ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அவள் ஒரு கேள்விக்குறி? நூல்ஆசிரியர் : கவிதாயினி மதுரை குமாரி ! அணிந்துரை : கவிஞர் இரா. இரவி !

3 posters

Go down

அவள் ஒரு கேள்விக்குறி?  நூல்ஆசிரியர் : கவிதாயினி மதுரை குமாரி ! அணிந்துரை : கவிஞர் இரா. இரவி ! Empty அவள் ஒரு கேள்விக்குறி? நூல்ஆசிரியர் : கவிதாயினி மதுரை குமாரி ! அணிந்துரை : கவிஞர் இரா. இரவி !

Post by eraeravi Tue Dec 22, 2015 10:12 pm

அவள் ஒரு கேள்விக்குறி?

நூல்ஆசிரியர் : கவிதாயினி மதுரை குமாரி !
அணிந்துரை : கவிஞர் இரா. இரவி !

*****

நூல் ஆசிரியர் கவிதாயினி மதுரை குமாரி அவர்கள், திண்டுக்கல்லில் பிறந்த கவிதைக்கல். மதுரையில் சிறந்து மதுரை குமாரி ஆகி விட்டார். வேளாண்துறையில் அலுவலராகப் பணிபுரிந்து கொண்டே இலக்கியப் பணியும் செய்து வருபவர். பன்முக ஆற்றலாளர். முத்தமிழ் அறக்கட்டளை நிறுவனர் திருச்சி சந்தர் அவர்கள நடத்திய கவியரங்கில் கலந்து கொண்டு என்னோடு கவிதை பாடியவர். பட்டிமன்றத்தில் கலந்து கொண்டு எதிரணியில் வாதிட்டவர். மதுரையில் இலக்கிய விழாக்களில் தனி முத்திரை பதித்து வருபவர்.


ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு ஒரு பெண் பின் நிற்கிறாள் என்பார்கள். ஆனால் நூலாசிரியர் கவிதாயினி மதுரை குமாரி அவர்களின் வெற்றிக்கு அவரது கணவர் முன் நிற்கிறார்.


மனிதர்கள் எப்படி வாழ வேண்டும், எப்படி வாழக் கூடாது என்பதை வலியுறுத்தும் விதமாக வடித்த கவிதை நன்று.


மனது!

குருவிக் கூடுகள் கலைந்திருந்த முற்றம்
சாதம் வைக்கச் சொல்லி ஏக்கத்தில்
கத்துகின்ற காகத்தின் குரலும்
தண்ணீர் ஊற்றாது சோர்ந்து போயிருந்த – பூச்செடிகளும்
தெளிவாய் சொல்லின
இந்த வீட்டின் மனிதர்கள் மனதை!


மனிதர்கள் பறவை நேசத்துடனும், இயற்கை மலர்கள் பாசத்துடனும் வாழ வேண்டும் என்பதை நாசூக்காக உணர்த்தி உள்ளார். பாராட்டுக்கள்.


பெண் குழந்தைகள் மீது பெற்றோர்கள் ஆதிக்கம் செலுத்துவதைக் காண்கிறோம்.


பெண்ணடிமை சமூகம் இன்னும் விடுதலை பெறவில்லை என்றே கூற வேண்டும். நூலாசிரியர் பெண் குழந்தை பற்றி எழுதிய கவிதை சிந்திக்க வைத்தது.


பெண் குழந்தை!

என்னில் பிறந்தது

என்னது இல்லை
உரிமை கொண்டாடலாம்!

முழு உரிமை சாத்தியமோ?


“குழந்தை உங்களிடமிருந்து வந்து இருக்கலாம், ஆனால் உங்களுடையது அல்ல” என்ற ஆங்கிலப் பொன்மொழியை நினைவூட்டும் விதமாக வடித்த கவிதை நன்று.


மகாகவி பாரதியார் கண்ட புதுமைப்பெண் போல, நேர் கொண்ட பார்வை, நிமிர்ந்த நன்னடை என நாளும் வலம் வரும் நூலாசிரியர் கவிதாயினி மதுரை குமாரி அவர்கள் பாரதி போலவே, இயற்கை நேசத்துடன் வாழ்ந்து வருபவர். வேளாண் துறையில் அலுவலராகப் பணியாற்றுவதால் இயற்கையின் மீது கூடுதல் பாசம் என்றே கூறலாம்.


கூடு!

பச்சையம் பருகிக் கொண்டே
செடிகளைப் போலவே
செழித்து இளைத்தது
மனித வர்க்கம்
ஒற்றைக்காலில் தவமிருந்த
கொக்கைப் போல
சந்தர்ப்பத்தை சாதுர்யமாய்
கவ்விக் கொண்டது எதார்த்தம்!


கவிஞர்கள் காதல் கவிதையை சோறு போல பாடுவார்கள். ஊறுகாய் போல இயற்கை இருக்கும். இந்த நூலில் ஊறுகாய் போல காதல் கவிதை பாடியது சிறப்பு.


நானும் நீயும் நாமானோம்.

நீண்ட பின் இரவில்

நீங்காத உன் நினைவு
காற்றுப் போர்வை என்

கதகதப்பை குறைத்து விட
உன் நினைவே போர்வையாய்

மீண்டும் நான் சூடானேன்
கண்களுக்குச் தெரியாத

அந்த நூலிழை நட்பால்
கோடி பலம் பெற்றோம்

நீயும் நானும் நாமானோம்.


கவிதையின் தலைப்பே கவித்துவமாக உள்ளது. பாராட்டுகள். கவிதை படிக்கும் வாசகர்களுக்கு அவரவர் மலரும் நினைவுகளை மலர்வித்து வெற்றி பெறுகின்றன கவிதைகள்.


தமிழகத்தில் தமிழர்களுக்கு ஆறாவது அறிவான பகுத்தறிவை அறிமுகம் செய்து வைத்தவர் தந்தை பெரியார். பெரியார் மட்டும் பிறக்கவில்லை என்றால் தமிழகத்தின் நிலையை எண்ணிப் பார்க்கவே அச்சமாக இருக்கும். தமிழர்களுக்கு கல்வி, பதவி கிடைத்திடக் காரணமானவர். அவர் பற்றிய கவிதை நன்று.


திராவிடத் தாய்!

பகுத்தறிவுப் பகலவன்
திராவிடனாய் தோன்றியதில்
தமிழகத்தில் நிலவியது
எழுச்சி அலை – நம்
தலையெழுத்தை மாற்றியது.


சொல்லுக்கும், செயலுக்கும் வேற்றுமை இல்லாதவர் பாரதி. எழுதியபடி வாழ்ந்தவன். வாழ்ந்தபடி எழுதியவன். கவிதை எழுதுபவன் கவிஞன் அல்லன், கவிதையாக வாழ்பவன் கவிஞன் என்பான். அவன் இலக்கணப்படியே வறுமையிலும் செம்மையாக வாழ்ந்தவன் பாரதி. பாரதி கண்டு புதுமைப் பெண் பாரதி பற்றியும் பாடி உள்ளார்.


அன்புள்ள பாரதிக்கு!

எங்கள் முரண்பாடுகளை – எதிர்க்க
கற்றுத்தந்த பிதாமகனே! – இந்த
புவியைத் திருத்த பூமிப்பந்திற்கு
இறைவனிட்ட அக்கினிக்குஞ்சு நீ!
என் உடலுக்குள்

ஊடுருவிச் சென்று வரும்
உன் புரட்சிக்கவி கேட்டு

அதிகம் சூடாகிப் போன
உணர்ச்சிக் குவியல் நான்.
அதனால் தான் என் மனமும்

தீமை கண்டு பொங்குகிறது.


நம் கண்முன் நடக்கும் அநீதியைக் கண்டும் அமைதியாக இருப்பது குற்றம். ஈழத்தில் நடந்த தமிழினப் படுகொலை கண்டு அமைதியாக இருந்த குற்றவாளிகள் நாம். நூலாசிரியர் கவிதாயினி மதுரை குமாரி அவர்கள், படைப்பாளி ஒவ்வொருவரும் பாரதி போல, தீமை கண்டு பொங்க வேண்டுமென்று வலியுறுத்தியது சிறப்பு.


காந்தியடிகள் என்ற ஒப்பற்ற மாமனிதனை, நம்மை ஆட்சி செய்த வெள்ளைக்காரன் கூட சுடவில்லை. ஆனால் இந்தியன் மதவெறியன் கோட்சே சுட்டான். காந்தியடிகளை இழந்த பின்பாவது இந்த நாடு திருந்தி இருக்க வேண்டும். இன்னும் மத சண்டைகள் ஒழிந்தபாடில்லை. அதனை உணர்த்திடும் கவிதை நன்று.


காந்தி

மதப் போராட்டத்தில்

நீ மாய்ந்து போன போதாவது
என் மனிதர்கள்

மனம் திருந்தியிருக்க வேண்டும் !


புதுக்கவிதைகள் மட்டுமல்ல, துளிப்பாக்களும் உள்ளன. பதச்சோறாக ஒன்று.


காய்கார பாட்டி

சத்துக்களை சுமந்து வரும்

சத்தில்லாத அவள் !


உடல்மெலிந்த காய்கார பாட்டியை காட்சிப்படுத்தி வெற்றி பெறுகின்றார். நூல் ஆசிரியர் கவிதாயினி மதுரை குமாரி அவர்களுக்க்கு பாராட்டுகள். தொடர்ந்து எழுதிட வாழ்த்துகள்.



நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

https://www.facebook.com/rravi.ravi

www.eraeravi.com

www.kavimalar.com

http://www.eraeravi.blogspot.in/
.
http://www.tamilthottam.in/f16-forum

http://eluthu.com/user/index.php?user=eraeravi

http://www.eegarai.net/sta/eraeravi

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !
eraeravi
eraeravi
தளபதி

தளபதி

பதிவுகள் : 1817
இணைந்தது : 08/07/2010

http://www.kavimalar.com

Back to top Go down

அவள் ஒரு கேள்விக்குறி?  நூல்ஆசிரியர் : கவிதாயினி மதுரை குமாரி ! அணிந்துரை : கவிஞர் இரா. இரவி ! Empty Re: அவள் ஒரு கேள்விக்குறி? நூல்ஆசிரியர் : கவிதாயினி மதுரை குமாரி ! அணிந்துரை : கவிஞர் இரா. இரவி !

Post by பழ.முத்துராமலிங்கம் Tue Dec 22, 2015 10:44 pm

eraeravi wrote:அவள் ஒரு கேள்விக்குறி?
குருவிக் கூடுகள் கலைந்திருந்த முற்றம்
சாதம் வைக்கச் சொல்லி ஏக்கத்தில்
கத்துகின்ற காகத்தின் குரலும்
தண்ணீர் ஊற்றாது சோர்ந்து போயிருந்த – பூச்செடிகளும்
தெளிவாய் சொல்லின
இந்த வீட்டின் மனிதர்கள் மனதை!
!
மேற்கோள் செய்த பதிவு: 1182253
அவள் ஒரு கேள்விக்குறி?  நூல்ஆசிரியர் : கவிதாயினி மதுரை குமாரி ! அணிந்துரை : கவிஞர் இரா. இரவி ! 3838410834 அவள் ஒரு கேள்விக்குறி?  நூல்ஆசிரியர் : கவிதாயினி மதுரை குமாரி ! அணிந்துரை : கவிஞர் இரா. இரவி ! 3838410834 அவள் ஒரு கேள்விக்குறி?  நூல்ஆசிரியர் : கவிதாயினி மதுரை குமாரி ! அணிந்துரை : கவிஞர் இரா. இரவி ! 1571444738
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

அவள் ஒரு கேள்விக்குறி?  நூல்ஆசிரியர் : கவிதாயினி மதுரை குமாரி ! அணிந்துரை : கவிஞர் இரா. இரவி ! Empty Re: அவள் ஒரு கேள்விக்குறி? நூல்ஆசிரியர் : கவிதாயினி மதுரை குமாரி ! அணிந்துரை : கவிஞர் இரா. இரவி !

Post by shobana sahas Wed Dec 23, 2015 2:16 am

அவள் ஒரு கேள்விக்குறி?  நூல்ஆசிரியர் : கவிதாயினி மதுரை குமாரி ! அணிந்துரை : கவிஞர் இரா. இரவி ! 103459460 அவள் ஒரு கேள்விக்குறி?  நூல்ஆசிரியர் : கவிதாயினி மதுரை குமாரி ! அணிந்துரை : கவிஞர் இரா. இரவி ! 3838410834 அவள் ஒரு கேள்விக்குறி?  நூல்ஆசிரியர் : கவிதாயினி மதுரை குமாரி ! அணிந்துரை : கவிஞர் இரா. இரவி ! 1571444738
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

அவள் ஒரு கேள்விக்குறி?  நூல்ஆசிரியர் : கவிதாயினி மதுரை குமாரி ! அணிந்துரை : கவிஞர் இரா. இரவி ! Empty Re: அவள் ஒரு கேள்விக்குறி? நூல்ஆசிரியர் : கவிதாயினி மதுரை குமாரி ! அணிந்துரை : கவிஞர் இரா. இரவி !

Post by eraeravi Wed Dec 23, 2015 8:18 am

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

eraeravi
eraeravi
தளபதி

தளபதி

பதிவுகள் : 1817
இணைந்தது : 08/07/2010

http://www.kavimalar.com

Back to top Go down

அவள் ஒரு கேள்விக்குறி?  நூல்ஆசிரியர் : கவிதாயினி மதுரை குமாரி ! அணிந்துரை : கவிஞர் இரா. இரவி ! Empty Re: அவள் ஒரு கேள்விக்குறி? நூல்ஆசிரியர் : கவிதாயினி மதுரை குமாரி ! அணிந்துரை : கவிஞர் இரா. இரவி !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» விசையுறு பந்தினைப் போல்! நூலாசிரியர் : கவிதாயினி குமாரி லெட்சுமி அணிந்துரை : கவிஞர் இரா. இரவி *****
» கனவு மெய்ப்பட வேண்டும் ! நூல் ஆசிரியர் : கவிதாயினி மதுரை குமாரி ஆ. குமாரி லெட்சுமி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
» ஆயிரம் ஹைக்கூ ! கவிஞர் இரா. இரவி .! நூல் விமர்சனம். கவிதாயினி குமாரி லெட்சுமி ( வேளாண் அலுவலர்)
» உனக்காகவே மயங்குகிறேன் ! நூல் ஆசிரியர் கவிதாயினி யாத்விகா ! அணிந்துரை கவிஞர் இரா .இரவி !
» திமிரும் நீயும் ஒரே சாயல் ! நூல்ஆசிரியர் : கவிதாயினி ஷர்மிவீரா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum