ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Today at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Today at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Today at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:31 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:02 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Today at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Today at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Today at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:00 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:35 pm

» நாவல்கள் வேண்டும்
by mini Yesterday at 7:47 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Yesterday at 1:15 pm

» கருத்துப்படம் 18/08/2024
by mohamed nizamudeen Sun Aug 18, 2024 10:31 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:24 pm

» நாதஸ்வர இசையில்....
by ayyasamy ram Sun Aug 18, 2024 2:49 pm

» நேதாஜி - நினைவு நாள் இன்று...
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:44 pm

» மரணம் ஏற்படுத்தும் …
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:26 pm

Top posting users this week
heezulia
கேள்வி வளையம்... Poll_c10கேள்வி வளையம்... Poll_m10கேள்வி வளையம்... Poll_c10 
ayyasamy ram
கேள்வி வளையம்... Poll_c10கேள்வி வளையம்... Poll_m10கேள்வி வளையம்... Poll_c10 
mini
கேள்வி வளையம்... Poll_c10கேள்வி வளையம்... Poll_m10கேள்வி வளையம்... Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

கேள்வி வளையம்...

4 posters

Go down

கேள்வி வளையம்... Empty கேள்வி வளையம்...

Post by ayyasamy ram Sun Feb 21, 2016 8:54 am

'எல்லாரையும் வச்சுக்கிட்டுக் கேட்டுட்டான்;
என்ன செய்யச் சொல்ற... உண்மையை அப்படியே உளறி(?)ப்புட்டேன்...'
என்பர் சிலர்!
-
இது, இனி அவசியமில்லை. 'உன்ன மாதிரி, எத்தனை ஆளைப்
பார்த்திருக்கேன் தெரியுமா... நீ என்ன... உன் பாட்டன், பூட்டன் வந்தாலும்,
எங்கிட்டே நடக்காது டோய்...' என்று, இனி, நாம் சவால் விடலாம்; நான்
கூறும் சில வழிமுறைகளைப் பின்பற்றினால்!
-
இதற்கான தலையாய தப்பித்தல் விதி என்ன தெரியுமா...
எதிர்பாராத கேள்விகளை, எதிராளிகளிடமிருந்து, எதிர்பாருங்கள் என்பது
தான்!
-
'பெண்ணிடம் வயதை கேட்காதே, ஆணிடம் வருமானத்தை கேட்காதே...'
என்று, நம் முன்னோர் கூறியுள்ளனர்.
-
இக்கேள்விகள், எந்த நிமிடமும், நம்மை நோக்கி வீசப்படலாம் என்பதால்,
ஒன்றிற்கு மேற்பட்ட பதில்களை, தயாராக, ஏற்கனவே மனதிற்குள்
தயாரித்து வைத்திருக்க வேண்டும் என்பது முக்கியம்.
-
வயதைப் பொறுத்த வரை, 'எத்தனையோ கழுதை வயசாச்சு;
கணக்குத் தெரியல, என்ன இப்போ... வேறு ஏதாச்சும் பேசுவோமா...'
என்று சிரித்தபடி பதில் சொல்லலாம்.
-
'உங்க மக வயசு, உங்க தங்கச்சி வயசு...' என்றும் விஷயத்தை திசை
திருப்பலாம். மதிப்புமிக்க மனிதராக இருந்தால், அமைதியாக,
புன்னகை மட்டும் பூக்கலாம். 'யோவ்... இந்தக் கேள்வியைக் கேட்டதே
தப்புய்யா...' என்பது இம்மவுனப் புன்னகையின் பதில்!
-
வருமானத்தைப் பற்றிக் கேட்டால், 'இப்படிப் போட்டுடைக்கச் சொல்லி,
வெளிப்படையாகக் கேட்டா எப்படி... அப்புறம் சொல்றேனே...' எனலாம்.
-
'சமாளிக்கிற சம்பளம் தான்; ஓரளவு மிச்சம் புடிக்க முடிகிற நல்ல
சம்பளம் தான்...' என்பதும், நல்ல சமாளிபிகேஷன்!
-
'இன்னும் உயரட்டும், சொல்றேன்...' என்றெல்லாம் விதவிதமாக
சொல்லலாமே தவிர, ஏதோ நெற்றிப் பொட்டில், எதிராளி துப்பாக்கியை
வைத்து, கேள்வி கேட்டது போல் எண்ணி, பட்டவர்த்தனமாகப் பேசி,
உண்மையை உடைத்து விட வேண்டாம்; சரியான விடையைத் தர,
இது ஒன்றும், தேர்வு வினாத்தாள் அல்ல!
-
இங்கே எல்லா பதில்களிலும், ஒரு உண்மை இருப்பதை கவனித்தீர்களா...
'பொய் ஒன்றை கூறி தப்பியுங்கள்...' என்று நான் சொல்லவே இல்லை.
அதற்கு அவசியமும் இல்லை. பொய் கூறாத, மாற்று பதில்கள் பல உண்டு...
-
'முதலாளி, என்னப் பத்தி ஏதாச்சும் சொன்னாரா?'
'நான் இல்லாத போது, என்னைப் பத்தி, ஏதும், 'கமென்ட்' வந்திருக்குமே...'
'நீயும், அவளும் என்ன பேசிக்கிட்டீங்க?'
'இந்த வீட்டக் கட்ட, உங்களுக்கு எவ்வளவு செலவாச்சு?'
'எனக்காக நீங்க செலவழிச்ச பணம் எவ்வளவு?'
'நீங்க எனக்குக் கொடுத்த பரிசோட மதிப்பு எவ்வளவு இருக்கும்...'
'இப்போ வேல பார்க்குற டிரைவருக்கு, என்ன சம்பளம் குடுக்குறீங்க?'
'நீங்க, வெளிநாடு போறீங்களாமே, சொல்லவே இல்லை...'
-
— இப்படி எதைப்பற்றி வேண்டுமானாலும், எதிராளிகள் குடையட்டும்;
எதற்குமே அசைந்து கொடுக்காதீர்கள். இவர்களது கேள்வி வங்கிகளுக்கு,
சாமர்த்தியமான பதில்களை, தயார் செய்து வைத்திருங்கள்.
-
உண்மையான பதில், நன்மை செய்யாத போது, புதுக்கோளாறுகளை
உண்டாக்கும் போது, கேள்விகள் உள்நோக்கம் உடையவை,
சிறு பிள்ளைத்தனமானவை என்கிற போது, அவற்றிற்குப் பதில் சொல்ல
வேண்டிய அவசியமே இல்லை.
-
'நான் ஏன் பயப்படணும், என் வாழ்க்கை திறந்த புத்தகம்;
நான் ஏன் மறைக்கணும்; வெளிப்படையாப் பேசித்தான் எனக்குப் பழக்கம்...'
என்றெல்லாம் வீராப்புப் பேசி, வகையாக மாட்டிக் கொண்டவர்கள் ஏராளம்!
-
தெரிந்தால் தவறில்லை; அதே நேரத்தில் தெரிய வேண்டிய அவசியமில்லை
என்கிற விஷயங்களில், தெளிவாக இருந்து, நம்மையும், பிறரையும் பாதிக்காத
கேள்விகளுக்கு, பதில் சொல்லலாம் தவறில்லை!
-
மற்றபடி, 'உன் ஜம்பம், என்கிட்டே நடக்காதுடி...' என்று, வினா எழுப்பும்
மனிதர்களிடம், விழிப்பாக இருந்து விட்டுப் போவோம்.
இந்த அணுகுமுறை தான், நமக்கு என்றென்றும் பாதுகாப்பு!
-
------------------------------

லேனா தமிழ்வாணன்
வாரமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83723
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கேள்வி வளையம்... Empty Re: கேள்வி வளையம்...

Post by krishnaamma Fri Mar 04, 2016 11:19 pm

நல்ல பகிர்வு அண்ணா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கேள்வி வளையம்... Empty Re: கேள்வி வளையம்...

Post by shobana sahas Sat Mar 05, 2016 5:07 am

சூப்பர்.. நல்ல ஐடியா. கேள்வி வளையம்... 103459460 கேள்வி வளையம்... 1571444738
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

கேள்வி வளையம்... Empty Re: கேள்வி வளையம்...

Post by M.Jagadeesan Sat Mar 05, 2016 9:48 am

30 வயதில் உள்ள ஒரு பெண்ணிடம் ஒருவர் , " உங்கள் வயது என்ன ? " என்று யாராவது கேட்டால் , வயதைக் கொஞ்சம் கூட்டிச் சொல்லவேண்டும் .

அந்தப் பெண் ,"எனக்கு இப்போது 40 வயது நடக்கிறது " என்று சொன்னால் கேட்டவர் " இந்த வயதில் இவ்வளவு இளமையா !" என்று அதிசயித்துப் போவார் .

அதேபோல யாராவது நம்மிடம் உங்கள் சம்பளம் எவ்வளவு என்று கேட்டால்

" இப்போதுதான் ஆறு இலக்கத்தில் சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கிறேன் ; வாய்க்கும் கைக்கும் எட்டாமல்
வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது ! " என்று சொல்லவேண்டும் . நம் சம்பளம் எவ்வளவு என்று கேட்டவர் பொறாமையால் புழுங்க ஆரம்பித்து விடுவார் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

கேள்வி வளையம்... Empty Re: கேள்வி வளையம்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum