ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 12:09

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 12:08

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 12:06

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 12:04

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 9:20

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 9:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:24

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Today at 1:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:11

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:04

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 0:57

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 0:51

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 0:04

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 22:13

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:40

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 21:21

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 21:13

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 20:38

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:34

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:18

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 20:07

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:37

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 18:19

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 18:00

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 15:03

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 15:00

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 14:58

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 14:54

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 14:52

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:50

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:55

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 0:23

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 23:27

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 4 Oct 2024 - 17:52

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:46

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:45

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:44

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:42

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:41

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:39

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed 2 Oct 2024 - 3:12

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:18

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீங்கள் வழக்கறிஞரா? நீதிபதியா?

3 posters

Go down

நீங்கள் வழக்கறிஞரா? நீதிபதியா? Empty நீங்கள் வழக்கறிஞரா? நீதிபதியா?

Post by krishnaamma Thu 7 Apr 2016 - 2:58

வழக்கறிஞர் என்று தங்களைத் தாங்களே மெச்சிக் கொள்வர் சிலர். வழக்குரைஞர் என்பதை உரியவர்கள் சொல்ல, அறிஞர் என்று பிறர் தான் அழைக்க வேண்டும்.

தத்துவமேதை, மருத்துவ மேதை என்று எவரும் தங்களை அழைத்துக் கொள்வதில்லை. பிறர் இப்படி அழைக்கும் போது தான் பெருமை. சரி... விஷயத்துக்கு வருவோம்.

வழக்குரைஞர் என்பவர் கட்சிக்காரர் பக்கம் நிற்பவர்; சரியோ, தவறோ தம் கட்சிக்காரருக்காக வாதிடுவது இவரது கடமை. நீதிபதி அப்படி அல்லர்; சார்பற்றவர். வாத பிரதிவாதங்களை கேட்டு, துலாக்கோலை சீர்தூக்கி பார்த்தும், மூத்த நீதிபதிகள் அறிவித்த தீர்ப்புகளின் அடிப்படையிலும், நியாயம் வழங்குபவர்.

எல்லாவற்றையும் காது கொடுத்துக் கேட்பவர் நீதிபதி. கண்களுக்கும், அறிவிற்கும், உலக ஞானத்திற்கும், சட்ட நூல்களுக்கும் ஏற்ப முடிவிற்கு வருபவர். ஆனால், வாழ்வின் ஓட்டங்களில், சில நேரங்களில் நாம் ஒவ்வொருவரும் நம்மை நீதிபதிகளாகக் கருதி விடுகிறோம்.

சொல்லப்போனால், பெற்றோர் சண்டையில் சின்னக் குழந்தை கூட நீதிபதியாகிறது. 'அப்பா மேல தான் தப்பு; அப்பா கோபப்படும் போது, அம்மா பேசினது தவறு தான். அதுக்காக அப்பா அடிக்கலாமா?' என்று, தன் மழலையால், தீர்ப்பு வழங்கி, நீதிபதி ஸ்தானத்திற்கு உயர்ந்து விடுகிறது.

இரு தொழிற் பங்குதாரர்கள் சண்டையிட்டுக் கொள்ளும் போது, அந்நிறுவனத்தின் வாட்ச்மேன் கூட, நீதிபதி போல பேச ஆரம்பித்து விடுகிறார்.

இரு நண்பர்களின் அடிதடியில், இருவருக்கும் பொதுவான மூன்றாவது நண்பர், நீதிபதியாகி விடுகிறார்.
ஆனால், இக்குழந்தையோ, வாட்ச்மேனோ, நண்பரோ சரியான நீதியை வழங்கியதாக சொல்ல முடியவில்லை.

காரணம், எல்லா நீதிபதிகளுக்கும் உள்ள சிறப்பு குணமான விருப்பு, வெறுப்பு அல்லாத சிறப்புத் தன்மை இல்லை.'அம்மா... நீ செய்தது தப்பும்மா. அப்பா குணம் தெரிஞ்சும், ஏம்மா அப்படி நடத்துக்கிட்டே?' என்கிற கேள்வியை கேட்கவல்ல சாதுர்யம், அம்மாவை பார்த்து, இங்கே ஒளிந்து கொண்டு விட்டது. காரணம் என்ன தெரியுமா...

இந்த வாட்ச்மேனும், அந்த நண்பரும் கூட இதே தவறை செய்து விடுகின்றனர். பிரிஜுடிஸ் என்று சட்டத்துறையில் ஒரு சொல் உண்டு. இதன் பொருள், முன்கூட்டிய தீர்ப்பு அல்லது முடிவு. இது, சார்புள்ளவர்களாக ஆகிப் போன தன்மையால் உண்டாவது.

முதற்பங்குதாரருக்கு வணக்கம் சொன்னால், திரும்பச் சொல்ல மாட்டார்; தலையை ஆட்டிக் கொள்வார். அடுத்த பங்குதாரர், அப்படி அல்லர். வணக்கம் சொன்னால், திரும்பச் சொல்வார்.

அதுமட்டுமல்ல, அவ்வப்போது கொஞ்சம் கவனிப்பார்; இதனால், வாட்ச்மேனின் தீர்ப்பு, தவறாகி விடுகிறது.
தீர்ப்பளித்த நண்பன் இப்படி அல்லர். 'முதலாம் நண்பர் எனக்கு அப்பப்ப நிறைய ஆலோசனைகளை சொல்வார். எனக்கு ஒரு ஆபத்துன்னா, என்னோட நிப்பார். இப்படிப்பட்ட முன் கூட்டிய அபிப்ராயங்கள், நியாயங்களை பேச விடுவதில்லை.

நூலிழை மட்டுமே உள்ள சிறு தாம்புக் கயிறாக ஆக்கி விடுவதில், மூன்றாம் நண்பருக்கு அதிக ஆர்வம். நியாயப் போராட்டத்தில் கூட நமக்கு வேண்டியவர்கள் என்கிற பார்வைகளே தலைதூக்கி நின்று விடுகின்றன. இப்படி மதி கெட்டால், நீதி மறந்து போகிறது.

'ஏன் இந்த கோணத்தில் சிந்திக்க தவறி விட்டோம். சேச்சே... தவறு செய்து விட்டோம்...' என்கிற தாமதமான இவர்களின் உணர்தல் பயனற்றது.

இந்த நிலை இந்த தற்காலிக நீதிபதிகளுக்கு தவறாமல் வாய்க்கிறது. இதுகூடப் பரவாயில்லை. 'முன்பே ஆராயாமல் போனோமே, சரி சரி... சமாளிப்போம். இனி, பின் வாங்காமல், எடுத்த நிலைப்பாட்டில் தொடர்ந்து நின்றுவிட வேண்டியது தான்...' என்று அளித்த தீர்ப்பை, நியாயப்படுத்தப் பார்ப்பது தான், மோசமான தவறு. இது, பிறழ்ந்து விட்ட தவறை, நிரந்தரமாக்குகிற செயல்.

மீண்டும் சரி செய்யக் கிடைத்த வாய்ப்பிலாவது சமாளிக்கவும், இறங்கி வந்து, தவறை ஏற்கவும் முன்வர வேண்டும். இந்தப் பண்பு இல்லாவிட்டால், தீர்ப்பு வழங்கும் வேலைக்கே போகக் கூடாது.
சரியான நீதிபதியாக இருக்க முடியவில்லை என்கிற போது, 'ஆளை விடுங்கப்பா...' என்று ஒதுங்கிக் கொள்வதே நல்லது!

லேனா தமிழ்வாணன்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நீங்கள் வழக்கறிஞரா? நீதிபதியா? Empty Re: நீங்கள் வழக்கறிஞரா? நீதிபதியா?

Post by சிவனாசான் Thu 7 Apr 2016 - 6:06

வழக்கறிஞராக பணியாற்றாயவரே பிறகு நீதிபதி> முன்னாள் வழக்கறிஞர் இன்நாள் நீதிபதி , நிதிபதியாக இல்லாமல் நீதிபதியாக இருந்தால் ஞாயம் >>>>>>>>>>
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

நீங்கள் வழக்கறிஞரா? நீதிபதியா? Empty Re: நீங்கள் வழக்கறிஞரா? நீதிபதியா?

Post by krishnaamma Thu 7 Apr 2016 - 11:34

நன்றி ராஜன் அண்ணா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நீங்கள் வழக்கறிஞரா? நீதிபதியா? Empty Re: நீங்கள் வழக்கறிஞரா? நீதிபதியா?

Post by ayyasamy ram Thu 7 Apr 2016 - 11:38

நீங்கள் வழக்கறிஞரா? நீதிபதியா? 103459460
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84205
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நீங்கள் வழக்கறிஞரா? நீதிபதியா? Empty Re: நீங்கள் வழக்கறிஞரா? நீதிபதியா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» நீங்கள் மில்லினியலா? சேமிப்புக்கு நீங்கள் கவனிக்க வேண்டிய 5 டிப்ஸ்கள்
» நீங்கள் காதலிக்கிறீர்களா? உங்கள் ராசிப்படி நீங்கள் காதலில் எப்படி ? வெற்றி பெறுவீர்களா?
» காதல் மன்னன் ஆவது எப்படி(ஆண்களே நீங்கள் காதலிக்க போறீங்களா நீங்கள் செய்யவேண்டியவை )
» நீங்கள்...??
» வலிகளை தாங்கும் தன்மையில் நீங்கள் எப்படி ? படுக்கை தலையணையில் தலைவலி தைலம் வைத்திருப்பவரா நீங்கள் ?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum