ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எதையும் சான்றோடும்... சாட்சியோடும்...

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

எதையும் சான்றோடும்... சாட்சியோடும்... Empty எதையும் சான்றோடும்... சாட்சியோடும்...

Post by krishnaamma Mon Apr 11, 2016 1:29 am

இரு நபர்களுக்குள் பணப் பரிமாற்றம் நடந்தது. கணிசமான தொகையுடன் சென்றவர், சாலையில் பைக்கில் அடிபட்டு இறந்து போனார்.

பணம் என்ன ஆயிற்று என்றே தெரியவில்லை. விபத்தின் போது உதவுகிறேன் பேர்வழி என முன் வந்த, முன்பின் தெரியாத ஒருவன் அமுக்கி விட்டான் என்றனர் சிலர். போக்குவரத்துப் போலீசார் கைப்பற்றினர் என்றனர் வேறு சிலர்

மொத்தத்தில் ஆளும் காலி; பணமும் காலி. ஆனால், உயிரை இழந்தவரின் குடும்ப உறுப்பினர்கள், 'நீங்கள், அவரிடம் பணத்தை தந்தேன் என்று சொன்னது பொய்; நம்பவே முடியாத கட்டுக்கதை...' என்று அடித்துப் பேசினர். பணத்தைக் கொடுத்தவருக்கு பணம் போனதுடன், கெட்ட பெயர் வேறு!

எந்த பணப் பரிமாற்றமும் ஆதாரம் மற்றும் சாட்சியத்துடன் நடைபெற வேண்டும். 'பணம் பெற்றேன்...' என்று கையெழுத்துக் கேட்பது அவசியம் தானா எனக் கொடுப்பவர்களே தயக்கம் காட்டுவதால் வரும் கோளாறு இது!

'என்ன... என் மீது நம்பிக்கை இல்லையா?' என்று வாங்குகிறவர்கள் கேட்கின்றனர்; இதுவும் தவறு.
இப்படிக் கேட்பர் என்று தெரிந்தால், வேறு விதமான அணுகுமுறைகளைக் கையாளலாம்.

நான் அறிந்த ஒரு முதலாளி, பிறருக்குத் தரும் தொகைகளான சம்பளம், அன்பளிப்பு மற்றும் கடன் எதுவானாலும் தன் கையால் கொடுக்கவே மாட்டார்; ஊழியர் மூலமாகத் தான் கொடுப்பார்.

அந்த ஊழியரோ, கையோடு புரோ நோட்டு, வவுச்சருடன் தான் பணத்தை நீட்டுவார்; கையெழுத்துப் போட்டே ஆக வேண்டும். 'எப்ப கொடுத்தீங்க, எவ்வளவு கொடுத்தீங்க, என்னைக்குக் கொடுத்தீங்க?' என்கிற மூன்று கேள்விகளுக்கும், மேற்படி ஒரு கையெழுத்துப் போதும்; அசைக்க முடியாத ஆதாரமாகி விடும்.

தனி மனித வரவு - செலவு என்றால், வீட்டினரை அழைத்து, அவர்கள் கையால் கொடுக்கச் செய்யலாம். உரியவருக்கு நினைவு இல்லாமல் போனாலும், உடன் இருந்தவருக்காவது நினைவு இருக்கும்.

அவர் நல்ல சாட்சியாகவும் ஆகிவிடுவார். ஒற்றை மனிதராக வரவு - செலவு செய்த நிலையில், வாங்கியவர், 'நானா வாங்கினேன்?' என்று மறுக்கும் போது, கொடுத்தவர் கை பிசைந்து நிற்க வேண்டும் என்பதுடன், ஏமாற்றுப் பேர்வழி என்றோ, ஏமாந்த சோணகிரி என்றோ பெயர் பரவும். இது தேவை தானா?

காசோலை மூலமான வரவு - செலவு என்றால் அது, இன்னமும் பாதுகாப்பு; நீதிமன்றம் வரை எடுபடும்.
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு நான் பயிற்சி வகுப்பு எடுப்பது உண்டு. அப்போது, அவர்களிடம் மறவாமல் சொல்வது என்ன தெரியுமா...

ஒரு மாணவ, மாணவியரை கண்டிக்கவோ, விசாரிக்கவோ நேரும்போது, சாட்சியம் வைத்துக் கொள்ளுங்கள். துறைக்கு அழைத்து விசாரியுங்கள். உடன் ஓர் ஆசிரியர், ஆசிரியை பார்வையாளராக இருக்கட்டும். இதுவே பாதுகாப்பு!

இல்லாவிட்டால், மாணவன் என்றால் ஜாதியைச் சொல்லித் திட்டினார் என்றோ, மாணவி என்றால் கையைப் பிடித்து இழுத்தார் என்றோ அபாண்டம் வரலாம்; கவனம் என்பேன்.

சாவியைக் கொடுத்தேன்; பைலை ஒப்படைத்தேன் என்பதில் ஆரம்பித்து, பெரிய விஷயங்கள் வரை சாட்சியங்கள், மிக முக்கியமானவை; நம்மைக் காப்பாற்ற வல்லவை. சாட்சியம் மற்றும் சான்றுகள் நீதிமன்றங்களுக்கு மட்டுமே உரியவை, இத்தகைய களங்களில் மட்டுமே தேவை என பலரும் கருதுகின்றனர்; தவறு!

'வாங்கினதைக் கூடவா ஒருவர் மறப்பார், இதற்கெல்லாமா பொய் சொல்வர்...' என்று நாம் மற்றவர்களைப் பற்றி உயர்வாக மதிப்பிடுகிறோம்.

நம்முடைய மறதிக் குணம், பெருந்தன்மை ஆகியவற்றை தவறாகப் பயன்படுத்திக் கொள்ளும் சுயநலமிகள் மிகுந்த உலகில், நம் அணுகுமுறைகள் இனியேனும் மாற வேண்டும்.

இது, பிறரைச் சந்தேகக் கண்கொண்டு பார்க்கப்படும் பார்வையல்ல; எது ஒன்றையும் சம்பிரதாயமாக அணுக வேண்டும். முறைப்படி செய்ய வேண்டும் என்ற சரியான நோக்கமே இதன் அடிப்படை!

நம்மிடமிருந்து ஒன்றைப் பெற்றவர்களின் மறதி, அவர்களது சுயநலம் மற்றும் அவர்களுக்கு ஏற்படும் எதிர்பாராத நெருக்கடி போன்றவை நமக்கெதிரான வலுவான காரணிகளாகத் திரும்பி விட வாய்ப்பு இருக்கிறதா, இல்லையா?

எனவே, நம்மால் பிறருக்கு ஏன் தர்மசங்கடம் என்று கருதுகிற உணர்வை, ஓரமாக ஒதுக்கித் தள்ளி, நாம் சங்கடத்தில் சிக்கிக் கொள்ளக் கூடாது என்கிற உணர்வோடு, பாதுகாப்பு வளையத்தை நமக்கென உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

இழப்புகளையும், அவப்பெயர் மற்றும் ஏமாளிப் பட்டத்தையும் தவிர்ப்பவை சரியான சாட்சியங்கள் தான்; இதை, மனப்பூர்வமாக நம்புங்கள். உங்களை, எல்லா விதத்திலும் பாதுகாத்துக் கொள்ளுங்கள்!

லேனா தமிழ்வாணன்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

எதையும் சான்றோடும்... சாட்சியோடும்... Empty Re: எதையும் சான்றோடும்... சாட்சியோடும்...

Post by M.Jagadeesan Mon Apr 11, 2016 6:50 am

krishnaamma wrote:

ஒரு மாணவ, மாணவியரை கண்டிக்கவோ, விசாரிக்கவோ நேரும்போது, சாட்சியம் வைத்துக் கொள்ளுங்கள். துறைக்கு அழைத்து விசாரியுங்கள். உடன் ஓர் ஆசிரியர், ஆசிரியை பார்வையாளராக இருக்கட்டும். இதுவே பாதுகாப்பு!

இல்லாவிட்டால், மாணவன் என்றால் ஜாதியைச் சொல்லித் திட்டினார் என்றோ, மாணவி என்றால் கையைப் பிடித்து இழுத்தார் என்றோ அபாண்டம் வரலாம்; கவனம் என்பேன்.


மேற்கோள் செய்த பதிவு: 1202067

இது நடைமுறை சாத்தியம் இல்லாதது . ஒரு மாணவனையோ / மாணவியையோ வகுப்பறைக்குள் கண்டிப்பதற்கு ஆசிரியருக்கு உரிமையுண்டு . வகுப்பறைக்கு வெளியே சாட்சியம் வைத்துக்கொண்டு விசாரணை செய்ய ஆசிரியருக்கு உரிமை இல்லை . அதற்கு தலையாசிரியர் / பிரின்ஸ்பால் முன் அனுமதி பெறவேண்டும் .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

எதையும் சான்றோடும்... சாட்சியோடும்... Empty Re: எதையும் சான்றோடும்... சாட்சியோடும்...

Post by ayyasamy ram Mon Apr 11, 2016 9:04 am

மனைவி பேரில் உள்ள வீட்டை வங்கியில்
அடமானமாக வைத்து கடன் வாங்க மனைவி
ஒப்புக்கொள்ள மாட்டேன் என்கிறாள்...
நீங்கள்தான் உதவணும் என்றார் உறவினர்
ஒருவர்...
-
உறவினருக்கு உதவி செய்கிறேன் என்று
எந்த கையெழுத்தும் வாங்காமல் தொகை
கொடுத்தேன்...
-
வட்டியெல்லாம் வேண்டாம், ஒரு வருடத்திற்குள்
அசலை கொடுத்தால் போதும் என்றேன்,,
-
வருடம் நாலாச்சு...வசூலிக்க இயலவில்லை...!!
-

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

எதையும் சான்றோடும்... சாட்சியோடும்... Empty Re: எதையும் சான்றோடும்... சாட்சியோடும்...

Post by krishnaamma Mon Apr 11, 2016 10:27 am

ayyasamy ram wrote:மனைவி பேரில் உள்ள வீட்டை வங்கியில்
அடமானமாக வைத்து கடன் வாங்க மனைவி
ஒப்புக்கொள்ள மாட்டேன் என்கிறாள்...
நீங்கள்தான் உதவணும் என்றார் உறவினர்
ஒருவர்...
-
உறவினருக்கு உதவி செய்கிறேன் என்று
எந்த கையெழுத்தும் வாங்காமல் தொகை
கொடுத்தேன்...
-
வட்டியெல்லாம் வேண்டாம், ஒரு வருடத்திற்குள்
அசலை கொடுத்தால் போதும் என்றேன்,,
-
வருடம் நாலாச்சு...வசூலிக்க இயலவில்லை...!!


மேற்கோள் செய்த பதிவு: 1202091

ம்ம்.. நல்லதுக்கு காலம் இல்லை ராம் அண்ணா.....மேலே சொன்னது போல எல்லாத்துக்கும் சாட்சி வேண்டும் போல இருக்கு புன்னகை ...............அவர் தான் வாங்கிய கடனைப் பற்றி வீட்டில் சொன்னாரோ இல்லையோ........... புன்னகை .நீங்களா அண்ணா கொடுத்தீங்க?


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

எதையும் சான்றோடும்... சாட்சியோடும்... Empty Re: எதையும் சான்றோடும்... சாட்சியோடும்...

Post by சசி Mon Apr 11, 2016 10:34 am

நல்ல பகிர்வு அம்மா


மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Back to top Go down

எதையும் சான்றோடும்... சாட்சியோடும்... Empty Re: எதையும் சான்றோடும்... சாட்சியோடும்...

Post by ayyasamy ram Mon Apr 11, 2016 11:07 am

உறவினர் ஒருவர் தன் மகளை பெண் கேட்டு
வந்திருக்கிறார்கள் என்று தகவல் சொல்ல
வந்தார்...
-
விசாரித்ததில், மாப்பிள்ளை வீட்டார் தங்கமானவர்கள்தான்
எனப் புரிந்தது...உடனே சம்மதம் சொல்லி விடுங்கள்
என்றேன்...
-
திருமணம் செய்ய இப்போது தோதுப்படாது, கையிருப்பு
பத்தாது என்றார், மேலும் ஐம்பதாயிரம் தேவைப்படும்
என்றார்....
-
ஒரு சுப காரியம் நம்மால் நடந்ததாக இருக்கட்டும்,
கொடுத்து உதவுங்கள் என்றார் துணைவி...
-
கொடுத்தேன், ஓராண்டு கழித்து நன்றியுடன்
கடன் தொகையை திரும்ப கொடுத்தார் அந்த
உறவினர்....
-
இப்படியும் ஒரு சம்பவம் நடந்தது...அதே போல
மற்ற உறவுகளும் இருப்பார்கள் என்று நினைத்தது
தவறாகி விட்டது...!!
-
படிப்பினை:
-
உறவுகளுக்குள் கடன் உதவி செய்வதில்
முன் ஜாக்கிரதை வேண்டும்...
-
சாட்சியுடனும், கையெழுத்து வாங்கிக்
கொள்ளவும் வேண்டும்...
-
வங்கியில் கடன் பெறுங்கள், தேவை என்றால்
நான் சாட்சிக் கையெழுத்து போடுகிறேன் என்று
சொல்ல வேண்டும்...
-
கடன் தொகையை அவர் செலுத்த தவறினால்
நம்மால் கட்ட முடிந்த அளவுக்கு உள்ளதாக
அந்த கடன் தொகை இருக்க வேண்டும...!!-
-
பாத்திரமறிந்து கடன் கொடுக்க வேண்டும்
உதவி செய்து உபத்திரவத்தை வாங்கிக் கொள்ளக்கூடாது..!!



ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

எதையும் சான்றோடும்... சாட்சியோடும்... Empty Re: எதையும் சான்றோடும்... சாட்சியோடும்...

Post by krishnaamma Mon Apr 11, 2016 11:22 am

ayyasamy ram wrote:
படிப்பினை:
-
உறவுகளுக்குள் கடன் உதவி செய்வதில்
முன் ஜாக்கிரதை வேண்டும்...
-
சாட்சியுடனும், கையெழுத்து வாங்கிக்
கொள்ளவும் வேண்டும்...
-
வங்கியில் கடன் பெறுங்கள், தேவை என்றால்
நான் சாட்சிக் கையெழுத்து போடுகிறேன் என்று
சொல்ல வேண்டும்...
-
கடன் தொகையை அவர் செலுத்த தவறினால்
நம்மால் கட்ட முடிந்த அளவுக்கு உள்ளதாக
அந்த கடன் தொகை இருக்க வேண்டும...!!-
-
பாத்திரமறிந்து கடன் கொடுக்க வேண்டும்
உதவி செய்து உபத்திரவத்தை வாங்கிக் கொள்ளக்கூடாது..!!


மேற்கோள் செய்த பதிவு: 1202119

ம்ம்.. புரிந்து கொண்டேன் அண்ணா, சில சமயம் நாங்களும் கொடுத்து ஏமாந்து இருக்கோம் ( தொகை சிறியது தான் ) சரி போகட்டும் என்று பார்த்தால், அவர்கள் என்னவோ நாம் அவர்களுக்கு பாக்கி வைத்தது போல பாராமுகமாய் நடக்கிறார்கள்......வருத்தமாய் இருக்கு சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

எதையும் சான்றோடும்... சாட்சியோடும்... Empty Re: எதையும் சான்றோடும்... சாட்சியோடும்...

Post by krishnaamma Mon Apr 11, 2016 11:22 am

சசி wrote:நல்ல பகிர்வு அம்மா

நன்றி சசி புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

எதையும் சான்றோடும்... சாட்சியோடும்... Empty Re: எதையும் சான்றோடும்... சாட்சியோடும்...

Post by M.Jagadeesan Mon Apr 11, 2016 12:00 pm

அசைக்கமுடியாத ஆதாரங்கள் இருந்தாலும் , மல்லையாக்களை ஒன்றும் செய்யமுடியாது; நீதிமன்றம் சென்றாலும் , அங்கு குமாரசாமிகள் அவர்களைக் காப்பாற்றி விடுவார்கள் .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

எதையும் சான்றோடும்... சாட்சியோடும்... Empty Re: எதையும் சான்றோடும்... சாட்சியோடும்...

Post by balakarthik Mon Apr 11, 2016 12:06 pm

பல சமயம் நன்கு பழகியவர்கள் எமாற்றும்போழுது தான் வேதனை மனஉளைச்சல் அதுகம் ஆகிறது


ஈகரை தமிழ் களஞ்சியம் எதையும் சான்றோடும்... சாட்சியோடும்... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

எதையும் சான்றோடும்... சாட்சியோடும்... Empty Re: எதையும் சான்றோடும்... சாட்சியோடும்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum