Latest topics
» Outstanding Сasual Dating - Verified Ladiesby VENKUSADAS Today at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
மனதை ரீ-சார்ஜ் செய்யும் முக்கடல் சங்கமம்!
2 posters
Page 1 of 1
மனதை ரீ-சார்ஜ் செய்யும் முக்கடல் சங்கமம்!
![மனதை ரீ-சார்ஜ் செய்யும் முக்கடல் சங்கமம்! 24bOJR0Q6qygUukTaiFS+waterlife1](https://www.filepicker.io/api/file/24bOJR0Q6qygUukTaiFS+waterlife1.jpg)
-
கன்னியாகுமரி என்றால் முக்கடல் சங்கமிக்கும் இடம்.
பகவதி அம்மன் கோயில், காந்தி நினைவு மண்டபம்,
விவோகானந்தர் பாறை, 133 அடி திருவள்ளுவர் சிலை,
இவ்வளவு தானே கன்னியாகுமரி என்று சுருக்கமாக
கன்னியாகுமரி சுற்றுலாவை முடித்துக் கொண்டு வந்து
விடாதீர்கள்.
–
குமரியைச் சுற்றியுள்ள சுற்றுலாத்தலங்களை கேள்விப்பட்டால்
இன்னும் ஆச்சரியப்படுவீர்கள்.
–
ஆசியாவிலேயே மிகப் பெரிய மாத்தூர் தொட்டிப்பாலம் குமரி
மாவட்டத்தில்தான் உள்ளது தெரியுமா? குமரி மாவட்டத்தின்
குடிநீர் தேவையையும் விவசாயத்தையும் பூர்த்தி செய்யும் இந்த
தொட்டிப்பாலம் காணக் காண ஆச்சர்யம்.
–
இரண்டு மலைகளை இணைத்துக் கட்டப்பட்டுள்ள இந்தத் தொட்டிப்
பாலத்திற்குக் கீழே பரளியாறு ஓடுவதுதான் அந்த ஆச்சரியக் காட்சி.
–
இரண்டு மலைகளையும் இணைக்கும் இந்தப் பாலம் 1240 அடி நீளம்,
தரை மட்டத்திலிருந்து 104 அடி உயரத்தில் பிரமாண்டமாக கட்டப்
பட்டுள்ளது. 28 தூண்கள் இதை தாங்கி நிற்கின்றன. ஒவ்வொரு தூணும்
16 சதுர அடி சுற்றளவு கொண்டவை. தண்ணீர் கொண்டு செல்லும்
சிலாப்புகள் தொட்டி வடிவில் உள்ளதால் ‘தொட்டிப் பாலம்’ என்று
பெயராம்.
–
தண்ணீர் செல்லும் தொட்டிகள் 8 அடி உயரம் கொண்டவை. 5 அடி
உயரத்தில் தண்ணீர் சென்று கொண்டிருக்கும். 104 அடிக்குக் கீழே
பரளியாறு ஓடிக் கொண்டிருக்கும். தொட்டிப்பாலத்தின் இன்னொரு
பகுதி நடைபாதையாக பயன்படுகிறது.
–
மாத்தூர் தொட்டிப்பாலத்தில் இருந்து நான்கு கி.மீ. தொலைவில் உள்ள
திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயில் பழங்கால கட்டடக்
கலைக்கு ஓர் எடுத்துக் காட்டு. இங்குள்ள எழில் சிற்பங்கள் பார்த்து
ரசிக்கத்தகுந்தவை. இங்கிருந்து பத்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள
சிதறால் மலைக்கோயிலை அடைந்து மலைமீது ஏறிச்சென்றால்
குமரியின் பச்சைப்பசேல் அழகைப் பார்த்து ரசிக்கலாம்.
–
இங்கிருந்து திற்பரப்பு அருவிக்குச் செல்லலாம். வருடத்தின் அனைத்து
நாட்களிலும் தண்ணீர் பாயும் திற்பரப்பு அருவி கோதையாற்றின்
குறுக்கே உள்ளது. திக்கெல்லாம் தண்ணீர் பரந்து விரிந்து பாய்வதால்
திற்பரப்பு என பெயர் பெற்ற அருவியில் குளிக்க தலைமை நீட்டினால்
வெளியே வர மனம் வராது.
–
Re: மனதை ரீ-சார்ஜ் செய்யும் முக்கடல் சங்கமம்!
பழங்கால அரண்மனைக்குப் பெயர்போன பிரமாண்டமான பத்மனாபபுரம்
இருப்பது இங்குதான். 1978ம் ஆண்டுவரை திருவிதாங்கூர் சமஸ்தானத்தின்
தலைநகராக திகழ்ந்த பத்மனாபபுரம் அரண்மனை இன்றும் பழமை
மாறாமல் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
–
ஆறு ஏக்கர் நிலப்பரப்பில் மரத்தால் கட்டப்பட்ட இரண்டு மாடிகளைக்
கொண்ட அரண்மனையில் பழங்கால போர்வாள்கள், அரசர்கள் பயன்
படுத்திய கட்டில்கள், மேஜைகள், பழங்கால ஓவியங்கள் பார்த்து ரசிக்கத்
தக்கவை. அரண்மனையை முழுவதுமாக சுற்றிப்பார்க்க இரண்டு மணி
நேரமாகும்.
–
கன்னியாகுமரி, மாவட்டத்துக்கு வருகை தருபவர்கள் கண்டிப்பாக பார்த்து
ரசிக்க வேண்டிய கடற்கரைகள் மூன்று. ஒன்று பாளைகள் நிறைந்த முட்டம்
கடற்கரை. அலைகள் ஆக்ரோஷத்துடன் மோதும் காட்சிகளை காண்கையில்
மனது சிலிர்க்கும். மற்றவை சொத்தவிளை, சங்த்துறை பீச். அமைதியான
இந்த பீச்சுகளில் இருக்கும்போது மனதும் அமைதியடைகிறது.
–
கன்னியாகுமரி அருகே தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள
வட்டக் கோட்டைக்குள் சென்றால் அந்த இடத்தை விட்டு அகலவே மனம் வராது.
வட்டக்கோட்டையில் ஒருபுறம் கடலும் மறுபுறம் அகழியும் காணப்படுகிறது.
இக்கோட்டையின் மேல்பகுதி சுற்றுலாப் பயணிகளின் இதயங்களை
கொள்ளை கொள்ளும் விதாக அமைந்துள்ளது. கோட்டையின் மேல் ஏறி நின்று
பார்க்கும்போது கடற்கரையையும் கோட்டையையும் மோதி அலைகள்
வெண்ணிறப் பூச்சரமாய் தெறிகிறது.
–
கண்ணிற்கு எட்டும் தூரம் வர விரிந்து தெரியும் கடல், இதமாய் வந்து மோதும்
கடற்காற்று என பரவசத்திற்கு பஞ்சமில்லாத இடம்.
–
திருச்சியில் இருந்து வந்திருந்த மகாலெட்சுமி தம்பதியினர் கன்னியாகுமரியை
இரண்டு நாட்கள் சுற்றிப்பார்த்துவிட்டு ‘சார், நான் கன்னியாகுமரின்னா
ஏதோ காஞ்சுபோன ஊரு ரொம்ப வறண்ட பகுதின்னு நெனைச்சுக்கிட்டிருந்தேன்.
அப்பப்பா… ஊருக்குள்ளாற எண்ட்ரி ஆன பிற்பாடு தான் தெரிஞ்சது, நீங்கள்
எவ்வளவு கொடுத்துவைச்ச மனுசனுங்கன்னு.. ஊரே பச்சைபசேல்னு, எங்கேயும்
செழுமையா… இருக்கு கோடையிலும், ஊட்டிபோல் குளுகுளுவென இருக்கு’ என
மகிழ்ச்சியுடன் கூறினர்.
–
————————————
– திருவட்டாறு சிந்துகுமார்
நன்றி- குமுதம்
இருப்பது இங்குதான். 1978ம் ஆண்டுவரை திருவிதாங்கூர் சமஸ்தானத்தின்
தலைநகராக திகழ்ந்த பத்மனாபபுரம் அரண்மனை இன்றும் பழமை
மாறாமல் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
–
ஆறு ஏக்கர் நிலப்பரப்பில் மரத்தால் கட்டப்பட்ட இரண்டு மாடிகளைக்
கொண்ட அரண்மனையில் பழங்கால போர்வாள்கள், அரசர்கள் பயன்
படுத்திய கட்டில்கள், மேஜைகள், பழங்கால ஓவியங்கள் பார்த்து ரசிக்கத்
தக்கவை. அரண்மனையை முழுவதுமாக சுற்றிப்பார்க்க இரண்டு மணி
நேரமாகும்.
–
கன்னியாகுமரி, மாவட்டத்துக்கு வருகை தருபவர்கள் கண்டிப்பாக பார்த்து
ரசிக்க வேண்டிய கடற்கரைகள் மூன்று. ஒன்று பாளைகள் நிறைந்த முட்டம்
கடற்கரை. அலைகள் ஆக்ரோஷத்துடன் மோதும் காட்சிகளை காண்கையில்
மனது சிலிர்க்கும். மற்றவை சொத்தவிளை, சங்த்துறை பீச். அமைதியான
இந்த பீச்சுகளில் இருக்கும்போது மனதும் அமைதியடைகிறது.
–
கன்னியாகுமரி அருகே தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள
வட்டக் கோட்டைக்குள் சென்றால் அந்த இடத்தை விட்டு அகலவே மனம் வராது.
வட்டக்கோட்டையில் ஒருபுறம் கடலும் மறுபுறம் அகழியும் காணப்படுகிறது.
இக்கோட்டையின் மேல்பகுதி சுற்றுலாப் பயணிகளின் இதயங்களை
கொள்ளை கொள்ளும் விதாக அமைந்துள்ளது. கோட்டையின் மேல் ஏறி நின்று
பார்க்கும்போது கடற்கரையையும் கோட்டையையும் மோதி அலைகள்
வெண்ணிறப் பூச்சரமாய் தெறிகிறது.
–
கண்ணிற்கு எட்டும் தூரம் வர விரிந்து தெரியும் கடல், இதமாய் வந்து மோதும்
கடற்காற்று என பரவசத்திற்கு பஞ்சமில்லாத இடம்.
–
திருச்சியில் இருந்து வந்திருந்த மகாலெட்சுமி தம்பதியினர் கன்னியாகுமரியை
இரண்டு நாட்கள் சுற்றிப்பார்த்துவிட்டு ‘சார், நான் கன்னியாகுமரின்னா
ஏதோ காஞ்சுபோன ஊரு ரொம்ப வறண்ட பகுதின்னு நெனைச்சுக்கிட்டிருந்தேன்.
அப்பப்பா… ஊருக்குள்ளாற எண்ட்ரி ஆன பிற்பாடு தான் தெரிஞ்சது, நீங்கள்
எவ்வளவு கொடுத்துவைச்ச மனுசனுங்கன்னு.. ஊரே பச்சைபசேல்னு, எங்கேயும்
செழுமையா… இருக்கு கோடையிலும், ஊட்டிபோல் குளுகுளுவென இருக்கு’ என
மகிழ்ச்சியுடன் கூறினர்.
–
————————————
– திருவட்டாறு சிந்துகுமார்
நன்றி- குமுதம்
Re: மனதை ரீ-சார்ஜ் செய்யும் முக்கடல் சங்கமம்!
அருமையான பகிர்வு அண்ணா
...........கன்யாகுமரியும் பார்க்கணும் போலிருக்கே !
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» செல்போன் சார்ஜ் செய்யும் கருவி
» மனதை ரிலாக்ஸ் செய்யும் அரவணைப்பு
» மனதை வசியம் செய்யும் பழைய கதாநாயகிகளின் பாடல்கள் | (பி.சுசீலா & எல்.ஆர்.ஈஸ்வரி)
» ஒரு பக்கக் கதைகள்
» முக்கடல் நடுவே முப்பால் வகுத்த வள்ளுவருக்கு முத்தமிழர் வடித்த சிலை.
» மனதை ரிலாக்ஸ் செய்யும் அரவணைப்பு
» மனதை வசியம் செய்யும் பழைய கதாநாயகிகளின் பாடல்கள் | (பி.சுசீலா & எல்.ஆர்.ஈஸ்வரி)
» ஒரு பக்கக் கதைகள்
» முக்கடல் நடுவே முப்பால் வகுத்த வள்ளுவருக்கு முத்தமிழர் வடித்த சிலை.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|