Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்by heezulia Today at 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 10:00 am
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 9:30 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 8:49 am
» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 8:02 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:20 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:04 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:51 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:34 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:50 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:42 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:55 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:53 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:36 pm
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:16 pm
» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 11:43 am
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:23 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:13 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 2:33 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 1:14 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
Balaurushya |
| |||
prajai |
| |||
mohamed nizamudeen |
| |||
Ammu Swarnalatha |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
| |||
Karthikakulanthaivel |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
நகைக்கடை உரிமையாளர்கள் தொடர் கடையடைப்பு...தொடர் பதிவு !
3 posters
Page 1 of 1
நகைக்கடை உரிமையாளர்கள் தொடர் கடையடைப்பு...தொடர் பதிவு !
![நகைக்கடை உரிமையாளர்கள் தொடர் கடையடைப்பு...தொடர் பதிவு ! WfIO34T8SRe6YMW5kHIb+jewelslong](https://www.filepicker.io/api/file/wfIO34T8SRe6YMW5kHIb+jewelslong.jpg)
தங்க நகைகளுக்கு கலால்வரி விதிக்கப்படும் என்ற மத்திய அரசு அறிவிப்புக்கு எதிராக தங்க நகை வியாபாரிகள் போராடி வரும் நிலையில், தங்க நகை விலைகள் கடும் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் பவுனுக்கு 2 ஆயிரத்து 336 ரூபாய் குறைந்துள்ளது.
தங்க நகைகளுக்கு ஒரு சதவீதம் கலால்வரி விதிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தங்க நகை நிறுவனங்கள், வியாபாரிகள், தங்க நகை தொழில் சார்ந்த தொழிற்கூடங்கள் அனைத்தும் நாடு முழுவதும் கடந்த 2ம் தேதி முதல் 5ம் தேதி வரை கடை அடைப்பு செய்தன.
பின்னர், மத்திய அரசிடம் இருந்து எந்த பதிலும் வராததால், கடந்த 8-ம் தேதியில் இருந்து காலவரையற்ற கடை அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த நிலையில், தங்க நகை வியாபாரிகளின் காலவரையற்ற போராட்டத்தால், தங்கத்தின் விலை பெருமளவில் சரிந்துள்ளது.
நேற்று மாலை நேர நிலவரப்படி, ஒரே நாளில் மட்டும் தங்கம் விலை, கிராமுக்கு ரூ.292-ம், பவுனுக்கு 2 ஆயிரத்து 336 ரூபாய் குறைந்துள்ளது. கடை அடைப்பு தொடரும் பட்சத்தில், தங்கத்தின் விலை மேலும் வீழ்ச்சியை நோக்கிதான் செல்லும் என்று நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
தங்கம் விலை பெருமளவில் சரிந்திருந்தாலும் அது பொதுமக்களுக்கு எந்தவித பயனையும் தரவில்லை. காரணம், கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு இருப்பதால் தங்க நகையை வாங்குவதற்கு மக்களால் முடியாமல் போய்விட்டது.
இந்த போராட்டம் குறித்து சென்னை வைரம் மற்றும் தங்க வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் ஷலானி கூறுகையில், " இந்த கடை அடைப்பு போராட்டத்தால் தமிழகத்தில் இதுவரை ரூ.3,150 கோடி வர்த்தக இழப்பு ஏற்பட்டுள்ளது. அகில இந்திய அளவில் ரூ.90 ஆயிரம் கோடி வரை வர்த்தக இழப்பு ஏற்பட்டு இருக்கிறது.
சென்னையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஒரு முக்கிய முடிவு ஒன்று எடுத்து இருக்கிறோம். அதாவது, தங்க நகைகளுக்கான சேதாரம் ஒவ்வொரு கடைகளுக்கும் வித்தியாசப்பட்டு காணப்படும். அந்த வித்தியாசத்தை போக்கும் வகையில், அனைத்து தங்க நகை கடைகளிலும் ஒரே சேதாரத்தை கொண்டு வருவதற்கான தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டு இருக்கிறது.
இதற்கு அனைத்து தங்க நகை வியாபாரிகளும் ஒத்துழைப்பு தந்து இருக்கிறார்கள். தற்போது நடைபெற்று வரும் போராட்டம் முடிந்ததும், இதற்கான அடுத்தக்கட்ட நடவடிக்கையை நாங்கள் செய்ய முடிவு செய்து இருக்கிறோம்" என்றார்.
விகடன்
Last edited by krishnaamma on Fri Mar 18, 2016 3:21 pm; edited 1 time in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: நகைக்கடை உரிமையாளர்கள் தொடர் கடையடைப்பு...தொடர் பதிவு !
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
நேற்று மாலை நேர நிலவரப்படி, ஒரே நாளில் மட்டும் தங்கம் விலை, கிராமுக்கு ரூ.292-ம், பவுனுக்கு 2 ஆயிரத்து 336 ரூபாய் குறைந்துள்ளது. கடை அடைப்பு தொடரும் பட்சத்தில், தங்கத்தின் விலை மேலும் வீழ்ச்சியை நோக்கிதான் செல்லும் என்று நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
இவங்க போராட்டத்தை இப்படித்தான் அரசு கண்டுக்காமல் விடனும், அப்போ தான் இவங்க வழிக்கு வருவாங்க....விலை ஏறும்போது சர்வதேசத்தில் ஏறுவதால் என்றெல்லாம் சொல்லுவாங்களே, இப்போ எப்படி இவங்க ஒரு நாட்டில் கடை அடித்ததால் மட்டும் விலை விழுகிறது?.............விழித்துக் கொள்ளுங்கள் மக்களே!
சென்னையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஒரு முக்கிய முடிவு ஒன்று எடுத்து இருக்கிறோம். அதாவது, தங்க நகைகளுக்கான சேதாரம் ஒவ்வொரு கடைகளுக்கும் வித்தியாசப்பட்டு காணப்படும். அந்த வித்தியாசத்தை போக்கும் வகையில், அனைத்து தங்க நகை கடைகளிலும் ஒரே சேதாரத்தை கொண்டு வருவதற்கான தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டு இருக்கிறது.
இப்படியும் சேர்த்து செய்யுங்கள், நகை வியாபாரிகள் 22 காரட் என்று போட்டு தந்தாலும் அது 20 அல்லது 18 தான் இருக்கும் அதனால் தான் அவங்க கடைதங்கத்தை வேற யாரும் எடுக்க மாட்டாங்க, அவங்க கடை லட்சணம் தெரிந்ததால் அவங்களே மீண்டும் நம்மிடம் வாங்கிக்கிறாங்க...மேலே சொன்னபடிக்கு செய்தால், அட்லீஸ்ட் எந்த கடைலாவது போட்டு மாற்றி வாங்கலாம் !
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: நகைக்கடை உரிமையாளர்கள் தொடர் கடையடைப்பு...தொடர் பதிவு !
ayyasamy ram wrote:![]()
-
நகைகடைகளுக்கு ஆர்டரின் பேரில் நகைகள் செய்து கொடுக்கும் ஒரு தொழிற்கூடத்தில் உள்ள நண்பர் ஒருவர் சொன்னது.
எவ்வளவு தங்க நகை செய்தாலும் , தங்கத்தில் "சேதாரம்" என்பதே கிடையாதாம்.
Re: நகைக்கடை உரிமையாளர்கள் தொடர் கடையடைப்பு...தொடர் பதிவு !
மேற்கோள் செய்த பதிவு: 1197524ராஜா wrote:
நகைகடைகளுக்கு ஆர்டரின் பேரில் நகைகள் செய்து கொடுக்கும் ஒரு தொழிற்கூடத்தில் உள்ள நண்பர் ஒருவர் சொன்னது.
எவ்வளவு தங்க நகை செய்தாலும் , தங்கத்தில் "சேதாரம்" என்பதே கிடையாதாம்.
நீங்கள் சொல்வது தான் வாஸ்த்தவமாய் இருக்கும் ராஜா, யோசித்த போது, ஒரு நகை கடைக்காரர் , ஒரு நகை செய்ய 10 பவுன் தருகிறார் என்று வைத்துக்கொண்டால், இவர்கள் சொல்லும் சேதாரம் போக தட்டான், 8 பவுனுக்கு அல்லது 9 பவுனுக்கு நகையைத்தந்தால் ஒத்துப்பாங்களா?...............சேதாரமாய் , அந்த liquid இல் இருக்கும் தங்கத்தையும் சேர்த்துத்தானே கேட்பார்கள்?............
அப்போ, அந்த தங்கமும் இவங்களுக்கு கிடைத்து விடுகிறது தானே?........அப்புறம் நம்மிடம் எப்படி சேதாரத்துக்கு பணம் வாங்கலாம்?..........அட அப்படியே வாங்கினாலும் அந்த தங்க துகள்களை நம்மிடம் தானே தரணும்?............
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
ரொம்ப அநியாயம் செய்கிறார்கள் இந்த நகை கடைக்காரர்கள்..............
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: நகைக்கடை உரிமையாளர்கள் தொடர் கடையடைப்பு...தொடர் பதிவு !
நகைக்கடை உரிமையாளர்கள் நடத்தி வரும் தொடர் கடை யடைப்பு போராட்டத்தால் இதுவரை யில் ரூ.60 ஆயிரம் கோடி வர்த் தகம் பாதிக்கப்பட்டுள்ளது.
கோடிக் கணக்கான தொழிலாளர்கள் வேலைவாய்ப்பின்றி தவிக்கின்ற னர். திருமணம் போன்ற முக்கிய நிகழ்ச்சிகளுக்கு நகை வாங்க முடியாமலும், அவசரத் துக்கு நகைகளை விற்க முடியாமலும் பொதுமக்கள் அவதிப் படுகின்றனர்.
மத்திய பட்ஜெட்டில் முதல் முறையாக தங்க நகைகளுக்கு ஒரு சதவீதம் கலால் வரி விதிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வரி மூலம் மத்திய அரசுக்கு ஆண்டுக்கு ரூ.2 ஆயிரத்து 500 கோடி முதல் ரூ.3 ஆயிரம் கோடி வரையில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ரூ.2 லட்சத்துக்கு மேல் நகை வாங்குவோருக்கு ஒரு சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு நகைக்கடை உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
கலால் வரியை ரத்து செய்யக் கோரி கடந்த 2-ம் தேதி முதல் நாடுமுழுவதும் நகைக்கடை உரிமையாளர்கள் கடையடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால், நாடுமுழுவதும் 2 லட்சம் கடைகள் மூடப்பட்டுள்ளன. தமிழகத்தில் 35 ஆயிரம் நகைக்கடைகள் மூடப்பட்டுள்ளன. நகைகளை வாங்கவும், விற்கவும் முடியாமல் மக்கள் அவதிப்படுகின்றனர்.
இது தொடர்பாக சென்னை தங்கம் மற்றும் வைர வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி ‘தி இந்து’விடம் கூறிய தாவது:
ரூ.300 விலை உயர்வு
தங்க நகைகளுக்கு விதிக்கப் பட்டுள்ள ஒரு சதவீத கலால் வரி மூலம் உற்பத்தியாளர்கள் பவுனுக்கு ரூ.300 வரை உயர்த்த வாய்ப்புள்ளது. மேலும் மத்திய கலால் வரித்துறையினர் திடீரென ஆய்வு நடத்தும்போது நகைக்கடை உரிமையாளர்கள் உற்பத்தியான நகை, வாடிக்கையாளர்களின் நகை கள், பழைய நகைகள் ஆகிய வற்றை அடையாளம் காட்டுவதில் நடைமுறையில் சிக்கல் உள்ளது. இதனால் எங்களுக்கு அபராதமோ அல்லது தண்டனையோ விதிக்கப் படலாம்.
அடுத்த சில மாதங்களில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அமல்படுத்தப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் அறிவித்துள்ளார். ஜிஎஸ்டி நடைமுறைக்கு வரும் போது தற்போதுள்ள வாட் வரி, சேவை வரி, மத்திய கலால் வரி ஆகியவை நீக்கப்படவுள்ளன. இந்த நிலையில் தற்போது திடீரென எங்களுக்கு கலால் வரி விதிப்பதன் நோக்கம் என்ன என்று தெரியவில்லை.
கடந்த 16 நாளாக நடத்தப் பட்டு வரும் நகை கடை உரிமை யாளர்களின் போராட்டத்தால் ரூ.60 ஆயிரம் கோடிக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. கலால் வரியை ரத்து செய்ய கோரி தொடர்ந்து போராட்டம் நடத்துவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இது தொடர்பாக நகை வியா பாரத்தில் ஈடுபட்டுள்ளவர்களின் கருத்துகள் வருமாறு:
பி.ரமேஷ் (தங்கமயில் நகைக்கடை துணை நிர்வாக இயக்குநர்)
கடந்த 1989-ம் ஆண்டில் தங்க கட்டுப்பாடு சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த சட்டமும் கலால் வரியை போன்றதுதான். அதை எதிர்த்து போராடியதால் தங்க கட்டுப்பாடு சட்டம் வாபஸ் பெறப்பட்டது. தங்கத்துக்கு கலால் வரியை கொண்டுவருவது அத்துறை அதிகாரிகளின் அராஜகத்துக்கும், ஊழலுக்கும் வழிவகுக்கும். மேலும், கலால் வரிக்கு ஏற்றார்போல் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர வாய்ப்பு உள்ளது. இந்த வேலை நிறுத்தத்தால் நகை தொழிலை சார்ந்துள்ள கோடிக்கணக்கான தொழிலாளர்கள் வேலை வாய்ப்பின்றி தவிக்கின்றனர்.
சுதீர் கபூர் (பீமா நகைக்கடை நிர்வாக பங்குதாரர்)
மத்திய அரசு வருவாய் பெற விரும்பினால் ஏற்கெனவே, வசூலிக்கப்பட்டு வரும் இறக்குமதி வரியை கூடுதலாக ஒரு சதவீதம் உயர்த்தி கொள்ளலாம். ஆனால், கலால் வரி என்ற புதிய பிரிவை உருவாக்க வேண்டாம் என வலியுறுத்துகிறோம். புதிய தாக கலால் வரியை நகை கடைகளுக்கு புகுத்துவதால் நகை கடை உரிமையாளர்களும், பொதுமக்களும் பாதிக்கப்படு வார்கள்.
தி ஹிந்து
கோடிக் கணக்கான தொழிலாளர்கள் வேலைவாய்ப்பின்றி தவிக்கின்ற னர். திருமணம் போன்ற முக்கிய நிகழ்ச்சிகளுக்கு நகை வாங்க முடியாமலும், அவசரத் துக்கு நகைகளை விற்க முடியாமலும் பொதுமக்கள் அவதிப் படுகின்றனர்.
மத்திய பட்ஜெட்டில் முதல் முறையாக தங்க நகைகளுக்கு ஒரு சதவீதம் கலால் வரி விதிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வரி மூலம் மத்திய அரசுக்கு ஆண்டுக்கு ரூ.2 ஆயிரத்து 500 கோடி முதல் ரூ.3 ஆயிரம் கோடி வரையில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ரூ.2 லட்சத்துக்கு மேல் நகை வாங்குவோருக்கு ஒரு சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு நகைக்கடை உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
கலால் வரியை ரத்து செய்யக் கோரி கடந்த 2-ம் தேதி முதல் நாடுமுழுவதும் நகைக்கடை உரிமையாளர்கள் கடையடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால், நாடுமுழுவதும் 2 லட்சம் கடைகள் மூடப்பட்டுள்ளன. தமிழகத்தில் 35 ஆயிரம் நகைக்கடைகள் மூடப்பட்டுள்ளன. நகைகளை வாங்கவும், விற்கவும் முடியாமல் மக்கள் அவதிப்படுகின்றனர்.
இது தொடர்பாக சென்னை தங்கம் மற்றும் வைர வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி ‘தி இந்து’விடம் கூறிய தாவது:
ரூ.300 விலை உயர்வு
தங்க நகைகளுக்கு விதிக்கப் பட்டுள்ள ஒரு சதவீத கலால் வரி மூலம் உற்பத்தியாளர்கள் பவுனுக்கு ரூ.300 வரை உயர்த்த வாய்ப்புள்ளது. மேலும் மத்திய கலால் வரித்துறையினர் திடீரென ஆய்வு நடத்தும்போது நகைக்கடை உரிமையாளர்கள் உற்பத்தியான நகை, வாடிக்கையாளர்களின் நகை கள், பழைய நகைகள் ஆகிய வற்றை அடையாளம் காட்டுவதில் நடைமுறையில் சிக்கல் உள்ளது. இதனால் எங்களுக்கு அபராதமோ அல்லது தண்டனையோ விதிக்கப் படலாம்.
அடுத்த சில மாதங்களில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அமல்படுத்தப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் அறிவித்துள்ளார். ஜிஎஸ்டி நடைமுறைக்கு வரும் போது தற்போதுள்ள வாட் வரி, சேவை வரி, மத்திய கலால் வரி ஆகியவை நீக்கப்படவுள்ளன. இந்த நிலையில் தற்போது திடீரென எங்களுக்கு கலால் வரி விதிப்பதன் நோக்கம் என்ன என்று தெரியவில்லை.
கடந்த 16 நாளாக நடத்தப் பட்டு வரும் நகை கடை உரிமை யாளர்களின் போராட்டத்தால் ரூ.60 ஆயிரம் கோடிக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. கலால் வரியை ரத்து செய்ய கோரி தொடர்ந்து போராட்டம் நடத்துவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இது தொடர்பாக நகை வியா பாரத்தில் ஈடுபட்டுள்ளவர்களின் கருத்துகள் வருமாறு:
பி.ரமேஷ் (தங்கமயில் நகைக்கடை துணை நிர்வாக இயக்குநர்)
கடந்த 1989-ம் ஆண்டில் தங்க கட்டுப்பாடு சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த சட்டமும் கலால் வரியை போன்றதுதான். அதை எதிர்த்து போராடியதால் தங்க கட்டுப்பாடு சட்டம் வாபஸ் பெறப்பட்டது. தங்கத்துக்கு கலால் வரியை கொண்டுவருவது அத்துறை அதிகாரிகளின் அராஜகத்துக்கும், ஊழலுக்கும் வழிவகுக்கும். மேலும், கலால் வரிக்கு ஏற்றார்போல் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர வாய்ப்பு உள்ளது. இந்த வேலை நிறுத்தத்தால் நகை தொழிலை சார்ந்துள்ள கோடிக்கணக்கான தொழிலாளர்கள் வேலை வாய்ப்பின்றி தவிக்கின்றனர்.
சுதீர் கபூர் (பீமா நகைக்கடை நிர்வாக பங்குதாரர்)
மத்திய அரசு வருவாய் பெற விரும்பினால் ஏற்கெனவே, வசூலிக்கப்பட்டு வரும் இறக்குமதி வரியை கூடுதலாக ஒரு சதவீதம் உயர்த்தி கொள்ளலாம். ஆனால், கலால் வரி என்ற புதிய பிரிவை உருவாக்க வேண்டாம் என வலியுறுத்துகிறோம். புதிய தாக கலால் வரியை நகை கடைகளுக்கு புகுத்துவதால் நகை கடை உரிமையாளர்களும், பொதுமக்களும் பாதிக்கப்படு வார்கள்.
தி ஹிந்து
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: நகைக்கடை உரிமையாளர்கள் தொடர் கடையடைப்பு...தொடர் பதிவு !
புதிய தாக கலால் வரியை நகை கடைகளுக்கு புகுத்துவதால் நகை கடை உரிமையாளர்களும், பொதுமக்களும் பாதிக்கப்படு வார்கள்.
இதெல்லாம் சும்மா, நகை கடை உரிமையாளர்கள் தான் பாதிக்கப் படுவார்கள்.....இப்படியே இருக்கட்டும், ஒரு கடையும் திறக்க வேண்டாம்......வீடுகளில் இருக்கும் தங்கமே அங்குள்ள பெண்களுக்கு போரும்.அதை மட்டுமே வழி வழியாய் பயன் படுத்தலாம்.........பெண்ணை பெற்றவர்களுக்கு ஒரு மஹா பெரிய தலைவலி குறையும்
இதெல்லாம் சும்மா, நகை கடை உரிமையாளர்கள் தான் பாதிக்கப் படுவார்கள்.....இப்படியே இருக்கட்டும், ஒரு கடையும் திறக்க வேண்டாம்......வீடுகளில் இருக்கும் தங்கமே அங்குள்ள பெண்களுக்கு போரும்.அதை மட்டுமே வழி வழியாய் பயன் படுத்தலாம்.........பெண்ணை பெற்றவர்களுக்கு ஒரு மஹா பெரிய தலைவலி குறையும்
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» நற்சிந்தனைகள் - தொடர் பதிவு
» செய்திகள் - தொடர் பதிவு
» திரைத்துளிகள் - தொடர் பதிவு
» கஜா புயல் - தொடர் பதிவு
» ஆடிப்பெருக்கு - தொடர் பதிவு
» செய்திகள் - தொடர் பதிவு
» திரைத்துளிகள் - தொடர் பதிவு
» கஜா புயல் - தொடர் பதிவு
» ஆடிப்பெருக்கு - தொடர் பதிவு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|