Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Today at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
கண்ணன் | ||||
மொஹமட் |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
கண்ணன் | ||||
மொஹமட் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள் இன்று
4 posters
Page 1 of 1
வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள் இன்று
வீரபாண்டிய கட்டபொம்மன்
பெயர்- – கெட்டி பொம்மு.
நாம் அறிந்த பெயர் – கட்டபொம்மன்
பிறப்பு – ஜனவரி 3 1760
பிறந்த இடம் – பாஞ்சாலங்குறிச்சியில்
மனைவி பெயர் – வீரசக்கம்மாள்.
பிள்ளைகள் – பிள்ளைப் பேறு இல்லை.
சகோதர்கள் – ஊமைத்துரை, துரைச்சிங்கம்
முடிசூட்டு விழா – கி.பி 1790
ஆட்சிக்காலம் – கி.பி 1790- கி.பி 1799
இவர் 9 ஆண்டுகள், 8 மாதம், 14 நாட்கள் அரசுப் பொறுப்பிலிருந்தார்.
ஆட்சி புரிந்த நாடு – வீரபாண்டியபுரம்(இன்றையஒட்டபிடாரம்)
கட்டபொம்மன் பெயர் காரணம்
அழகிய வீரபாண்டியபுரம் எனும் ஊரில்(இன்றைய ஒட்டபிடாரம்) ஆட்சிபுரிந்து வந்த ஜெகவீரபாண்டியனின் (நாயக்க வம்சம்)அவையில் அமைச்சராக பொம்மு என்கிற கெட்டி பொம்மு (தெலுங்கு) இடம்பெற்றிருந்தார். இவரது பூர்வீகம் ஆந்திரமாநிலம், பெல்லாரி ஆகும். வீரமிகுந்தவர் என்ற பொருளை தெலுங்கில் உணர்த்தும் கெட்டி பொம்மு எனும் சொல் நாளடைவில் கட்டபொம்மு என்று மாறி பின் தமிழில் கட்டபொம்மன் என்ற சொல்லாயிற்று. ஜெகவீரபாண்டியனின் மறைவிற்குப்பின் அரசகட்டிலில் ஏறிய கட்டபொம்மு பின் ஆதிகட்டபொம்மன் என்று மக்களால் அழைக்கப்பட்டனர். இவரே பொம்மு மரபினரின் முதல் கட்டபொம்மன்.
இந்த பொம்மு மரபில் வந்தவர்களே (திக்குவிசய கட்டபொம்மன்) ஜெகவீர கட்டபொம்மன், ஆறுமகத்தம்மாள் தம்பதியர். இவர்களின் புதல்வரே வீரபாண்டியன் எனும் இயற்பெயர் கொண்ட வீரபாண்டிய கட்டபொம்மனாவார் . இவர் நாயக்கவம்ச அரசாட்சியில் தொடர்ந்து வருவதால் இவர் பொம்மு நாயக்கர் என்று மக்களால் அழைக்கப்பட்டார்.
வீரபாண்டிய கட்டபொம்மன்
இவர் சந்தித்த போர்கள்;
கி.பி. 1797 இல் முதன் முதலாக ஆங்கிலேய ஆலன் துரை பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டைக்கு வந்தார். 1797 – 1798 இல் நடந்த முதல் போரில் வீரபாண்டிய கட்ட பொம்மனிடம் ஆலன் துரை தோற்று ஓடினார். அதன் பின்னர் நெல்லை மாவட்டக் கலெக்டர் ஜாக்சன் வீரபாண்டிய கட்ட பொம்மனைச் சந்திக்க அழைத்தார்.
கட்டபொம்மனை அவமானப்படுத்த நினைத்து வேண்டுமென்றே பல இடங்களுக்கு அலைக்கழித்தார். இறுதியில் செப்டம்பர் 10, 1798 இல் இராமநாதபுரத்தில் சந்தித்தார். அப்போது தந்திரத்தால் வீரபாண்டிய கட்டபொம்மனைக் கைது செய்ய முயன்றார். அதை முறியடித்து வீரபாண்டியக் கட்டபொம்மன் பாஞ்சாலங்குறிச்சியை வந்தடைந்தார். செப்டம்பர் 5, 1799 இல் பானர்மென் என்ற ஆங்கிலேயத் தளபதியால் பாஞ்சாலங்குறிச்சி கோட்டை முற்றுகையிடப்பட்டது. அங்கு கடும் போர் நடைபெற்றது. போரில் பல ஆங்கிலேயர்கள் உயிரிழந்தனர். இருப்பினும் கோட்டை வீழ்ந்து விடும் என்ற நிலையில் வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டையை விட்டு வெளியேறினார். செப்டம்பர் 9 1799 இல் ஆங்கிலேயர்களால் பாஞ்சாலங்குறிச்சி கோட்டை கைப்பற்றப் பட்டது.
தலைமறைவாக இருந்த கட்டபொம்மன் பிடிபட்டது.
அக்டோபர் 1, 1799 இல் புதுக்கோட்டை மன்னர் விஜயரகுநாத தொண்டமானால் வீரபாண்டிய கட்டபொம்மன் கைது செய்யப்பட்டு கும்பினியாரிடம் (கிழக்கிந்திய கம்பெனி) ஒப்படைக்கப்பட்டார்
.தூக்கில்இடப்பட்ட ஆண்டு -அக்டோபர் 16 1799
தூக்கிலிடப்பட்ட இடம் – கயத்தாறு என்னும் வூரில்(அவர் தூக்கிலிடப்பட்ட இடத்தில் இன்று ஒரு நினைவுச்சின்னம் உள்ளது)
வுதிரி தகவல் திப்புசுல்தானும்கட்டபொம்மணும்ஒரேஆண்டில்கொள்ளபட்டவர்கள்
கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட பின் நடந்த சம்பவம்.
கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டதோடு பாஞ்சாலக் குறிச்சியின் வரலாறு முடிந்து விடவில்லை. ஆங்கிலேயர்களால் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டிருந்த கட்டபொம்மனின் சகோதரர் ஊமைத்துரை 02.02.1801-ல் பாஞ்சாலக் குறிச்சி வீரர்களால் மீட்கப்பட்டார். பாஞ்சாலக் குறிச்சிக் கோட்டைக்குப் புத்துயிர் கிடைத்தது. ஊமைத்துரையைக் கைது செய்ய வந்த மேஜர் மெக்காலே கோட்டையினுள் செல்ல முடியாமல் திரும்பினார். அவர் தலைமையில் ஒரு பெரும்படை 30.03.1801-ல் கோட்டையை முற்றுகையிட ஆரம்பித்து 24.05.1801-ல் அதனைக் கைப்பற்றியது. தப்பி, காளையார் கோவில், விருப்பாட்சி, திண்டுக்கல் என்று ஓடிய ஊமைத்துரையும் அவர் தம்பி துரைசிங்கமும் கைது செய்யப்பட்டு பாஞ்சாலக் குறிச்சி பீரங்கி மேட்டில் தூக்கிலிடப்பட்டனர். பாஞ்சாலங்குறிச்சி என்கிற பெயரையே தமிழகத்தின் வரைபடத்திலிருந்து நீக்கினர் வெள்ளையர். கோட்டை முற்றிலும் தகர்க்கப்பட்டுத் தரை மட்டமாக்கப் பட்டது.
அப்படியானால் தற்போது அங்கு இருக்கும் கோட்டை??
1974-ஆம் ஆண்டு பாஞ்சாலங்குறிச்சியில் பழங்காலத்துக் கோட்டையின் வடிவினை ஒத்த ஒரு கோட்டையினை அன்றைய தமிழக முதல்வர் திரு. மு.கருணாநிதி எழுப்புவித்தார். அது இன்றளவும் வீரபாண்டியனின் புகழ்பாடி நிற்கிறது. கோட்டை, கொத்தளம், கொலுமண்டபம், சக்கம்மா தேவி ஆலயம் அனைத்தும் மீண்டும் தோன்றின. நினைவுக் கோட்டையை உள்ளடக்கிய 6 ஏக்கர் பரப்பினைச் சுற்றி மதில் சுவர் எழுப்பப்பட்டுள்ளது. உள்ளே தொல்பொருள் ஆய்வு மையமும் உள்ளது. மண்டபத்தின் உள்ளே கட்டபொம்மனின் வீரவரலாறு ஓவியங்களாகத் தீட்டப்பட்டுள்ளது. இக்கோட்டை 1977 முதல் சுற்றுலாத் துறையின் பராமரிப்பில் இயங்கி வருகிறது.தற்போது 35 ஏக்கர் பரப்பிற்கு மேல் உள்ள பழைய கோட்டையின் அடிப்பகுதிக் கட்டிடங்கள் தொல்பொருள் ஆய்வுத் துறையின் பராமரிப்பின் கீழ் உள்ளன. கட்டபொம்மன் பயன்படுத்திய ஆயுதங்கள், அவர் காலத்து மக்கள் பயன்படுத்திய பல்வேறு பொருட்கள், அணிகலன்கள் நாணயங்கள் போன்றவை தொல்பொருள் ஆய்வுத் துறையினரால் கண்டெடுக்கப்பட்டு சென்னையில் தமிழ்நாடு அரசு அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன
பாஞ்சாலங்குறிச்சிக்கு அருகில் வுள்ள வூர்கள் -ஒட்டப்பிடாரம் 3 கி.மீ எட்டையபுரம் 23 கி.மீ தூத்துக்குடி 25 கி.மீ கயத்தாறு 40 கி.மீ கோவில்பட்டி 45 கி.மீ திருச்செந்தூர் 70 கி.மீ
நன்றி தமிழ்ராம்.
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
Re: வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள் இன்று
அருமை கார்த்திக்
இன்று காலை நான் பார்த்த செய்தி சேனலில் இதை பற்றி ஒரு வரி கூட வரவில்லை.
அவர்கள் விறுவிறுப்பு இல்லாத செய்தி என்று நினைத்திருக்கலாம். இரவிற்குள் சொல்கிறார்களா..??
பார்ப்போம் .
இன்று காலை நான் பார்த்த செய்தி சேனலில் இதை பற்றி ஒரு வரி கூட வரவில்லை.
அவர்கள் விறுவிறுப்பு இல்லாத செய்தி என்று நினைத்திருக்கலாம். இரவிற்குள் சொல்கிறார்களா..??
பார்ப்போம் .
மெய்பொருள் காண்பது அறிவு
K.Senthil kumar- இளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
Re: வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள் இன்று
அருமை கார்த்திக் ...
விடுதலை போராட்ட வீரர்களை மறந்து சினிமாகாரனுங்க பின்னாடி ஓடும் தலைமுறையாகிவிட்டது தமிழ் சமுதாயம்.
விடுதலை போராட்ட வீரர்களை மறந்து சினிமாகாரனுங்க பின்னாடி ஓடும் தலைமுறையாகிவிட்டது தமிழ் சமுதாயம்.
Re: வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள் இன்று
என்றைக்கு தமிழக ஊடகங்களில் இதை பற்றி செய்தி வந்தது.இன்றைக்கு வர .விபச்சார கலைகூத்தாடிகளுக்கு பிறந்த நாள் என்றால் விமர்சியாக கொண்டாடுகின்றனர்.ஆனால் தமிழ் மானம் காத்த தமிழனின் பிறப்பை செய்தியாக கூட போடுவதற்கு இவர்களுக்கு நேரமில்லையா? இல்லை முக்கியதுவம் அற்றது என்று நினைத்தார்களோ என்னவோ ?
இந்த தமிழ் சமுதாயத்தை காப்பாற்றவா பொம்மா நீர் உயிர் விட்டாய்?
அருந்தமிழ் பேசி
தமிழ் மானம் காத்து.
தனனுயிர் நீத்த
வீரத்தின் அடையாளமே.
வஞ்சத்தில் வீழ்ந்தாயடா.
வஞ்சகன் தமிழனடா.
நின் புகழையும் மறந்தானடா.
உனது வீரம்.
உனது கொடை.
உனது மேன்மை.
உனது புகழ்
வாழ்க வாழ்க வாழ்கவே
தலை வணங்கி
சிரம் தாழ்த்தி.
கரம் கூப்பி.
வணங்குகிறோம் உன்மை.
நன்றி
இந்த தமிழ் சமுதாயத்தை காப்பாற்றவா பொம்மா நீர் உயிர் விட்டாய்?
அருந்தமிழ் பேசி
தமிழ் மானம் காத்து.
தனனுயிர் நீத்த
வீரத்தின் அடையாளமே.
வஞ்சத்தில் வீழ்ந்தாயடா.
வஞ்சகன் தமிழனடா.
நின் புகழையும் மறந்தானடா.
உனது வீரம்.
உனது கொடை.
உனது மேன்மை.
உனது புகழ்
வாழ்க வாழ்க வாழ்கவே
தலை வணங்கி
சிரம் தாழ்த்தி.
கரம் கூப்பி.
வணங்குகிறோம் உன்மை.
நன்றி
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
Re: வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள் இன்று
-
இம்மாமன்னன் வரலாற்றைப் படித்தால் நல் உள்ளங்களின் மனம்
கணக்கத்தான் செய்யும்
தன்னாட்டிற்காக தன்னுயிற் ஈன்ற ஈடில்லா இவன் புகழ் ஓங்குக.
மக்கள் மத்தியில் இவன் புகழ் பரப்பிய கலைத்தாயின் மூத்த மகன்
தியாகி சின்னையா மன்றாயரின் நடுமகன் நடிகர் திலத்தின் புகழும் சேர்ந்தோங்குக.
-
விக்கிபீடியா
Similar topics
» வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள் இன்று...
» இன்று வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாள்!
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் சென்னிமலை ரா.ரமேஷ்குமார் மற்றும் கவிஞர் மு.வித்யாசன் இருவருக்கும் பிறந்த நாள் வாழ்த்துகள்!
» இன்று பிறந்த நாள் காணும் கவிஞர் இரா.ரவி, பூங்குழலி, சாவித்ரி மற்றும் அனைவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
» இன்று பிறந்த நாள் காணும் நமது ராஜா அண்ணனின் புதல்வி லக்க்ஷனாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
» இன்று வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாள்!
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் சென்னிமலை ரா.ரமேஷ்குமார் மற்றும் கவிஞர் மு.வித்யாசன் இருவருக்கும் பிறந்த நாள் வாழ்த்துகள்!
» இன்று பிறந்த நாள் காணும் கவிஞர் இரா.ரவி, பூங்குழலி, சாவித்ரி மற்றும் அனைவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
» இன்று பிறந்த நாள் காணும் நமது ராஜா அண்ணனின் புதல்வி லக்க்ஷனாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|