Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 11:25 am
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆளுமா, டோலுமா' ரக பாடல்களை ரசிகனா கேட்டான்...?- கொதிக்கும் கங்கை அமரன்!
4 posters
Page 1 of 1
ஆளுமா, டோலுமா' ரக பாடல்களை ரசிகனா கேட்டான்...?- கொதிக்கும் கங்கை அமரன்!
'நான் சொல்றது எல்லாமே உண்மை. அதை அவங்களால ஏத்துக்க முடிஞ்சாலும், முடியாட்டாலும் நான் வெளிப்படையாகத்தான் பேசுவேன்'' என்று ஆரம்பிக்கிறார் கங்கை அமரன்.
உங்க முதல் பட அனுபவம், இப்போ உங்களோட பயணமும்?
'' கோழி கூவுது படத்த இயக்கினப்போ, படத்த நல்லபடியா கொடுக்கணும்ங்ற பயம் கொஞ்சம் இருந்தது. மத்த டைரக்டர்கள் எல்லாம் சில சீன்ஸ வேகமா ஓட்டிட்டுப் போயிடுவாங்க.. நான் ஒவ்வொரு ஷார்ட்டா ரொம்ப ஷார்ப்பா பண்ணேன். என்னோட வேலையை ரொம்ப நியாயமா பார்த்தேன்.
அதனாலதான் என்னோட ஒவ்வொரு படமும் இயல்பா இருந்தது. 'எங்க ஊரு பாட்டுக்காரன்', 'கரகாட்டக்காரன்', 'வெள்ளைப் புறா ஒன்று' என பல படங்கள்ள ஒவ்வொரு கேரக்டரும் ரொம்பவே கேஷூவலா இருக்கும். என்னோட படங்கள்ள சினிமாத்தனம் இருக்காது, இயல்பா இருக்கும். பல படங்கள்ள ஹீரோவ அடிக்கிறதுக்கு ஒவ்வொரு ஆளா வருவாங்க...
ஒருத்தர அடிக்க வரும்போது ஒவ்வொருத்தரா அடிக்கமாட்டாங்க. இது போன்ற சீன்கள எல்லாம் நான் இயல்பாகவே வச்சிருப்பேன்.''
தொடரும்..........
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஆளுமா, டோலுமா' ரக பாடல்களை ரசிகனா கேட்டான்...?- கொதிக்கும் கங்கை அமரன்!
கவிதைகளும், பாடல்களும் எழுதிட்டு இருந்த நீங்க இசையமைக்க ஆரம்பிச்சது எப்போ... எப்படி?
''இளையராஜா மியூசிக் படிச்சாரு. நான் வாழ்க்கைப் போராட்டத்துக்காக கிடார் வாசிச்சேன். எனக்கு இசையமைக்கிறதவிட, நல்லா பாடல்கள் எழுத வரும். அவருக்கு பாடல்கள் எழுதிக் கொடுத்தேன். ஜவர்ஹலால் நேரு அவர்கள் இறந்தப்போ, அவருடைய இறப்புக்காக சோகப்பாட்டுக்கு இசை அமைச்சார் இளையராஜா. அதுக்கப்புறம்தான் ஃபேமஸ் ஆக ஆரம்பிச்சார்.
என்னுடைய பாடல்களுக்கு இசை அமைத்துதான் அவர் பெரிய ஆளா ஆனார்ங்கறத அவரால மறுக்க முடியாது.. எப்படியோ, என்னோட பாடல்கள் மூலமா ஒரு ஆளை மிகப்பெரிய இசையமைப்பாளராக ஆக்கியது ரொம்பவே சந்தோஷம்.
நான் மற்றும் என்னுடைய நண்பர்கள் இணைந்து 'மலர்களிலே அவள் மல்லிகை' படத்தை இயக்கினோம். என்னுடைய மனைவியின் தாய்மாமாதான் தயாரித்தார். என்னுடைய நண்பர்கள் என்னை அந்த படத்திற்கு இசையமைக்க சொன்னார்கள். அதன்படி, அந்த படத்துக்கு இசையமைத்தேன். இல்லை என்றால் அந்த வாய்ப்பு சங்கர் கணேஷூக்கோ, குமாருக்கோ போயிருக்கும். அந்தப் படத்திற்குப் பிறகு, இளையராஜா என்னுடன் சேர்ந்து இசையமைப்பதிலிருந்து விலகிட்டார்.
அதற்குப் பிறகு வந்த படங்களை எல்லாம் இரண்டாம் இடத்தில் இருக்கும் நடிகர்களை வைத்துதான் பண்ணவேண்டியிருந்தது. முதல் இடத்தில் இருக்கும் கமல், ரஜினி படங்கள் எல்லாம் அவருக்குப் போகும். மற்றவங்க படங்கள் எனக்கு செகன்ட்ரியா வந்தது. அதுக்குப் பிறகு, என்னோட மியூசிக்ல பாட்டு எழுது ஆரம்பிச்சேன். 'மலர்களில் அவள் மல்லிகை' படம் வெளிவருவதற்கு முன்னாடியே 7 படங்கள் புக் ஆகிடுச்சு. இளையராஜா பாட்டுக்கு எழுதினதோட, பக்தி இல்லாமல் மட்டும், 1300 பாடல்கள் எழுதியிருக்கேன். அப்புறம் அவர் உழைப்புக்கேத்த இடத்துக்கு அவர் போயிட்டார். என் உழைப்புக்கேத்த இடத்துல நான் இருக்கேன். அவங்கவங்க உழைப்பு, அங்கீகாரத்த தந்திட்டு இருக்கு!
இப்போ நான் பேரன் பேத்திகளோட ரொம்ப சந்தோஷமா இருக்கேன். மனசுல எந்த கவலையும் இல்ல.. ஏதோ ஒரு ரசிகர் போல இளையராஜாவோட இசையை ரசிக்கிறேன். நான் என்னோட உழைப்பை எவ்வளவு கொட்டினேனோ.. அந்த அளவுக்கு பாப்புலர் ஆகியிருக்கேன்!’’
''இளையராஜா மியூசிக் படிச்சாரு. நான் வாழ்க்கைப் போராட்டத்துக்காக கிடார் வாசிச்சேன். எனக்கு இசையமைக்கிறதவிட, நல்லா பாடல்கள் எழுத வரும். அவருக்கு பாடல்கள் எழுதிக் கொடுத்தேன். ஜவர்ஹலால் நேரு அவர்கள் இறந்தப்போ, அவருடைய இறப்புக்காக சோகப்பாட்டுக்கு இசை அமைச்சார் இளையராஜா. அதுக்கப்புறம்தான் ஃபேமஸ் ஆக ஆரம்பிச்சார்.
என்னுடைய பாடல்களுக்கு இசை அமைத்துதான் அவர் பெரிய ஆளா ஆனார்ங்கறத அவரால மறுக்க முடியாது.. எப்படியோ, என்னோட பாடல்கள் மூலமா ஒரு ஆளை மிகப்பெரிய இசையமைப்பாளராக ஆக்கியது ரொம்பவே சந்தோஷம்.
நான் மற்றும் என்னுடைய நண்பர்கள் இணைந்து 'மலர்களிலே அவள் மல்லிகை' படத்தை இயக்கினோம். என்னுடைய மனைவியின் தாய்மாமாதான் தயாரித்தார். என்னுடைய நண்பர்கள் என்னை அந்த படத்திற்கு இசையமைக்க சொன்னார்கள். அதன்படி, அந்த படத்துக்கு இசையமைத்தேன். இல்லை என்றால் அந்த வாய்ப்பு சங்கர் கணேஷூக்கோ, குமாருக்கோ போயிருக்கும். அந்தப் படத்திற்குப் பிறகு, இளையராஜா என்னுடன் சேர்ந்து இசையமைப்பதிலிருந்து விலகிட்டார்.
அதற்குப் பிறகு வந்த படங்களை எல்லாம் இரண்டாம் இடத்தில் இருக்கும் நடிகர்களை வைத்துதான் பண்ணவேண்டியிருந்தது. முதல் இடத்தில் இருக்கும் கமல், ரஜினி படங்கள் எல்லாம் அவருக்குப் போகும். மற்றவங்க படங்கள் எனக்கு செகன்ட்ரியா வந்தது. அதுக்குப் பிறகு, என்னோட மியூசிக்ல பாட்டு எழுது ஆரம்பிச்சேன். 'மலர்களில் அவள் மல்லிகை' படம் வெளிவருவதற்கு முன்னாடியே 7 படங்கள் புக் ஆகிடுச்சு. இளையராஜா பாட்டுக்கு எழுதினதோட, பக்தி இல்லாமல் மட்டும், 1300 பாடல்கள் எழுதியிருக்கேன். அப்புறம் அவர் உழைப்புக்கேத்த இடத்துக்கு அவர் போயிட்டார். என் உழைப்புக்கேத்த இடத்துல நான் இருக்கேன். அவங்கவங்க உழைப்பு, அங்கீகாரத்த தந்திட்டு இருக்கு!
இப்போ நான் பேரன் பேத்திகளோட ரொம்ப சந்தோஷமா இருக்கேன். மனசுல எந்த கவலையும் இல்ல.. ஏதோ ஒரு ரசிகர் போல இளையராஜாவோட இசையை ரசிக்கிறேன். நான் என்னோட உழைப்பை எவ்வளவு கொட்டினேனோ.. அந்த அளவுக்கு பாப்புலர் ஆகியிருக்கேன்!’’
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஆளுமா, டோலுமா' ரக பாடல்களை ரசிகனா கேட்டான்...?- கொதிக்கும் கங்கை அமரன்!
இன்றைக்கு படங்கள்ல வர்ற பாடல்களை எப்படி பார்க்கிறீங்க?
''என்ன மியூசிக் போடறாங்க..? என்ன பாட்டு எழுதுறாங்க? 'ஆளுமா, டோலுமா' பாட்டுக்கு ஆடின அஜீத்துக்குத் தெரியாதா, அது நல்ல பாட்டா இல்லையானு தெரியாதா..? அவருக்கான பாட்டா அது...? விஜய்க்குத் தெரியாதா ’ஜித்து ஜில்லாடி... மிட்டா கில்லாடி’ பாட்டு என்ன தரத்துல இருக்குனு! எந்தப் பாடலாசிரியரையும் சிந்திக்க விடாம, புரியாத பாஷையாப் போட்டு தமிழ் மொழியை ஒழிக்கிறாங்க. அதை ஹீரோக்களும் அனுமதிக்கிறாங்க! 'அநேகன்' படத்துல ’டங்காமாரி ஊதாரி...' பாட்டு, 'ஐ' படத்துல ’லேடியோ செக்ஸி லேடியோ'னு ஏதேதோ பாஷைல எழுதி, பாடுறாங்க!’’
''என்ன மியூசிக் போடறாங்க..? என்ன பாட்டு எழுதுறாங்க? 'ஆளுமா, டோலுமா' பாட்டுக்கு ஆடின அஜீத்துக்குத் தெரியாதா, அது நல்ல பாட்டா இல்லையானு தெரியாதா..? அவருக்கான பாட்டா அது...? விஜய்க்குத் தெரியாதா ’ஜித்து ஜில்லாடி... மிட்டா கில்லாடி’ பாட்டு என்ன தரத்துல இருக்குனு! எந்தப் பாடலாசிரியரையும் சிந்திக்க விடாம, புரியாத பாஷையாப் போட்டு தமிழ் மொழியை ஒழிக்கிறாங்க. அதை ஹீரோக்களும் அனுமதிக்கிறாங்க! 'அநேகன்' படத்துல ’டங்காமாரி ஊதாரி...' பாட்டு, 'ஐ' படத்துல ’லேடியோ செக்ஸி லேடியோ'னு ஏதேதோ பாஷைல எழுதி, பாடுறாங்க!’’
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஆளுமா, டோலுமா' ரக பாடல்களை ரசிகனா கேட்டான்...?- கொதிக்கும் கங்கை அமரன்!
ஆனா, ரசிகர்கள் அந்தப் பாடல்களை விரும்பி ரசிக்கிறாங்களே... அதனாலதானே தொடர்ந்து அப்படியான பாடல்களை உருவாக்குறாங்க?’’
''இதுக்கு யார் மேலங்க தப்பு. ரசிகர்கள் மேலயா...? இல்ல.. யார் தயாரிக்கிறாங்களோ அவங்கதான். அவர்கள் எழுதுற பாடல்களும் பாப்புலர் ஆகிடுது. நீங்க ரஜினி, கமல் படத்துல இடம்பெற்றிருக்கும் பல்லவி, சரணம் எல்லாம் கேட்டுப் பாருங்க, அவ்வளவு அழகா இருக்கும். கேட்க ரசனையா இருக்கும். இப்படி அழகாப் போயிட்டு இருந்தப்போ ஏன் இப்படி ஆகிட்டாங்கனு வேதனையா இருக்கு. இப்போ வளர்ற புள்ளைங்கலாம் 'ஆலுமா டோலுமா' மாதிரியான பாடல்களைத்தான் கேட்பாங்க...
பாடுவாங்கனா தமிழ் எப்படி வாழும்? ரசிகனா வந்து கேட்டான்.. இப்படி பாட்டுப் பாடுங்கனு? நீங்கதானே போட்டுத் திணீச்சீங்க...? இப்போ வர்ற காய்கறிகள்ல கொஞ்சம் கொஞ்சமா விஷ மருந்து கலந்த மாதிரி... கொஞ்சம் கொஞ்சமா வரப்போற சந்ததிகளுக்கு இசைய ஊட்டாம புரியாத பாஷைகளை திணிச்சுட்டு இருக்கீங்க.'' என்றவர்,
''எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள் அமைத்த பாடல்கள் மாதிரி மீண்டும் பாடல்கள் வர முடியுதா ..?. பாட்டும் நானே பாவமும் நானே, மாதவி பொன் மயிலாள்... நம்ம கலாசாரத்தை தொலைச்சுட்டாங்க. இதுல இசையமைப்பாளர்கள், ஹீரோக்கள், இயக்குநர்கள் எல்லாருக்கும் பங்கு இருக்கு. அதே சமயம் நான் எல்லாரையும் குறை சொல்லலை. மதன் கார்க்கி நல்லா எழுதறாரு.
ஆனா, அவரையும் சமயங்கள்ல அப்படியான பாடல்கள் எழுத வைச்சிடுறாங்க. கஷ்டமா இருக்கு... திருடனாய் பார்த்து திருந்தால் விட்டால் திருட்டை ஒழிக்க முடியாதுங்கற மாதிரி, படம் எடுக்கறவங்க, நடிக்கிறவங்க அவங்களே பார்த்து திருந்தினால்தான் உண்டு''.
''இதுக்கு யார் மேலங்க தப்பு. ரசிகர்கள் மேலயா...? இல்ல.. யார் தயாரிக்கிறாங்களோ அவங்கதான். அவர்கள் எழுதுற பாடல்களும் பாப்புலர் ஆகிடுது. நீங்க ரஜினி, கமல் படத்துல இடம்பெற்றிருக்கும் பல்லவி, சரணம் எல்லாம் கேட்டுப் பாருங்க, அவ்வளவு அழகா இருக்கும். கேட்க ரசனையா இருக்கும். இப்படி அழகாப் போயிட்டு இருந்தப்போ ஏன் இப்படி ஆகிட்டாங்கனு வேதனையா இருக்கு. இப்போ வளர்ற புள்ளைங்கலாம் 'ஆலுமா டோலுமா' மாதிரியான பாடல்களைத்தான் கேட்பாங்க...
பாடுவாங்கனா தமிழ் எப்படி வாழும்? ரசிகனா வந்து கேட்டான்.. இப்படி பாட்டுப் பாடுங்கனு? நீங்கதானே போட்டுத் திணீச்சீங்க...? இப்போ வர்ற காய்கறிகள்ல கொஞ்சம் கொஞ்சமா விஷ மருந்து கலந்த மாதிரி... கொஞ்சம் கொஞ்சமா வரப்போற சந்ததிகளுக்கு இசைய ஊட்டாம புரியாத பாஷைகளை திணிச்சுட்டு இருக்கீங்க.'' என்றவர்,
''எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள் அமைத்த பாடல்கள் மாதிரி மீண்டும் பாடல்கள் வர முடியுதா ..?. பாட்டும் நானே பாவமும் நானே, மாதவி பொன் மயிலாள்... நம்ம கலாசாரத்தை தொலைச்சுட்டாங்க. இதுல இசையமைப்பாளர்கள், ஹீரோக்கள், இயக்குநர்கள் எல்லாருக்கும் பங்கு இருக்கு. அதே சமயம் நான் எல்லாரையும் குறை சொல்லலை. மதன் கார்க்கி நல்லா எழுதறாரு.
ஆனா, அவரையும் சமயங்கள்ல அப்படியான பாடல்கள் எழுத வைச்சிடுறாங்க. கஷ்டமா இருக்கு... திருடனாய் பார்த்து திருந்தால் விட்டால் திருட்டை ஒழிக்க முடியாதுங்கற மாதிரி, படம் எடுக்கறவங்க, நடிக்கிறவங்க அவங்களே பார்த்து திருந்தினால்தான் உண்டு''.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஆளுமா, டோலுமா' ரக பாடல்களை ரசிகனா கேட்டான்...?- கொதிக்கும் கங்கை அமரன்!
கடைசியா ஒரு கேள்வி... இப்படி வெளிப்படையா எல்லா இடத்துலயும் பேசுறீங்களே பிரச்னை வருமோனு யோசிச்சிருக்கீங்களா..?’’
“நான் இப்படி பேசறதால போலீஸ் பிடிச்சிட்டுப் போயிடுமா என்ன...? வெளிப்படையா பேசுறேன். உண்மையப் பேசுறேன். தப்பாத் தெரியுதா சொல்லுங்க”.
நன்றி விகடன்
“நான் இப்படி பேசறதால போலீஸ் பிடிச்சிட்டுப் போயிடுமா என்ன...? வெளிப்படையா பேசுறேன். உண்மையப் பேசுறேன். தப்பாத் தெரியுதா சொல்லுங்க”.
நன்றி விகடன்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஆளுமா, டோலுமா' ரக பாடல்களை ரசிகனா கேட்டான்...?- கொதிக்கும் கங்கை அமரன்!
பரவாயில்லை , இவராவது குரல் கொடுத்து இருக்காரே!.............
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஆளுமா, டோலுமா' ரக பாடல்களை ரசிகனா கேட்டான்...?- கொதிக்கும் கங்கை அமரன்!
படைப்பாளிகளுக்கு சமூகப்பொறுப்பு வேண்டும். இல்லையேல் அவர்கள் காலத்தால் மிதிக்கப்படுவர் என்பது நாம் காணும் வரலாறு.
svisweswaran- புதியவர்
- பதிவுகள் : 10
இணைந்தது : 04/08/2015
Re: ஆளுமா, டோலுமா' ரக பாடல்களை ரசிகனா கேட்டான்...?- கொதிக்கும் கங்கை அமரன்!
மேற்கோள் செய்த பதிவு: 1213368svisweswaran wrote:படைப்பாளிகளுக்கு சமூகப்பொறுப்பு வேண்டும். இல்லையேல் அவர்கள் காலத்தால் மிதிக்கப்படுவர் என்பது நாம் காணும் வரலாறு.
நிஜம், இப்படி எதற்கும் உதவாத வார்த்தைகளை திருப்பி திருப்பி சொல்வதால் நம்மை சுற்றி நல்ல அதிர்வலைகள் இல்லாமல் போகும் அபாயம் இருக்கு............ முன்னெல்லாம் எதுக்கு எல்லாமே மங்கலமாய் பேசணும் என்று சொன்னார்கள்?........அப்படி பேசுவதால் நம்மை சுற்றி நல்ல அதிர்வலைகள் இருக்கும் , அது நமக்கும் நம் குடும்பத்துக்கும் ஏன் நாட்டுக்கும் நல்லது.............
.
.
ஆனா, இப்போ பாருங்கோ விளக்கு வைக்கும் நேரம் என்று இல்லை, கலங்கார்த்தால என்று இல்லை எப்பவும் வெட்டுவேன் குத்துவேன், அவளை ஒழித்துவிடுவேன் போன்ற அமங்ங்கலமான வார்த்தைகள் தான் டிவி இல் வருகிறது.............ஸ்வாமி பாட்டு போடறாங்க தான், ஆனால் இடை வேளைகளில் வரும் விளம்பரங்கள்???..........சொன்னால் நான் 1930 என்று கலாட்டா செய்வார்கள்
.
.
சரி நான் உங்களை எப்படி கூப்பிடுவது?..........அந்த திரி லேயே கேட்டேன், நீங்க இன்னும் பார்க்கலை போல இருக்கு
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஆளுமா, டோலுமா' ரக பாடல்களை ரசிகனா கேட்டான்...?- கொதிக்கும் கங்கை அமரன்!
" வாடி என் கப்பக் கிழங்கே ! " பாடலை எழுதிய கங்கை அமரனுக்கு " ஆலுமா டோலுமா " பாடலை விமர்சனம் செய்ய அருகதை இல்லை .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: ஆளுமா, டோலுமா' ரக பாடல்களை ரசிகனா கேட்டான்...?- கொதிக்கும் கங்கை அமரன்!
ராதாவின் அறிமுகப்படமான அலைகள் ஓய்வதில்லையில்
ராதாவை வம்புக்கு இழுத்து கார்த்திக் பாடும் பாடல்
”வாடி என் கப்பக் கிழங்கே”.
இதை எழுதியவர் கங்கை அமரன். அவரிடம்
இந்தப் பாடல் குறித்து ஒருவர் கேட்ட போது அவர் சொன்னது இது.
”பொதுவா கும்முன்னு இருக்குற பொண்ணுகளை கிழங்கு மாதிரி
இருக்கான்னு கிராமப் புறங்கள்ல சொல்லுவாங்க,
ராதாவும் அப்படித்தான் இருந்தாங்க. அவங்க நேட்டிவ் கேரளா,
கேரளாவுல கப்பக் கிழங்கு தான பேமஸ்.
அதுதான் வாடி என் கப்பக் கிழங்கேன்னு எழுதுனேன். என்றார்.
-
Similar topics
» ‘ஆளுமா...டோலுமா’ பாடலுக்கு தலைவர் டான்ஸ் ஆடுவார் என்பதை....
» பிரபல இசையமைப்பாளர் கங்கை அமரன், பா.ஜ.,வில் இணைந்தார்
» இசைஞானி நல்லா இருக்கார்... எங்க அண்ணனைக் காணோம்! இளையராஜா பற்றி கங்கை அமரன் ஆதங்கம்
» அமரன் கவிதாவெளி ! AMARAN’s POESY (தமிழ் ஹைக்கூ – ஆங்கிலத்திலும்) (முதல் பாகம்) நூல் ஆசிரியர் : கவிஞர் அமரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» கங்கை சப்தமியையொட்டி கங்கை ஆற்றுக்கு சிறப்புப் பூஜை!
» பிரபல இசையமைப்பாளர் கங்கை அமரன், பா.ஜ.,வில் இணைந்தார்
» இசைஞானி நல்லா இருக்கார்... எங்க அண்ணனைக் காணோம்! இளையராஜா பற்றி கங்கை அமரன் ஆதங்கம்
» அமரன் கவிதாவெளி ! AMARAN’s POESY (தமிழ் ஹைக்கூ – ஆங்கிலத்திலும்) (முதல் பாகம்) நூல் ஆசிரியர் : கவிஞர் அமரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» கங்கை சப்தமியையொட்டி கங்கை ஆற்றுக்கு சிறப்புப் பூஜை!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|