ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 8:44 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுவாமி தயானந்த சரஸ்வதியின் மறைவு…

2 posters

Go down

சுவாமி தயானந்த சரஸ்வதியின் மறைவு… Empty சுவாமி தயானந்த சரஸ்வதியின் மறைவு…

Post by ayyasamy ram Fri Oct 02, 2015 6:32 am

சுவாமி தயானந்த சரஸ்வதியின் மறைவு… DArzYZYxR8yEIDrlGF7n+TM-7
-
சுவாமி தயானந்த சரஸ்வதியின் மறைவு எத்தகைய ஈடு செய்ய முடியாத இழப்பு என்பது அவருடன் பழகியவர்களுக்கு மட்டுமே தெரியும். பிரதமர் நரேந்திர மோடியிலிருந்து நடிகர் ரஜினிகாந்த் வரை அவரைத் தங்களது மானசீக குருவாக ஏற்றுக்கொண்டிருப்பது காரணமில்லாமல் அல்ல.

அவர் வேதத்தில் கரை கண்டவர். சம்ஸ்கிருதத்தில் அசாத்தியமான புலமை உடையவர். வைதீக சாஸ்திரங்கள் எல்லாம் கற்றறிந்தவர். இப்படி இருப்பவர்களுக்குப் பொதுவாக தமிழ்ப்பற்று இருப்பது இல்லை. சுவாமி தயானந்த சரஸ்வதியின் தனிச்சிறப்பு, அவர் தமிழ் இலக்கியத்திலும் அதே அளவு புலமையும், பற்றும், நாட்டமும் கொண்டவராக இருந்தார் என்பதுதான்.

ஒருமுறை, சம்ஸ்கிருதம் படிக்கவில்லையே என்கிற எனது குறையை வெளிப்படுத்தியபோது, “”அதனால் என்ன, தமிழ் படித்திருக்கிறீர்களே…” என்று சொல்லிச் சிரித்தார். பன்னிரு திருமுறைகளிலிருந்தும், பிரபந்தங்களிலிருந்தும் மேற்கோள்கள் காட்டி அவர் பேசுவதைக் கேட்டால் வியப்பில் சமைந்து போவோம்.

ரிஷிகேஷில் கங்கைக் கரையில் அமைந்த சுவாமி தயானந்த சரஸ்வதியின் “ஆர்ஷ வித்யா’ குருகுலத்தில் போய் தங்குவது என்பதே ஒரு சுகானுபவம். அதிலும் சுவாமிஜி அங்கே இருக்கும்போது தங்குகின்ற பாக்கியம் கிடைத்துவிட்டால் அதைவிடக் கொடுப்பினை வேறு எதுவுமே இருக்க முடியாது.

சுவாமிஜியை டாக்டர் எல்.பி. தங்கவேலுவுடன் கோயம்புத்தூரில் தரிசனம் செய்யச் சென்றிருந்தபோது, அப்போதுதான் மருத்துவமனையிலிருந்து உடல்நிலை தேறி ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். “மல்டிப்பிள் ஆர்கன் பெயிலியர்’ அதாவது இதயம், கல்லீரல், நுரையீரல், சிறுநீரகம் என்று பல்வேறு உறுப்புகள் பழுதுபட்ட அபாயமான சூழலிலிருந்து மீண்டு வந்திருந்தார் சுவாமிஜி. அந்த நிலையிலும் அவர் உற்சாகமாகப் பேசிக் கொண்டிருந்ததைப் பார்த்து டாக்டர் தங்கவேலுவுக்கே ஆச்சரியம். மரணத்தின் வாயிற் கதவைத் தட்டிப்பார்த்துவிட்டுத் திரும்பி வந்து சிரிக்கிறார் என்று வேடிக்கையாகச் சொன்னார்.

சுவாமிஜியின் அசாத்திய மனோபலம் அவரை மரணத்தை எதிர்கொண்டு வெற்றிகொள்ள முடிந்தது எப்படி வியப்பளிக்கிறதோ, அதேபோல அவரது மரணமும் வியப்பளிக்கிறது. கடந்த ஜூலை மாத இறுதியிலேயே அவர் தனது பூவுலகப் பயணத்தை முடித்துக்கொள்ள முடிவு செய்திருந்தார் என்பது பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. கடந்த ஜூலை 20-ஆம் தேதி தனக்கு நெருக்கமானவர்களுக்கு அவர் ஒரு கடிதம் அனுப்பினார்.

“”அனைவருக்கும். இந்த வயதில் எனக்கு ஏற்பட்டிருக்கும் நோய்கள் பல அன்பர்களுக்கும் கவலையளிக்கிறது. அவர்கள் அப்படிக் கவலைப்படத் தேவையில்லை. புற உதவிகளாலும், மருந்துகளாலும், உபகரணங்களாலும் உயிர் வாழ்வதை நான் விரும்பவில்லை, ஏற்றுக்கொள்ளவில்லை என்பதைப் புரிந்து கொண்டால், எனக்கு ஏதாவது நேர்வதையும் அவர்கள் புரிந்து கொள்வார்கள். நான் அமைதியாக விடைபெற விரும்புகிறேன். அனைவருக்கும் நன்றி. என்னுடைய அன்பும் வாழ்த்துக்களும். சுவாமி தயானந்தா” – இதுதான் அந்தக் கடிதம்.

மருந்து மாத்திரைகளாலும், பல்வேறு மருத்துவக் கருவிகளின் உதவிகளாலும் உயிரைப் பிடித்து வைப்பதை விரும்பாமல், அமைதியாக மரணத்தைத் தழுவத் தயாரான மகான் சுவாமி தயானந்த சரஸ்வதி. அவர் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தேன் என்பதும், அவரது அன்பும், ஆசியும் எனக்கும் இருந்தது என்பதும், நான் வாங்கி வந்த வரம் என்பதல்லாமல் வேறென்ன சொல்ல?



கலாரசிகன் கட்டுரையிலிருந்து
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83736
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சுவாமி தயானந்த சரஸ்வதியின் மறைவு… Empty Re: சுவாமி தயானந்த சரஸ்வதியின் மறைவு…

Post by T.N.Balasubramanian Fri Oct 02, 2015 8:15 am

”அனைவருக்கும். இந்த வயதில் எனக்கு ஏற்பட்டிருக்கும் நோய்கள் பல அன்பர்களுக்கும் கவலையளிக்கிறது. அவர்கள் அப்படிக் கவலைப்படத் தேவையில்லை. புற உதவிகளாலும், மருந்துகளாலும், உபகரணங்களாலும் உயிர் வாழ்வதை நான் விரும்பவில்லை, ஏற்றுக்கொள்ளவில்லை என்பதைப் புரிந்து கொண்டால், எனக்கு ஏதாவது நேர்வதையும் அவர்கள் புரிந்து கொள்வார்கள். நான் அமைதியாக விடைபெற விரும்புகிறேன். அனைவருக்கும் நன்றி. என்னுடைய அன்பும் வாழ்த்துக்களும். சுவாமி தயானந்தா” – இதுதான் அந்தக் கடிதம்.

உருக்கமான விடை கூறல் .
மகான் அவர்கள் .
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum