Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ by heezulia Today at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
கூட்டணிக்கு தலைமை: விஜயகாந்துக்கு கை விரித்தார் வைகோ!
2 posters
Page 1 of 1
கூட்டணிக்கு தலைமை: விஜயகாந்துக்கு கை விரித்தார் வைகோ!
மக்கள் நலக் கூட்டணிக்கு தேமுதிக வந்தால்,கூட்டணிக்கு தலைமையேற்கும் வாய்ப்பில்லை என்று மதிமுக பொதுச் செயலாளரும் மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளருமான வைகோ தெரிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சியில் இன்று திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கரூர், புதுக்கோட்டை உள் ளிட்ட 10 மாவட்ட மதிமுக நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்க வந்த வைகோ செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
" தமிழக அரசியலில் கடந்த சில நாட்களாக ஆளும் அதிமுக அரசின் ‘மர்ம’மான சம்பவங்கள் சூழந்த செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. வேலை வாங்கி தருவதாக அமைச்சர் சண்முகநாதனின் உதவியாளர் ரூ.3 லட்சம் மோசடி செய்ததாக கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அப்படி என்றால் அமைச்சர்கள் உதவியாளர்கள் மூலம் எவ்வளவு ஊழல் நடந்திருக்கும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அதேபோன்று ஐவர் அணியில் இருந்த அமைச்சர்கள் கடந்த சில நாட்களாக பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவில்லை. அவர்கள் வீட்டு சிறையில் வைக்கப்பட்டு இருப்பதாக வரும் செய்திகள் உண்மையா வதந்தியா என தெரியாது. அவர்களிடம் இருந்து ரூ.1,000 கோடி கைப்பற்றப்பட்டு இருப்பதாகவும் செய்திகள் வருகிறது. இது உண்மையா என தெரியாது. கடந்த நான்கே முக்கால் ஆண்டு இவர்கள் பற்றி தெரியாமல் போனது ஏன்? இது மக்களை ஏமாற்ற போடும் நாடகம்.
இதற்கு முன்பு சிலர் மீது இதேபோன்று புகார்கள் கூறப்பட்டு அனைவரும் கைது செய்யப்பட்டார்கள். அவர்களோடு யாரும் தொடர்பு வைத்துக் கொள்ள கூடாது என கூறினார்கள். அப்போது சொத்துக் குவிப்பு வழக்கில் சிக்குவதில் இருந்து தப்ப நாடகம் போடுவதாக கூறினார்கள். இப்போதும் இது நாடகம் போல் உள்ளது.
சமீபத்தில் இந்தியாவில் அதிக ஊழல் நடந்துள்ள மாநிலம் என தமிழ்நாட்டை ஒரு பொருளாதார குழு கூறியுள்ளது. எனவே இதனை திசை திருப்ப நடக்கும் நாடகமாக மக்கள் சந்தேகிக்கிறார்கள். இதில் மக்கள் ஏமாற மாட்டார்கள். அதிமுகவுக்கு மாற்றாக உள்ள திமுகவும் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான கட்சி. ‘2ஜி’ அலைவரிசை வழக்கில் அக்கட்சியை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டு சிறை சென்றார்கள். எனவே அதிமுக, திமுக ஆகிய கட்சிகளுக்கு மாற்றாக, மக்கள் நலக்கூட்டணிக்கு ஆதரவு தருகிறார்கள்.
மக்கள் நலக்கூட்டணியில் நான், திருமாவளன், ஜி.ராமகிருஷ்ணன், முத்தரசன் ஆகியோர் இதுவரை 4 கட்ட சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்தித்து உள்ளோம். கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் எங்கள் அணிக்கு மக்கள் திரண்டு வந்து ஆதரவு தருகிறார்கள். ஆனால் இதில் பிரச்னை ஏற்படுத்துவது போல் சிலர் செய்திகளை பரப்புகிறார்கள். மதுவிலக்கு, ஊழல் ஒழிப்பு கொள்கைகள் உடைய மக்கள் நலகூட்டணிக்கு இஞைர்கள், மாணவர்கள் மத்தியிலும் அதிக வரவேற்பு ஏற்பட்டுள்ளது.
இதை ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட இணைய தளங்களில் அவர்கள் தெரிவிக்கும் கருத்துக்கள், விமர்சனங்கள் தெரிவிக்கின்றன. இந்த இளைஞர்களை நான் செல்போன் சிங்கங்கள் என்று பாராட்டுகிறேன். மக்கள் நலக்கூட்டணியில் மதிமுக எத்தனை தொகுதிகளில் போட்டியிடும் என ஒருங்கிணைப்பாளரான நான் கூறமுடியாது. தொகுதிப் பங்கீடு, தேர்தல் அறிக்கை தயாரிப்பு, துண்டு பிரசுரம் அச்சடிப்பு, தேர்தல் பணிக்குழு அமைப்பு என பல்வேறு பணிகளில் மக்கள் நலக்கூட்டணி ஈடுபட்டு வருகிறது.
எங்கள் கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று இப்போது கூறமாட்டேன். ஆனால் தமிழகத்தில் மக்கள் நல கூட்டணிதான் ஆட்சி அமைக்கும். முதல் அமைச்சர் யார் என இப்போது கூற தேவையில்லை. இதனால் பின்னடைவு ஏற்படாது. 1967 ல் திமுக போட்டியிட்டபோது முதல் அமைச்சர் வேட்பாளர் குறித்து அறிவிக்கவில்லை.
மக்கள் நலக்கூட்டணியில் விஜயகாந்த் வந்தால், தேமுதிக தலைமையில் கூட்டணி அமையுமா என்றால் வாய்ப்பில்லை. மக்கள் நலக்கூட்டணி தொடங்கப்பட்டு மக்கள் மத்தியில் நன்றாக பதிவு செய்யப்பட்டு விட்டது. எங்கள் கூட்டணி விமானம் நன்றாக ‘டேக்ஆப்’ ஆகிவிட்டது. மக்கள் நல கூட்டணியின் செயல் திட்டங்கள் மக்கள் மனதை நன்றாக சென்றடைந்து விட்டது.
மக்கள் நலக்கூட்டணிக்கு வருமாறு ஜி.கே.வாசனையும் ஏற்கனவே நாங்கள் அழைத்துள்ளோம். 1996 ல் திமுக- தமாகா கூட்டணிக்கு நடிகர் ரஜினிகாந்த் ஆதரவு தெரிவித்ததால்தான் மதிமுக விற்கு பின்னடைவு ஏற்பட்டது. எனவே இந்தத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணிக்கு நடிகர் ரஜினிகாந்த் ஆதரவு தரவேண்டும் என்ற கேள்விக்கு நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை.
தேர்தலில் வாக்காளர்களுக்கு கொடுக்க பதுக்கி பணம் வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனைத் தேர்தல் ஆணையம் தடுக்க வேண்டும். புகார் கொடுக்கும் 10 நிமிடத்திற்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே நேரத்தில் பொதுமக்கள், வியாபாரிகள் தங்கள் தொழில் விஷயமாக கொண்டு செல்லும் பணத்திற்கு இடையூறு செய்யக்கூடாது.
உடுமலையில் பொறியியல் மாணவர் சங்கர் படுகொலையை கண்டித்து வருகிற 21ம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் மக்கள் நலக்கூட்டணி சார்பில் நான், திருமாவளவன், முத்தரசன், ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொள்ளும் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடைபெறும்." என்று வைகோ தெரிவித்துள்ளார்.
நன்றி விகடன்.
திருச்சியில் இன்று திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கரூர், புதுக்கோட்டை உள் ளிட்ட 10 மாவட்ட மதிமுக நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்க வந்த வைகோ செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
" தமிழக அரசியலில் கடந்த சில நாட்களாக ஆளும் அதிமுக அரசின் ‘மர்ம’மான சம்பவங்கள் சூழந்த செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. வேலை வாங்கி தருவதாக அமைச்சர் சண்முகநாதனின் உதவியாளர் ரூ.3 லட்சம் மோசடி செய்ததாக கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அப்படி என்றால் அமைச்சர்கள் உதவியாளர்கள் மூலம் எவ்வளவு ஊழல் நடந்திருக்கும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அதேபோன்று ஐவர் அணியில் இருந்த அமைச்சர்கள் கடந்த சில நாட்களாக பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவில்லை. அவர்கள் வீட்டு சிறையில் வைக்கப்பட்டு இருப்பதாக வரும் செய்திகள் உண்மையா வதந்தியா என தெரியாது. அவர்களிடம் இருந்து ரூ.1,000 கோடி கைப்பற்றப்பட்டு இருப்பதாகவும் செய்திகள் வருகிறது. இது உண்மையா என தெரியாது. கடந்த நான்கே முக்கால் ஆண்டு இவர்கள் பற்றி தெரியாமல் போனது ஏன்? இது மக்களை ஏமாற்ற போடும் நாடகம்.
இதற்கு முன்பு சிலர் மீது இதேபோன்று புகார்கள் கூறப்பட்டு அனைவரும் கைது செய்யப்பட்டார்கள். அவர்களோடு யாரும் தொடர்பு வைத்துக் கொள்ள கூடாது என கூறினார்கள். அப்போது சொத்துக் குவிப்பு வழக்கில் சிக்குவதில் இருந்து தப்ப நாடகம் போடுவதாக கூறினார்கள். இப்போதும் இது நாடகம் போல் உள்ளது.
சமீபத்தில் இந்தியாவில் அதிக ஊழல் நடந்துள்ள மாநிலம் என தமிழ்நாட்டை ஒரு பொருளாதார குழு கூறியுள்ளது. எனவே இதனை திசை திருப்ப நடக்கும் நாடகமாக மக்கள் சந்தேகிக்கிறார்கள். இதில் மக்கள் ஏமாற மாட்டார்கள். அதிமுகவுக்கு மாற்றாக உள்ள திமுகவும் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான கட்சி. ‘2ஜி’ அலைவரிசை வழக்கில் அக்கட்சியை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டு சிறை சென்றார்கள். எனவே அதிமுக, திமுக ஆகிய கட்சிகளுக்கு மாற்றாக, மக்கள் நலக்கூட்டணிக்கு ஆதரவு தருகிறார்கள்.
மக்கள் நலக்கூட்டணியில் நான், திருமாவளன், ஜி.ராமகிருஷ்ணன், முத்தரசன் ஆகியோர் இதுவரை 4 கட்ட சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்தித்து உள்ளோம். கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் எங்கள் அணிக்கு மக்கள் திரண்டு வந்து ஆதரவு தருகிறார்கள். ஆனால் இதில் பிரச்னை ஏற்படுத்துவது போல் சிலர் செய்திகளை பரப்புகிறார்கள். மதுவிலக்கு, ஊழல் ஒழிப்பு கொள்கைகள் உடைய மக்கள் நலகூட்டணிக்கு இஞைர்கள், மாணவர்கள் மத்தியிலும் அதிக வரவேற்பு ஏற்பட்டுள்ளது.
இதை ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட இணைய தளங்களில் அவர்கள் தெரிவிக்கும் கருத்துக்கள், விமர்சனங்கள் தெரிவிக்கின்றன. இந்த இளைஞர்களை நான் செல்போன் சிங்கங்கள் என்று பாராட்டுகிறேன். மக்கள் நலக்கூட்டணியில் மதிமுக எத்தனை தொகுதிகளில் போட்டியிடும் என ஒருங்கிணைப்பாளரான நான் கூறமுடியாது. தொகுதிப் பங்கீடு, தேர்தல் அறிக்கை தயாரிப்பு, துண்டு பிரசுரம் அச்சடிப்பு, தேர்தல் பணிக்குழு அமைப்பு என பல்வேறு பணிகளில் மக்கள் நலக்கூட்டணி ஈடுபட்டு வருகிறது.
எங்கள் கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று இப்போது கூறமாட்டேன். ஆனால் தமிழகத்தில் மக்கள் நல கூட்டணிதான் ஆட்சி அமைக்கும். முதல் அமைச்சர் யார் என இப்போது கூற தேவையில்லை. இதனால் பின்னடைவு ஏற்படாது. 1967 ல் திமுக போட்டியிட்டபோது முதல் அமைச்சர் வேட்பாளர் குறித்து அறிவிக்கவில்லை.
மக்கள் நலக்கூட்டணியில் விஜயகாந்த் வந்தால், தேமுதிக தலைமையில் கூட்டணி அமையுமா என்றால் வாய்ப்பில்லை. மக்கள் நலக்கூட்டணி தொடங்கப்பட்டு மக்கள் மத்தியில் நன்றாக பதிவு செய்யப்பட்டு விட்டது. எங்கள் கூட்டணி விமானம் நன்றாக ‘டேக்ஆப்’ ஆகிவிட்டது. மக்கள் நல கூட்டணியின் செயல் திட்டங்கள் மக்கள் மனதை நன்றாக சென்றடைந்து விட்டது.
மக்கள் நலக்கூட்டணிக்கு வருமாறு ஜி.கே.வாசனையும் ஏற்கனவே நாங்கள் அழைத்துள்ளோம். 1996 ல் திமுக- தமாகா கூட்டணிக்கு நடிகர் ரஜினிகாந்த் ஆதரவு தெரிவித்ததால்தான் மதிமுக விற்கு பின்னடைவு ஏற்பட்டது. எனவே இந்தத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணிக்கு நடிகர் ரஜினிகாந்த் ஆதரவு தரவேண்டும் என்ற கேள்விக்கு நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை.
தேர்தலில் வாக்காளர்களுக்கு கொடுக்க பதுக்கி பணம் வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனைத் தேர்தல் ஆணையம் தடுக்க வேண்டும். புகார் கொடுக்கும் 10 நிமிடத்திற்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே நேரத்தில் பொதுமக்கள், வியாபாரிகள் தங்கள் தொழில் விஷயமாக கொண்டு செல்லும் பணத்திற்கு இடையூறு செய்யக்கூடாது.
உடுமலையில் பொறியியல் மாணவர் சங்கர் படுகொலையை கண்டித்து வருகிற 21ம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் மக்கள் நலக்கூட்டணி சார்பில் நான், திருமாவளவன், முத்தரசன், ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொள்ளும் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடைபெறும்." என்று வைகோ தெரிவித்துள்ளார்.
நன்றி விகடன்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
Re: கூட்டணிக்கு தலைமை: விஜயகாந்துக்கு கை விரித்தார் வைகோ!
ஜவடேகர் பி .ஜே .பி தமிழ்நாட்டில் தனித்துப் போட்டியிடும் என்று தெரிவித்துவிட்டார். ம .ந .கூ .வின் ஒருங்கிணைப்பாளர் வை .கோ .வும் தே .மு .தி .க . மக்கள் நலக் கூட்டணிக்கு வந்தால் ,அதன் தலைமையில் கூட்டணி அமைய வாய்ப்பில்லை என்று கூறிவிட்டார் .
அப்படிஎன்றால் விஜயகாந்தின் கதி என்ன?
மீண்டும் தி .மு .க .வின் கதவைத் தட்டலாமா என்று அவர் யோசித்துக்கொண்டு இருப்பதாக அரசல் புரசலாக செய்திகள் வந்துகொண்டு இருக்கின்றன !
இனிமேல் முன்பிருந்த கெத்து அவருக்கு இருக்காது என்று அரசியல் வட்டாரத்தில் பேசிக்கொள்கிறார்கள் .
அப்படிஎன்றால் விஜயகாந்தின் கதி என்ன?
மீண்டும் தி .மு .க .வின் கதவைத் தட்டலாமா என்று அவர் யோசித்துக்கொண்டு இருப்பதாக அரசல் புரசலாக செய்திகள் வந்துகொண்டு இருக்கின்றன !
இனிமேல் முன்பிருந்த கெத்து அவருக்கு இருக்காது என்று அரசியல் வட்டாரத்தில் பேசிக்கொள்கிறார்கள் .
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» அ.தி.மு.க.,வுடன் கூட்டணிக்கு சோனியா முயற்சி: வைகோ பேச்சு
» விஜயகாந்துக்கு விஜய் நேரில் வாழ்த்து!
» திமுக கூட்டணிக்கு 140-அதிமுக கூட்டணிக்கு 94 இடங்கள்: நக்கீரன் கருத்துக் கணிப்பு
» பாஜக கூட்டணிக்கு – 233; காங். கூட்டணிக்கு- 119
» திமுக கூட்டணிக்கு 137 இடங்களும், அதிமுக கூட்டணிக்கு 89 இடங்களும்
» விஜயகாந்துக்கு விஜய் நேரில் வாழ்த்து!
» திமுக கூட்டணிக்கு 140-அதிமுக கூட்டணிக்கு 94 இடங்கள்: நக்கீரன் கருத்துக் கணிப்பு
» பாஜக கூட்டணிக்கு – 233; காங். கூட்டணிக்கு- 119
» திமுக கூட்டணிக்கு 137 இடங்களும், அதிமுக கூட்டணிக்கு 89 இடங்களும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|