Latest topics
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்by ayyasamy ram Yesterday at 10:50 pm
» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்த பாட்டுக்கு என்ன அர்த்தம்னு தெரியுமோ நோக்கு?
3 posters
Page 1 of 1
இந்த பாட்டுக்கு என்ன அர்த்தம்னு தெரியுமோ நோக்கு?
வில்லடிச்சான் கோயிலிலே கோயிலிலே!
விளக்கேத்த யாருமில்லே யாருமில்லே!
குடமடிச்சான் கோயிலிலே கோயிலிலே!
குத்துவிளக்கேத்த நாதியில்லே நாதியில்லே!
–
ஒருநாள் மஹா பெரியவாள் தரினத்துக்குச் சென்றிருந்த சமயம்,
அவர் இந்தப் பாட்டு வரிகளை சொல்லிவிட்டு, ‘இந்தப் பாட்டுக்கு
என்ன அர்த்தம்னு தெரியுமோ நோக்கு?’ என்று கேட்டார்.
–
வில்லடிச்சான், குடமடிச்சான் என்ற வார்த்தைகள் வில்லுப்பாட்டைக்
குறிப்பவையோ? என்ற சந்தேகம் இருந்தாலும், நானறிந்த வரையில்
வில்லுப்பாட்டு பாடும்போது இதைப் பாடிக் கேட்டதில்லை;
–
எனவே, அதிகப் பிரசங்கித்தனமாக ஏதும் சொல்லிவிடக்கூடாது என்று
அமைதியாக அவர் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன்.
–
அவர் விளக்கினார்
. ‘ஒருத்தர் கோவில்ல வில்லுப்பாட்டு கதை சொல்லிண்டு இருந்தா.
நன்னா வில்லடிச்சு, குடம் அடிச்சு, அற்புதமா பாடிண்டு இருந்ததால,
ஜனங்க எல்லாம் ரொம்ப ரசிச்சு, கேட்டுண்டு இருந்தா. பாட்டுல மங்கி,
அப்ளாஸ் குடுக்கறா; எல்லாரும் கதை கேட்கிற சுவாரசியத்துல, அங்கே
அம்பாள் சன்னதியில விளக்கேத்த ஆள் யாருமில்லை;
பூசாரி இருப்பானேன்னு நீ கேட்கலாம்; ஆனா அவனும்தானே கதையில
மயங்கி கிடந்தான். ஆனா அந்தக் கதை சொல்லறவன், தூரத்துல இருக்கிற
அம்பாள் சன்னதியில எண்ணெய் இல்லாம விளக்க அணையப்
போறதுன்னு கவனி்சு. இந்தப் பாட்டைப் பாடறான். பாட்டு வரியைக்
கேட்டதும் பூஜாரிக்கு விஷயம் புரிந்தது; அவன் எழுந்து போய், விளக்குக்கு
எண்ணெய் விடறான்.
–
இதுலேர்ந்து, அந்தக் காலத்துல வில்லுப்பாட்டு கதை சொல்றவா, எத்தனை
நுட்பமா இருந்திருக்கான்னு தெரியுதா?’ என்றார்.
–
‘நீயும் அது மாதிரி கதை சொல்றபோது, சுத்தி என்ன நடக்கறதுன்னு
கவணிக்கனும்’ என்று எனக்குச் சொல்வதுபோல உணர்ந்தேன். இதில்
ஜனங்களுக்கும் ஒரு மெசேஜ் இருக்கிறது என்பதும் புரிந்தது. வெறுமனே
கதை கேட்க மட்டும் கோவிலுக்கு வந்தால் போதாது. கடவுளை மறந்து
விடக்கூடாது. மெத்த சாஸ்திர ஞானம் கொண்டவர் மஹா பெரியவா
என்று நினைத்துக் கொண்டிருந்த எனக்கு, அவர் நாட்டுப்புறப் பாட்டிலும்
கூட ஞானம் கொண்டவர் என்ற பேருண்மை புரிந்தது.
–
அதன் பிறகு இதை மனத்தில் வைத்துக் கொண்டு, நான் கதை சொல்லும்
போது, நம் கலாசாரம், பாரம்பரியம் பற்றிக் குறிப்பிடும்போது,
‘கோலாகலமாக பொங்கல் கொண்டாடும்போது, சூரியனை மறந்துவிடக்
கூடாது’ என்று குறிப்பிடுவேன்.
–
ஒருமுறை மஹா பெரியவாள் முன்னனியில் சீதா கல்யாணம் வில்லுப்
பாட்டு சொல்கிற அற்புதமான வாயப்பு ஸ்ரீ ராமனது பால்ய பருவம் பற்றி,
‘ராமனிடம் எப்போதும் ஒரு நல்ல பழக்கம் இருந்தது. வீதி வழியாக தேரில்
போகிறபோது, வழியில் பெயவர்களை, முதியவர்களை, ஞானியர்களை
கண்டால், உடனே தேரைவிட்டு கீழே இறங்கிச் சென்று, அவர்களை,
நமஸ்கரித்து, நலம் விசாரித்து விட்டுத்தான் மேலே செல்வாராம்’
–
இதை நான் குறிப்பிட்டபோது, மஹா பெரியவாள், ‘தியாகராஜ சுவாமிகள்,
தான் திரேதா யுகத்தில் பிறக்கலையேன்னு கவலைப்பட்டாரோன்னோ!
நல்ல வேளை! ஸ்ரீராமன் பிறந்த திரதா யுகத்துல நான் பிறக்கலையேன்னு
சந்தோஷப்படறேன்!’ என்றார்.
–
கதை சொல்லும்போது, இடையில் மஹா பெரியவா இப்படி ஒரு புதிர்
போடுகிறாரே என்று எல்லோரும் திகைத்த வேளையில், அவரே தொடர்ந்து
சொன்னார், ‘திரேதா யுகத்துல நான் பிறந்திருந்தா ஸ்ரீ ராமன் என்னை
நமஸ்கரித்திருப்பார். இப்போ எனக்கு அவரை நமஸ்கரிக்கிற பெரிய
பாக்கியம் கிடைச்சிருக்கே!’ என்றார்.
–
தியாகராஜ சுவாமிகள், தான் திரேதா யுகத்தில் பிறக்கலையேன்னு
கவலைப்பட்டாரே! அது ஏன் தெரியுமா? அவர் ஸ்ரீ ராமரைப் பார்த்து,
சொல்லுகிறார். நீ வழ்ந்த திரேதா யுகத்துல நானும் பிறந்திருந்தா,
நடந்தாவது வந்து சீதா கல்யாண வைபோகத்தை என் கண்களால்
காண்கிற பாக்கியத்தை பெற்றிருப்பேனே என்கிறார்.
நான் சொன்னது சீதா கல்யாணக் கதை என்பதால், இரண்டு மஹான்களுமே
இரண்டு விதமான கருத்துக்களைச் சொல்லி இருந்தாலும் கூட, இரண்டுமே
அவர்கள் ஸ்ரீராமன் மீது கொண்டிருந்த அளவற்ற பக்தியின் வெளிப்பாடுதான்
என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
–
திருப்புகழ் மாதிரியே, திருமந்திரமும் மஹா பெருமாளின் மனசுக்குப் பிடித்த
ஒரு பக்தி இலக்கியம், ஒருநாள், திருமந்திரம் பற்றி அவர் சொன்னபோது
பச்சிலை, அகத்தி, பிட்சை, பதவுரை ஆகிய நான்கு வார்த்தைகளை அவர்
திரும்பத் திரும்பக் குறிப்பிட்டார். ஆனாலும், ரொம்ப விஸ்தாரமாக எதையும்
சொல்லவில்லை. மஹா பெரியவாள் சொல்கிறார் என்றால், அதற்கு ஒரு
அர்த்தம் இருக்கும். அது என்னவென்று நாம் தெரிந்து கொள்ள வேண்டும்
என்ற ஆர்வம் எனக்குள்ளே ஏற்பட்டது.
–
திருமூலரது திருமந்திரம் புத்தகத்தை எடுத்து கருத்துடன் படித்துக் கொண்டே
வந்தேன்.அதில்…
–
யாவருக்குமாம் இறைவற்கொரு பச்சிலை
யாவருக்கு மாம் பசு வுக்கொரு வாயுறை
யாவருக்கு மாம்உண்ணும் போதொரு கைப்பிடி
யாவருக்கு மாம்பிறர்க் கின்னுரை தானே
–
என்று ஒரு பாடலைக் கண்டேன். இறைவனுக்கு அதாவது, சிவனுக்கு வேறு
எதையும் சாத்த வேண்டிய அவசியமே இல்லை. ஒரு வில்வ இலையை
சாத்தினாலே பொதுமானது என்கிறார் திருமூலர். வில்வ இலையைத்தான்
திருமூலர் பச்சிலை என்கிறார்.
–
அடுத்த வரி, யாவருக்குமாம் பசுவுக்கு ஒரு வாயுறை. அதாவது பசுவுக்கு ஒரு
கட்டு அகத்திக்கீரை கொடுப்பது அத்தனை புண்ணியமாம். அடுத்தடுத்த
வரிகளில் கைப்பிடி அன்னதானம் பற்றியும், அடுத்தவரிடம் பேசுகிறபோது
வார்த்தைகளில் இனிமை இருக்க வேண்டியதன் அவசியம் பற்றியும் எடுத்துச்
சொல்கிறது. அந்த வரிகளைப் படித்தபோது, அடடா!
–
இதைத்தான் மஹா பெரியவாள் அன்று சுட்டிக் காட்டினார் என்பது புரிந்தது.
–
உடனே திருமந்திரத்திலிருந்து பத்துப் பாடல்களைப் படித்துக் கொண்டு
அவற்றை வில்லுப்பாட்டில் கதை சொல்கிறபோது தக்க இடத்தில் புகுத்தி,
விளக்கிச் சொல்லத் தொடங்கினேன். குறிப்பாக, மஹா பெரியவாள் சொன்ன
பச்சிலை, அகத்தி, பிட்சை, பதவுரை ஆகிய நான்கு வார்த்தைகளை நான்
கெட்டியாகப் பிடித்துக் கொண்டு, அவற்றை வைத்து, வில்லிசை சந்தத்தில்,
–
பச்சிலையாம் வில்வதளம்
பசுவுக்கொரு வாய் அகத்தி
இச்சையுடன் கைப்பிடி அன்னம்
இனிக்கும் உரை உயர் தானம்
–
என்று எல்லோருக்கும் புரியுமாறு ஒரு பாட்டை எழுதி, கதை சொல்லும் போது
பாடுவது எனக்கு வழக்கமாகிவிட்டது.
–
———————————-
– எஸ். சந்திரமௌலி
கல்கி
Re: இந்த பாட்டுக்கு என்ன அர்த்தம்னு தெரியுமோ நோக்கு?
நல்ல பகிர்வு ராம் அண்ணா
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: இந்த பாட்டுக்கு என்ன அர்த்தம்னு தெரியுமோ நோக்கு?
நல்ல அருமையான ,நுண்மையான தகவல் .
விரும்பினால் , மகா பெரியவா ,தொடருடன் இணைத்து விடலாம்,ayyasami ram
வி பொ உ
ரமணியன்
விரும்பினால் , மகா பெரியவா ,தொடருடன் இணைத்து விடலாம்,ayyasami ram
வி பொ உ
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Similar topics
» மேல் நோக்கு, கீழ் நோக்கு நாள் என்பதன் பொருள் தெரியுமா?
» குத்துப் பாட்டுக்கு ஆடுதா பக்திப் பாட்டுக்கு ஆடுதா,,!
» இந்த புன்னகை என்ன விலை?
» இந்த காலண்டர்ல என்ன புதுமை...?
» இந்த இடத்தின் பெயர் என்ன ?..........
» குத்துப் பாட்டுக்கு ஆடுதா பக்திப் பாட்டுக்கு ஆடுதா,,!
» இந்த புன்னகை என்ன விலை?
» இந்த காலண்டர்ல என்ன புதுமை...?
» இந்த இடத்தின் பெயர் என்ன ?..........
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|