ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நண்பனின் மனைவியை அடைய தனது மனைவியை கொலை செய்த கணவன்: பரபரப்பு வாக்குமூலம்!

Go down

நண்பனின் மனைவியை அடைய தனது மனைவியை கொலை செய்த கணவன்: பரபரப்பு வாக்குமூலம்! Empty நண்பனின் மனைவியை அடைய தனது மனைவியை கொலை செய்த கணவன்: பரபரப்பு வாக்குமூலம்!

Post by krishnaamma Tue Sep 08, 2015 7:07 pm

இந்த செய்தியை படித்ததும் எனக்கு ஒரு திரில் சினிமா பார்த்தது போல இருக்கு ..நீங்களும் படித்துப் பாருங்களேன் புன்னகை

தனது நண்பனின் மனைவியை அடைவற்காக தானது மனைவியை கொலை செய்த கணவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

கடந்த சனிக்கிழமை அதிகாலை, பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் 3 விமானங்களில் வெடிகுண்டு இருப்பதாக விமான நிலைய மேலாளருக்கு "வாட்ஸ்-அப்" மூலம் மிரட்டல் வந்தது.

இதனால், 3 விமானங்களிலும் அதிரடியாக வெடிகுண்டு சோதனை நடத்தப்பட்டது. புறப்பட்டு சென்ற ஒரு விமானமும் மீண்டும் தரை இறக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. அதேபோல டெல்லி விமான நிலையத்திற்கும் மிரட்டல் வந்தது. இதைத் தொடர்ந்து டெல்லி, பெங்களூரு மற்றும் சென்னை உள்ளிட்ட பல்வேறு விமான நிலையங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. பின்னர் இந்த மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்தது.

இதை தொடர்ந்து, வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் குறித்து விமான நிலைய காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். பின்னர் பெங்களூரு எச்எஸ்ஆர் லே-அவுட்டில் வசித்துவரும் கேரளாவைச் சேர்ந்த கோகுல் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

கோகுல், பெங்களூரிலுள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் கம்ப்யூட்டர் என்ஜினீயராகப் பணியாற்றி வருகிறார். அவர்தான் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தார் என்பது தெரியவந்தது. இவர் மிரட்டல் விடுக்கப் பயன்படுத்திய சிம்கார்டை, அதே குடியிருப்பில் வசித்துவரும் கேரளாவைச் சேர்ந்த தனது நண்பர் ஒருவரின் முகவரியை பயன்படுத்தி வாங்கி இருப்பதும் தெரியவந்தது.

முன்னதாக, செல்போன் எண் பதிவு பெற்றிருந்த நண்பரிடமும், அவரது மனைவியிடமும் காவல்துறையினர் விசாரணை நடத்தினார்கள். அவர்கள் கூறிய தகவலை வைத்து காவல்துறையினர் கோகுலை கைது செய்தனர்.

இது குறித்து கோகுலிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் தனது நண்பரின் மனைவியை அடைவதற்காக, தனது மனைவி அனுராதாவை கொலை செய்துவிட்டு, அதனை திசைதிருப்பியது தெரியவந்தது.

இந்த காரணத்துக்காக நண்பரையும் காவல்துறையினரிடம் சிக்கவைக்க விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். மேலும், இதற்காக கடந்த 5 ஆண்டுகளாக அவர் பல்வேறு சதி வேலைகளில் ஈடுபட்டுள்ளார் என்னும் திடுக்கிடும் தகவல் தெரியவந்தது.

இது குறித்து கோகுல் காவல்துறையினரிடம் கொடுத்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

கேரளா மாநிலம் திரிச்சூரில் நானும், பூஜாவும் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) 12 ஆம் வகுப்பில் ஒன்றாக படித்தோம். அப்போது நாங்கள் நண்பர்களாக பழகினோம். பின்னர் என்ஜினீயரிங் கல்லூரியிலும் ஒன்றாக படித்தபோது எங்கள் இருவருக்கும் இடையேயான நெருக்கம் அதிகரித்தது. பின்னர் மேற்படிப்புக்காக நான் டெல்லிக்கு சென்றேன். பூஜா திருச்சிக்கு சென்றார்.

டெல்லியில் இருந்தபோது எனக்கு கம்ப்யூட்டர் என்ஜினீயரான அனுராதாவுடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் காதலாக மாறி, நாங்கள் இருவரும் 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டோம். அதே ஆண்டிலேயே பூஜாவுக்கும் அவருடைய பெற்றோர் திருமணம் செய்துவைத்தனர். பூஜா தனது கணவருடன் பெங்களூரு எச்எஸ்ஆர் லே-அவுட்டில் வசித்துவந்தார்.

வேலை, திருமணம் போன்ற காரணங்களால் எனக்கும், பூஜாவுக்கும் இருந்த தொடர்பு துண்டித்தது. இதற்கிடையே எனக்கும், அனுராதாவுக்கும் பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தை மீது நான் அளவுகடந்த பாசம் வைத்திருந்தேன். நான் தினமும் காலை 9 மணி முதல் இரவு 11 மணி வரை வேலைபார்த்தேன்.

அப்போது அனுராதாவிற்கும், அவர் பணிபுரிந்த கல்வி நிலையத்தில் இருந்த ஒரு மாணவருக்கும் இடையே கள்ளக்காதல் இருப்பது எனக்கு தெரியவந்தது. இதனால் நான் அதிர்ச்சி அடைந்தேன். இந்த சம்பவத்தில் இருந்து தான் எனது வாழ்க்கையில் மோசமான திருப்பங்கள் ஏற்பட்டது.

அனுராதாவை விவாகரத்து செய்துவிடலாம் என முடிவு செய்தேன். ஆனால், எனது மகள் மீதான பாசம் அதற்கு முட்டுக்கட்டை போட்டது. 2011 ஆம் ஆண்டு பூஜாவுடன் மீண்டும் பேஸ்புக் மூலம் தொடர்பு ஏற்படுத்திக்கொண்டேன். அவருடன் நான் நெருங்கி பழக முயன்றேன். இதற்காகவே பெங்களூருக்கு சில முறை சென்றேன். ஆனால் அதற்கு பூஜா இடம் கொடுக்கவில்லை.

பூஜாவை அடைவதற்கு எனது மனைவியும், பூஜாவின் கணவரும் தடையாக இருப்பதாக உணர்ந்த நான் இருவரையும் தீர்த்துக்கட்ட முடிவு செய்தேன். முதலில், என்னை நல்லவனாகவும், எனது மனைவி தவறான நடத்தை கொண்டவள் என்பதையும் காவல்துறையின் முன்னாள் துணை சூப்பிரண்டான அவளுடைய தந்தையிடம் உணர்த்த முடிவு செய்தேன்.

அதன்படி, 2011 ஆம் ஆண்டு பாபா என்ற பெயரில் ஒரு இ-மெயில் முகவரியை போலியாக தொடங்கி, அதிலிருந்து எனது மனைவிக்கு இ-மெயில் அனுப்பி அவளுடன் நெருக்கமான தொடர்பில் இருந்தேன். அப்போது அவளுக்கும், இன்னொருவருக்கும் கள்ளக்காதல் இருப்பதை அனுராதா, நான் தான் பாபா என்பது தெரியாமல் மெயில் மூலம் தெரியப்படுத்தினாள்.

தொடரும்..............


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நண்பனின் மனைவியை அடைய தனது மனைவியை கொலை செய்த கணவன்: பரபரப்பு வாக்குமூலம்! Empty Re: நண்பனின் மனைவியை அடைய தனது மனைவியை கொலை செய்த கணவன்: பரபரப்பு வாக்குமூலம்!

Post by krishnaamma Tue Sep 08, 2015 7:08 pm

இதேபோல், ஜோதிடர் ஆஷா என்ற இன்னொரு இ-மெயில் முகவரி வழியாக எனது மனைவியுடன் தொடர்புகொண்டேன். அப்போது, உங்களின் குறைகளை என்னிடம் தெரிவித்தால், அதை நான் தீர்த்து வைக்கிறேன் எனக் கூறினேன். அப்போதும் அனுராதா தனது கள்ளக்காதல் விவகாரத்தை மறுபடியும் என்னிடம் தெரிவித்தாள்.

அதற்கு நான், நீங்கள் இருவரும் சேர்ந்து இருக்கும் நிர்வாண புகைப்படத்தை எனக்கு அனுப்புங்கள். அந்த புகைப்படத்தை வைத்து பூஜை செய்தால் உங்களது கணவர் உங்களை நெருங்க மாட்டார் என தெரிவித்தேன். அதை உண்மை என நம்பிய அனுராதா தான் கள்ளக்காதலனுடன் சேர்ந்து இருக்கும் புகைப்படங்களை எனக்கு அனுப்பினாள்.

இதற்காகவே அனுராதா டெல்லியில் உள்ள ஒரு நட்சத்திர ஹேட்டலில் அறை எடுத்து இருவரும் குளிப்பது போன்ற படங்களை...

எடுத்து அனுப்பியிருந்தாள். இந்த புகைப்படங்களை நான் சேகரித்து அவளுக்கு எதிரான ஆதாரங்களாக திரட்டினேன். கடந்த ஆண்டு (2014) ஜனவரி மாதம் நான் பெங்களூருவுக்கு பணி இடமாற்றம் செய்யப்பட்டேன்.

இதனால் நான் பூஜா தனது கணவனுடன் குடியிருக்கும் எச்எஸ்ஆர் லே-அவுட் அடுக்குமாடி குடியிருப்பிலேயே வாடகைக்கு வீடு எடுத்து மனைவியுடன் தங்கினேன். பூஜாவின் கணவருடன் பழகி நண்பனாக்கிக்கொண்டேன்.

இதன்மூலம் பூஜாவின் வீட்டுக்கு அடிக்கடி சென்றுவந்தேன். கடந்த ஜூலை மாதம் 27 ஆம் தேதி நான் எனது மனைவியுடன் மீண்டும் ஆஷா என்ற இ-மெயில் முகவரியில் இருந்து தொடர்பு கொண்டேன். அப்போது, உங்களுக்காக நான் சிறப்பு பூஜை செய்ய உள்ளேன். இதனால் நீங்கள் குடிபோதையில் இருக்க வேண்டும் என்றேன்.

இதை உண்மை என நம்பிய அனுராதா அரை பாட்டில் அளவுக்கு மதுபானம் அருந்தி மிதமிஞ்சிய போதையில் இருந்தாள். அதோடு மீண்டும் டெல்லிக்கு மாற்றலாகி போக வேண்டும் என்று என்னிடம் தகராறு செய்தாள். இதனால் ஆத்திரம் அடைந்த நான் வீட்டில் இருந்த விநாயகர் சிலையை எடுத்து அவளுடைய தலையில் ஓங்கி அடித்து கொலை செய்தேன்.

பின்னர் கொலையை மறைப்பதற்காக குடிபோதையில் தடுமாறி டி.வி. ஸ்டேண்டில் தலை இடித்ததால் அனுராதா இறந்துவிட்டதாக நாடகமாடினேன். இதனை அங்கு இருந்த அக்கம்பக்கத்தினரும் நம்பிவிட்டனர். இதுகுறித்து மடிவாளா காவல்துறையினர் மர்மசாவு என வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தொடரும்...............


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நண்பனின் மனைவியை அடைய தனது மனைவியை கொலை செய்த கணவன்: பரபரப்பு வாக்குமூலம்! Empty Re: நண்பனின் மனைவியை அடைய தனது மனைவியை கொலை செய்த கணவன்: பரபரப்பு வாக்குமூலம்!

Post by krishnaamma Tue Sep 08, 2015 7:08 pm

அனுராதாவின் கள்ளக்காதல் விவகாரங்கள் தொடர்பான ஆதாரங்களை எனது மாமானாரிடம் காட்டியதால் அவரும் அதை உண்மை என நம்பி என் மீது சந்தேகப்படவில்லை. காவல்துறையினரின் சந்தேகம் என் மீது இருந்தாலும், எனது மாமனார் ஒரு காவல்துறை அதிகாரியாக இருந்தவர் என்பதால் அவர் காவல்துறையினரிடம் எனக்கு ஆதரவாக பேசினார்.

அனுராதா இறந்ததால் அடுத்து பூஜாவின் கணவரை என்ன செய்யலாம்? என சிந்தித்தேன். முதலில் பெங்களூர் பிஷப் எழுதுவதுபோல பூஜாவுக்கு கடிதங்கள் எழுதினேன். முதலில் பூஜாவுக்கு சாதகமான கடிதங்களை எழுதி நம்பவைத்து, பின்னர் இறுதியாக உனது கணவரை விவாகரத்து செய்துவிடு என்று எழுதினேன்.

பின்னர் இதேபோல பூஜாடிவின் கணவருக்கும் உனது மனைவியை விவாகரத்து செய்துவிடு என்று எழுதினேன். ஆனால் அவர்கள் விவாகரத்து செய்ய மறுத்துவிட்டனர். அடுத்ததாக பூஜாவின் கணவரின் போட்டோ, பாஸ்போர்ட், கல்வி சான்றிதழ் ஆகியவற்றை அவரது வீட்டில் இருந்து நைசாக திருடினேன். அதனை வைத்து அவரது பெயரில் புதிதாக சிம்கார்டு வாங்கினேன். அதேபோல அவரது பெயரிலேயே ஒரு புதிய செல்போனும் வாங்கினேன்.

அந்த செல்போன் எண்ணில் இருந்து விமான நிலையத்திற்கு வாட்ஸ்-அப் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தால், காவல்துறையினர் பூஜாவின் கணவரை கைது செய்து விடுவார்கள் என நினைத்து அந்த செயலை அரங்கேற்றினேன்.

ஆனால், காவல்துறையினர் பூஜாவிடமும், அவரது கணவரிடமும் விசாரணை நடத்தியதில் இதற்கெல்லாம் காரணம் நான்தான் என்பது தெரிந்துவிட்டது. எனது கணக்கு தப்பாகி போனதால் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நானே காவல்துறையினரிடம் சிக்கிக்கொண்டேன். இவ்வாறு அந்த வாக்குமூலத்தில் கோகுல் கூறியிருப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

நன்றி வெப் துனியா


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நண்பனின் மனைவியை அடைய தனது மனைவியை கொலை செய்த கணவன்: பரபரப்பு வாக்குமூலம்! Empty Re: நண்பனின் மனைவியை அடைய தனது மனைவியை கொலை செய்த கணவன்: பரபரப்பு வாக்குமூலம்!

Post by krishnaamma Tue Sep 08, 2015 7:09 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி ......அடப்பாவி, சினிமா போல இருக்கே...............ஒரு பெண்ணுக்காக இப்படியா?.....இப்போ அந்த ,இவனின் பெண்குழந்தை என்ன ஆகும் ?.............அது அவனுக்கு தோணலையே?............................. கோபம் கோபம் கோபம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நண்பனின் மனைவியை அடைய தனது மனைவியை கொலை செய்த கணவன்: பரபரப்பு வாக்குமூலம்! Empty Re: நண்பனின் மனைவியை அடைய தனது மனைவியை கொலை செய்த கணவன்: பரபரப்பு வாக்குமூலம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum