Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
சுற்றலாம் வாங்க!
3 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
சுற்றலாம் வாங்க!
கோடை விடுமுறை வந்து விட்டாலே, 'சுற்றுலா கிளம்பலயா?' என்ற விசாரிப்புகள் தான், முன்னே வந்து நிற்கும். உண்மையிலேயே, சுற்றுலாவில் மனம் நிறைய வேண்டும்; அதேசமயம், பர்சுக்கும் பங்கம் வராதிருக்க வேண்டுமா? இதோ... நால்வர் கொண்ட சிறு குடும்பத்துக்கு, இரு நாள் சுற்றுலாவாக குறைந்தது, 5,000 ரூபாய் முதல் அதிகபட்சம், 10,000 ரூபாய்க்குள் அடங்கும் சுற்றுலாத் தலங்கள் சில ஆங்காங்கே இந்த இதழில் வெளியாகியுள்ளன.
ஏலகிரி!
வேலூரிலிருந்து, திருப்பத்தூர் சாலையில் பொன்னேரி வந்து, அங்கிருந்து, 15 கி.மீ., மலைப் பாதையில் பயணித்தால், ஏலகிரியை அடையலாம். ரயில் மார்க்கம் எனில், ஜோலார்பேட்டை வந்து, அங்கிருந்து பஸ்சில் ஏலகிரி வரலாம். இங்கு, நீரூற்று மற்றும் சிறுவர் பூங்காவுடன் செயற்கையாக உருவாக்கப்பட்ட பூங்கானூர் ஏரி, அரசு மூலிகைப் பண்ணை பழப்பண்ணை, முருகன் கோவில், தொலைநோக்கி இல்லம் மற்றும் ஜலகம்பாறை நீர்வீழ்ச்சியை கண்டு களிக்கலாம்.
மேலும், ஏலகிரியிலிருந்து, 25 கி.மீ., தூரத்தில், காவனூரில், இந்தியாவின் மிகப் பெரிய தொலைநோக்கி உள்ளது. இதை, குழந்தைகளுடன் கண்டு மகிழலாம். சாகசப் பிரியர்களுக்கான பாரா கிளைடிங், பைக்கிங், டிரெக்கிங் போன்ற விளையாட்டுகள், உள்ளூர் விளையாட்டு கழகத்தினரால் நடத்தப்படுகிறது. இங்கு, அரசு மற்றும் தனியார் தங்கும் விடுதிகள் ஏராளமாக உள்ளன.
டாப்ஸ்லிப், வால்பாறை!
சுற்றுலாவை, காட்டு விலங்குகள், பறவைகள் என மறக்க முடியாத நினைவுகளால் நிறைக்க வேண்டுமா? பொள்ளாச்சிக்கு வாருங்கள்.
பொள்ளாச்சியில் தங்கினால், 37 கி.மீ., தூரத்தில் ஆனைமலை சரணாலயமும், 30 கி.மீ., தூரத்தில் டாப்ஸ்லிப் மற்றும் 64 கி.மீ., தூரத்தில் வால்பாறையும் உள்ளது.
ஆனைமலை சரணாலயத்தில் புலி, சிறுத்தை, யானை, முள்ளம்பன்றி மற்றும் பெயர் தெரியா பறவையினங்களை அருகிலேயே பார்த்து, ரசிக்கலாம். காட்டெருமைகள், விதவிதமான மான்கள் மற்றும் யானைகள் டாப்ஸ்லிப்பின் ஸ்பெஷல்!
மரகதப் பச்சை போல விரிந்திருக்கும் தேயிலைத் தோட்டங்கள், வால்பாறையின் சிறப்பு, அருகில் உள்ள ஆழியாறு அணை, மங்கி பால்ஸ், நல்லமுடி பூஞ்சோலை மற்றும் நம்பர் பாறை போன்ற இடங்களையும் கண்டு களிக்கலாம்.
ஆரஞ்சு கவுன்ட்டி!
காவிரி ஊற்றெடுக்கும் கர்நாடக மாநிலம் குடகு மலையின் மடியில் அமைந்திருக்கிறது, 'ஆரஞ்சு கவுன்ட்டி!' நம்மூரில், 'கார்ப்பரேஷன் வார்டு' என்று சொல்வதைப் போல, அமெரிக்காவில், 'கவுன்ட்டி' என்று சொல்வர். சும்மா ஸ்டைலுக்காக தன் பெயருடன், 'கவுன்ட்டி'யை சேர்த்துள்ள ஆரஞ்சு கவுன்ட்டி அமைந்திருப்பது, காபி தோட்டத்தில்!
இங்கு பணிபுரியும் பெண்கள், குடகு மலைப் பெண்கள் அணிவதைப் போன்று, பாரம்பரிய உடைகளையே அணிகின்றனர். இங்கிருக்கும் ஒவ்வொரு காட்டேஜுமே, தனித் தனி பங்களா போன்று, அகன்ற தாழ்வாரம், விசாலமான பெட்ரூம், அதில் தேக்குமர கட்டில், ஈஸி சேர், வாசல், திண்ணை, வீட்டுக்குப் பின் தோட்டம், நீச்சல் குளம், அதற்கு பின் மரங்கள் மற்றும் ஏரி சூழ்ந்து காணப்படுகிறது. 'வாழ்ந்தால் இப்படி ஒரு வீட்டில் வாழ வேண்டும்...' என்ற எண்ணம் இங்கு வரும் ஒவ்வொருவருக்கும் நிச்சயம் ஏற்படும்.
இவ்வீடுகளில், கீசர் துவங்கி, 'டிவி' வரை அத்தனை நவீன வசதிகளும் உண்டு. அத்துடன், நாக்கின் சுவை அறிந்து, விதம் விதமான சுவைகளில் பரிமாறும் ஓட்டல்களுக்கும் பஞ்சமில்லை; பாதுகாப்புக்கும் குறைவில்லை. காடும், காபி தோட்டமுமாக இருப்பதால், சீசனுக்கு தகுந்த மாதிரி பறவை இனங்கள் வந்து போகின்றன. இந்த ஆரஞ்சு கவுன்ட்டிக்கு அருகில், திபெத் மக்கள் வசிக்கும் குடியிருப்பும் உள்ளது.
ஏற்காடு!
சேலத்தில் இருந்து, 36 கி.மீ., தூரத்தில் இருக்கிறது ஏற்காடு. ஏராளமான கொண்டை ஊசி வளைவுகளை கடந்து, மலையை அடையலாம். நடுவில் நீரூற்றுடன் அமைந்துள்ள ஏரி தான், ஏற்காட்டின் மையக் கவர்ச்சி. கண்கவர் பூங்காவில், ஜப்பான் தோட்டக்கலைக்கு முக்கியத்துவம் கொடுத்து மரங்களை வளர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மே மாதம் இங்கே நடக்கும் மலர் கண்காட்சி தான் ஹைலைட்! தவிர, தொலை நோக்கியுடன் கூடிய, 'லேடீஸ் ஸீட்' மற்றும் தொலை நோக்கி இல்லாமலேயே ரசிக்க வைக்கும், 'பகோடா பாயின்ட்' கிள்ளியூர் நீர்வீழ்ச்சி, திகிலூட்டும் கரடி குகை, பக்தி மணம் கமழும் சேர்வராயன் மற்றும் ராஜேஸ்வரி அம்மன் கோவில்கள் என்று குடும்பத்தினர் அனைவரும் கண்டு களிக்கலாம்.
கொல்லிமலை!
சில ஆண்டுகளுக்கு முன் வரை மர்மம், அமானுஷ்யம், சித்தர்கள் என்றே வெளியுலகுக்கு அடையாளம் காட்டப்பட்ட கொல்லி மலை, இன்று வெகு ஜனங்களை ஈர்க்கும் அளவுக்கு மாறியிருக்கிறது. இதற்கு காரணம், அதன் தூய்மை மற்றும் கையைக் கடிக்காத செலவுகள் தான். 'எகோ டூரிசம்' எனப்படும் சுற்றுச்சூழலுக்கான, சிறப்பு சுற்றுலாத்தலமாக, கொல்லிமலையை அங்கீகரித்துள்ளது மாநில அரசு.
நாமக்கல்லில் இருந்து, கொல்லிமலைக்கு தனிப்பேருந்து மற்றும் வாடகை வாகனங்கள் கிடைக்கின்றன. 26 கி.மீ., தூர மலைப்பாதையில் பயணித்தால், கொல்லிமலை உங்களை வரவேற்கும்.
இங்கு, 600 அடி உயரத்தில் இருந்து கொட்டும், ஆகாய கங்கை நீர் வீழ்ச்சி மற்றும் கொல்லி பால்ஸ் உள்ளன. வாசலூர்பட்டி படகுத் துறையில், 'போட்டிங்' போகலாம். சீக்குப்பாறை மற்றும் சேலூர் நாடு ஆகிய இடங்களில், அருமையான, 'வியூ' பாயின்ட்டுகள் உள்ளன. அரப்பளீஸ்வரர் மற்றும் சமணர் கோவில்கள் என, ஆன்மிகமும் விரிந்திருக்கிறது.
கையைக் கடிக்காத வகையில், ஓட்டல்களும் உண்டு.
நன்றி வாரமலர்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: சுற்றலாம் வாங்க!
மேற்கோள் செய்த பதிவு: 1201845ayyasamy ram wrote:
-
-
ஆழியாறு நீர்த்தேக்கம்
-
ரொம்ப அழகாய் இருக்கு ராம் அண்ணா ...............
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: சுற்றலாம் வாங்க!
கையைக் கடிக்காத வகையில், ஓட்டல்களும் உண்டு.
வயித்தை கடிக்குமோ ?????
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: சுற்றலாம் வாங்க!
மேற்கோள் செய்த பதிவு: 1201851balakarthik wrote:கையைக் கடிக்காத வகையில், ஓட்டல்களும் உண்டு.
வயித்தை கடிக்குமோ ?????
ஹா..ஹா..ஹா அவங்க அப்படி போட்டிருக்கங்களே தவிர, அந்த கூர்க், அது தான் ஆரஞ்சு கவுன்ட்டி! இல் பார்த்தால் ஒரு நாளைக்கான வாடகை குறைந்தது 50,000/= என்று போட்டிருக்காங்க...............அவங்க சொன்ன வசதிகளுடன் கூடிய பங்களாவுக்கான தொகை அது ....வேறு பல லாட்ஜுகள் இருக்கலாம் ஆனால் இங்கே இப்படி போட்டதால் நான் கூகள் செய்து பார்த்தேன்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: சுற்றலாம் வாங்க!
சீசன் நேரத்தில் சம்பாதிசாதானே தீர விசாரித்து செல்வதே நலம் தமிழ்நாடு சுற்றுலாத்துறை இல்லங்கள் இல்லையோ
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: சுற்றலாம் வாங்க!
மேற்கோள் செய்த பதிவு: 1201858balakarthik wrote:சீசன் நேரத்தில் சம்பாதிசாதானே தீர விசாரித்து செல்வதே நலம் தமிழ்நாடு சுற்றுலாத்துறை இல்லங்கள் இல்லையோ
இது கர்நாடகா வில் இருக்கு பாலா
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: சுற்றலாம் வாங்க!
krishnaamma wrote:இது கர்நாடகா வில் இருக்கு பாலா
கூர்க் இல்லை மற்ற இடங்களிலும் இதே சங்கடம்தான் அங்க இருக்குதா என்று கேட்டேன்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: சுற்றலாம் வாங்க!
மேற்கோள் செய்த பதிவு: 1201861balakarthik wrote:krishnaamma wrote:இது கர்நாடகா வில் இருக்கு பாலா
கூர்க் இல்லை மற்ற இடங்களிலும் இதே சங்கடம்தான் அங்க இருக்குதா என்று கேட்டேன்
ஆமாம் எல்லா இடங்களிலும் அப்படித்தான் இருக்கு, நாம் தான் நல்லா விசாரித்துவிட்டு , புக் செய்து விட்டு போகணும் இல்லை என்றால், திடீரென்று விலை ஏற்றி சொன்னால் நமக்கு ரொம்ப கஷ்டமாய் போகும் ...........இப்போ பெங்களூரில் ( மற்ற இடங்களில் தெரியலை ) ஒரு புது அபாயம் வந்திருக்கு பாலா.........
அதாவது, நாம் கால் டாக்ஸி புக் செய்கிறோம் இல்லையா, இங்கு டிராபிக் ரொம்ப அதிகம் என்பதால், சில சமையங்களில் வண்டிக்கு போன் செய்து புக் செய்து விட்டு காத்திருக்கும்போது, அவர்களே எங்களால் குறித்த நேரத்துக்கு வரமுடியாது என்று கான்ஸல் செய்து விடுகிறார்கள்.............
flight அல்லது வண்டி பிடிக்கணும் என்று கிளம்புபவர்களுக்கு இது பெரும் தொல்லையாக இருக்கு.......வண்டி வரும் வரை நிச்சையம் இல்லை என்றால் ...........என்ன செய்வது?.......மற்றும் ஒன்று இதைவிட கொடுமை.............
வாரக் கடைசிகளில் அல்லது பண்டிகை தினங்களில் வண்டியை காண தொகையை X 2. X 3, X 4 என்று ஏற்றி வாங்குகிறார்கள்..............
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: சுற்றலாம் வாங்க!
பிச்சாவரம்!: சிதம்பரத்தில் இருந்து, 16 கி.மீ., தூரத்தில் உள்ளது, பிச்சாவரம். உலகின் இரண்டாவது பெரிய சதுப்பு நிலக் காடுகளை கொண்டது. இங்கு, சுனாமியையே எதிர்த்து நிற்கும் சுரபுன்னைக் காடுகளின் ஊடாக மேற்கொள்ளும் படகு சவாரி தனிச்சிறப்பு. தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக பராமரிப்பு விடுதியில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
லே!: ஜம்மு - காஷ்மீரில் உள்ள, 'லடாக்' மாவட்டத்தின் தலைநகரம் லே! 11,600 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்நகரில், லே அரண்மனை, உயரமான சாந்தி ஸ்தூபி, யுத்த அருங்காட்சியகம் போன்றவை சுற்றுலா பயணிகளை கவர்கிறது. இங்கு ட்ரெக்கிங் பாதைகளும் நிறைய உண்டு. மேலும், சீக்கியர்களுக்கான குருத்வாரா, இந்துக்களுக்கான சம்பா ஆலயம் மற்றும் முஸ்லிம்களுக்கு ஜும்மா மசூதி என்று அனைத்து மதத்தினரின் வழிபாட்டு தலங்களும் உள்ளன.
தவாங்!: அருணாசலப் பிரதேசத்தில், 10 ஆயிரம் அடி உயரத்தில் அமைந்துள்ளது, தவாங். இங்கு, உலகின் மிகப் பெரிய புத்த மடாலயம் உள்ளது. ஆறாம் தலாய்லாமா பிறந்த இடம் என்பதால், இது, புத்த மதத்தினருக்கு புனிதத் தலமும் கூட! தேஜ்பூரிலிருந்து, 16 மணி நேரம் சாலை வழி பயணமாக இங்கு செல்லலாம். மாநில அரசு, கவுகாத்தியிலிருந்து ஹெலிகாப்டர் வசதி செய்து தருகிறது.
தேக்கடி!: முல்லை - பெரியாறு அணையின் நீர்பரப்பு தான் தேக்கடி! இங்கு, படகுப் பயணம் மற்றும் யானை சவாரி போன்றவை சிறப்பு. தமிழகம் மற்றும் கேரளா மக்கள் வணங்கும் மங்கலதேவி (கண்ணகி) கோவில், தேக்கடியில் இருந்து, 15 கி.மீ., தூரத்தில் உள்ளது.
தொடரும்...............
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 1 of 2 • 1, 2
Similar topics
» ஊர் சுற்றலாம் வாங்க........
» உலகத்தை சுற்றலாம் வாங்க..!!!
» ஊர் சுற்றலாம் வாங்க - குற்றாலம்
» 2716 அடி உயரத்தில் ஊர் சுற்றலாம் வாங்க...!
» ஊட்டி மலை ரயிலு ஊர் சுற்றலாம் வாங்க.......
» உலகத்தை சுற்றலாம் வாங்க..!!!
» ஊர் சுற்றலாம் வாங்க - குற்றாலம்
» 2716 அடி உயரத்தில் ஊர் சுற்றலாம் வாங்க...!
» ஊட்டி மலை ரயிலு ஊர் சுற்றலாம் வாங்க.......
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|