ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜாதி பிரச்னையில் சிக்கிய திருவள்ளுவர் சிலை வைக்க உத்தரகண்டில் இடமில்லை

5 posters

Go down

 ஜாதி பிரச்னையில் சிக்கிய திருவள்ளுவர் சிலை வைக்க உத்தரகண்டில் இடமில்லை Empty ஜாதி பிரச்னையில் சிக்கிய திருவள்ளுவர் சிலை வைக்க உத்தரகண்டில் இடமில்லை

Post by ayyasamy ram Sat Jul 02, 2016 10:19 am

உத்தரகண்ட் மாநிலத்தில், திருவள்ளுவர் சிலை அதிகாரப்பூர்வமாக
நிறுவப்படாத தகவல் வெளியாகி உள்ளது. ஜாதிப் பிரச்னையில்
சிக்கியிருப்பதால், திருவள்ளுவர் சிலைக்கு இடம் கிடைப்பதில் சிக்கல்
ஏற்பட்டு உள்ளது.
-
கங்கைக் கரையில்.:உத்தரகண்ட், ஹரித்து வாரில், கங்கை கரையில்
தமிழ்ப் புலவர் திருவள்ளுவரின் சிலையை அமைக்க, பா.ஜ., -
எம்.பி., தருண் விஜய் முயற்சி மேற்கொண்டார். அதற்காக, சிலையுடன்
கன்னியாகுமரியில் இருந்து, பல ஊர்கள் வழியாக யாத்திரை மேற்
கொண்ட அவர், ஹரித்துவாரை கடந்த வாரம் அடைந்தார்.
-
அங்கு கங்கைக் கரையில், ஹர் கி பவுடி என்ற இடத்தில், திருவள்ளுவர்
சிலை அமைக்க தீர்மானிக்கப்பட்டது. ஆனால், அங்கு சிலை வைக்கக்
கூடாது என, சிலர் எதிர்த்தனர். அதைத் தொடர்ந்து, சங்கராச்சாரியா
சவுக் என்ற இடத்திற்கு சிலை மாற்றப்பட்டது.
-
அங்கு கடந்த வெள்ளிக் கிழமை சிலை திறப்பு விழாவுக்கு ஏற்பாடு
செய்யப்பட்டிருந்தது. ஆனால், உத்தரகண்ட் முதல்வர் ஹரிஷ் ராவத்,
விழாவை திடீரென புறக்கணித்தார். பெயரளவுக்கு நடந்த விழாவில்,
மேகாலயா கவர்னர் சண்முக நாதன், மத்திய அமைச்சர்
பொன்.ராதா கிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.
-
பிரச்னை:இந்நிலையில், சிலை அதிகாரப் பூர்வ மாக நிறுவப்படாமல்,
ஓரிடத்தில் வைக்கப் பட்டிருக்கும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
அதற்கு ஜாதிப் பிரச்னை காரணம் என்றும் கூறப்படுகிறது.திருவள்ளுவர்,
தலித் சமுதாயத் தில் பிறந்தவர் எனக்கூறி, கங்கை கரை யோரத்தில்
சிலை வைக்க, சிலர் எதிர்ப்பு தெரிவிக்கின்ற னர். சில சாதுக்களோ,
ஆதிசங்கர மடத்திற்காக ஒதுக்கப்பட்ட இடத்தில், சிலை வைக்கக் கூடாது
என்கின்றனர்.
-
திருவள்ளுவர் சிலை வைக்க முயற்சி எடுத்த தருண் விஜய், தலித் மக்கள்
சிலருடன், கோவிலில் நுழையமுற்பட்டபோது, சமீபத்தில் தாக்கப் பட்டார்.
தலித் மக்களை பயன்படுத்தி, அரசியல் செல்வாக்கு பெற, அவர்
முயற்சிப்பதாக கருதும் சிலர், திருவள்ளுவரையும் தலித் பட்டியலில் சேர்த்து,
பிரச்னை ஏற்படுத்தி வருகின்றனர்.
-
'உயிரை கொடுத்தாவது சிலையை திறப்பேன்!'
-
இது குறித்து, நமது நாளிதழுக்கு, தருண் விஜய் அளித்த பேட்டி:சில தீய
மனிதர்களால், சிலை திறப்பு தள்ளிப்போய் உள்ளது. திருவள்ளுவர், தலித்
என்று பிரச்னையை கிளப்புகின்றனர்.

தலித் பிரச்னையில், என்னை ஏற்கனவே சிலர் கல்லால் தாக்கினர்.
மத்திய அரசும், பிரதமரும், அம்பேத்கரை பெருமைப்படுத்தி வரும் நேரத்தில்,
சிலர் இப்படி நடந்து கொள்கின்றனர்; அவர்கள், தேசத்தின் கரும்புள்ளிகள்.
திருவள்ளுவர் சிலைக்கு இடம் ஒதுக்கக் கோரி, உத்தரகண்ட் முதல்வர்
மற்றும் கவர்னருக்கு, நேற்று கடிதம் எழுதியுள்ளேன்.

என் உயிரை கொடுத்தாவது, சிலையை திறப்பேன். இவ்வாறு அவர்
கூறினார்.
-
---------------------------------
- நமது நிருபர் -
தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 ஜாதி பிரச்னையில் சிக்கிய திருவள்ளுவர் சிலை வைக்க உத்தரகண்டில் இடமில்லை Empty Re: ஜாதி பிரச்னையில் சிக்கிய திருவள்ளுவர் சிலை வைக்க உத்தரகண்டில் இடமில்லை

Post by கார்த்திக் செயராம் Sat Jul 02, 2016 12:36 pm

ஏன்டா மொட்ட தலைக்கும் மொழங்காலுக்கும் முடிச்சு போடுரீங்க ...திருவள்ளுவர் என்னடா பாவம் பன்னாரு.???!!!


எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Back to top Go down

 ஜாதி பிரச்னையில் சிக்கிய திருவள்ளுவர் சிலை வைக்க உத்தரகண்டில் இடமில்லை Empty Re: ஜாதி பிரச்னையில் சிக்கிய திருவள்ளுவர் சிலை வைக்க உத்தரகண்டில் இடமில்லை

Post by M.Jagadeesan Sat Jul 02, 2016 1:53 pm

திருவள்ளுவரை " தலித் " என்று கூறும் முட்டாள்கள் அந்த நூலைப் படித்துப் பார்த்ததுண்டா ?

" பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் ! " என்ற ஐயனின் தத்துவம் அறிவிலிகளுக்குப் புரியாது .

கடுகைத் துளைத்து  ஏழ் கடலைப் புகட்டிய குறளின் பெருமை கயவர்களுக்குப் புரியாது .

அணுவைத் துளைத்து ஏழ்  கடலைப் புகட்டிய குறளின் பெருமை அற்பர்களுக்குப் புரியாது .

" யாகாவாராயினும் நாகாக்க ! " என்றவனின் பெருமை எத்தர்களுக்குப் புரியாது .

" பிறன்மனை நோக்காதே ! " என்றவனின் பெருமை பித்தர்களுக்குப் புரியாது .

" ஈத்துவக்கும் இன்பம் " சொன்னவனின் பெருமை ஈனர்களுக்குப் புரியாது .

" புலாலை மறுத்தானின் பெருமை "  புல்லர்களுக்குப் புரியாது .

"பொய்மையும் வாய்மையிடத்த " என்று சொன்னவனின் பெருமை போக்கிலிகளுக்குப் புரியாது .

" ஊழிற் பெருவலி யாவுள ? " என்றவனின் பெருமை ஊனர்களுக்குப் புரியாது .

" கண்ணுடையர் என்போர் கற்றோர் " என்றவனின் பெருமை கசடர்களுக்குப் புரியாது .

" கடிதோச்சி மெல்ல எறிக "
" பொறியின்மை யார்க்கும் பழியன்று "
" கற்றிலனாயினும் கேட்க "
"அழக்கொண்ட எல்லாம் அழப்போம் "
" உருவுகண்டு எள்ளாமை வேண்டும் "
" செய்க பொருளை "
" நகுதற் பொருட்டன்று நட்டல் "

" இளைதாக முள்மரம் கொல்க "
" உண்ணற்க கள்ளை "
" வேண்டற்க வென்றிடினும் சூதினை "
" பெருக்கத்து வேண்டும் பணிதல் "
" உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் "
" மக்களே போல்வர் கயவர் "
" அறிதோறும் அறியாமை கண்டற்றால் "
" ஊடலில் தோற்றவர் வென்றார் "

என்றெல்லாம் தத்துவங்கள் யார் சொன்னார் இவ்வுலகில் ?


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

 ஜாதி பிரச்னையில் சிக்கிய திருவள்ளுவர் சிலை வைக்க உத்தரகண்டில் இடமில்லை Empty Re: ஜாதி பிரச்னையில் சிக்கிய திருவள்ளுவர் சிலை வைக்க உத்தரகண்டில் இடமில்லை

Post by ராஜா Sat Jul 02, 2016 5:10 pm

இது தான் இந்தியா...


ஆனால் என்னவோ தமிழ்நாட்டில் மட்டுமே சாதிப்பிரச்சினை தலைவிரித்துஆடுவது போல சில ஓட்டுப்பொறுக்கிகளால் ஊதிப்பெரிதாக்கப்படுகிறது.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

 ஜாதி பிரச்னையில் சிக்கிய திருவள்ளுவர் சிலை வைக்க உத்தரகண்டில் இடமில்லை Empty Re: ஜாதி பிரச்னையில் சிக்கிய திருவள்ளுவர் சிலை வைக்க உத்தரகண்டில் இடமில்லை

Post by சிவனாசான் Sat Jul 02, 2016 8:54 pm

ஓட்டு அரசியலில் எங்குங்க இடம் இருக்கும். அதானே??????????????
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

 ஜாதி பிரச்னையில் சிக்கிய திருவள்ளுவர் சிலை வைக்க உத்தரகண்டில் இடமில்லை Empty Re: ஜாதி பிரச்னையில் சிக்கிய திருவள்ளுவர் சிலை வைக்க உத்தரகண்டில் இடமில்லை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum