ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 10:00 am

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 9:30 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:34 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:50 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:53 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 11:43 am

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 2:33 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 1:14 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எல்லை தாண்டி மீன் பிடிக்க தமிழக மீனவர்களுக்கு அனுமதி: இலங்கை அரசு பரிசீலனை

Go down

எல்லை தாண்டி மீன் பிடிக்க தமிழக மீனவர்களுக்கு அனுமதி: இலங்கை அரசு பரிசீலனை Empty எல்லை தாண்டி மீன் பிடிக்க தமிழக மீனவர்களுக்கு அனுமதி: இலங்கை அரசு பரிசீலனை

Post by ayyasamy ram Mon Jul 04, 2016 9:11 am



இலங்கைக் கடல் பகுதிக்குள் இந்திய மீன்பிடிப் படகுகளை அனுமதிப்பதற்கான உரிமத்தை வழங்க அந்நாட்டு அரசு பரிசீலித்து வருவதாக ஊடகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன் மூலம் உரிமம் பெற்ற இந்தியப் படகுகள், இலங்கை கடல் எல்லைக்குள் சென்று மீன் பிடிக்கலாம் எனத் தெரிகிறது.

சர்வதேச கடல் எல்லையைத் தாண்டி வந்து மீன் பிடித்ததாகக்
கூறி இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது
செய்யப்படும் நடவடிக்கைகள் தொடர்கதையாக உள்ளன.

இதைத் தவிர தமிழக மீனவர்களின் வலைகளை அவர்கள்
சேதப்படுத்துவதும், படகுகளைப் பறிமுதல் செய்வதும்
அன்றாடம் அரங்கேறும் சம்பவங்களாக இருக்கின்றன.

இலங்கைக் கடற்படையினரின் இத்தகைய செயல்பாடுகளைக்
கண்டிக்குமாறும், கைதான தமிழக மீனவர்களை விடுவிக்க
நடவடிக்கை எடுக்குமாறும் மத்திய அரசுக்கு தமிழக முதல்வர்
ஜெயலலிதா ஒவ்வொரு தருணத்திலும் வலியுறுத்தி வருகிறார்.

பாக் நீரிணை (பாக் ஜலசந்தி) பகுதியில் மீன்பிடிப்பதற்கு
தமிழர்களுக்கு இருக்கும் வரலாற்று உரிமையை இலங்கை அரசு
அங்கீகரிக்காமல் விடாப்பிடியாக செயல்படுகிறது என்று
பிரதமருக்கு அண்மையில் எழுதிய கடிதத்தில் ஜெயலலிதா
குற்றம்சாட்டியிருந்தார்.

அனுமதி வழங்கத் திட்டம்: இதனிடையே, இலங்கைக் கடல் பகுதிக்குள்
இந்தியாவைச் சேர்ந்த குறிப்பிட்ட மீன்பிடிப் படகுகள் எல்லை தாண்டி
வருவதற்கு அனுமதி வழங்க இலங்கை அரசு திட்டமிட்டுள்ளதாகத்
தெரிகிறது.

இதன் மூலம் சட்டவிரோதமாக மீன் பிடித்தல், அனுமதியின்றி சர்வதேச
கடல் பகுதிகளுக்குள் ஊடுருவுதல் உள்ளிட்ட குற்றங்கள் குறையலாம்
என எதிர்பார்க்கப்படுகிறது.

அதற்கான உரிமங்களை இந்தியப் படகுகளுக்கு வழங்க இலங்கை முடிவு
செய்திருப்பதாக "சண்டே டைம்ஸ்' பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து இலங்கை பாதுகாப்புத் துறைச் செயலர் கருணசேனா
ஹெட்டியாரச்சி தெரிவித்ததாக அந்தப் பத்திரிகையில் குறிப்பிடப்
பட்டிருந்ததாவது:

இந்திய மீன்பிடிப் படகுகள் இலங்கை கடல் பகுதிக்குள் வருவதற்கு உரிமம்
வழங்குவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது. அதேவேளையில்,
அந்தத் திட்டம் மீது இன்னமும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.

இந்த விவகாரம், இருநாடுகளுக்கும் இடையே நிலவும் உணர்வுரீதியான
விஷயம் என்பதால் மிகக் கவனமாக கையாள வேண்டியுள்ளது.

மீன்பிடிப் படகுகளுக்கு உரிமம் வழங்கும் விவகாரம் தொடர்பான தொழில்
நுட்ப திட்ட அறிக்கை விரைவில் தயார் செய்யப்பட்டு வெளியுறவுத் துறை
வாயிலாக இந்திய அரசிடம் சமர்ப்பிக்கப்படும் என்று கருணசேனா
தெரிவித்ததாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த உத்தேசத் திட்டம் குறித்து இரு நாடுகளுக்கும் இடையே பேச்சு
வார்த்தை நடந்தாலோ அல்லது இந்த விவகாரத்தை அடுத்த கட்டத்துக்கு
முன்னெடுத்தாலோ இலங்கை மீனவர் அமைப்புகள் கடுமையாக எதிர்க்கும்
என்று "சண்டே டைம்ஸ்' நாளிதழ் கருத்து தெரிவித்துள்ளது.
-
-----------------------------------
தினமணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82692
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» இலங்கையில் தமிழர் பகுதியில் மீன் பிடிக்க சீனர்களுக்கு அனுமதி
» கடல் எல்லை தாண்டி, மீன் பிடிப்பதால் ஏற்படும் பிரச்னையை தவிர்க்க, சென்னையைச் சேர்ந்த கல்லூரி மாணவர்களின் கண்டுபிடிப்புக்கு, தேசிய அளவில் விருது
» எல்லை தாண்டியதாக தமிழக மீனவர்களை மட்டும் இலங்கை ராணுவம் சுடுவது ஏன்?
» புதிதாக 7 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்க தமிழக அரசு அனுமதி
» தமிழக எல்லை அருகே ஏழு புதிய அணைகள் கட்ட கேரள அரசு திட்டம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum