ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

குற்றம் கடிதல் – சரியா, தவறா........???????

+4
T.N.Balasubramanian
யினியவன்
ayyasamy ram
விமந்தனி
8 posters

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Go down

குற்றம் கடிதல் – சரியா, தவறா........??????? Empty குற்றம் கடிதல் – சரியா, தவறா........???????

Post by விமந்தனி Fri Jan 01, 2016 2:46 pm

செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு Vs கமல்ஹாசன்,

கமல்ஹாசன் Vs பீப் சாங்,

பீப் சாங் Vs விஜயகாந்தூ....

-------------------------- என இதைத்தாண்டி விவாதிக்க ஏதேனும் விஷயம் கிடைக்குமா என்று யோசித்த போது, நம் தளத்தில் ‘2015 -இல் தமிழ் சினிமாவை தலைநிமிர வைத்த 10 படங்கள்’ என்ற தலைப்பில் இருந்த ‘குற்றம் கடிதல்’ படம் பற்றி பேசலாம் என்று தோன்றியது.

வெகு சமீபத்தில் தான் நான் இந்த படம் பார்க்க நேர்ந்தது. எல்லாம் புதுமுகங்கள் என்பதால் நான் இதுவரை (டவுன்லோட் செய்திருந்தும் கூட) பார்க்காமலே இருந்தேன்.

ஒருநாள் தொலைகாட்சி நிகழ்ச்சி ஒன்றில் தேசிய விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட படம் இது என்பது தெரிந்ததும், அப்படி என்னத்தான் இருக்கிறது இந்தப்படத்தில்...?’ என்ற ஆவல் தூண்டுதலின் பேரில் இந்த படத்தை பார்த்தேன்.

பள்ளிப்பருவத்திலேயே பாலியல் கல்வி தேவையா, தேவையில்லையா – என்பதைத்தான் படத்தின் கருவாய் எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், எடுத்துக்கொண்ட கருத்தை அவர்களாலேயே ஸ்ட்ராங்-காய் கடைசியில் சொல்லமுடியாமல் போனது கொஞ்சம் வருத்தமான விஷயம் தான்.

படத்தினை வழக்கமான சினிமா பாணியில் முடித்துவிட்டிருந்தாலும் நமக்கு அது தேவையில்லை. படத்தில் சொல்லப்பட்டிருக்கும் கருத்தைப்பற்றி மட்டும் உங்களுடன் சற்று விவாதிக்கலாம் என்றே இந்த பதிவு.

தவிர, அதற்கு முன் ஒரு விஷயம்.

• பாலியல் பற்றி நம் வீட்டு குழந்தைகள் நம்மிடம் ஏதேனும் சந்தேகம் கேட்கிறார்களா?
• அப்படிக்கேட்டால், அவர்களுக்கு சரியான பதிலை நாம் சொல்கிறோமா / சொல்லமுடிகிறதா?
• இந்த மாதிரி கேட்கும் பிள்ளைகளை உண்மையாகவே முறையாக தான் கையாள்கிறோமா? அல்லது கையாளத்தெரியாமல் தவிக்கிறோமா?

--------- அவசியமாய் நாம் அலச வேண்டியவிஷயம்.

இந்தப்படத்தில் ஒரு இடத்தில், “மூன்றாவது படிக்கும் பையனே இப்போ ப்ரோன் பாக்கறான்...” என்று ஒரு வசனம்.

குருதிப்புனல் படத்தில் (கமல்-கவுதமி) ஒரு காட்சி. ஆபிஸ் புறப்படும் நேரத்தில் மனைவியுடன் ஒரு சின்ன ரொமான்ஸ்... அவ்வேளையில் பள்ளிக்கு கிளம்பிய பிள்ளை எதிரே வர, உடனே மனைவி விலகி – ‘ஷ்.... பையன் வர்றான்...!’ என்று சொல்ல, ‘விடு... நாம சொல்லாட்டி என்ன... நம்ம பையனுக்கு சாட்டிலைட் டிவி சொல்லிகொடுத்துட்டுப்போவுது...’ என்பான் கணவன்.

உண்மை! 18/20 வருடங்களுக்கு முன் சொன்ன விஷயம், இன்று மிக, மிக பரவலாக நிகழ்ந்து கொண்டு தான் இருக்கிறது. எயிட்சை விட வெகு வேகமாக பரவிக்கொண்டிருக்கும் வைரஸ். சோகம்

அதில் முக்கிய பங்குகெடுத்துக்கொள்வது நம் கார்டூன் சேனல்கள். கார்டூன்கள் safe-ஆக இருக்கும் என்று நம்பி குழந்தைகளை பார்க்கவிடமுடியவில்லை. குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதுபோல, கார்டூன் சேனல்கள் பாலியலையும் சேர்த்தே ஊட்டிக்கொண்டிருக்கிறது.

கார்டூன்களில் கூட ஆண் நண்பர்கள்... பெண் நண்பர்கள் – நண்பியை impress செய்ய பலவகையில் மெனக்கெடும் பையன் கார்டூன்கள். (eg: ஹட்டோரி) பையன் தலைமேல் இதயம் பறப்பதும், கண்களில் இதயங்கள் காட்டுவதும், இன்னும் அதிக பட்சமாக முத்தமிட்டுக்கொள்வதும்.......................................... என்ன கொடுமை சார் இது  என்ன கொடுமை சார் இது

என்ன செய்வது...?

என்னவென்றே அறியாத வயதில் இத்தகைய இனம் புரியா உணர்வுகளை வலுகட்டாயமாக தூண்டிவிடும் இப்படிப்பட்ட கார்டூன்களை என்ன செய்வது…??  எதிர்ப்பு

ஆகவே தான், புரியாத அந்த வயதிலும், ‘நாம் விஷுவலாய் பார்த்த விஷயங்கள் தவறானவை அல்ல...’ என்ற முடிவிற்கு வந்து விடுகிறார்கள் குழந்தைகள். ஒன்னும் புரியல

இப்படிப்பட்ட இனம் புரியா உணர்வுகளாலும் கூட பெண் குழந்தைகள் சீக்கிரமே பருவமடைந்து விடுகிறார்கள் என்றும் ஆராய்ச்சி முடிவு சொல்கிறது என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்....????


இன்னும் இருக்கு................


குற்றம் கடிதல் – சரியா, தவறா........??????? EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகுற்றம் கடிதல் – சரியா, தவறா........??????? L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312குற்றம் கடிதல் – சரியா, தவறா........??????? EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

குற்றம் கடிதல் – சரியா, தவறா........??????? Empty Re: குற்றம் கடிதல் – சரியா, தவறா........???????

Post by விமந்தனி Fri Jan 01, 2016 2:48 pm

‘கல்யாணம் ஆனவுடனே, வயித்துக்குள்ள எப்படிம்மா பாப்பா வருது....?’ இது மூன்றாவது படிக்கும் ஒரு பெண் குழந்தை, தன் தாயிடம் கேட்ட கேள்வி.

‘கல்யாணம் ஆன பிறகு தாம்மா பாப்பா வரணும்...’ இது அம்மாவின் பதில்.

‘அது தாம்மா ... எப்டி வருது....?’

‘உனக்கு சொன்னா புரியாதுடா....’ வாஞ்சையுடன் குழந்தையின் தலையை தடவியபடி சொன்னாள் அம்மா.

‘ப்ச்சு....... சொல்லும்மா...’ குழந்தையும் விடுவதாய் இல்லை.

‘சரி சொல்றேன்.... மொதல்ல நான் கேக்குறதக்கு பதில் சொல்லு..... 2 x 2 = என்னன்னு சொல்லு?’

‘அய்யே... இது தெரியாதா.....? Four..!’ கேட்டவுடன் விடையை குதூகலமாய் சொன்னது குழந்தை.

‘ஹய்! கரெட்...! எப்படி சொன்னே...?’ அம்மாவும் கைதட்டி குதுகலித்தாள்.

‘அம்மா... இது first standard portion-ம்மா... இது கூடத்தெரியாதா...?’

‘சரி, அப்ப இத சொல்லு... 356 x 653 = ஆன்செர் என்ன வரும்?’

குழந்தை கொஞ்சம் யோசித்தது. ‘....... கஷ்டமாயிருக்கே!’ தன் தலையை ஒற்றை விரலில் சொறிந்துகொண்டே சொன்னது.

‘நான் விளக்கமா சொல்லவா...?’ அம்மா.

‘சரி சொல்லு...’ என்றது குழந்தை சற்றே சுவாரசிய குறைவாக.

அம்மா நிதானமாக விளக்கி கூறினாள். ஆனாலும், குழந்தைக்கு அதிகமான குழப்பம் மீதமிருந்தது.

‘புரியலையா செல்லம்..?’ அம்மா கேட்டாள்.

‘இது எந்த standard-ம்மா...?’ எதிர் கேள்வி கேட்டது புத்திசாலி குழந்தை.

‘8th standard…!’

‘போ....ம்மா... நானே இப்பத்தான் 3rd படிக்கிறேன்.... நீ 8th standard Maths-ஐ போய் சொல்ற....’ குழந்தையின் முகம் வாடியது.

மெல்ல சிரித்தபடி அணைத்துக்கொண்டாள் அம்மா, ‘அப்படித்தாண்டா செல்லம்..... கல்யாணம் ஆன பின்னாலே பாப்பா எப்படி வருதுன்றதும், இப்ப நீ தெரிஞ்சுக்க வேண்டிய போர்ஷன் இல்ல... நீ வளந்து பெரியவளானதும் தானா உனக்கு தெரியும்... அப்ப தான் உனக்கும் புரியும்... சரியா...?’ என்று விளக்கினாள்.

‘அப்ப ஓகே-ம்மா....!’ என்று குழந்தையும் அம்மாவின் கன்னத்தில் தன் இதழ் பதித்துவிட்டு கேட்ட கேள்வியை மறந்து விளையாட ஓடியது.


இன்னும் இருக்கு................


குற்றம் கடிதல் – சரியா, தவறா........??????? EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகுற்றம் கடிதல் – சரியா, தவறா........??????? L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312குற்றம் கடிதல் – சரியா, தவறா........??????? EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

குற்றம் கடிதல் – சரியா, தவறா........??????? Empty Re: குற்றம் கடிதல் – சரியா, தவறா........???????

Post by விமந்தனி Fri Jan 01, 2016 2:49 pm

சரியாக மூன்றரை வருடங்களுக்கு முன் எனக்கும், என் பெண்ணிற்கும் நடந்த சம்பாஷனை இது.

எனக்கு தெரிந்த விதத்தில் என் குழந்தை கேட்ட இந்த கேள்வியை handle செய்தேன். இது எந்த அளவிற்கு சரி என்பதும், தவறு என்பதும் எனக்கு தெரியவில்லை.

ஆனாலும், இப்படிப்பட்ட விஷயங்களை நம் குழந்தைகளிடம் கையாள்வது என்பது கொஞ்சம் சவாலான விஷயமாக தான் இருக்கிறது.

ஏனென்றால் எல்லா நேரங்களிலும் இந்த விவேகத்தை கடைபிடிக்க முடியவில்லை என்பதே உண்மை. என்ன பதில் சொல்வது என்று தெரியாத போது, நம் கையாலாகாதத்தனம் மேலிட அவர்களின் மீது எரிச்சல் மூள்கிறது என்பதையும் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.

இது பற்றிய ஆரோக்கியமான விவாதம் நம்மில் பலருக்கு பயனுள்ளதாய் இருக்கும் என்பது என் எண்ணம்.

நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள்...?


குற்றம் கடிதல் – சரியா, தவறா........??????? EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகுற்றம் கடிதல் – சரியா, தவறா........??????? L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312குற்றம் கடிதல் – சரியா, தவறா........??????? EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

குற்றம் கடிதல் – சரியா, தவறா........??????? Empty Re: குற்றம் கடிதல் – சரியா, தவறா........???????

Post by ayyasamy ram Fri Jan 01, 2016 3:10 pm

சீனாவில் குழந்தைகளுக்கு பாலியல் கல்வி
போதிக்கப் படுகிறது...
-
சிறுவர்களுக்கு சிறுவயதில் இருந்து பால் அறிவை ஏற்படுத்துவதன்
மூலம் சனத்தொகையை கட்டுப்படுத்தி நாட்டை வளப்படுத்தப்
போகிறார்களாம்...
-
இக் கல்விமுறை சனத்தொகையை கட்டுப்படுத்துமா?? இல்லை அதிகரிக்குமா??
என்பது போகப் போகத்தான் தெரியும்...
-
குற்றம் கடிதல் – சரியா, தவறா........??????? IZVjzwiSriqnngpTSWC9+funny-and-cute-chinese_anatomy_lessons_for_kids1
-
பொம்மைகளை வைத்துத்தான் கல்வி நடத்தப்
படுகிறது என்றாலும் ...

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84137
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

குற்றம் கடிதல் – சரியா, தவறா........??????? Empty Re: குற்றம் கடிதல் – சரியா, தவறா........???????

Post by யினியவன் Fri Jan 01, 2016 3:16 pm

மிக மிக அவசியமான ஒன்றே இது.

ஆண்களை விட பெண்களுக்கே (அம்மாக்களுக்கே) பெரும்பாலும் இந்த சோதனை நிகழ்கிறது. சமூக கோட்பாடுகள், குடும்பத்தில் பொறுப்புகள் இவை எல்லாமே ஆண்களால் உருவாக்கப் பட்டதால், அன்றிலிருந்து, இன்று வரை, குழந்தைகளை பராமரிக்கும் பொறுப்பை ஆண்கள் நாசூக்காக பெண்களிடம் தள்ளி விட்டு, தள்ளி நின்று போற்றுவதையும், தூற்றுவதையும் மட்டுமே செய்கிறார்கள்.

இன்று மாறி வருகிறது, ஆனாலும் மாற நிறைய இருக்கிறது இன்னும்.

நீங்கள் சமாளித்த விதம் அருமை. விமந்தனி போல் அனைத்து குழந்தைகளும் தாங்கள் சொன்ன விளக்கத்தை ஏற்கும் நிலையில் இன்று இல்லை என்பதும் உண்மை.

மற்றவர்களும் கருத்தை பகிரட்டும், எனக்கும் ஏதாவது தோன்றினால் வருகிறேன் மீண்டும்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

குற்றம் கடிதல் – சரியா, தவறா........??????? Empty Re: குற்றம் கடிதல் – சரியா, தவறா........???????

Post by T.N.Balasubramanian Fri Jan 01, 2016 4:20 pm

சிறந்த முறையில் கையாளப்பட்ட நாசுக்கான விஷயம் .
யினியவன் எழுப்பிய சந்தேகமும் மிகவும் சரியே .
இப்போது பலான விஷயங்கள் மொபைல் போனிலேயே கிடைக்கிறது .
6ம் வகுப்பு படிக்கும் பையன் /பெண் எல்லோர் கையிலும் மொபைல் போன் இருக்கிறது .
பெற்றோர்கள் மிகவும் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டிய தருணம் .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

குற்றம் கடிதல் – சரியா, தவறா........??????? Empty Re: குற்றம் கடிதல் – சரியா, தவறா........???????

Post by சசி Fri Jan 01, 2016 8:08 pm

அருமையான விவாதம், அனைத்து குழந்தைகளுக்கும் புத்திசாலித்தனம் தற்காலத்தில் அதிகம். சாதுர்யமாக அவர்கள் கேள்வி கேட்கிறார்கள், நாம் நமது இயலாமையால் குழந்தைகள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல நாம் தயாராக இல்லை என்பது தான் நிதர்சனமான உண்மை. 
நாம் குழந்தை வளர்ப்பில் அக்கறையோடு இருந்தால் தேவையில்லாத விஷயங்களை பார்க்கவும் கேட்கவும் உருவாகும் சூழ்நிலையை நாம் உருவாக்க கூடாது. 

விமந்தனி அக்கா நீங்கள் கையாண்ட விதம் அருமை, 

இப்பொழுது எல்லாம் 10,12 வகுப்பு, கல்லூரி மாணவர்களுக்கு பாலியல் கல்வி, குறித்து விழிப்புணர்வு பள்ளிகளில் தமிழ் நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரியம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர், 
அவர்களுக்குள்ளேயே ஒரு குழு ஏற்படுத்தி 
கிராமங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர், 

அவசியமான ஒன்று, ஆனால் வயது வரும் போது சரியான புரிதலுடன் நாமும் நமது சமூகமும் அவர்களை நெறிப்படுத்தினால் 
வளமான இளய சமுதாயம் உருவாகும்


மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Back to top Go down

குற்றம் கடிதல் – சரியா, தவறா........??????? Empty Re: குற்றம் கடிதல் – சரியா, தவறா........???????

Post by K.Senthil kumar Fri Jan 01, 2016 8:47 pm

சசி wrote:அருமையான விவாதம், அனைத்து குழந்தைகளுக்கும் புத்திசாலித்தனம் தற்காலத்தில் அதிகம். சாதுர்யமாக அவர்கள் கேள்வி கேட்கிறார்கள், நாம் நமது இயலாமையால் குழந்தைகள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல நாம் தயாராக இல்லை என்பது தான் நிதர்சனமான உண்மை. 
நாம் குழந்தை வளர்ப்பில் அக்கறையோடு இருந்தால் தேவையில்லாத விஷயங்களை பார்க்கவும் கேட்கவும் உருவாகும் சூழ்நிலையை நாம் உருவாக்க கூடாது. 

விமந்தனி அக்கா நீங்கள் கையாண்ட விதம் அருமை, 

இப்பொழுது எல்லாம் 10,12 வகுப்பு, கல்லூரி மாணவர்களுக்கு பாலியல் கல்வி, குறித்து விழிப்புணர்வு பள்ளிகளில் தமிழ் நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரியம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர், 
அவர்களுக்குள்ளேயே ஒரு குழு ஏற்படுத்தி 
கிராமங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர், 

அவசியமான ஒன்று, ஆனால் வயது வரும் போது சரியான புரிதலுடன் நாமும் நமது சமூகமும் அவர்களை நெறிப்படுத்தினால் 
வளமான இளய சமுதாயம் உருவாகும்
மேற்கோள் செய்த பதிவு: 1184565 குற்றம் கடிதல் – சரியா, தவறா........??????? 3838410834


மெய்பொருள் காண்பது அறிவு
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

Back to top Go down

குற்றம் கடிதல் – சரியா, தவறா........??????? Empty Re: குற்றம் கடிதல் – சரியா, தவறா........???????

Post by சசி Sat Jan 02, 2016 7:46 pm

நன்றி தோழரே 
மற்றவர்களும் தங்களது கருத்துக்களை இந்த விவாதத்தில் பதிவு செய்யவும். 
மற்றவர்களுக்கு உபயோகமாக இருக்கும்.


மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Back to top Go down

குற்றம் கடிதல் – சரியா, தவறா........??????? Empty Re: குற்றம் கடிதல் – சரியா, தவறா........???????

Post by Namasivayam Mu Sun Jan 03, 2016 6:48 am

விமந்தனி wrote:
‘கல்யாணம் ஆனவுடனே, வயித்துக்குள்ள எப்படிம்மா பாப்பா வருது....?’ இது மூன்றாவது படிக்கும் ஒரு பெண் குழந்தை, தன் தாயிடம் கேட்ட கேள்வி.

‘கல்யாணம் ஆன பிறகு தாம்மா பாப்பா வரணும்...’ இது அம்மாவின் பதில்.

‘அது தாம்மா ... எப்டி வருது....?’

‘உனக்கு சொன்னா புரியாதுடா....’ வாஞ்சையுடன் குழந்தையின் தலையை தடவியபடி சொன்னாள் அம்மா.

‘ப்ச்சு....... சொல்லும்மா...’ குழந்தையும் விடுவதாய் இல்லை.

‘சரி சொல்றேன்.... மொதல்ல நான் கேக்குறதக்கு பதில் சொல்லு..... 2 x 2 = என்னன்னு சொல்லு?’

‘அய்யே... இது தெரியாதா.....? Four..!’ கேட்டவுடன் விடையை குதூகலமாய் சொன்னது குழந்தை.

‘ஹய்! கரெட்...! எப்படி சொன்னே...?’ அம்மாவும் கைதட்டி குதுகலித்தாள்.

‘அம்மா... இது first standard portion-ம்மா... இது கூடத்தெரியாதா...?’

‘சரி, அப்ப இத சொல்லு... 356 x 653 = ஆன்செர் என்ன வரும்?’

குழந்தை கொஞ்சம் யோசித்தது. ‘....... கஷ்டமாயிருக்கே!’ தன் தலையை ஒற்றை விரலில் சொறிந்துகொண்டே சொன்னது.

‘நான் விளக்கமா சொல்லவா...?’ அம்மா.

‘சரி சொல்லு...’ என்றது குழந்தை சற்றே சுவாரசிய குறைவாக.

அம்மா நிதானமாக விளக்கி கூறினாள். ஆனாலும், குழந்தைக்கு அதிகமான குழப்பம் மீதமிருந்தது.

‘புரியலையா செல்லம்..?’ அம்மா கேட்டாள்.

‘இது எந்த standard-ம்மா...?’ எதிர் கேள்வி கேட்டது புத்திசாலி குழந்தை.

‘8th standard…!’

‘போ....ம்மா... நானே இப்பத்தான் 3rd படிக்கிறேன்.... நீ 8th standard Maths-ஐ போய் சொல்ற....’ குழந்தையின் முகம் வாடியது.

மெல்ல சிரித்தபடி அணைத்துக்கொண்டாள் அம்மா, ‘அப்படித்தாண்டா செல்லம்..... கல்யாணம் ஆன பின்னாலே பாப்பா எப்படி வருதுன்றதும், இப்ப நீ தெரிஞ்சுக்க வேண்டிய போர்ஷன் இல்ல... நீ வளந்து பெரியவளானதும் தானா உனக்கு தெரியும்... அப்ப தான் உனக்கும் புரியும்... சரியா...?’ என்று விளக்கினாள்.

‘அப்ப ஓகே-ம்மா....!’ என்று குழந்தையும் அம்மாவின் கன்னத்தில் தன் இதழ் பதித்துவிட்டு கேட்ட கேள்வியை மறந்து விளையாட ஓடியது.

இன்னும் இருக்கு................
மேற்கோள் செய்த பதிவு: 1184527

வாழ்க வளமுடன்


http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015

http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

Back to top Go down

குற்றம் கடிதல் – சரியா, தவறா........??????? Empty Re: குற்றம் கடிதல் – சரியா, தவறா........???????

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum