Latest topics
» கூடை நிறைய லட்சியங்கள்by Anthony raj Today at 8:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:17 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Today at 8:09 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:07 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by Anthony raj Today at 8:06 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Today at 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Today at 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Today at 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 7:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:33 pm
» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 7:24 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
மகப்பேறு அருளும் திருவரங்குளம் ஸ்ரீ கைலாசநாதர்!
Page 1 of 1
மகப்பேறு அருளும் திருவரங்குளம் ஸ்ரீ கைலாசநாதர்!
![மகப்பேறு அருளும் திருவரங்குளம் ஸ்ரீ கைலாசநாதர்! MA6QJEjTh6gDSJWCgU2A+siva](https://www.filepicker.io/api/file/MA6QJEjTh6gDSJWCgU2A+siva.jpg)
-
புராணக்காலத்தில் நெடுங்குடியில் வில்வ மரங்கள்,
மண்மலை குன்றுகள் அதிகமாக இருந்தன. இங்கு
பெருஞ்சீவி, சிரஞ்சீவி ஆகிய இரு சகோதரர்கள் வந்தனர்.
அவர்கள் பல்வேறு சிவத்தலங்களைத் தரிசித்து வந்தனர்.
அப்போது அண்ணன் பெருஞ்சீவி தன் தம்பி சிரஞ்சீவியிடம்
வழிபாட்டிற்காக காசியிலிருந்து புனிதலிங்கம் எடுத்து வரச்
சொல்லி அனுப்பினார்.
காசிக்குச் சென்ற தம்பி சரியான நேரத்தில் வராததால்
அன்றைய பூஜைக்கு, தானே ஒரு சிவலிங்கத்தை மண்ணால்
செய்து சிவ வழிபாடு செய்தார்.
அடுத்தநாள், காசிக்கு சென்ற தம்பி திரும்பி வந்துபோது இங்கு
ஒரு சிவலிங்கம் பூஜையில் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி
அடைந்தான். உடனே தன் சகோதரனிடம் தான் கொண்டு வந்த
சிவலிங்கத்தை வைத்து பூஜை செய்யவேண்டும் என்கிறான்.
கோபம் கொண்ட பெருஞ்சீவி, "நீ ஏற்கெனவே தாமதமாகி வந்து
இப்போது அடம்பிடிக்கிறாய்'' என்று சொல்ல, வாக்குவாதம் நீளுகிறது.
""என்னதான் சண்டைப் போட்டாலும் நீ காசியில் இருந்து வாங்கி
வந்த லிங்கத்தை நான் வைக்கமாட்டேன்'' என்கிறார் அண்ணன்.
இதனால் கோபம் கொண்ட சிரஞ்சீவி, "நீ மண்ணால் செய்த இந்த
லிங்கத்தையும் இந்த மலையையும் அழிக்கிறேன் பார்'' என்று
சபதம் செய்கிறான்.
பின்னர் கைலாயநாதனை நோக்கி தவம் செய்யத் தொடங்கினான்.
கடும் தவத்தில் மூழ்கிய தம்பியைக் கண்ட அண்ணன், சிறிது நேரம்
கலங்கி செய்வதறியாமல் திகைத்து நின்றான்.
தம்பியின் தவத்திற்கு வெற்றி கிடைத்தால் தனது மண் லிங்கத்திற்குப்
பாதிப்பு எதுவும் வந்து விடக்கூடும் என்பதால், தானும் கைலாய
நாதனை நோக்கி தவத்தில் ஆழ்ந்தான்.
இந்த அசுர சகோதரர்களுக்கு அருள்புரிய சித்தம் கொண்டார்
திருமால். சின்ன சிரஞ்சீவிக்காக ஆதிசேஷனையும் பெரிய
சிரஞ்சீவிக்காக கருடனையும் அனுப்பிவைத்தார்.
ஆதிசேஷன் மண்லிங்கம் அமைத்த மலையை அசைக்க ஆரம்பித்தது.
கருடனோ அதைத்தடுக்கும் விதமாக மலையைச்சுற்றி வட்டமிட்டது.
கருடனைக் கண்டதும் பாம்பு அங்கிருந்து ஓட, கருடனும் திரும்பியது.
அப்போது அசுர சகோதரர்கள் முன் தோன்றிய திருமால், "உரிய காலத்தில்
சிவபூஜை செய்வதே சிறந்தது. இதைப் புரிந்துகொண்டு சகோதரர்கள்
இருவரும் ஒற்றுமையுடன் இருந்து வழிபடுங்கள். நீங்கள் சிவபூஜை செய்த
இந்தத் தலம் புகழ்ப்பெற்று திகழும் என்று அருள்புரிந்து பெருஞ்சீவி
பூஜை செய்த லிங்கம் "கைலாசநாதர்' என்று வழங்கப்பெறும்'' என
அருளினார்.
காலங்கள் ஓடின... சிவலிங்கம் திடீரென மண்ணுக்குள் மறைந்தது.
பல்லாயிரம் ஆண்டுகள் கழித்து இந்தப் பகுதியைச் சேர்ந்த சிலர்,
சுயம்புவாக வெளிப்பட்ட சிவலிங்கத் திருமேனியைத் தரிசித்தனர்.
அந்த லிங்கத்துக்குப் பால் அபிஷேகம் செய்து வழிபட்டுச் சென்றனர்.
மறுநாள் அந்தப் பாலுக்கு உரிய விலையாக சிவலிங்கம் அருகில்
பொற்காசுகள் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுபோன்று
அடுத்தடுத்த நாள்களிலும் இந்த அற்புதம் தொடர்ந்து கொண்டே
இருந்தது. இதைத் தொடர்ந்து அந்த லிங்கத் திருமேனிக்கு
"படிக்காசுநாதர்' என்னும் திருப்பெயர் சூட்டப்பட்டது.
இத்திருக்கோயிலை பாண்டிய மன்னர்களில் ஓருவரான ஜடாவர்ம
சுந்தரபாண்டியன் எழுப்பினான்.
கால மாற்றத்தில் அம்மன் சந்நிதியும் எழுப்பப்பட்டு 13 ஆம் நூற்றாண்டில்
ஒரு முழுமைப்பெற்ற ஆலயமாக உருவானது. இங்கு வழிப்பட்டால் காசியிலும்,
கயிலையிலும் வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது ஜதீகம்!
புதுக்கோட்டை மாவட்ட திருக்கோயில்கள் சார்பில் இருக்கும் இக்கோயில்,
1984 ஆம் ஆண்டு பக்தர்களின் பெரும் முயற்சியால் திருப்பணி நடைபெற்று
விரிவுப் படுத்தப்பட்டு புது பொலிவுப்பெற்று விளங்குகிறது.
இவ்வாலயத்தில் கோபுரத்தை வணங்கிய பிறகே கருவறையில் வீற்றிருக்கும்
இறைவனை வணங்கவேண்டும்.
ஒவ்வொரு தமிழ்மாத முதல் தேதியன்றும் மாத சங்கரமபூஜை நடைபெறும்.
இந்த பூஜை மாலை 4 மணிமுதல் 6 மணிவரை நடைபெறும். திருமணமாகாத
பெண்கள், சுமங்கலிகள் மற்றும் ஜாதகத்தில் பித்ருதோஷம், புத்திரதோஷம்,
மாங்கல்யதோஷம், சர்ப்பதோஷம், உள்ளவர்கள் அம்மனுக்கும் இறைவனுக்கும்
அர்ச்சனை செய்து, கொடிமரத்தின் முன்பு ஐங்கோணக் கோலமிட்டு
நெய்தீபம் ஏற்றி ஒரு மனதுடன் நேர்த்திக்கடன் செலுத்தி வழிப்பட்டு வந்தால்
சகல தோஷங்களும் நீங்கி சுப மங்களம் உண்டாகும் என்கிறது ஆலய வரலாறு.
பெüர்ணமி நாள்களில் இக்கோயிலிலும் கிரிவலம் நடக்கிறது.
அப்போது பக்தர்கள் கோயில் அடிவாரத்தில் உள்ள ஈசான்ய வடகிழக்கு
திசையில் உள்ள பாம்பாறு நதியில் நீராடி சுவாமியை தரிசிப்பது சிறப்பு.
பிள்ளைப்பேறு இல்லாத தம்பதியினர் இங்கு வந்து ஒரு நாள் தங்கியிருந்து
சர்ப்ப நதியில் நீராடி தேரோடும் வீதிகளில் 5முறை வலம்வந்து பிரசன்ன
நாயகிக்கும் கைலாசநாதருக்கும் அர்ச்சனை செய்தால் மகப்பேறு உண்டாகும்.
அதுப்போல் மனநிலைப் பாதிக்கப்பட்டவர்கள் சந்நிதி முன்பு உள்ள
மண்டபத்தில் தரையில் பதிக்கப்பட்ட பத்மபீடத்தில் அமர்ந்து "ஓம் நமசிவாய'
என்ற மந்திரத்தை 108 முறை ஜெபிப்பது நல்ல பலனைத்தரும்.
வைகாசி மாதத்தில் 10 நாள் திருவிழா சுவாதி நட்சத்திரத்தில் தேரோட்டம்,
ஆனிமாதம் முதல் வெள்ளி லட்சார்ச்சனை, நவசக்தி அர்ச்சனை, கார்த்திகை
முதல் சோமவாரம் சங்காபிஷேகம், திருவிளக்கு பூஜை, ஆடிப்புரத் திருவிழா,
மாசி மாதத்தில் மஹா சிவராத்திரி போன்ற விழாக்கள் நடைபெறும்.
புதுக்கோட்டையிலிருந்து அரிமளம் வழியாக 30 கி.மீ. தொலைவில்
கீழாநிலைக்கோட்டை உள்ளது. இங்கிருந்து 3 கி.மீ. தூரம் செல்லவேண்டும்.
கோயிலுக்கு நகரப்பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.
-
தொடர்புக்கு: 98424 84488.
-
----------------------------------
- பொ. ஜெயச்சந்திரன்.
வெள்ளிமணி
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» வள்ளிமலை - மகப்பேறு அருளும் சுப்பிரமணியசுவாமி
» ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ பெரியவாளின் மகிமை ! - “பேசும் தெய்வம்”
» அருள்மிகு ஸ்ரீ மனோன்மனி அம்பாள் தேவஸ்தானம் ஸ்ரீ ஜய வருட பிரம்மோற்சவ விஞ்ஞாபனம் 2
» சிதம்பரம் - ஸ்ரீ மூலநாதருக்கும் ஸ்ரீ உமயபார்வதி அம்பாளுக்கும் நடைபெற இருக்கும் கும்பாபிஷேகம்
» உடப்பு ஸ்ரீ பார்த்த சாரதி ருக்குமணி சத்தியபாமா சமேதர், ஸ்ரீ திரௌபதா தேவி அம்மன் ஆலயம்
» ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ பெரியவாளின் மகிமை ! - “பேசும் தெய்வம்”
» அருள்மிகு ஸ்ரீ மனோன்மனி அம்பாள் தேவஸ்தானம் ஸ்ரீ ஜய வருட பிரம்மோற்சவ விஞ்ஞாபனம் 2
» சிதம்பரம் - ஸ்ரீ மூலநாதருக்கும் ஸ்ரீ உமயபார்வதி அம்பாளுக்கும் நடைபெற இருக்கும் கும்பாபிஷேகம்
» உடப்பு ஸ்ரீ பார்த்த சாரதி ருக்குமணி சத்தியபாமா சமேதர், ஸ்ரீ திரௌபதா தேவி அம்மன் ஆலயம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|