Latest topics
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதைby ayyasamy ram Today at 10:43
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:42
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 10:41
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 10:29
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:26
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:15
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 10:15
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 8:23
» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:18
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 0:03
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 21:06
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:53
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 20:27
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 20:01
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 18:49
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 17:37
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:40
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:21
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 15:15
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:12
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 15:10
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 15:05
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:03
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 15:01
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 14:59
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:54
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:46
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:25
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:15
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:56
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 13:38
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 13:30
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:21
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 9:46
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:58
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:52
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06
» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024 - 20:50
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun 30 Jun 2024 - 20:22
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 14:15
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun 30 Jun 2024 - 5:37
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:41
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 0:38
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 15:10
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:38
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:32
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
இதுதான் ஹைக்கூ – புதிய தொடர்
+2
சசி
முனைவர் ம.ரமேஷ்
6 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
இதுதான் ஹைக்கூ – புதிய தொடர்
1990ல் அகில உலக ஹைக்கூப் போட்டியில் முதல் பரிசு பெற்ற ஹைக்கூ இது.
புயலுக்குப் பிறகு,
சிறுவன் ஆகாயத்தைத் துடைக்கிறான்,
மேசைகளின் மீதிருந்து! – டார்கோ பிளாஸனின்
மேசைகளின் உயரம் போதுமா, ஏறி நின்று வானத்தைத் துடைக்க?
அந்தச் செயல் அல்ல, நிகழ்ந்தது; புயலின்போது, வானமே இடிந்து விழுந்தது போல் மழை, காற்று… ஆகாயப் பொழிவுகள் மேசைகளின் மீது! மேகங்கள் அல்லவா துகள்களாய்ச் சிதறி விழுந்தன… புயலின் வன்மையைக் கலைநயத்தோடு மறைமுகமாய்ச் சுட்டியிருக்கும் தன்மை வியக்கத்தக்கது.
மேசைகள் வெளியே இருப்பதற்கு வாய்ப்பில்லை. அவை வீட்டுக்குள்ளேதான் இருந்திருக்க வேண்டும். ஆயினும், சன்னல்களும், கதவுகளும், தாழ்ப்பாள்களுக்கு அடங்காமல் புயலில் அடித்துக் கொண்டதனால்தான், மேசைகளின்மீது புயலின் சின்னங்கள்.
சிறுவன் துடைக்கிறான் என்பதனால், இது உணவு விடுதியாயிருக்கலாம். மேசைகள் என்னும் பன்மை வெளிப்பாடு, இதனை உறுதிப்படுத்தும்.
நன்றி – நிர்மலா சுரேஷ், ஹைக்கூக் கவிதைகள் ஆய்வு நூல்,
புயலுக்குப் பிறகு,
சிறுவன் ஆகாயத்தைத் துடைக்கிறான்,
மேசைகளின் மீதிருந்து! – டார்கோ பிளாஸனின்
மேசைகளின் உயரம் போதுமா, ஏறி நின்று வானத்தைத் துடைக்க?
அந்தச் செயல் அல்ல, நிகழ்ந்தது; புயலின்போது, வானமே இடிந்து விழுந்தது போல் மழை, காற்று… ஆகாயப் பொழிவுகள் மேசைகளின் மீது! மேகங்கள் அல்லவா துகள்களாய்ச் சிதறி விழுந்தன… புயலின் வன்மையைக் கலைநயத்தோடு மறைமுகமாய்ச் சுட்டியிருக்கும் தன்மை வியக்கத்தக்கது.
மேசைகள் வெளியே இருப்பதற்கு வாய்ப்பில்லை. அவை வீட்டுக்குள்ளேதான் இருந்திருக்க வேண்டும். ஆயினும், சன்னல்களும், கதவுகளும், தாழ்ப்பாள்களுக்கு அடங்காமல் புயலில் அடித்துக் கொண்டதனால்தான், மேசைகளின்மீது புயலின் சின்னங்கள்.
சிறுவன் துடைக்கிறான் என்பதனால், இது உணவு விடுதியாயிருக்கலாம். மேசைகள் என்னும் பன்மை வெளிப்பாடு, இதனை உறுதிப்படுத்தும்.
நன்றி – நிர்மலா சுரேஷ், ஹைக்கூக் கவிதைகள் ஆய்வு நூல்,
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
Re: இதுதான் ஹைக்கூ – புதிய தொடர்
இதுதான் ஹைக்கூ – தொடர் (விளக்கம்) 2
சீனா நடைமுறைத்தன்மை, ஜப்பானிய எளிமையும் தெளிவும், கொரியசுதந்திர உணர்வு, இந்தியாவின் தன்முனைப்பற்ற தன்மை இவற்றின் சங்கமமே கீழ்த்திசைஞானம். இத்தகைய ஞானத்தின் மீதான ஸென் குறித்தான கலையாக்க நுட்பமே ஹைக்கூ.
உலகமெல்லாம் விழிகள்
உறங்கித்தான் போனது
காத்திருக்கும் கதவு
இந்த ஹைக்கூவின் புரிதல் கடைசி வரியான காத்திருக்கும் கதவு என்ற வரியிலேயே ஊடாடுகிறது. ஒவ்வொரு மனிதனுக்கும் ஆன்மா என்னும் கதவு இருக்கிறது. உலகத்தின் மீதான இன்பம், துன்பம் என பல்வேறு வழிகள் உலகத்திற்கு உள்ளது. அத்தகைய பதிவுகள் நிரந்தரமாக விலகுவதில்லை என்பதைப் போன்றே, தூக்கமும் நிரந்தரம் கிடையாது என முதல் இரண்டு வரிகளுக்கான ஒப்புமை கட்டமைப்பு, கடைசிவரியில் ஹைக்கூவிற்கான ஞானவிசாரணையை தருவித்து, ஊக்குவித்துப் பயணிக்கிறது.
நன்றி – செல்லம்மாள் கண்ணன், ஓஷோ - தமிழ் ஹைக்கூவில் புரிதல்
சீனா நடைமுறைத்தன்மை, ஜப்பானிய எளிமையும் தெளிவும், கொரியசுதந்திர உணர்வு, இந்தியாவின் தன்முனைப்பற்ற தன்மை இவற்றின் சங்கமமே கீழ்த்திசைஞானம். இத்தகைய ஞானத்தின் மீதான ஸென் குறித்தான கலையாக்க நுட்பமே ஹைக்கூ.
உலகமெல்லாம் விழிகள்
உறங்கித்தான் போனது
காத்திருக்கும் கதவு
இந்த ஹைக்கூவின் புரிதல் கடைசி வரியான காத்திருக்கும் கதவு என்ற வரியிலேயே ஊடாடுகிறது. ஒவ்வொரு மனிதனுக்கும் ஆன்மா என்னும் கதவு இருக்கிறது. உலகத்தின் மீதான இன்பம், துன்பம் என பல்வேறு வழிகள் உலகத்திற்கு உள்ளது. அத்தகைய பதிவுகள் நிரந்தரமாக விலகுவதில்லை என்பதைப் போன்றே, தூக்கமும் நிரந்தரம் கிடையாது என முதல் இரண்டு வரிகளுக்கான ஒப்புமை கட்டமைப்பு, கடைசிவரியில் ஹைக்கூவிற்கான ஞானவிசாரணையை தருவித்து, ஊக்குவித்துப் பயணிக்கிறது.
நன்றி – செல்லம்மாள் கண்ணன், ஓஷோ - தமிழ் ஹைக்கூவில் புரிதல்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
Re: இதுதான் ஹைக்கூ – புதிய தொடர்
இதுதான் ஹைக்கூ – தொடர் விளக்கம் 3
பயணத்தில் நோய்
என் கனவு அங்குமிங்கும் அலைகிறது
வறண்ட வயல்கள் மீது – பாஷோ
பாஷோ 1094 ஆம் ஆண்டு பத்தாவது திங்கள், பன்னிரண்டாம் நாள் தனது ஐம்பத்தொன்றாம் வயதில் இறந்தார். மாபெரும் ஹைக்கூக் கவிஞரின் கடைசிக் கவிதை இது. ஒரு பயணத்தின்போது பாஷோ கடுமையான நோய்க்கு உள்ளானார். அவருடைய மாணவர்கள் அவரிடம் விடைபெறு கவிதை (மரணத்திற்கு முன் எழுதுவது) எழுதச் சொன்னார்கள். என்னுடைய எந்தக் கவிதையும் மரணக் கவிதையாக இருக்க முடியும் என்று கூறி அவர்களுக்காக மேலேயுள்ள இறுதி ஹைக்கூ எழுதினார். பின்னர் நான்கு நாட்கள் உயிரோடிருந்தார். அவருடைய கனவுகள் அலைந்து திரிய வறண்ட வயல்களே கிடைத்தன. ஆனால் அவருடைய ஹைக்கூக் கவிதைகள் ஆயிரம் பல்லாயிரம் நெஞ்சங்களில் இன்னும் பசுமையாய் வாழ்ந்து கொண்டிருக்கின்றன.
நன்றி – ஈரோடு தமிழன்பன், ஜப்பானிய ஹைக்கூ 100 குறிப்புரையுடன்.
பயணத்தில் நோய்
என் கனவு அங்குமிங்கும் அலைகிறது
வறண்ட வயல்கள் மீது – பாஷோ
பாஷோ 1094 ஆம் ஆண்டு பத்தாவது திங்கள், பன்னிரண்டாம் நாள் தனது ஐம்பத்தொன்றாம் வயதில் இறந்தார். மாபெரும் ஹைக்கூக் கவிஞரின் கடைசிக் கவிதை இது. ஒரு பயணத்தின்போது பாஷோ கடுமையான நோய்க்கு உள்ளானார். அவருடைய மாணவர்கள் அவரிடம் விடைபெறு கவிதை (மரணத்திற்கு முன் எழுதுவது) எழுதச் சொன்னார்கள். என்னுடைய எந்தக் கவிதையும் மரணக் கவிதையாக இருக்க முடியும் என்று கூறி அவர்களுக்காக மேலேயுள்ள இறுதி ஹைக்கூ எழுதினார். பின்னர் நான்கு நாட்கள் உயிரோடிருந்தார். அவருடைய கனவுகள் அலைந்து திரிய வறண்ட வயல்களே கிடைத்தன. ஆனால் அவருடைய ஹைக்கூக் கவிதைகள் ஆயிரம் பல்லாயிரம் நெஞ்சங்களில் இன்னும் பசுமையாய் வாழ்ந்து கொண்டிருக்கின்றன.
நன்றி – ஈரோடு தமிழன்பன், ஜப்பானிய ஹைக்கூ 100 குறிப்புரையுடன்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
Re: இதுதான் ஹைக்கூ – புதிய தொடர்
இதுதான் ஹைக்கூ – தொடர் விளக்கம் 4
காக்கை கரைந்தால் விருந்தினர் வருவர் என்பது மக்களிடையே ஓர் எதிர்பார்ப்பு. விருந்தினர் வரவு எனில் பணம் செலவு. அதே போல் சேமிப்பு என்று வரும் சமயம் குருவிபோல சேமிப்பு என்பர். இவ்விரண்டும் வழக்கத்திலுள்ள ஒன்று. கவிஞர் சி.சண்முகம் இவ்விரண்டையும் இணைத்து மூன்றாவது ஒரு வரி சேர்த்து ஆக்கியுள்ள ஹைக்கூ இது.
கரைகிறது காகம்
குருவிபோல் சேமித்த பணம்
உறவுகளினால் செலவு
நன்றி – பொன். குமார், ஹைக்கூ அனுபவங்கள்.
காக்கை கரைந்தால் விருந்தினர் வருவர் என்பது மக்களிடையே ஓர் எதிர்பார்ப்பு. விருந்தினர் வரவு எனில் பணம் செலவு. அதே போல் சேமிப்பு என்று வரும் சமயம் குருவிபோல சேமிப்பு என்பர். இவ்விரண்டும் வழக்கத்திலுள்ள ஒன்று. கவிஞர் சி.சண்முகம் இவ்விரண்டையும் இணைத்து மூன்றாவது ஒரு வரி சேர்த்து ஆக்கியுள்ள ஹைக்கூ இது.
கரைகிறது காகம்
குருவிபோல் சேமித்த பணம்
உறவுகளினால் செலவு
நன்றி – பொன். குமார், ஹைக்கூ அனுபவங்கள்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
Re: இதுதான் ஹைக்கூ – புதிய தொடர்
இதுதான் ஹைக்கூ – தொடர் விளக்கம் 5
ஹைக்கூவின் வெளிப்பாடு
கவிஞனின் எண்ணம் முழுவதையும் ஹைக்கூ வெளிப்படுத்தி விடுவதில்லை. கவிதையின் மிகச் சிறிய வடிவமே, இதற்குக் காரணம் என்று கருதுதல் சரியன்று. ஹைக்கூ முழுப்பொருளையும் வெளியிட விரும்புவதில்லை என்பதே உண்மை.
“கருத்துப் பொருண்மையின் அளவில் எழுபது அல்லது எண்பது விழுக்காட்டை வெளியிடும் ஹைக்கூ நன்று. ஐம்பதிலிருந்து அறுவது விழுக்காட்டை மட்டுமே வெளியிடும் ஹைக்கூ மிக விழுமியது.” – என்று ஆர்தர் இ. கிறிஸ்டி தொகுத்த நூல் கூறுகிறது.
மழை வந்து செல்கிறது
ஒளி மயமாக கோடை நிலவைப்
புற்களின்மேல் விட்டுவிட்டு – ஷோயு
இதில் உள்ள இயற்கைப் பின்னணி, நாமே உய்த்துணர்ந்து கொள்ள வேண்டிய ஒன்று.
ஓடும் மேகங்களால் ஏற்படும் கோடை மழை; இரவு நேரம்; மழையின் செல்வாக்குச் சிறிது நேரத்திற்கே! விடை பெற்றுச் செல்லும் மழையினால், மீண்டும் சந்திரன் வானில் தோன்றுவதைத் தடுக்க முடியவில்லை. மாறாகப் புல்லின் மீதுள்ள மழைத்துளிகளில் எல்லாம் நிலவின் பிம்பங்கள்! கோடை மழையின் அற்ப விளம்பர வாழ்வினை, உலகியலுக்கும் பொருத்திப் பார்க்கலாம்! நிரந்தரமான இருட்டடிப்பு, நிலையான பொருள்களுக்கில்லை. இவற்றையெல்லாம் கவிஞர் விரிவாக எடுத்துக் கூறவில்லை. உட்குறிப்பால் உணர்த்துகிறார். நாம் எழுதும் ஒவ்வொரு ஹைக்கூவும் இவ்வாறுதான் பயணிக்க வேண்டும்…
நன்றி – நிர்மலா சுரேஷ் – ஹைக்கூக் கவிதைகள் ஆய்வு நூல்
ஹைக்கூவின் வெளிப்பாடு
கவிஞனின் எண்ணம் முழுவதையும் ஹைக்கூ வெளிப்படுத்தி விடுவதில்லை. கவிதையின் மிகச் சிறிய வடிவமே, இதற்குக் காரணம் என்று கருதுதல் சரியன்று. ஹைக்கூ முழுப்பொருளையும் வெளியிட விரும்புவதில்லை என்பதே உண்மை.
“கருத்துப் பொருண்மையின் அளவில் எழுபது அல்லது எண்பது விழுக்காட்டை வெளியிடும் ஹைக்கூ நன்று. ஐம்பதிலிருந்து அறுவது விழுக்காட்டை மட்டுமே வெளியிடும் ஹைக்கூ மிக விழுமியது.” – என்று ஆர்தர் இ. கிறிஸ்டி தொகுத்த நூல் கூறுகிறது.
மழை வந்து செல்கிறது
ஒளி மயமாக கோடை நிலவைப்
புற்களின்மேல் விட்டுவிட்டு – ஷோயு
இதில் உள்ள இயற்கைப் பின்னணி, நாமே உய்த்துணர்ந்து கொள்ள வேண்டிய ஒன்று.
ஓடும் மேகங்களால் ஏற்படும் கோடை மழை; இரவு நேரம்; மழையின் செல்வாக்குச் சிறிது நேரத்திற்கே! விடை பெற்றுச் செல்லும் மழையினால், மீண்டும் சந்திரன் வானில் தோன்றுவதைத் தடுக்க முடியவில்லை. மாறாகப் புல்லின் மீதுள்ள மழைத்துளிகளில் எல்லாம் நிலவின் பிம்பங்கள்! கோடை மழையின் அற்ப விளம்பர வாழ்வினை, உலகியலுக்கும் பொருத்திப் பார்க்கலாம்! நிரந்தரமான இருட்டடிப்பு, நிலையான பொருள்களுக்கில்லை. இவற்றையெல்லாம் கவிஞர் விரிவாக எடுத்துக் கூறவில்லை. உட்குறிப்பால் உணர்த்துகிறார். நாம் எழுதும் ஒவ்வொரு ஹைக்கூவும் இவ்வாறுதான் பயணிக்க வேண்டும்…
நன்றி – நிர்மலா சுரேஷ் – ஹைக்கூக் கவிதைகள் ஆய்வு நூல்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
Re: இதுதான் ஹைக்கூ – புதிய தொடர்
நன்றி நண்பரே
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி- தளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
Re: இதுதான் ஹைக்கூ – புதிய தொடர்
மகிழ்ச்சி நட்புறவே...
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
Re: இதுதான் ஹைக்கூ – புதிய தொடர்
மழை வந்து செல்கிறது
ஒளி மயமாக கோடை நிலவைப்
புற்களின்மேல் விட்டுவிட்டு – ஷோயு
-
ஹைக்கூ - விளக்கம்...
![இதுதான் ஹைக்கூ – புதிய தொடர் 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
-
![இதுதான் ஹைக்கூ – புதிய தொடர் ICPoEVTH6JxuyMntX8Og+165679_129401163789338_100001583665947_211267_1758740_n](https://www.filepicker.io/api/file/ICPoEVTH6JxuyMntX8Og+165679_129401163789338_100001583665947_211267_1758740_n.jpg)
Re: இதுதான் ஹைக்கூ – புதிய தொடர்
ஏற்றத்தில் அம்மா
கமலையில் நீரிரைக்கும் அப்பா
பாத்திகள் திருப்பும் சிறுவன் – ம. ரமேஷ்
(இதை வாசிக்க – சிந்திக்க… பையன் பள்ளிக்குப் போவானா? அல்லது இங்கேயே வேலை செய்வானா.. இவன் யார்? கூலியா? அல்லது மகனா? என்கிற பல கேள்விகள் எழும்... கமலையில் நீர் இரைத்தால்தானே ஏற்றத்தில் அம்மாவால் நீரிரைக்க முடியும்? அப்படியென்றால் கமலையில் நீரிரைக்கும் அப்பா என்ற இரண்டாம் அடி முதலடியாகத்தானே வரவேண்டும்? – வர தேவையில்லை. யாரோ காணும் காட்சி அது. முதலில் ஏற்றமிரைக்கும் அம்மாவைக் கண்டிருக்கலாம். பின்னர் அப்பாவைக் கண்டிருக்கலாம். மேட்டில்தானே இருக்கும் ஏற்றம். அதனாலும் இருக்கலாம். பெண்ணுக்கு முன்னுரிமை கொடுக்கலாம் என்ற சிந்தனையும் – ஆண்களின் கண்ணில் முதலாவதாகப்படுவது பெண்ணாகத்தானே என்ற உளவியலும் காரணமாகலாம். இதை எழுதியவர் ஆண் என்பதால் இது சரியாகவும் இருக்கலாம். சரி பார்த்தவர் யாராக இருக்கும்? உங்கள் சிந்தனை மேலும் விரிவடையட்டும்…
கமலையில் நீரிரைக்கும் அப்பா
பாத்திகள் திருப்பும் சிறுவன் – ம. ரமேஷ்
(இதை வாசிக்க – சிந்திக்க… பையன் பள்ளிக்குப் போவானா? அல்லது இங்கேயே வேலை செய்வானா.. இவன் யார்? கூலியா? அல்லது மகனா? என்கிற பல கேள்விகள் எழும்... கமலையில் நீர் இரைத்தால்தானே ஏற்றத்தில் அம்மாவால் நீரிரைக்க முடியும்? அப்படியென்றால் கமலையில் நீரிரைக்கும் அப்பா என்ற இரண்டாம் அடி முதலடியாகத்தானே வரவேண்டும்? – வர தேவையில்லை. யாரோ காணும் காட்சி அது. முதலில் ஏற்றமிரைக்கும் அம்மாவைக் கண்டிருக்கலாம். பின்னர் அப்பாவைக் கண்டிருக்கலாம். மேட்டில்தானே இருக்கும் ஏற்றம். அதனாலும் இருக்கலாம். பெண்ணுக்கு முன்னுரிமை கொடுக்கலாம் என்ற சிந்தனையும் – ஆண்களின் கண்ணில் முதலாவதாகப்படுவது பெண்ணாகத்தானே என்ற உளவியலும் காரணமாகலாம். இதை எழுதியவர் ஆண் என்பதால் இது சரியாகவும் இருக்கலாம். சரி பார்த்தவர் யாராக இருக்கும்? உங்கள் சிந்தனை மேலும் விரிவடையட்டும்…
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
Re: இதுதான் ஹைக்கூ – புதிய தொடர்
நன்றி - காவனூர் சீனிவாசன்.
இலைகள் உதிர்த்த மரம்
வந்தமருமா பறவைகள்?
மேலும் அழகாக்க. -மகிழ்நன் மறைக்காடு.
இதை இரண்டு மூன்று முறை வாசிப்புக்கு உட்படுத்துங்கள்.
ஒவ்வொரு வரியாய் மனதிற்குள் வாசித்து நிறுத்தி அடுத்த வரிக்கு செல்லுங்கள்.
இலைகள் உதிர்த்தமரம்...
அடுத்தவரி வினாக்குறியீடுடன்-
வந்தமருமா பறவைகள் ? ..
பொருள் மிகச்சாதரணமாக உள்ளதா?
ஒரு சாதாரணவரிபோல் தொடர்கிறதா?
ஏதேனும் சொல்ல வருகிறதா?
இலைகள் உதிர்த்தமரம் - என்பது ஒரு காட்சிப்பதிவை உணர்த்தவருகிறதென்றால் அடுத்தவரி வினாக்குறி மிகச்சரியாக பொருந்தவேண்டும். நீங்கள் மூன்றாவது வரிக்கு செல்லும்முன் நீங்கள் யூகிப்பதை கவிஞர் தரும்வரி இறுதியில் மாற்றிப்போட்டு ஒரு அதிர்வை அல்லது சிறு சலனத்தை நிகழ்த்தவேண்டும்.
இப்போது முதல் இரண்டுவரிகளை வாசியுங்கள்.
முதல்வரி வாசித்ததும் கொஞ்சம் இடைவெளி கொடுத்து பொறுமையாக..பொறுமையாக..
இலைகள் உதிர்க்கும் மரம்
வந்தமருமா பறவைகள் ?..
உங்களுக்குள் மூன்றாவது வரி தோன்றவேண்டும்.அதேவரி கவிஞருக்கும் வாசகனாய் மாறியிருந்தால் தோன்றும். வாசகனாய் அல்லாமல் கவிஞனாய் நின்று அதை கவிஞன் மாற்றிப்போடவேண்டும்.
மாற்றிப்போடும் தன்மை கொண்டதாய் இருந்தால் அது ஹைக்கூ ஆகிறது. மிகச்சாதரணமாக இருந்தால் அது கவித்துவமிக்கவரிகளாய் புதுக்கவிதை வகைமையிலோ அல்லது நவீனத்தன்மை வடிவிலோ உட்படுகிறது.
மூன்றுவரிகள் கொண்ட உரைநடை பலர் ஹைக்கூவாகவே கருதிக்கொள்வதால் ஹைக்கூக்கள் அடையாளமிழக்கின்றன.
சரி இப்போது மூன்றாவது வரிக்கு வருவோம்.
இலைகள் உதிர்த்த மரம்
வந்தமருமா பறவைகள் ? -என்றவினாக்குறியோடு இரண்டுவரிகள் கவிஞர் முடித்துள்ளார்.
என்ன காடசிப்பதிவை மூன்றாவது வரி மாற்றிப்போடும் ? வாசகனைவிட இங்குதான் கவிஞன் அதிகம் நுட்பமாகதீவிரமாகயோசிக்கவேண்டும்.
அமரும் அல்லது அமராது எனசாதரணமாக பதில் தந்துவிடக்கூடியதாகஇது அமைந்தால் இது ஒரு உரைநடைத்தன்மை கொண்டதாய் ஆகிவிடும். திருப்பம் இல்லாமல் போனால் இதை ஹைக்கூவாக ஏற்கவும் இயலாது.
மேலும் அழகாக்க - என்றவரியை இறுதியில் வைத்துள்ளார்.
இப்போது சேர்த்து படியுங்கள்:
இலைகள் உதிர்த்தமரம்
வந்தமருமா பறவைகள்?
மேலும் அழகாக்க.
-மூன்றாவது வரி ஒரு சாதாரண திருப்பத்தை தந்து ஒரு கவித்துவத்தைமட்டும் உணர்த்திப்போகிற ஒரு தொடர்வரியாகத்தானே இருக்கிறது?
என்னஅதிர்வை இது தருகிறது?
இதே வார்த்தைகள்; இதே மூன்று வரிகள் கொஞ்சம் நுட்பமாய் சிந்தித்தால் ஒரு அதிர்வை சிறிதேனும் தரும்படி அமைத்து ஹைக்கூவாக தரலாம்.
எழுதி முடித்தபின் கொஞ்சம் மாற்றிப்போட்டு மாற்றிப்போட்டு சிந்தியுங்கள்.
முதல் வரியை இறுதியில் போட்டு இதே கவிதையை வாசித்துப் பாருங்கள் :
' வந்தமருமா பறவைகள்?
மேலும் அழகாக்க
இலைகள் உதிர்த்தமரம் '
இப்போது இது ஹைக்கூவாக நன்கு அடையாளம் காட்டலாம்.
எழுதிய உங்கள் கவிதைகளை மீளவாசித்துப்பார்த்து ஹைக்கூவாக அடையாளம் காட்டுங்கள் . ஹைக்கூவாக்க முடியாத வரிகளை வேறு வடிவ கவிதைகளில் சேர்த்துக்கொள்ளுங்கள்.
- காவனூர் சீனிவாசன்.
இலைகள் உதிர்த்த மரம்
வந்தமருமா பறவைகள்?
மேலும் அழகாக்க. -மகிழ்நன் மறைக்காடு.
இதை இரண்டு மூன்று முறை வாசிப்புக்கு உட்படுத்துங்கள்.
ஒவ்வொரு வரியாய் மனதிற்குள் வாசித்து நிறுத்தி அடுத்த வரிக்கு செல்லுங்கள்.
இலைகள் உதிர்த்தமரம்...
அடுத்தவரி வினாக்குறியீடுடன்-
வந்தமருமா பறவைகள் ? ..
பொருள் மிகச்சாதரணமாக உள்ளதா?
ஒரு சாதாரணவரிபோல் தொடர்கிறதா?
ஏதேனும் சொல்ல வருகிறதா?
இலைகள் உதிர்த்தமரம் - என்பது ஒரு காட்சிப்பதிவை உணர்த்தவருகிறதென்றால் அடுத்தவரி வினாக்குறி மிகச்சரியாக பொருந்தவேண்டும். நீங்கள் மூன்றாவது வரிக்கு செல்லும்முன் நீங்கள் யூகிப்பதை கவிஞர் தரும்வரி இறுதியில் மாற்றிப்போட்டு ஒரு அதிர்வை அல்லது சிறு சலனத்தை நிகழ்த்தவேண்டும்.
இப்போது முதல் இரண்டுவரிகளை வாசியுங்கள்.
முதல்வரி வாசித்ததும் கொஞ்சம் இடைவெளி கொடுத்து பொறுமையாக..பொறுமையாக..
இலைகள் உதிர்க்கும் மரம்
வந்தமருமா பறவைகள் ?..
உங்களுக்குள் மூன்றாவது வரி தோன்றவேண்டும்.அதேவரி கவிஞருக்கும் வாசகனாய் மாறியிருந்தால் தோன்றும். வாசகனாய் அல்லாமல் கவிஞனாய் நின்று அதை கவிஞன் மாற்றிப்போடவேண்டும்.
மாற்றிப்போடும் தன்மை கொண்டதாய் இருந்தால் அது ஹைக்கூ ஆகிறது. மிகச்சாதரணமாக இருந்தால் அது கவித்துவமிக்கவரிகளாய் புதுக்கவிதை வகைமையிலோ அல்லது நவீனத்தன்மை வடிவிலோ உட்படுகிறது.
மூன்றுவரிகள் கொண்ட உரைநடை பலர் ஹைக்கூவாகவே கருதிக்கொள்வதால் ஹைக்கூக்கள் அடையாளமிழக்கின்றன.
சரி இப்போது மூன்றாவது வரிக்கு வருவோம்.
இலைகள் உதிர்த்த மரம்
வந்தமருமா பறவைகள் ? -என்றவினாக்குறியோடு இரண்டுவரிகள் கவிஞர் முடித்துள்ளார்.
என்ன காடசிப்பதிவை மூன்றாவது வரி மாற்றிப்போடும் ? வாசகனைவிட இங்குதான் கவிஞன் அதிகம் நுட்பமாகதீவிரமாகயோசிக்கவேண்டும்.
அமரும் அல்லது அமராது எனசாதரணமாக பதில் தந்துவிடக்கூடியதாகஇது அமைந்தால் இது ஒரு உரைநடைத்தன்மை கொண்டதாய் ஆகிவிடும். திருப்பம் இல்லாமல் போனால் இதை ஹைக்கூவாக ஏற்கவும் இயலாது.
மேலும் அழகாக்க - என்றவரியை இறுதியில் வைத்துள்ளார்.
இப்போது சேர்த்து படியுங்கள்:
இலைகள் உதிர்த்தமரம்
வந்தமருமா பறவைகள்?
மேலும் அழகாக்க.
-மூன்றாவது வரி ஒரு சாதாரண திருப்பத்தை தந்து ஒரு கவித்துவத்தைமட்டும் உணர்த்திப்போகிற ஒரு தொடர்வரியாகத்தானே இருக்கிறது?
என்னஅதிர்வை இது தருகிறது?
இதே வார்த்தைகள்; இதே மூன்று வரிகள் கொஞ்சம் நுட்பமாய் சிந்தித்தால் ஒரு அதிர்வை சிறிதேனும் தரும்படி அமைத்து ஹைக்கூவாக தரலாம்.
எழுதி முடித்தபின் கொஞ்சம் மாற்றிப்போட்டு மாற்றிப்போட்டு சிந்தியுங்கள்.
முதல் வரியை இறுதியில் போட்டு இதே கவிதையை வாசித்துப் பாருங்கள் :
' வந்தமருமா பறவைகள்?
மேலும் அழகாக்க
இலைகள் உதிர்த்தமரம் '
இப்போது இது ஹைக்கூவாக நன்கு அடையாளம் காட்டலாம்.
எழுதிய உங்கள் கவிதைகளை மீளவாசித்துப்பார்த்து ஹைக்கூவாக அடையாளம் காட்டுங்கள் . ஹைக்கூவாக்க முடியாத வரிகளை வேறு வடிவ கவிதைகளில் சேர்த்துக்கொள்ளுங்கள்.
- காவனூர் சீனிவாசன்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
Page 1 of 3 • 1, 2, 3
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» ஹைக்கூ உலகம் - ஹைக்கூ வகைமைகள் தொடர்...
» ஹைக்கூ தொடர் ....
» ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு
» ஹைக்கூ கவிஞர் இரா .இரவி
» கார்த்திகை தீபம்’ புதிய தொடர்…
» ஹைக்கூ தொடர் ....
» ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு
» ஹைக்கூ கவிஞர் இரா .இரவி
» கார்த்திகை தீபம்’ புதிய தொடர்…
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|