ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

குறள் கூறும் அம்பு

3 posters

Go down

குறள் கூறும் அம்பு  Empty குறள் கூறும் அம்பு

Post by M.Jagadeesan Fri Feb 05, 2016 7:37 pm

சிலபேர் பார்ப்பதற்குக் கரடுமுரடாக இருப்பார்கள்; ஆனால் தங்கமான குணத்தைப் பெற்றிருப்பார்கள் முட்கள் நிறைந்த பலாப்பழத்தின் உள்ளே இனிய சுளைகள் இருப்பதைப்போல ! அதிர்ந்து பேசமாட்டார்கள்; அடுத்தவர் படுகின்ற துன்பத்தைக் காணச் சகியாதவராய் , ஓடிவந்து உதவி செய்வார்கள் ! நம் வீட்டிலே நடக்கின்ற நல்லது கெட்டதுகளில் தவறாமல் பங்கு கொள்வார்கள் ! ஆடை அணிவதில் அவ்வளவாகக் கவனம் செலுத்தமாட்டார்கள் !

இன்னும் சிலரோ நேர்த்தியாக உடை அணிவார்கள் .நாளொரு மேனியும் , பொழுதொரு வண்ணமுமாக வலம் வருவார்கள் ! பகட்டாக இருக்கும் காஞ்சிரம் பழங்களைப்போல, இவர்களால் யாருக்கும் எந்தவித நன்மையையும் கிடையாது; மாறாக அடுத்தவர் அசந்து இருக்கும் நேரத்தில், அவர்கள் தொடையிலே கயிறு திரிப்பார்கள் ; கூடவே  இருந்து குழிபறிக்கும் குள்ளநரி வேலையை செய்வார்கள் ! நாம் செய்கின்ற சிறிய தவறைக்கூட , ஊதிப் பெரிதாக்கி ,மேலிடத்திற்குப் போட்டுக் கொடுப்பார்கள் !

இவ்விரண்டு மனிதர்களையும் கவனித்த வள்ளுவரின் உள்ளத்திலே உதித்தது ஒருகுறள் ! அவர் கையாளும் உவமைகளில்தான் எத்தனை அழகு !  குறளைப் பார்ப்போமா !

கணைகொடிது யாழ்கோடு செவ்விதாங் கன்ன
வினைபடு பாலால் கொளல் . ( கூடாவொழுக்கம் -279 )

பார்ப்பதற்கு நேராகவும் , அழகாகவும் இருக்கும் அம்பு கொடுமை செய்யும்; ஒரு வில் வளைந்தாலே , ஓர் உயிர் போகப்போகிறது என்று பொருள் .ஆனால் யாழ் என்ற கருவி வளைந்து காணப்பட்டாலும் ; இனிய இசையைத் தரவல்லது . எனவே ஒருவர் செய்கின்ற செயலை வைத்தே , அவரது குணத்தை மதிப்பிடவேண்டும் .

இனி அடுத்தகாட்சி .

சில நூறு ஓட்டுகளே உள்ள வார்டு மெம்பர் தொகுதிக்கு ஒருவர் வேட்பாளராக நிற்கிறார் . மிகவும் எளிதாக வெற்றி பெறுகிறார் .  மற்றொருவரோ சட்ட மன்றத் தொகுதியில் MLA ஆவதற்குப் போட்டியிடுகிறார் . யாரை எதிர்த்து தெரியுமா ? முதலமைச்சரை எதிர்த்து போட்டியிடுகிறார் . நூறுக்கும் குறைவான வாக்கு வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவுகிறார் .

உண்மையிலேயே வென்றவர் யார் ? ஊடலில் தோற்றவர் வென்றார் என்பதுபோல , சட்டமன்றத் தொகுதிக்குப் போட்டியிட்டுத் தோற்றவரே வென்றவராகக் கருதப்பட வேண்டும் . ஏன் தெரியுமா ? வார்டு மெம்பராக வெற்றிபெறுவது எளிதான செயல் ; ஆனால் ஒரு முதலமைச்சரை எதிர்த்துப் போட்டியிடுவது அவ்வளவு எளிதான செயல் அல்ல ! மிரட்டல் , உருட்டல்களைச் சமாளிக்கவேண்டும் . பணத்தைத் தண்ணீராகச் செலவு செய்யவேண்டும் . அதுவும் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் ஜெயிப்பது என்பது எவ்வளவு கடினமான காரியம் !

ஒரு அரசனுக்கு தன்னினும் வலிமை குறைந்த மன்னனுடன் போரிடுவது பெருமை தராது ; மாறாக வலிமைமிக்க மன்னனுடன் பொருது , பெறுகின்ற தோல்வி அவனுக்குப் பெருமை தரும் .
உலகத்தையே வெல்லவேண்டும் என்ற பேராசையால் மாவீரன் அலெக்சாண்டர் இந்தியாவிற்குள் நுழைகிறான் . அவனது பெரும்படையைக் கண்டு எல்லா மன்னர்களும் அஞ்சி நடுங்கினர் .சென்ற இடமெல்லாம் அவனுக்கு வெற்றி ! போரஸ் மன்னன் ஒருவன் மட்டுமே அவனை எதிர்த்துப் போரிட்டான் . ஜீலம் நதிக்கரையில் கடுமையான போர் நடந்தது. போரின் முடிவில் போரஸ் மன்னன் தோற்றுப் போனான் . ஆனாலும் அவனது தோல்வியைப் பற்றிப் பேசாது , அவனது துணிவைப் பற்றியே உலகம் இன்றளவும் பேசுகிறது .

வள்ளுவர் வாழ்ந்த காலத்திற்கு முன்பு நடந்த இந்தப் போரைப்பற்றி , வள்ளுவரும் அறிந்திருக்கக் கூடும் .
அவர் உள்ளத்திலே அருமையான குறள் ஒன்று பிறக்கிறது.

கான முயலெய்த அம்பினில் யானை
பிழைத்தவேல் ஏந்தல் இனிது . ( படைச் செருக்கு -772 )

ஒரு தந்தை தன் இரு மகன்களிடம் , காட்டிலே சென்று வேட்டையாடி வாருங்கள் என்று பணிக்கிறார் .
இருவரும் காட்டிற்குள் செல்கின்றனர் ; சிறிது தூரம் சென்றவுடன் ஒரு காட்டு யானைப் பயங்கரமாகப் பிளிறிக்கொண்டு அவர்களை நோக்கி வருகிறது .

அதைக்கண்ட தம்பியானவன் பயந்துபோய், பின்னங்கால் பிடரியில் அடிபட ஓட்டமெடுத்தான் . ஆனால் அண்ணனோ , சிறிதும் அஞ்சாமல் அந்த யானையை எதிர்கொண்டான் . தன் கையிருந்த வேலை அதன்மீது வீசியெறிந்தான் . யானை அஞ்சிப் பின்வாங்கியது ; வலிதாங்கமுடியாமல் யானை பிளிறிக்கொண்டே காட்டிற்குள் ஓடி மறைந்தது .

பயந்து ஓடிய தம்பி வழியில் ஒரு குறுமுயலைக் கண்டான் . தன் அம்பால் அதனை அடித்து வீழ்த்தினான் . இறந்துபோன முயலைக் கையில் பிடித்தவாறு வீட்டிற்குச் சென்றான் . தன் தந்தையிடம் தான் வேட்டையாடிய முயலை மிக்கப் பெருமிதத்துடன் காட்டினான் . ஆனால் தந்தை எதுவும் பேசாமல் இருந்தார் . அப்போது அண்ணன் குனிந்த தலையுடன் வந்தான் .

அவனைப் பார்த்த தந்தை , " என்னப்பா ! நீ எதுவும் வேட்டையாடாமல் வெறுங்கையுடன் வந்திருக்கிறாயே ? "
என்று கேட்டார் .

" அப்பா ! ஒரு மதங்கொண்ட யானையை எதிர்த்துப் போரிட்டேன் ! நான் எறிந்தவேல் அதன் முதுகில் குத்தியது ; ஆனால் அதை என்னால் கொல்ல முடியவில்லை; தப்பித்துவிட்டது "

இதைக் கேட்ட தந்தை எழுந்துவந்து தன்  மகனைக் கட்டித் தழுவிக் கொண்டார் !


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

குறள் கூறும் அம்பு  Empty Re: குறள் கூறும் அம்பு

Post by சசி Fri Feb 05, 2016 7:57 pm

அருமை ஐயா. நல்ல விளக்கங்கள்


மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Back to top Go down

குறள் கூறும் அம்பு  Empty Re: குறள் கூறும் அம்பு

Post by M.Jagadeesan Fri Feb 05, 2016 8:13 pm

சசியின் பாராட்டுக்கு நன்றி !


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

குறள் கூறும் அம்பு  Empty Re: குறள் கூறும் அம்பு

Post by shobana sahas Fri Feb 05, 2016 9:00 pm

மிகவும் சுவையான உரை அய்யா . இத்தனை அழகாக எழுதும் உங்களுக்கு ஒரு பயணக்கட்டுரை எழுதுவதில் சந்தேகம் ஏன்? அய்யா.
உங்களின் மேலே உள்ள கட்டுரை மிகவும் நேர்த்தியாக , தமிழில் , தெளிவாகவும் சுவையாகவும் இன்னும் படிக்க வேண்டும் என்கிற ஆர்வத்தையும் தூண்டுவதாக உள்ளது .
உங்கள் பயணக்கட்டுரையை சீக்கிரம் எதிர்பார்கிறேன் அய்யா . கணக்கு புதிர்களும் போடுங்கள் அய்யா .
வி பொ பாவித்தேன் . குறள் கூறும் அம்பு  103459460 குறள் கூறும் அம்பு  3838410834 குறள் கூறும் அம்பு  3838410834 குறள் கூறும் அம்பு  1571444738
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

குறள் கூறும் அம்பு  Empty Re: குறள் கூறும் அம்பு

Post by M.Jagadeesan Fri Feb 05, 2016 9:28 pm

தங்களின் பாராட்டுக்கு நன்றி சோபனா ! பயணக் கட்டுரை எழுதுவதில் தயக்கமில்லை ! குறிப்புகளைத் தயார் செய்துகொண்டு இருக்கிறேன் . புதிர்க் கணக்குகளையும் விரைவில் வெளியிடுகிறேன் !


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

குறள் கூறும் அம்பு  Empty Re: குறள் கூறும் அம்பு

Post by shobana sahas Fri Feb 05, 2016 9:30 pm

M.Jagadeesan wrote:தங்களின் பாராட்டுக்கு நன்றி சோபனா ! பயணக் கட்டுரை எழுதுவதில் தயக்கமில்லை ! குறிப்புகளைத் தயார் செய்துகொண்டு இருக்கிறேன் . புதிர்க் கணக்குகளையும் விரைவில் வெளியிடுகிறேன் !
மேற்கோள் செய்த பதிவு: 1192133
நன்றி அய்யா . சந்தோசம் . நன்றி நன்றி
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

குறள் கூறும் அம்பு  Empty Re: குறள் கூறும் அம்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum