆவணங்கள் ஆகியவை.
17. நாமினியானவர் பாலிசிதாரர் இறந்ததும், கூடிய விரைவில் லைஃப் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தை அணுகி அனைத்து ஆவணங்களையும் சரியாக சமர்ப்பித்து க்ளெய்ம் குறித்த நடவடிக்கைகளை எடுத்துவிட வேண்டும்.
இவையனைத்தையும் சரியாக செய்தால் க்ளெய்ம் மறுக்கப் படுவதற்கான வாய்ப்பே இல்லை.
ந.விகடன்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: லைஃப் இன்ஷூரன்ஸ்... சிக்கல் இல்லாமல் க்ளெய்ம் பெற சில வழிகள்
நல்ல தகவல் பரிமாற்றம் ,நன்றி ,பாலாஜி .
இதையும் பாருங்கள்
எனக்கு 2 மாதம் முன்னால் எந்தன் தொலைபேசியில் ஒரு அழைப்பு .
மறுமுனையில் ஒரு பெண் .
LIC refund செக்ஷனில் இருந்து பேசுவதாகவும் , எனது பாலிசிக்கு
போனஸ் வந்து இருப்பததாகவும் அதை அனுப்புவதாகவும் கூறினார் .
தற்சமயம் பாலிசி எதுவும் நடைமுறையில் இல்லையே என ,
உங்களது பழைய பாலிசிக்கு போனஸ் வந்துள்ளதாக கூறினார் .
எவ்வளவு என்று கேட்டதற்கு 25000/26000 ரூபாய் என்றார் .
நானும் ,பரவாயில்லையே * 2000/= பாலிசிக்கு 25000 ரூபாய் போனஸ் .
(நான் முதன்முதலாக வேலை சேர்ந்த போது 2000/- பாலிசி எடுப்பது பெரிய விஷயம் )
எனது பாங்க் A /C , விவரங்கள் கேட்டார் . பாலிசி முதுமை அடைந்தவுடன் எந்த பாங்க்
அக்கவுண்டுக்கு அனுப்பினீர்களோ , அதற்கே அனுப்பி விடுங்கள் . மாற்றம் ஏதுமில்லை .என்றேன்
இந்த இனிப்பு செய்தி அனுப்பிய உங்கள் பெயர் , முகவரி அனுப்பினால் , வரும் போனசில் இருந்து
உங்களுக்கு , பரிசு ஒன்று அனுப்ப இலகுவாக இருக்கும் எனக் கூற ,
மரியாதை தெரியா அந்தப் பெண் , இணைப்பை துண்டித்து விட்டார் .
ரமணியன்
இதையும் பாருங்கள்
எனக்கு 2 மாதம் முன்னால் எந்தன் தொலைபேசியில் ஒரு அழைப்பு .
மறுமுனையில் ஒரு பெண் .
LIC refund செக்ஷனில் இருந்து பேசுவதாகவும் , எனது பாலிசிக்கு
போனஸ் வந்து இருப்பததாகவும் அதை அனுப்புவதாகவும் கூறினார் .
தற்சமயம் பாலிசி எதுவும் நடைமுறையில் இல்லையே என ,
உங்களது பழைய பாலிசிக்கு போனஸ் வந்துள்ளதாக கூறினார் .
எவ்வளவு என்று கேட்டதற்கு 25000/26000 ரூபாய் என்றார் .
நானும் ,பரவாயில்லையே * 2000/= பாலிசிக்கு 25000 ரூபாய் போனஸ் .
(நான் முதன்முதலாக வேலை சேர்ந்த போது 2000/- பாலிசி எடுப்பது பெரிய விஷயம் )
எனது பாங்க் A /C , விவரங்கள் கேட்டார் . பாலிசி முதுமை அடைந்தவுடன் எந்த பாங்க்
அக்கவுண்டுக்கு அனுப்பினீர்களோ , அதற்கே அனுப்பி விடுங்கள் . மாற்றம் ஏதுமில்லை .என்றேன்
இந்த இனிப்பு செய்தி அனுப்பிய உங்கள் பெயர் , முகவரி அனுப்பினால் , வரும் போனசில் இருந்து
உங்களுக்கு , பரிசு ஒன்று அனுப்ப இலகுவாக இருக்கும் எனக் கூற ,
மரியாதை தெரியா அந்தப் பெண் , இணைப்பை துண்டித்து விட்டார் .
ரமணியன்
Last edited by T.N.Balasubramanian on Mon 4 Jul 2016 - 23:15; edited 2 times in total (Reason for editing : addition)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010
Similar topics
» இன்ஷூரன்ஸ்: கிரேஸ் பீரியடில் க்ளெய்ம் கிடைக்குமா?
» உங்களுடைய கணினி தொந்தரவு இல்லாமல் இயங்க 10 வழிகள்
» ஹெல்த் இன்ஷூரன்ஸ்... 5 முக்கிய மாற்றங்கள்!
» பிடித்து இருந்தால் நீங்களும் ரசியுங்கள்..! - மதுமிதா
» குமுதம் & லைஃப் 13/12/17
» உங்களுடைய கணினி தொந்தரவு இல்லாமல் இயங்க 10 வழிகள்
» ஹெல்த் இன்ஷூரன்ஸ்... 5 முக்கிய மாற்றங்கள்!
» பிடித்து இருந்தால் நீங்களும் ரசியுங்கள்..! - மதுமிதா
» குமுதம் & லைஃப் 13/12/17
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|