ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பூநாரைகளின் புகலிடமாகும் சென்னை!

Go down

பூநாரைகளின் புகலிடமாகும் சென்னை!  Empty பூநாரைகளின் புகலிடமாகும் சென்னை!

Post by ayyasamy ram Sun Jan 31, 2016 6:02 am

பூநாரைகளின் புகலிடமாகும் சென்னை!  FEILHvYQLOSOtoYE6THl+poonarai_2716978f
-
மேற்கத்திய நடன வகைகளில் ‘ஃப்ளெமங்கோ' எனும் ஸ்பானிய
நடனம் பிரசித்தி பெற்றது. லத்தீன் மொழியில் ‘ஃப்ளெம்மா'
(flamma) என்று ஒரு சொல் இருக்கிறது. ‘பற்றி எரியும் தீ
ஜுவாலை' என்பது இதன் பொருள்.

அந்தத் தீ ஜுவாலை காற்றில் எப்படி அசைந்தாடுகிறதோ,
அப்படியான அசைவுகளில் இந்த நடன வகை இருக்கும் என்ற
காரணத்தாலோ என்னவோ, லத்தீன் மொழியின் வேர்
வார்த்தையை வைத்துக்கொண்டு ‘ஃப்ளெமங்கோ' என்ற சொல்லை
ஸ்பானிய மக்கள் உருவாக்கினர்.

ஜூவாலைப் பறவை

அதே வேர் வார்த்தையிலிருந்து தோன்றிய ஒரு பறவையின் பெயரும்
இந்த நடன வகையின் பெயரை ஒத்திருக்கிறது. அது ‘ஃப்ளெமிங்கோ!'.
அழகுத் தமிழில் அது ‘பூநாரை'. 'பூ' என்ற சொல்லுக்குச் சிவப்பு என்ற
அர்த்தமும் உண்டு. பூநாரைகளின் உடலில் மெல்லிய சிவப்பு நிறம்
தென்படுவதைப் பார்க்க முடியும்.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82806
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பூநாரைகளின் புகலிடமாகும் சென்னை!  Empty Re: பூநாரைகளின் புகலிடமாகும் சென்னை!

Post by ayyasamy ram Sun Jan 31, 2016 6:03 am

பூநாரைகளின் புகலிடமாகும் சென்னை!  Shr1qUnzTEG4BHXPxQbr+bird1
-
பற்றி எரியும் தீ ஜுவாலையின் சூடு எப்படியோ, அப்படித்தான்
தற்போது இந்தப் பறவை மற்றும் இதன் வாழிடங்களைப் பாதுகாப்பது
குறித்த விவாதங்களும் மிகவும் சூடாக நடந்துகொண்டுள்ளன!

குப்பை மேட்டுப் பறவைகள்

கடந்த 26-ம் தேதி சென்னையில் ‘மெட்ராஸ் நேச்சுரலிஸ்ட்ஸ் சொசைட்டி'
அமைப்பால் ஒன்பதாவது ஆண்டாக ‘பறவை பந்தயம்' நடத்தப்பட்டது.
அதன் நிறைவு விழாவில் கலந்துகொண்டு பேசிய மும்பையைச் சார்ந்த
சூழலியலாளர் சஞ்சய் மோங்கா ஒரு முக்கியமான விஷயத்தைக்
குறிப்பிட்டார்.

‘காடுகளுக்கெல்லாம் இனிச் செல்லத் தேவையில்லை. இனிப்
பறவைகளைச் சுலபமாகக் காண்பதற்குக் குப்பை மேடுகளேபோதும்!'
என்பதே அது. அவர் அப்படிச் சொன்னதற்குக் காரணமிருக்கிறது.

மும்பையில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக
‘பூநாரைகள் திருவிழா' நடத்தப்பட்டு வருகிறது.
பல வெளிநாடுகளிலிருந்து நாரைகள் ஆயிரக்கணக்கில் இந்தியாவுக்கு
வலசை வருகின்றன. இவை வழக்கமாக டிசம்பர் முதல் மே மாதம்வரை
தங்கியிருக்கின்றன.

தீமையில் ஓர் நன்மை


80-களின் இறுதிவரைக்கும் ஒன்று அல்லது இரண்டு நாரைகள் வந்து
செல்வதே அரிதாக இருந்தது. ஆனால், 90-கள் மற்றும் அதற்குப்
பிந்தைய காலங்களில் இருநூறு, இரண்டாயிரம் என அதிகரிக்கத்
தொடங்கிக் கடந்த ஆண்டு சுமார் 20 ஆயிரம் பூநாரைகள் மும்பைக்கு
வலசை வந்து சேர்ந்தன.

“மும்பை தானே ஓடையின் சிறுகுடாவான ‘சூவ்ரி' என்ற இடத்தில்
நிறைய சுத்திகரிப்பு ஆலைகள் உள்ளன. அவை வெப்பமான கழிவு நீரை
ஓடையில் திறந்துவிடுகின்றன. அதன் காரணமாக ஓடை நீரில் நைட்ரேட்,
பாஸ்பேட் உள்ளிட்ட வேதிப்பொருட்களின் அளவு சமன்பட்டிருக்கும்.
இதனால் ‘பைட்டோப்ளாங்க்டன்' (மிதவை உயிரிகள்) தோன்றுகின்றன.
இவைதான் நாரைகளின் முக்கியமான உணவு.


Last edited by ayyasamy ram on Sun Jan 31, 2016 6:14 am; edited 1 time in total
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82806
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பூநாரைகளின் புகலிடமாகும் சென்னை!  Empty Re: பூநாரைகளின் புகலிடமாகும் சென்னை!

Post by ayyasamy ram Sun Jan 31, 2016 6:08 am

பூநாரைகளின் புகலிடமாகும் சென்னை!  0EzT1EtPSayZkerd6hlJ+sanjay_2716977a
-
சஞ்சய் மோங்கா.
------------------------------------------------
சுத்திகரிப்பு ஆலைகள் வருவதற்கு முன்பு சுத்தமாக இருந்த ஓடையில்
நாரைகள் தென்படவில்லை. ஆனால் அந்த ஆலைகள் ஏற்படுத்தப்பட்ட
பிறகு அவை வெளியிடும் மாசுபாட்டால்கூட, இப்படியொரு நன்மை
ஏற்பட்டுள்ளது!” என்றார் சஞ்சய் மோங்கா.
-
இதைத் தொடர்ந்து அந்தப் பகுதியை ‘தானே ஓடை பூநாரை சரணாலயம்'
என்று மகாராஷ்டிர அரசு அறிவித்தது. என்றாலும், பூநாரைகள் இங்கு
வருவதற்கு மோங்கா சொல்லும் காரணம் அறிவியல்பூர்வமாகவும்,
அதிகாரப்பூர்வமாகவும் உறுதி செய்யப்படவில்லை என்று
‘பம்பாய் இயற்கை வரலாற்று கழக'த்தின் ‘இயற்கைக் கல்வி திட்ட'
அலுவலர் அதுல் சாட்டே கூறுகிறார்.
-
-----------------------------------

சென்னையில் பூநாரைகள்

-
பூநாரைகளின் புகலிடமாகும் சென்னை!  RvXb4ZnyQeOIsqafFUpP+bird
-
சென்னையில் முதன்முதலில் பூநாரைகள் வரத் தொடங்கிய இடம்
பள்ளிக்கரணை சதுப்பு நிலம். 2008-ம் ஆண்டில் பூநாரைகள் முதலில்
வந்தன என்கிறார் ‘நேச்சர் ட்ரஸ்ட்' அமைப்பின் நிறுவனர்
கே.வி.ஆர்.கே. திருநாரணன். அதன் பிறகு குறைந்த எண்ணிக்கையாக
இருந்தாலும் ஒவ்வோர் ஆண்டும் பூநாரைகள் அங்குத் தென்பட்டுக்
கொண்டுள்ளன.

கடந்த ஆண்டு பள்ளிக்கரணைக்கு அருகில் உள்ள, பள்ளிக்கரணை
அளவுக்கு மாசுபடாத பெரும்பாக்கம் சதுப்பு நிலத்திலும் பெரிய
பூநாரைகள் முதன்முறையாகத் தென்பட்டதாகக் கூறும் திருநாரணன்,
“இதற்கு முக்கியக் காரணம், அவற்றுக்குத் தேவையான உணவும்
பாதுகாப்பும் கிடைப்பதுதான்” என்கிறார்.
-

-

பெரும்பாக்கச் சீரழிவு

கடந்த 2014-ம் ஆண்டு பெரும்பாக்கத்தின் 71.85 ஹெக்டேர் அளவு
சதுப்பு நிலத்தை மாநில அரசு வனத்துறையிடம் ஒப்படைப்பதற்கான
அரசாணையை வெளியிடப்பட்டது.
இந்த நிலத்தில் எந்த வளர்ச்சிப் பணிகளும் மேற்கொள்ளக் கூடாது
என்பது விதி. ஆனால், இன்றுவரையிலும் அந்த இடத்தை வருவாய்த்துறை
அதிகாரிகள் அளவை செய்து, நிலத்தைப் பிரித்துத் தரவில்லை என்று
கூறப்படுகிறது.


இந்த இடங்களைப் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டுமென
சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பல ஆண்டுகளாகப் போராடி வருகின்றனர்.
இந்நிலையில், பெரும்பாக்கம் சதுப்பு நிலத்தையொட்டி வளர்ச்சிப்
பணிகளும் குப்பை கொட்டுவதும் அதிகரித்து வருவதாகப் புகார்கள்
வந்துகொண்டிருக்கின்றன.

அப்படியானால், மும்பையைப் போலப் பின்னோக்கிச் செல்கிறதா
சென்னை?
-
----------------------------------
த.வினோத்குமார்
தமிழ் தி இந்து காம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82806
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பூநாரைகளின் புகலிடமாகும் சென்னை!  Empty Re: பூநாரைகளின் புகலிடமாகும் சென்னை!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பூநாரைகளின் ஆனந்தக் குளியல்
» சென்னை-சேலம் 8 வழி சாலைக்கான அரசாணை ரத்து: சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
» 7 மடங்கு பெரிதாகிறது சென்னை நகரம் : சென்னை எல்லைக்குள் அரக்கோணம் ; அறிவிப்பு இன்று வெளியாக வாய்ப்பு
» சென்னை மெரினாவில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு வளைவு திறக்க சென்னை ஐகோர்ட் தடை
»  சென்னை முகப்பு > செய்திகள் > சென்னை ஆர்.கே.நகரில் விஷாலுக்கு தவறு நடக்கவில்லை ஜனநாயகத்துக்கு தவறு நடந்துள்ளது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum