Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழர்கள் தெய்வங்கொள்கையினர்
2 posters
Page 1 of 1
தமிழர்கள் தெய்வங்கொள்கையினர்
முற்காலம்தொட்டே தமிழர்கள் தெய்வங்கொள்கையினர். இந்தக் கருதுகோள் அயல் மதங்களின் தாக்கத்தினாலும், அயல் மதங்களுக்குத் தமிழன் என்ற போர்வையில் கால்வருடி காசு சம்பாதிக்கும் கும்பலினாலும், தெய்வம் இல்லை என்று சொன்னால் அவன் பகுத்தறிவுடையவன் என்ற மாயத்தோற்றத்தை உருவாக்கி தங்களது சுயவளர்ச்சிக்கு இதை பயன்படுத்திக் கொண்டவர்களாலும், கொள்கை என்னவென்றே தெரியாமல் புதிது புதிதாக கடவுளின் பெயரால் கட்டுக்கதைகளை உருவாக்கி தானும் தன் இனம் மட்டுமே கடவுளுக்கும் மனிதர்களுக்கும் தொடர்பாளி என புரட்டு வேலை செய்துவருபவர்களாலும் மெல்ல மெல்ல தேய்ந்து கொண்டு வருகிறது. இத் தெய்வங்கொள்கையினை கேள்வி பதில் வடிவத்தில் பதிவு செய்வதே இத்திரியின் நோக்கம். இதில் வரும் கருத்துகளுக்கு பின்னூட்டங்கள் வரவேற்கப்படுகின்றன.
1) தமிழர்களின் வேதம் எது?
தமிழர்களின் வேதம் அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கு ஆகும். இவை நான்மறை எனவும் நால்வேதம் எனவும் திருமுறைகளிலும் பழந்தமிழ் நூல்களினாலும் அறியப்படும்.
2) அப்படியானால் ரிக், யஜுர், சாமம், அதர்வனம் என்பது என்ன?
அவையும் வேதங்கள்தான். ஆனால் அது தமிழர்களுக்கு உரியதல்ல. வடமொழியாளர்களுக்கு அதாவது ஆரியர்களுக்கு உண்டான வேதங்கள். எப்படி கிறித்தவர்களுக்கு பைபிள் உள்ளதோ, முஸ்லீம்களுக்கு குரான் உள்ளதோ அதைப்போல. அதைக் கொண்டுவந்து தமிழர்களின் வேதம் எனச்சொல்வது பேதமை.
3) இந்த நால்வேதங்கள் சொல்லும் இறைவன் யார்?
தமிழர்கள் இறைவனைப் பெயர் சொல்லி அழைக்கவே அஞ்சினர். வீட்டில் உள்ள பெரியவர்களையே பேர் சொல்லி அழைக்க மாட்டோம். அப்படியிருக்க இந்த உலகத்தைப் படைத்தவனை, பேராற்றல் பேரறிவு உடைய இன்ப வடிவினனை பேர் கொண்டு அழைப்பதற்கு என்ன தகுதி இருக்கிறது என நம் தமிழ்முன்னோர்கள் அஞ்சினர்.
4) அப்படியானால் தமிழர்கள் சொன்ன கடவுளுக்குப் பெயரே கிடையாதா?
(தொடரும்)
1) தமிழர்களின் வேதம் எது?
தமிழர்களின் வேதம் அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கு ஆகும். இவை நான்மறை எனவும் நால்வேதம் எனவும் திருமுறைகளிலும் பழந்தமிழ் நூல்களினாலும் அறியப்படும்.
2) அப்படியானால் ரிக், யஜுர், சாமம், அதர்வனம் என்பது என்ன?
அவையும் வேதங்கள்தான். ஆனால் அது தமிழர்களுக்கு உரியதல்ல. வடமொழியாளர்களுக்கு அதாவது ஆரியர்களுக்கு உண்டான வேதங்கள். எப்படி கிறித்தவர்களுக்கு பைபிள் உள்ளதோ, முஸ்லீம்களுக்கு குரான் உள்ளதோ அதைப்போல. அதைக் கொண்டுவந்து தமிழர்களின் வேதம் எனச்சொல்வது பேதமை.
3) இந்த நால்வேதங்கள் சொல்லும் இறைவன் யார்?
தமிழர்கள் இறைவனைப் பெயர் சொல்லி அழைக்கவே அஞ்சினர். வீட்டில் உள்ள பெரியவர்களையே பேர் சொல்லி அழைக்க மாட்டோம். அப்படியிருக்க இந்த உலகத்தைப் படைத்தவனை, பேராற்றல் பேரறிவு உடைய இன்ப வடிவினனை பேர் கொண்டு அழைப்பதற்கு என்ன தகுதி இருக்கிறது என நம் தமிழ்முன்னோர்கள் அஞ்சினர்.
4) அப்படியானால் தமிழர்கள் சொன்ன கடவுளுக்குப் பெயரே கிடையாதா?
(தொடரும்)
Re: தமிழர்கள் தெய்வங்கொள்கையினர்
4) அப்படியானால் தமிழர்கள் சொன்ன கடவுளுக்குப் பெயரே கிடையாதா?
பெயர் வைப்பதற்கு பதிலாக அவரது குணத்தையே பண்பையே பெயராக வைத்து அழைத்தனர்.
5) அவை என்ன பெயர்கள்?
நீலமணி மிடற்றொருவன், முக்கட் செல்வர் என புறநானூறு சொல்கிறது. கண்ணுதற் பெருங்கடவுள் என திருவிளையாடல் புராணம் சொல்கிறது. பிறவா யாக்கைப் பெரியோன் என சிலப்பதிகாரம் சொல்கிறது. அலகிலா விளையாட்டுடையான் என கம்பராமாயணம் சொல்கிறது.
திருக்குறள் ஆதிபகவன், வால் அறிவன், வேண்டுதல் வேண்டாமை இலான், தனக்கு உவமை இல்லாதான், எண்குணத்தான், செம்பொருள் எனச் சிறப்பிக்கிறது.
6) தற்காலத்தில், நமக்குத் தெரிந்து இப்படி எந்த ஒரு கடவுளையும் கூப்பிடுவதாகத் தெரியவில்லையே?
உண்மைதான். பிற்காலத்தில் அவருக்கு பெயரிட்டு அழைத்தனர். ஆனால் அதுகூட அவருடைய குணங்களில் ஒன்றுதான்.
7) அது என்ன பெயர்?
சிவன்
8) சிவன் என்பது குணமா? பெயர் இல்லையா?
சிவம் என்பதற்குச் செம்மை என்று பொருள். செம்மையென்பதற்கு பல பொருள் உண்டு. அவை யாவும் சிவம் எனும் கடவுளுக்குப் பொருந்தும். செந்நிறம் என்னும் ஒரு பொருளும் உண்டு. தமிழர்கள் பரம்பொருளை செந்நிறமாகக் கண்டு போற்றினர். ஆகவே அந்த குணத்தை பெயராகக் கொண்டனர்.
(தொடரும்)
பெயர் வைப்பதற்கு பதிலாக அவரது குணத்தையே பண்பையே பெயராக வைத்து அழைத்தனர்.
5) அவை என்ன பெயர்கள்?
நீலமணி மிடற்றொருவன், முக்கட் செல்வர் என புறநானூறு சொல்கிறது. கண்ணுதற் பெருங்கடவுள் என திருவிளையாடல் புராணம் சொல்கிறது. பிறவா யாக்கைப் பெரியோன் என சிலப்பதிகாரம் சொல்கிறது. அலகிலா விளையாட்டுடையான் என கம்பராமாயணம் சொல்கிறது.
திருக்குறள் ஆதிபகவன், வால் அறிவன், வேண்டுதல் வேண்டாமை இலான், தனக்கு உவமை இல்லாதான், எண்குணத்தான், செம்பொருள் எனச் சிறப்பிக்கிறது.
6) தற்காலத்தில், நமக்குத் தெரிந்து இப்படி எந்த ஒரு கடவுளையும் கூப்பிடுவதாகத் தெரியவில்லையே?
உண்மைதான். பிற்காலத்தில் அவருக்கு பெயரிட்டு அழைத்தனர். ஆனால் அதுகூட அவருடைய குணங்களில் ஒன்றுதான்.
7) அது என்ன பெயர்?
சிவன்
8) சிவன் என்பது குணமா? பெயர் இல்லையா?
சிவம் என்பதற்குச் செம்மை என்று பொருள். செம்மையென்பதற்கு பல பொருள் உண்டு. அவை யாவும் சிவம் எனும் கடவுளுக்குப் பொருந்தும். செந்நிறம் என்னும் ஒரு பொருளும் உண்டு. தமிழர்கள் பரம்பொருளை செந்நிறமாகக் கண்டு போற்றினர். ஆகவே அந்த குணத்தை பெயராகக் கொண்டனர்.
(தொடரும்)
Re: தமிழர்கள் தெய்வங்கொள்கையினர்
9) சிவன் என்ற கடவுளுக்கு ஏன் பெயர் வைக்கவில்லை?
தமிழர்கள் இறைவனைப் பெயர் சொல்லி அழைக்கவே அஞ்சினர் என முதலில் சொன்னேன். இன்னொரு காரணமும் உள்ளது. பொதுவாக எதற்காக பெயர் வைக்க வேண்டும் என யோசித்துப் பார்.
உலகில் பல மரங்கள் உள்ளன. ஆகையால் அதற்கு வேப்ப மரம், சந்தன மரம், அரச மரம் என இப்படி அழைத்தார்கள். ஒன்றுக்கு மேற்பட்டு இருந்ததால் வித்தியாசம் காண்பதற்காக பெயர் வைத்து அடையாளங்கண்டார்கள்.
ஆனால் உலகில் கடவுள் என்று இருப்பவன் ஒருவன்தானே. எதற்கு அவனுக்கு பெயர் எல்லாம் எனவும் யோசித்தார்கள்.
10) இது என்ன புதுக்கதையாக இருக்கிறது. எனக்குத் தெரிந்து பல கடவுள்கள் உள்ளனவே. நீங்கள் இருப்பது ஒரு கடவுள் என்று சொல்கிறீர்களே!
நான் உனக்குச் சொல்லிக்கொண்டிருப்பது தமிழரின் தெய்வங்கொள்கை. அதில் உண்மை மட்டுமே இருக்கும். நீ கேள்விப்பட்டதில்லையா? ஒன்றே குலம்; ஒருவனே தேவன் என்று.
11)கேள்விப்பட்டிருக்கிறேன். "ஒன்றே குலம்; ஒருவனே தேவன்" என்று அறிஞர் அண்ணா சொல்லியிருக்கிறார்!
நல்ல வேடிக்கை.... இதை அண்ணா சொல்லவில்லை. அண்ணா பயன்படுத்திக்கொண்டார் இந்த சொற்றொடரை. சொன்னவர் அருளாளர் திருமூலர்.
12) பொறுத்துக் கொள்ளவும் தவறாகச்சொல்லிவிட்டேன்! ஒருவனே தேவன் விளக்கம் சொல்லுங்கள்!
தமிழர் கொள்கையாகிய 'செம்பொருட்துணிவு' பற்றி விரிவாகச் சொன்னால்தான் நீ இதைப் புரிந்து கொள்ள முடியும்.
13) 'செம்பொருட்துணிவா' ..... நான் இதுவரை கேள்விப்பட்டதேயில்லையே
நீ தமிழன் அல்லவா? ஆகையால் நிச்சயமாக உனக்கு தமிழர் கொள்கையான 'செம்பொருட்துணிவு' பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இதை வடமொழியில் சொன்னால் ஓரளவு நீ கேள்விப்பட்டிருக்க வாய்ப்புண்டு. இதற்கு வடமொழியில் 'சைவ சித்தாந்தம்' எனப்பெயர். பெயர் மட்டும்தான் வடமொழியில் மாற்றப்பட்டுள்ளது. இது தமிழனின் சொத்து.
14) 'செம்பொருட்துணிவு' பற்றி கொஞ்சம் விளக்குங்களேன்!
(தொடரும்)
தமிழர்கள் இறைவனைப் பெயர் சொல்லி அழைக்கவே அஞ்சினர் என முதலில் சொன்னேன். இன்னொரு காரணமும் உள்ளது. பொதுவாக எதற்காக பெயர் வைக்க வேண்டும் என யோசித்துப் பார்.
உலகில் பல மரங்கள் உள்ளன. ஆகையால் அதற்கு வேப்ப மரம், சந்தன மரம், அரச மரம் என இப்படி அழைத்தார்கள். ஒன்றுக்கு மேற்பட்டு இருந்ததால் வித்தியாசம் காண்பதற்காக பெயர் வைத்து அடையாளங்கண்டார்கள்.
ஆனால் உலகில் கடவுள் என்று இருப்பவன் ஒருவன்தானே. எதற்கு அவனுக்கு பெயர் எல்லாம் எனவும் யோசித்தார்கள்.
10) இது என்ன புதுக்கதையாக இருக்கிறது. எனக்குத் தெரிந்து பல கடவுள்கள் உள்ளனவே. நீங்கள் இருப்பது ஒரு கடவுள் என்று சொல்கிறீர்களே!
நான் உனக்குச் சொல்லிக்கொண்டிருப்பது தமிழரின் தெய்வங்கொள்கை. அதில் உண்மை மட்டுமே இருக்கும். நீ கேள்விப்பட்டதில்லையா? ஒன்றே குலம்; ஒருவனே தேவன் என்று.
11)கேள்விப்பட்டிருக்கிறேன். "ஒன்றே குலம்; ஒருவனே தேவன்" என்று அறிஞர் அண்ணா சொல்லியிருக்கிறார்!
நல்ல வேடிக்கை.... இதை அண்ணா சொல்லவில்லை. அண்ணா பயன்படுத்திக்கொண்டார் இந்த சொற்றொடரை. சொன்னவர் அருளாளர் திருமூலர்.
12) பொறுத்துக் கொள்ளவும் தவறாகச்சொல்லிவிட்டேன்! ஒருவனே தேவன் விளக்கம் சொல்லுங்கள்!
தமிழர் கொள்கையாகிய 'செம்பொருட்துணிவு' பற்றி விரிவாகச் சொன்னால்தான் நீ இதைப் புரிந்து கொள்ள முடியும்.
13) 'செம்பொருட்துணிவா' ..... நான் இதுவரை கேள்விப்பட்டதேயில்லையே
நீ தமிழன் அல்லவா? ஆகையால் நிச்சயமாக உனக்கு தமிழர் கொள்கையான 'செம்பொருட்துணிவு' பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இதை வடமொழியில் சொன்னால் ஓரளவு நீ கேள்விப்பட்டிருக்க வாய்ப்புண்டு. இதற்கு வடமொழியில் 'சைவ சித்தாந்தம்' எனப்பெயர். பெயர் மட்டும்தான் வடமொழியில் மாற்றப்பட்டுள்ளது. இது தமிழனின் சொத்து.
14) 'செம்பொருட்துணிவு' பற்றி கொஞ்சம் விளக்குங்களேன்!
(தொடரும்)
Similar topics
» தமிழர்கள் ஏன்..?
» அடி வாங்கும் தமிழர்கள் ?!
» பர்மாவில் தமிழர்கள்
» தமிழர்கள் பொறுக்கிகள்.
» நாங்கள் தமிழர்கள்
» அடி வாங்கும் தமிழர்கள் ?!
» பர்மாவில் தமிழர்கள்
» தமிழர்கள் பொறுக்கிகள்.
» நாங்கள் தமிழர்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|