ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெற்றோர்களை ‘தெறி’க்க விடும் வசூல் வேட்டை!-ஜூனியர் விகடன்

Go down

பெற்றோர்களை ‘தெறி’க்க விடும் வசூல் வேட்டை!-ஜூனியர் விகடன்  Empty பெற்றோர்களை ‘தெறி’க்க விடும் வசூல் வேட்டை!-ஜூனியர் விகடன்

Post by அசோகன் Thu Jun 02, 2016 3:58 pm

எந்தவிதக் கட்டுப்பாடும், வரைமுறையும் இல்லாமல் தங்கள் இஷ்டத்துக்கு வசூல் வேட்டை நடத்திப் பெற்றோர்களைக் கதறவிடுகின்றன, தனியார் பள்ளிகள். இந்தக் கொள்ளையைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கமாட்டாரா என்று முதல்வர் ஜெயலலிதாவை ஏக்கத்தோடு பார்க்கிறார்கள் பெற்றோர்கள்.

“சிங்காரவேலர் கமிட்டியின் கட்டண நிர்ணயம், 2015 - 2016-ம் ஆண்டுடன் காலாவதியாகிவிட்டது. 2016-17-ம் ஆண்டுக்கான கட்டணங்கள் இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை. ஆகையால், பழைய கட்டணங்களையே பள்ளிகள் வாங்க வேண்டும். ஆனால், பெரும்பாலான பள்ளிகளில் இரண்டு மடங்கு, மூன்று மடங்கு, நான்கு மடங்கு என அநியாயமாக கட்டணங்களை வசூலிக்கிறார்கள். இதுதொடர்பாக, தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான புகார்கள் எங்களுக்கு வருகின்றன. பள்ளிக்கூடம் திறந்த பிறகு பார்த்துக்கொள்ளலாம், அதுவரை பணம் கட்டாதீர்கள் என்று பெற்றோர்களிடம் சொல்லி இருக்கிறோம். கூடுதல் கட்டண வசூலை அரசு உடனடியாகத் தடுக்க வேண்டும். இல்லையென்றால், பள்ளிகள் திறக்கப்பட்ட பிறகு மாநிலம் முழுவதும் பிரச்னை வெடிக்கும்” என்று எச்சரிக்கிறார், தமிழ்நாடு மாநில பெற்றோர் நலக் கூட்டமைப்பின் மாநிலத் தலைவரான அருமைநாதன்.



தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளையைத் தடுப்பதற்காக ஒரு கமிட்டியை அமைத்து, பலகட்ட முயற்சி களுக்குப் பிறகு அந்த கமிட்டி கட்டணங்கள் நிர்ணயம் செய்தும், அதனால் எந்தப் பலனும் இல்லாத நிலை உள்ளது. சட்டத்தைக் கொண்டுவந்த அரசாங்கம், அந்தச் சட்டத்தை அமல்படுத்துவதில் அக்கறை காட்டவில்லை. ஒவ்வொரு பள்ளிக்குமான கட்டணங்களை நிர்ணயம் செய்து, அதன் விவரங்களை இணையத்தில் மட்டும் வெளியிட்டு இருக்கிறார்கள். அதைத் தேடிப்போய் பார்ப்பதும் அவ்வளவு சுலபம் அல்ல.

“தனியார் பள்ளிகளைக் கட்டுப்படுத்தும் நிலையில் அரசு இல்லை. ஏனென்றால், அரசியல்வாதிகளும், அதிகார மையங்களுக்கு நெருக்கமானவர்களும், செல்வாக்கு மிக்கவர்களும்தான் பள்ளிக்கூடங்களை நடத்துகிறார்கள். அமைச்சர்களின் பிள்ளைகள், உயர் அதிகாரிகளின் பிள்ளைகளுக்குப் பிரபலமான பள்ளிகளில் அட்மிஷன் வாங்கிக்கொடுப்பதுதான் பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகளுக்கு முக்கிய வேலையாக இருக்கிறது. இந்த அதிகாரிகள், முறைகேடாகக் கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது எப்படி நடவடிக்கை எடுப்பார்கள்? கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பள்ளியின் அங்கீகாரத்தை ரத்துசெய்ய வேண்டும், அந்தப் பள்ளியின் நிர்வாகிக்கு சிறைத்தண்டனை வழங்க வேண்டும் என்று சட்டம் சொல்கிறது. ஆனால், சட்டத்தை மீறும் பள்ளிகள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை” என்று குற்றம் சாட்டுகிறார் அருமைநாதன்.



“அரசு நிர்ணயித்துள்ள கட்டணம் பற்றிய விவரங்களை ஒவ்வொரு பள்ளியின் தகவல் பலகையிலும் வெளியிட வேண்டும். ஆனால், எந்தவொரு பள்ளியும் அதைச் செய்யவில்லை. ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள டி.இ.ஓ., சி.இ.ஓ., ஐ.எம்.எஸ் அலுவலகங்களில், அந்தந்த மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணங்களின் விவரங்களை வைக்க வேண்டும். பொதுமக்கள் தெரிந்துகொள்ள வேண்டும். உரிய கட்டணங்களைத்தான் வாங்குகிறார்களா என்பதை ஆய்வுசெய்ய அதிகாரிகள் குழு பள்ளிகளுக்கு நேரில் போய் ஆய்வு செய்ய வேண்டும். அரசு நிர்ணயித்த கட்டணத்தைத் தவிர, வேறு எந்தக் கட்டணத்தையும் செலுத்தத் தேவையில்லை என்று பகிரங்கமாக அரசு அறிவிக்க வேண்டும். முறைகேடாகக் கட்டணம் வசூலித்தால், அதுபற்றி புகார் கொடுப்பதற்கு புகார் மையங்களை அரசு உருவாக்க வேண்டும். புகாரை பதிவுசெய்து, பதிவு எண் வழங்கப்பட வேண்டும். அந்தப் புகார் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது பற்றி புகார்தாரருக்குத் தெரிவிக்க வேண்டும். இதைச் செய்தாலே கட்டணக்கொள்ளையைத் தடுத்துவிடலாம்” என்கிறார் பொதுப் பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு.

சட்டம் போடுவது மட்டும்தான் அரசின் வேலை... அந்தச் சட்டம் செயலுக்கு வருகிறதா, இல்லையா என்பதுபற்றி எங்களுக்குக் கவலை இல்லை என்கிற அணுகுமுறை ஒரு நல்ல அரசுக்கு அழகல்ல. அம்மா மாறிவிட்டார் என்று தமிழக மக்கள் நெகிழ்ந்துபோயிருக்கும் நிலையில், கல்விக் கட்டணக்கொள்ளையைத் தடுப்பதிலும் அந்த மாற்றத்தைக் காட்டலாமே!


நன்றி -ஜூனியர் விகடன்
avatar
அசோகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum