ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

குழந்தை பேறின்மைக்கான காரணங்கள்

Go down

குழந்தை பேறின்மைக்கான காரணங்கள் Empty குழந்தை பேறின்மைக்கான காரணங்கள்

Post by தாமு Wed Nov 18, 2009 5:41 pm

குழந்தை பேறின்மை என்பது குழந்தையில்லாத தம்பதிகளுக்கு மனசஞ்சலமான பிரச்சினை.

திருமணத்திற்கு ஏற்ற பருவம்

ஆணுக்கு வயது 24 என்றும், பெண்ணுக்கு வயது 21 என்றும் இருக்கவேண்டும். ஏனென்றால் அந்த வயதில் தான் அவர்கள் மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் மண வாழ்க்கைக்கு தயார் ஆகிறார்கள்.

குழந்தை இல்லாததற்கான காரணங்கள்:-

பல காரணங்கள் உண்டு. பெண்களுக்கான குறைகள் 30 சதவீதம் என்றும், ஆண்களுக்கான குறைகள் 30 சதவீதம் என்றும், இருவருக்கும் சேர்ந்து உள்ள குறைகள் 40 சதவீதம் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது. மற்ற சில காரணங்கள் உடலில் உள்ள கோளாறுகளும், மன நிலை கோளாறுகளும் உள்ளன.

கருப்பை, சினைப்பை கருக்குழாய் இவற்றினால் ஏற்படும் கோளாறுகளும் அதாவது பிறவி உறுப்புகளில் உள்ள கோளாறுகள் என்று சொல்லலாம். அதேபோல் ஆண்களுக்கு விந்துவில் உள்ள கோளாறுகளையும் கூறலாம்.

1) தம்பதியரின் முழுமையனை உடல்நலம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ளவேண்டும்.

2) கணவன் - மனைவி ஆகிய இருவருடைய உடல் கூறுகளை பரிசோதனை செய்யவேண்டும்.

3) ரத்த சோகை, நீரிழிவு நோய், ரத்தப் பிரிவு போன்ற பரிசோதனைகளையும் மேற்கொள்ளவேண்டும்.

4) ஹார்மோன் சோதனை (எப்.எஸ்.எச்., எல்.எச். புரோலேக்டின், தைராய்டு)

5) அடுத்து லேப்ராஸ்கோப் செய்யவேண்டும். அதன் கூடவே `ஹிஸ்ட்ரோகோபி' செய்ய வேண்டும். இதன் மூலம் மேற்கொள்ளப்படும் சிகிச்சை வடு இல்லாமல் ஒரு வரின் வயிற்றுக்குள் உள்ள உறுப்புகள் நம் கண்ணா லேயே பார்க்கவும் அதற்குண்டான குறைகளை லேப் ராஸ்கோப் மூலம் சிகிச்சை செய்யலாம்.

6) கணவனின் உயிரணுக்களை பரிசோதனை செய்த பிறகே எந்தவிதமான சிகிச்சை கொடுக்கவேண்டும் என்று முடிவு செய்யப்படும்.

எந்தவிதமான சிகிச்சை:-

1) சிகிச்சைக்கு முன்பு முதலில் கணவன்- மனைவி இருவருக்கும் கவுன்சிலிங் அவசியம்.

2) கருப்பையின் உள்பாகத்தை பார்ப்பது, அவர் களுக்கு என்ன குறை இருக்கிறது. அதற்கு என்ன சிகிச் சை எடுக்கப் போகிறோம் என்பதை அவர்களுக்கு கவுன்சிலிங் வகுப்பின்போது வீடியோ படம் எடுத்து காண்பிக்கப்படும்.

இயற்கையான கருத்தரிப்பு

கர்ப்பம் என்பது சினைப் பையிலிருந்து வெளிப் படும் ஒரு முட்டையும், கணவனின் உயிரணுவும் இணைந்து கரு உண்டாகிறது. ஒவ்வொரு மாதமும் ஒரு முட்டை சினைப் பையிலிருந்து வெளிப்படுகிறது.

இது பொதுவாக மாதவிடாய் வந்த 12-வது நாளிலிருந்து 16-வது நாள் வெளிப்படுகிறது. இவை அனைத்தும் நமது மூளையில் உள்ள பிட்ïட்டரி சுரப்பியின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த பிட்ïட்டரி சுரப்பி, எப்.எஸ்.என். எல்.எச். என்ற இரண்டு ஹார் மோன்களைச் சுரக்கிறது.

இந்த இரண்டு ஹார்மோன்களும் சினைப்பையின் மீது வேலை செய்து ஈஸ்ட்ரஜன், புரோஸ்ட்ரான் என்ற இரண்டு ஹார்மோன்களை சுரக்கச் செய்து முட்டை வெளி வருதல், மாதவிடாய் ஏற்படுதல் போன்றவை முறையாக நடக்கிறது.

இவ்வாறு சினைப்பையிலிருந்து வெளிப்பட்ட முட்டையை கருக்குழாய் தன்னிடத்தில் உட்கொள்கிறது. இதற்கிடையே கணவனுடைய உயிரணு அந்த சினை குழாய் வழி யாக வந்து இந்த முட்டையுடன் இணைந்து கரு உண்டா கிறது. இப்படி உண்டான கரு சினைப்பையிலிருந்து கர்ப்பப்பைக்குப் போக 4 நாட்கள் ஆகிறது.

செயற்கை முறையில் விந்து கருப்பையில் செலுத்தி சிகிச்சை

கணவனுடைய உயிரணுக்களை நன்றாக பரிசோதனை செய்து அதில் உள்ள நல்ல உயிரோட்டமுள்ள, வீரியமான அணுக்களை சில சிறப்பான சிகிச்சை மூலம் பிரித்தெடுத்து பின்னர் அவற்றை மனைவியின் கருப்பை உள்ளே செலுத்தலாம்.

இச்சிகிச்சை செய்வதற்கான காரணங்கள்.

1) கணவரின் உயிரணுக்களின் எண்ணிக்கை 60 மில்லியனிலிருந்து 120 மில்லியனாக இருக்கவேண்டும். 20, 30 மில்லியனுக்கு கீழ் இருந்தால் நாம் இந்த முறையை பின்பற்ற வேண்டும்.

2) பிறவியிலேயே ஆண் உறுப்பில் கோளாறு இருந்தால்...

3) உயிர் அணுக்கள் சிறுநீருடன் கலந்து வெளிப்பட்டால்

4) மனைவியுடன் சேர முடியாத ஒரு சூழ்நிலை (மலட்டுத்தன்மை)

5) கணவனிடம் உயிரணுக்களே இல்லாத சூழ்நிலையில் செய்ய வேண்டும்.

மனைவியிடம் உள்ள குறைகள்

1) பிறவி உறுப்பில் உள்ள குறைகள்.

2) காரணமே இல்லாத ஒரு சூழ்நிலையில் குழந்தை பிடிக்காத தன்மை (இடியோபதிக்)

3) மனரீதியான பிரச்சினை

4) கருப்பையின் வாயில் உள்ள ஒரு ஆபரேஷனுக்கு பிறகு உண்டான குறைகள்.

5) கணவனின் உயிர் அணுக்களின் எதிர்ப்பு சக்தி மனைவியின் கருப்பை வாயில் உருவாவது.

சோதனைக் குழாய் குழந்தை (டெஸ்ட் டிïப் பேபி)

இந்த முறையில் கணவனுடைய உயிரணுக்களையும், ஸ்கேன் மூலமாக எடுக்கப்பட்ட முட்டையையும் இணைத்து குளிர்படுத்தப்பட்ட (இன்குபெட்டர்) கருவி யின் உள்ளே 2 நாட்கள் வைத்து பின்னர் அவற்றை கருப்பையின் உள்ளே வைத்து வளரச் செய்வதாகும்.

இச்சிகிச்சை மேற்கொள்ளப்பட காரணங்கள்

முதலில் கருக்குழாயில் ஏற்படும் கோளாறுகளுக்கே இந்த சிகிச்சை முறை மேற்கொள்ளப்பட்டு வந்தது. தற்போது 1) முற்றிலும் சிதைக்கப்பட்ட கருக்குழாய், 2) கருக்குழாயில் அடைப்பு, 3) பிறவியிலே கருக்குழாய் இல்லாத ஒரு தன்மை, 4) எண்டோமெட்ரோசிஸ் என்று சொல்லப்படும் குறை 5) கணவனின் உயிரணுக்கள் குறைவாக உள்ள ஒரு சூழ்நிலை. 6) மனைவியின் சினைப்பையில் முட்டையில்லாத தன்மை. இவர்கள் பிறருடைய சினைப் பையிலிருக்கும் முட்டையைப் பயன்படுத்திக் கொள்ளுதல்.

ஈற்றுத்தாய்

மரபு வழித்தாயின் சினைப்பையிலிருந்து முட்டையை எடுத்து மரபு வழித்தந்தையின் உயிர் அணுவோடு சேர்த்து சோதனைக் குழாய் குழந்தையை உருவாக்கி அதனை ஈற்றுத்தாயின் கருப்பையில் வளரச்செய்து குழந்தையை பெற்றுக் கொள்வதாகும்.

இதற்கான காரணங்கள்:-

1) ஒருதாய் பிறவியிலேயே கருப்பை இல்லாமல் இருப் பது. ஆனால் அவளுடைய முட்டைப் பைகள் இரண்டும் நல்ல முறையில் இருக்கும் சூழ்நிலையில்.

2) தாய் தனது கர்ப்பப் பையை இழக்க வேண்டிய சூழ்நிலை:-

கருப்பையில் ஏராளமான கட்டிகள், குழந்தையின் பிறப்பில் ஏராளமான ரத்த இழப்பு ஏற்பட்டு அதனால் ஆபரேஷன் செய்யப்பட்டு இருந்தால்.

3. அடுத்தடுத்து 5, 6 முறை அபார்ஷன் செய்யப்பட்டு இருந்தாலோ.

4. சோதனைக் குழாய் முறையில் பலன் கிடைக் கவில்லை யென்றால்,

5. தாயின் உடலில் உள்ள மருத்துவக் கோளாறுகள் முற்றிய இருதய நோய் போன்ற காரணங்களினால் இச்சிகிச்சை மேற் கொள்ளப்படுகிறது.




நன்றி -- டாக்டர் வசுந்தரா தியாகராஜன்
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum