ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாய்விட்டு சிரிப்போம்... அதுவே மருந்து!

2 posters

Go down

வாய்விட்டு சிரிப்போம்... அதுவே மருந்து! Empty வாய்விட்டு சிரிப்போம்... அதுவே மருந்து!

Post by krishnaamma Thu May 26, 2016 10:57 am

வாய்விட்டு சிரிப்போம்... அதுவே மருந்து! UhDygTmeTiCvxtf7prpt+Tamil_News_large_1529065_318_219

'சிரிப்பு இதன் சிறப்பை சீர்துாக்கிபார்ப்பதே நமது பொறுப்பு - மனம்கருப்பா வெளுப்பா என்பதைக்காட்டும் கண்ணாடி சிரிப்பு!

சிந்திக்கத் தெரிந்த மனிதகுலத்துக்கேசொந்தமான கையிருப்பு!வேறு ஜீவராசிகள் செய்ய முடியாதசெயலாகும் இந்தச் சிரிப்பு!''


என்ற நகைச்சுவை மன்னன் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் பாடல், சிரிப்பின் மகத்துவத்தை உணர்த்துகிறது.சுவைபட நகைத்தலே நகைச்சுவை. நல்ல கருத்து+சிரிப்பு= நகைச்சுவை என்றால் வரவேற்பிற்குரியது. எதிராளியின் மனதைப் புண்படுத்தாத வேடிக்கை, விளையாட்டு, தமாஷ், ஹாஸ்யம், கேலி என எல்லாமே நகைச்சுவை வகையைச் சார்ந்தவையே.

இன்றைய மாற்று மருத்துவ முறைகளில் சிரிப்பும் ஒரு சிகிச்சை முறையாக ஏற்கப்பட்டிருக்கிறது. இது ஒன்றும் புதிதல்ல, 'வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும்' என்பது நம் முன்னோர்கள் சொல்லி வைத்த அனுபவ உண்மைதானே. 'சிரிப்பும் சந்தோஷமும் நோயாளி குணமடைவதைத் துரிதப்படுத்தும்' என்கின்றனர் அமெரிக்க மருத்துவர்கள்.

நகைச்சுவையில் எத்தனையோ பயன்கள் உண்டு. எனினும், 'நல்ல நகைச்சுவை
சூழ்நிலையின் இறுக்கத்தைப் போக்கிவிடும்' என்பது சிறப்பு.

யோகாவில் 'நகைப்புக்கிரியை' என்று ஒருவித அற்புதக் கிரியை உண்டு. அத்துடன் 'சிரிப்புத் தியானம்' என்ற ஒருவகைத் தியானமும் சிறப்பாக இடம் பெற்றுள்ளது.

ஜப்பானில் 'சிரிக்கும் புத்தர்' என்ற ஒருவர் இருந்தார். அவரது உண்மையான பெயர் 'ஹோட்டே' என்பதாகும். அவர் எப்பொழுதும் வாய்திறந்து பேசமாட்டார். மக்கள் கூடும் இடங்களுக்குச் சென்று வயிறு குலுங்கும்படித் தனியாகச் சிரிக்க ஆரம்பித்து விடுவார்.

அவர் சிரிக்க ஆரம்பித்தால் நிறுத்த மாட்டார். அதைப் பார்ப்பவர்களும் தாங்களாகவே சிரிக்க ஆரம்பித்து விடுவர். சிரிப்பின் பயன்கள் வாய் விட்டுச் சிரிப்பதன் மூலம், முகத்தில் பொலிவும், கண்களில் ஒளியும் கூடும்.

வாய்விட்டு சிரிப்போம்... அதுவே மருந்து! DLiO66qPRfCmh6Un8QIa+SmileyLaughing2Tears

மேலும் கண்களில் சாந்தமும், தெளிவும் உண்டாகும். நுரையீரல் முழுமையாக விரிந்து, பிராண சக்தியை முழுவதும் கிடைக்கச் செய்கிறது. இருதயம் சிறப்பான முறையில் வேலை செய்கிறது. வயிற்றில் ஜீரண சக்தி துரிதமாக நடைபெறுகிறது. சிறுநீரக செயற்பாடும் நன்கு அமைகிறது. நரம்பு மண்டலமே ஒருவிதப் புத்துணர்ச்சியை பெறுகின்றது. தொண்டைப் பிரச்னைகள், வாய்வு தொந்தரவுகள், மலச்சிக்கல் போன்றவற்றிலிருந்து விடுபட முடிகிறது.

சிரிக்கச் சிரிக்க மூளைக்குத் தேவையான ரத்த ஓட்டம், நன்கு துரிதமாகச் செல்கிறது. மூளைக்குத் தேவையான ஆக்சிஜன் முழுமையாய் கிடைக்கிறது. இதனால் மூளை புத்துணர்ச்சி அடைவதுடன், ஞாபக சக்தி அதிகரிக்கிறது. நகைச்சுவை உணர்வானது, மன ஆரோக்கியத்திற்கு இன்றியமையாதது. மனம் ஆரோக்கியமாக இருந்தால், உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.

கடுமையான போராட்டங்களையும், பெரும் மன உளைச்சல்களையும் ஒரே ஒரு சிரிப்பு வென்று விடும். அந்தக் காலங்களில், அரசர்கள் மன இறுக்கங்களுக்குள்ளாகி விடுவார்கள் என்பதால், அரசவையில் விதுாஷகன் என்னும் விகடகவிகள் தங்களது நகைச்சுவை உணர்வால் சூழ்நிலையின் இறுக்கத்தை மாற்றி சகஜநிலைக்குக் கொண்டு வரும் பணியைச் செய்தனர்.

தொடரும்............


Last edited by krishnaamma on Thu May 26, 2016 11:03 am; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வாய்விட்டு சிரிப்போம்... அதுவே மருந்து! Empty Re: வாய்விட்டு சிரிப்போம்... அதுவே மருந்து!

Post by krishnaamma Thu May 26, 2016 11:03 am

வாய்விட்டு சிரிப்போம்... அதுவே மருந்து! W89gYkzQDyDZWpzMqJdD+laughing-smiley-face-gif-gif-smiley-laugh

சிரிப்பு, உற்சாகம், மலர்ச்சி, மகிழ்ச்சி, ஆளுமை போன்றவற்றை உள்ளடக்கியதே நகைச்சுவை உணர்வு ஆகும். நல்ல நகைச் சுவை உணர்வு கொண்டவன் தான் சிறந்த ஆளுமை படைத்தவனாக இருப்பான் என்கின்றனர் சமூகவியலார்.

“நகைச்சுவை உணர்வு மட்டும் என்னிடத்தில் இல்லாதிருந்தால் நான் என்றோ இறந்திருப்பேன்” என்று மகாத்மா காந்தி கூறியுள்ள கருத்து இதனை மெய்ப்பிக்கிறது.

இறுக்கம் தளரும் 'ஹியூமர் தெரபி' என்று அழைக்கப்படும் சிரிப்பு மருத்துவம், நோய்களைக் குணப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

ஜலதோஷம் போன்ற சுவாசம் தொடர்பான நோய்கள் வராமல் தடுக்க, 'இம்மியூனோ குளோபுலின் ஏ' என்ற நோய் எதிர்ப்பு சக்தி அவசியம் தேவை. சிரிக்கும் போது உமிழ்நீரில் இதன் அளவு அதிகரிக்கிறது என்கிறது மருத்துவ ஆராய்ச்சி. வலியின் தீவிரத்தைக் குறைப்பதிலும் சிரிப்பு முக்கியப் பங்கு வகிக்கிறது.

வாய்விட்டு சிரிப்போம்... அதுவே மருந்து! M245JWBTtyS7LHZXKMfq+laughing-smiley-face

சிரிக்கும் போது, உடலில் 'எண்டோர்பின்' என்கிற இயற்கையான 'வலிகுறைப்பிகள்' உருவாகின்றன. சிரிப்பதால் தசைகளின் இறுக்கம் தளர்வதோடு, இந்த எண்டோர்பின்களும் சேர்வதால் இரட்டிப்பு பலன் கிடைக்கிறது. மேலும், உயர் ரத்த அழுத்த நோய் வருவதையும் தடுக்கும் ஆற்றல் கொண்டது சிரிப்பு என்பது நிரூபணமாகிஉள்ளது.

தலைவர்களும் நகைச்சுவை உணர்வும் பெரும்பாலான தலைவர்களிடம், நகைச்சுவை உணர்வு மேலோங்கியிருந்தது. அவர்கள் எதிராளியின் குறைகளை ஆவேச வார்த்தைகளில் கண்டிப்பதை விட, நகைச்சுவை உணர்வோடு எடுத்துக் காட்டும் போது நல்ல பலன் கிடைக்கும் என்பதை உணர்ந்திருந்தார்கள்.

பால கங்காதர திலகரை உளவு பார்ப்பதற்காக பிரிட்டிஷ் அரசு, ரகசிய போலீஸ்காரர் ஒருவரை சமையல்காரனாக அனுப்பியது. அவனும் ஆறுமாதமாக அவரிடம் வேலை பார்த்தான். அந்த ஆசாமி திலகரிடம், “எசமான், சம்பளம் போதவில்லை, கொஞ்சம் உயர்த்த வேண்டும்” என்றான்.

திலகர் சிரித்துக் கொண்டே, 'என்னப்பா இது, நான் மாதம் ஆறு ரூபாய் தருகிறேன், சர்க்கார் இருபத்தெட்டு ரூபாய் கொடுக்கிறார்கள். இன்னும் திருப்தி இல்லையா உனக்கு?' என்று கேட்டார். பிறகு அவனைக் காணவேயில்லை.

ஆங்கிலேயர் ஒருவர் மிகுந்த ஆணவத்துடன் “சூரியன் ஒரு போதும் அஸ்தமிக்காத ஏகாதிபத்தியத்தை நாங்கள் பெற்றிருக்கிறோம்” என்று பெருமையடித்தார்.

உடனே சுபாஷ்சந்திர போஸ் “ஆமாம், பிரிட்டிஷ்காரனை இருட்டிலே விட்டு வைக்க, கடவுளுக்குக் கூட நம்பிக்கை இல்லை” என்று நகைச்சுவையாகக் கூறி மடக்கினார்.

தொடரும்...............


Last edited by krishnaamma on Thu May 26, 2016 11:16 am; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வாய்விட்டு சிரிப்போம்... அதுவே மருந்து! Empty Re: வாய்விட்டு சிரிப்போம்... அதுவே மருந்து!

Post by krishnaamma Thu May 26, 2016 11:06 am

வாய்விட்டு சிரிப்போம்... அதுவே மருந்து! PsbQ3YdnTjC9SMOzeGGY+Laugh

காமராஜரிடம் கிராம மக்கள் வந்து “ஐயா, எங்களுக்குச் சுடுகாட்டுப் பாதை சரியாயில்லை. நாங்கள் சுடுகாட்டுக்குச் செல்ல வசதியாய் ஒரு பாதை வேண்டும்,” என்றனர்.

அதற்கு அவர், “சரிதான், நீங்க வாழறதுக்குப் பாதை போட நான் முயற்சி பண்ணிட்டு இருக்கேன், நீங்க என்னடான்னா, செத்தவனுக்குப் பாதை போடச் சொல்றீங்க” என்றார் நகைச்சுவையாக.

நேருவின் நகைச்சுவை ஜவஹர்லால் நேருவின் காரை வழிமறித்து, அவரை இறங்கவைத்து, “சுதந்திரம் சுதந்திரம் என்று பேசுகிறீர்களே, சுதந்திரத்தால் எங்களுக்கு என்ன கிடைத்தது?” என்று ஆவேசமாகக் கேட்டார் ஒருவர்.

நேரு அவருடைய தோளைத் தட்டித் கொடுத்து, “உனக்கு என்ன கிடைக்கவில்லை என்று நினைக்கிறாய்? ஒரு நாட்டின் பிரதம மந்திரியை வழி மறித்து உன் கருத்தை நீ சொல்ல முடிகிறதே, அது தானப்பா சுதந்திரம்” என்றார் நகைச்சுவை இழையோட.

மகாத்மா காந்தியிடம் ஆங்கிலப் பத்திரிகையாளர் ஒருவர் கிண்டலாக, “உங்க நாட்டு மக்கள் உங்களைப் போய் தலைவராக ஏற்றுக் கொண்டிருக்கிறார்களே, உங்களை விட திறமையான தலைவர் அவர்களுக்குக் கிடைக்கவில்லையா'' என்று கேட்டார். அதற்கு காந்தி, “உங்களைப் போன்ற பிரிட்டிஷ்காரர்களைச் சமாளிக்க நானே போதும் என்று அவர்கள் நினைத்திருக்கலாம்” என்று சிரித்தபடி கூறினார்.

ஒரு குழந்தை சராசரியாகத் தினமும் 400 முறை சிரிக்கிறதாம். ஆனால் பெரியவர்களோ, 15 முறை தான் சிரிக்கிறார்களாம். தினமும் குறைந்தபட்சம் 30 முறையாவது சிரிக்க வேண்டும் என்று மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

ஆகவே, அனைவரும் சிரியுங்கள்…… சிரியுங்கள்… வாய்விட்டுச் சிரியுங்கள்!

சிரிப்பு  சிப்பு வருது  சிரிப்பு  சிப்பு வருது  சிரிப்பு  சிப்பு வருது  சிரிப்பு  சிப்பு வருது  சிரிப்பு  சிப்பு வருது  சிரிப்பு  சிப்பு வருது  சிரிப்பு  சிப்பு வருது  சிரிப்பு

பா. பனிமலர்
தமிழ்த்துறைத் தலைவர்,
இ.மா.கோ. யாதவர் மகளிர் கல்லூரி,
மதுரை.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வாய்விட்டு சிரிப்போம்... அதுவே மருந்து! Empty Re: வாய்விட்டு சிரிப்போம்... அதுவே மருந்து!

Post by ayyasamy ram Thu May 26, 2016 11:18 am

வாய்விட்டு சிரிப்போம்... அதுவே மருந்து! 3838410834 வாய்விட்டு சிரிப்போம்... அதுவே மருந்து! 3838410834
-
என்ன சார் கார் டேங்கை ஓபன் பண்ணிட்டு
சிரிக்கிறீங்க?
-
மனசு விட்டு சிரிச்சா ‘ஆயில்’ கூடுமின்னு சொன்னாங்க…
அதான்!
-
-----------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83749
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

வாய்விட்டு சிரிப்போம்... அதுவே மருந்து! Empty Re: வாய்விட்டு சிரிப்போம்... அதுவே மருந்து!

Post by krishnaamma Thu May 26, 2016 11:19 am

என்ன.............. Guest , கட்டுரையை படித்ததும் சிரிக்க ஆரம்பித்து விட்டீர்களா?.............நீங்கள் சிரிப்பது எனக்குத் தெரியும் படிக்கு , ஒரு SMILEY போடுங்கோ பார்க்கலாம் .....என்ன பாக்கறீங்க?............எப்படி என்றா?...............பின்னுட்டமாகத்தான் .............ஜாலி ஜாலி ஜாலி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வாய்விட்டு சிரிப்போம்... அதுவே மருந்து! Empty Re: வாய்விட்டு சிரிப்போம்... அதுவே மருந்து!

Post by krishnaamma Thu May 26, 2016 11:20 am

ayyasamy ram wrote:வாய்விட்டு சிரிப்போம்... அதுவே மருந்து! 3838410834 வாய்விட்டு சிரிப்போம்... அதுவே மருந்து! 3838410834
-
என்ன சார் கார் டேங்கை ஓபன் பண்ணிட்டு
சிரிக்கிறீங்க?
-
மனசு விட்டு சிரிச்சா ‘ஆயில்’ கூடுமின்னு சொன்னாங்க…
அதான்!
-
-----------------
மேற்கோள் செய்த பதிவு: 1208622

ஹா...ஹா...ஹா..... சூப்பர் அண்ணா புன்னகை....................... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வாய்விட்டு சிரிப்போம்... அதுவே மருந்து! Empty Re: வாய்விட்டு சிரிப்போம்... அதுவே மருந்து!

Post by krishnaamma Thu May 26, 2016 11:20 am

ayyasamy ram wrote:வாய்விட்டு சிரிப்போம்... அதுவே மருந்து! 3838410834 வாய்விட்டு சிரிப்போம்... அதுவே மருந்து! 3838410834
-
என்ன சார் கார் டேங்கை ஓபன் பண்ணிட்டு
சிரிக்கிறீங்க?
-
மனசு விட்டு சிரிச்சா ‘ஆயில்’ கூடுமின்னு சொன்னாங்க…
அதான்!
-
-----------------
மேற்கோள் செய்த பதிவு: 1208622

ஹா...ஹா...ஹா..... சூப்பர் அண்ணா புன்னகை....................... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வாய்விட்டு சிரிப்போம்... அதுவே மருந்து! Empty Re: வாய்விட்டு சிரிப்போம்... அதுவே மருந்து!

Post by ayyasamy ram Thu May 26, 2016 1:10 pm

வாய்விட்டு சிரிப்போம்... அதுவே மருந்து! AZMsSrLQ7yf889aZCGfD+ifamily
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83749
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

வாய்விட்டு சிரிப்போம்... அதுவே மருந்து! Empty Re: வாய்விட்டு சிரிப்போம்... அதுவே மருந்து!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum